புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_c10ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_m10ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_c10ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_m10ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_c10ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_m10ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_c10ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_m10ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_c10ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_m10ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_c10ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_m10ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 11, 2023 12:52 am

ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்? Vikata10

பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லுமா என்றால், நிச்சயமாகச் செல்லும். மணக்கோலத்தில் எடுத்திட்ட புகைப் படங்களே திருமணத்துக்கு ஆதாரமாக விளங்கும்.

திருமணத்தைப் பதிவு செய்வது என்பது மிகவும் குறைந்த அளவில் தான் நடைபெறுகிறது. குடும்ப எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொள்கிறவர்கள், வெளி நாடு செல்கிறவர்களே பெரும் பாலும் திருமணத்தைப் பதிவு செய்கின்றனர். இப்படியான சூழலில் திருமணப் பதிவு கட்டாயமா? அதன் தேவை என்ன? சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதிலக்ஷ்மி லோக மூர்த்தி விளக்குகிறார்.

“கணவனுக்கோ, மனைவிக்கோ வெளிநாட்டில் வேலை கிடைக்கிறது என்றால், விசா விண்ணப்பிக்க திருமணத்துக்கான ஆதாரம் வேண்டும் என்கிற அடிப்படையில் திருமணத்தைப் பதிவு செய்கின்றனர். இப்படியாக நேரடியான தேவைகளின் பொருட்டுதான் திருமணப் பதிவு நடக்கிறதே தவிர, அனைத்துத் திருமணமும் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற விழிப்புணர்வு பரவலாக இல்லை.

பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லுமா என்றால், நிச்சயமாகச் செல்லும். மணக்கோலத்தில் எடுத்திட்ட புகைப் படங்களே திருமணத்துக்கு ஆதாரமாக விளங்கும். இஸ்லாமியர்கள் என்றால் மசூதி யில் ஒரு பதிவேடு இருக்கும். அப்பதிவேட்டில் திருமணம் பதியப்பட்டு மணமக்கள் கையெழுத்திடுவர். கிறிஸ்துவ தேவாலயத்திலும் திருமணத்துக்கான பதிவேடு இருக்கிறது. இந்துக்களுக்குக் கூட கோயில்களில் திருமணம் செய்கையில் அது பதியப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவை யெல்லாமுமே திருமணம் ஆகி விட்டதற்கான ஆதாரங்கள்தான். திருமண உறவில் பிரச்னை ஏற்பட்டு விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் சூழலில் இந்த ஆதாரமே போதுமானது.

திருமணத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்ப ஒவ்வொரு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இந்துத் திருமணச் சட்டம் 1955, இஸ்லாமியருக்கு ஷரியத் சட்டம், கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872, பார்சி திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் 1936, மற்றும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் அது சிறப்புத் திருமணச் சட்டம் 1954 கீழ் வரும். இப்படியாக... திருமணத்துக்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருக்கின்றன.

இந்நிலையில் புதிதாகத் திருமணம் செய்கிற வர்களும் சரி, ஏற்கெனவே திருமண உறவில் இருக்கிறவர்களும் சரி... தங்களது திருமணத் தைப் பதிவு செய்ய வேண்டும் என 2009-ம் ஆண்டு தமிழ்நாடு பதிவுத் திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இச்சட்டம் அனைத்து மதத்தவருக்கும் பொருந்தக்கூடியது.

ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்?


திருமணப் பதிவு என்பதை ஒரு நடைமுறை யாக மட்டும் பார்க்காமல் சமூகத் தேவையாகப் பார்க்க வேண்டும். இன்றைக்கு பதிவுத்துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு விட்டது. ஆணின் திருமண வயது 21, பெண்ணின் திருமண வயது 18. இந்த வயது வரம்புக்குக் கீழ் செய்யப்படும் திருமணங்கள் குழந்தைத் திருமணங்கள் என்கிற பட்டியலில் அடங்கும்.

இன்றைக்கும் குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன. இது சட்டத்துக்கு விரோத மானது. இதனால் குழந்தைகள் உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும். ஆகவே, திருமணப் பதிவு கட்டாயம் என்கிற சூழலில் சட்டத்துக்குப் புறம்பாக செய்யப்படும் குழந்தைத் திருமணங்களை இதன் மூலம் கண்காணிக்க முடியும்.

மணமுடித்த பெண்ணைக் கைவிட்டு விட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது, பல திருமணங்கள் செய்து கொள்வது போன்ற மோசடி நபர்களைப் பற்றிய செய்திகளைப் படித்திருப்போம். திருமணப் பதிவு அவசியம் எனும்போது ஒருவருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்து முறையாக விவாகரத்துப் பெறாமல் இருந்தால் புதிதாகத் திருமணம் செய்ய முடியாது. திருமணப் பதிவில் இது போன்ற பல நன்மைகள் இருக்கின்றன.

தமிழ்நாடு திருமணப் பதிவுச்சட்டம் 2009 அனைவரும் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. அப்படிப் பதிவு செய்யாத திருமணங்கள் செல்லாது என்றில்லை. ஆனால், அதற்கான தேவையை உணர்ந்து பதிவு செய்து கொள்வது நல்லது” என்கிறார் ஆதிலக்ஷ்மி லோகமூர்த்தி.

திருமணப் பதிவு செய்ய


தம்பதி https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் திருமணப் பதிவுக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய உங்கள் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வர வேண்டிய தேதி மற்றும் நேரம் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். உங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, குறிப்பிடப்பட்ட தேதியில் ஒரிஜினல் ஆவணங்களுடன் இணையர் மற்றும் சாட்சி கையொப்பமிட மூன்று நபர்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பம், திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் (திருமண அழைப்பிதழ், கோயில், பள்ளி வாசல், சர்ச் என எங்கு திருமணம் நடந்ததோ அதற்கான ரசீது), முகவரிச் சான்றுக்காக வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், வயதுச் சான்றுக்காக பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் அல்லது குடும்ப அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், சாட்சி கையொப்பம் இடும் மூன்று நபர்களின் அடையாள அட்டை, மணமக்களின் நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.

திருமணம் நடந்து 90 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதைக் கடந்தவர்கள், அதற்கான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

திருமணப் பதிவு சந்தேகங்களுக்கு 1800 102 5174 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக