புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
20 Posts - 65%
heezulia
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
62 Posts - 63%
heezulia
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோழ வரலாறு தினம் ஒரு சோழன்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 9:26 pm

இன்று கரிகால் சோழன்

கரிகால் சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.
கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.


ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

நன்றி விக்கிபீடியா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 15, 2010 9:33 pm

சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... 678642



தீதும் நன்றும் பிறர் தர வாரா சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... 154550
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Mar 15, 2010 10:08 pm

வணக்கம்
என் கருத்தைப் பதிப்பிக்க அனுமதி வேண்டி பதிப்பிக்கிறேன்
கரிகாலன் ஒர் தீ விபத்தின் காரணமாகத் தான் கரிகாலன் எனப் பெயர் பெற்றான்.
ஆதாரம்
சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த் தலைப்பேரானைப் பெற்று-கடைக்கால்
செயிரறு செங்கோல் செலீஇனான் இல்லை
உயிருடையார் எய்தா வினை.
யானைகளுக்கு எமன் என்ற பொருள் கொள்வது பொருந்தாக் கூற்று, திருவையாறு பக்கத்தில் ஓர் சிற்றூர். அதன் பெயர் திருப்பழனம். பழனம் என்றால் வயல், அவ்வூரில் உள்ள நிலமெல்லாம் இறையிலியாக இறைவனுக்குக் கொடுக்கப் பட்டதன் காரணமாக அப்பெயர் பெற்றது, வழக்குத்தமிழில் திருப் பயணம் என்று வழங்கப் பட்டு வந்தது, அதனை வட மொழி ஆக்கம் செய்தவர்கள் அதன் உண்மையை அறியாது மஹா பிரஸ்தானம் என்று ஆக்கம் செய்து விட்டன, திருப்பயணம் என்பதை வட மொழியாளர்கள் மனிதன் செய்யும் கடைசிப் பிரயாணம் என்ற பொருள் கொண்டு அவ்வாறு மொழி மாற்றம் செய்து விட்டனர்,
தீயினால் சுடப்பட்டால் அந்த இடம் தோலில் நிறமி மாற்றம் அடைந்து வெண்மையாக மாறி விடும், கருப்பாக மாறாது, இதனைப் பற்றி முன்பே ஈகரையில் ஒரு பதிவு செய்து இருக்கிறேன், அவனது கால் கருப்பாக மாறி இருந்தாலும் அதனைச் சுட்டுதல் வழக்கன்று, கண்ணில்லாத அரசனைக் குருட்டு மஹாராஜா என்றால் என்ன ஆகும் என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும் இலக்கியங்கள் கரிகால் பெருவளத்தான் என்றே குறிப்பிடுகின்றன. இது பற்றித் தக்கார் ஆய்ந்தால் நலமாக இருக்கும்
அன்புடன்
நந்திதா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 15, 2010 10:13 pm

nandhtiha wrote:கரிகாலன் ஒர் தீ விபத்தின் காரணமாகத் தான் கரிகாலன் எனப் பெயர் பெற்றான்.
ஆதாரம்
சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த் தலைப்பேரானைப் பெற்று-கடைக்கால்
செயிரறு செங்கோல் செலீஇனான் இல்லை
உயிருடையார் எய்தா வினை.

அன்புடன்
நந்திதா

நானும் அப்படி தான் படித்ததாய் ஜாபகம்... கால்கள் எரிந்து போய் இருக்குமென சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... 154550 சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Ila
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Mar 15, 2010 10:21 pm

வணக்கம்
அப்படிக் கால் எரிந்திருந்தால் கருப்பாக மாறாது, வெண்மையாகி விடும், தீப்புண் அடைந்தவர்களைக் கவனித்தால் புரியும், ஆனால் அதனை அடைமொழியாக்கிச் சிறப்பாக அழைத்தனர் என்றால் வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கும் என நினைக்கிறேன்
அன்புடன்
நந்திதா

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Mar 15, 2010 10:53 pm

சோழ வரலாறு பற்றி அறியும் ஆவல் கூடுகின்றது, பகிர்விற்கு நன்றி.
நந்திதா அவர்களின் மேலதிக தரவுகளிற்கும் நன்றி.



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Avatar15523pf0
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 15, 2010 11:16 pm

nandhtiha wrote:வணக்கம்
அப்படிக் கால் எரிந்திருந்தால் கருப்பாக மாறாது, வெண்மையாகி விடும், தீப்புண் அடைந்தவர்களைக் கவனித்தால் புரியும், ஆனால் அதனை அடைமொழியாக்கிச் சிறப்பாக அழைத்தனர் என்றால் வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கும் என நினைக்கிறேன்
அன்புடன்
நந்திதா

அவர் சிறையில் இருந்து தப்பிக்கும் போது தீயில் விழுந்து தப்பித்தார் என்று படித்ததாய் ஜாபகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Ila
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Mar 16, 2010 12:11 am

வணக்கம்
அவர் தீயில் விழுந்ததனாலா அல்லது குடிசையில் வாழ்ந்த போது விபத்தில் சிக்கினாரா என்பதல்ல கேள்வி?
1.தீயினால் சுடப் பட்டால் தோல் கருமை நிறம் அடையாது, மெலனின் என்பது அழிந்து தோல் வெண்மையாகி விடும். காருகிக காலை உடையவன் என்று உடற்குறையைச் சுட்டிக் காட்டுதல் தகுமா?
2.கரிகால் பெருவளத்தான் என்று அவன் இயற்பெயரை மறைத்து உடற்குறைக்கு ஒரு பெரும் காரணமின்றி அவ்வாறு கூறி இருப்பார்களா? என்பது தான் என் கேள்விகள்
அன்புடன்
நந்திதா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 16, 2010 12:15 am

nandhtiha wrote:வணக்கம்
அவர் தீயில் விழுந்ததனாலா அல்லது குடிசையில் வாழ்ந்த போது விபத்தில் சிக்கினாரா என்பதல்ல கேள்வி?
1.தீயினால் சுடப் பட்டால் தோல் கருமை நிறம் அடையாது, மெலனின் என்பது அழிந்து தோல் வெண்மையாகி விடும். காருகிக காலை உடையவன் என்று உடற்குறையைச் சுட்டிக் காட்டுதல் தகுமா?
2.கரிகால் பெருவளத்தான் என்று அவன் இயற்பெயரை மறைத்து உடற்குறைக்கு ஒரு பெரும் காரணமின்றி அவ்வாறு கூறி இருப்பார்களா? என்பது தான் என் கேள்விகள்
அன்புடன்
நந்திதா

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர்
உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின்
மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம்
வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு
வழங்கலாயிற்று.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 16, 2010 12:29 am

கரிகாலன்

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று. ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.

"வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் கொடுவரிக்
குருளைகூட்டுள் வளர்த்தாங்குப் பிறர், பிணியகத்திருந்து
பீடுகாழ், முற்றி யருங்கரை கவியக்குத்திக் குழி
கொன்று யானை பிடிபுக்காங்கு"
(பட்டினப்பாலை 220 – 228)

"நுண்ணுதி னுணர நாடி நண்ணார்
செறிவடைத் திண்காப் பேறிவாழ் கழித்
துருகெழ தாப மூழி னெய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்வான்"
(பட்டினப்பாலை 220 – 228)

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளஇருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப்புலவர் விளக்குகிறார்.

இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்ககாமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச்சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தயை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்கினியார் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

புராணக்கதைகள்

பழங்காலந்தொட்டே கரிகாலனைப்பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பட்டோ செய்து கொண்டான். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக்கட்டினான் என்பதை ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்.

சமயம் இறப்பு

வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவன் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக