புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_m10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10 
16 Posts - 59%
heezulia
தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_m10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_m10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10 
58 Posts - 62%
heezulia
தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_m10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_m10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_m10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 17, 2023 6:15 pm

தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் 0d864f30-c47f-11ed-9c2a-df7da1c47840

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பலரை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டிய குற்றச்சாட்டில் களியக்காவிளை பாதிரியார் மீது குவியும் புகார்கள் அடிப்படையில் குமரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாதிரியாரை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந்தார்.

தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி முதலில் அன்பாக பேசத் தொடங்கி, நெருக்கமாகப் பழக முயன்றதாக காவல்துறை தெரிவித்தது.

மேலும், பாதிரியாருடன் பழகும் பெண்களிடம் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்து, பின் அந்தப் பெண்களை நிர்வாணமாக வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்டு அதை வைத்து மிரட்டி பெண்களை பாலியல்ரீதியாகத் தொந்தரவு செய்வதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் காட்டாத்துறை அருகே பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான ஆஸ்டின் ஜினோ பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் அவர் இளம் பெண்களுடன் செய்த ஆபாச பேச்சு, வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார். இதை அறிந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோக்கும் மாணவன் ஆஸ்டின் ஜினோவுக்கம் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிரியார் பெனிடிக் ஆன்டோ கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஆஸ்டின் ஜினோ தன்னை மிரட்டி பணம் கேட்பதாகவும் நான் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகவும் புகார் அளித்தார்.

பாதிரியார் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் ஆஸ்டின் ஜினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஆஸ்டின் ஜினோவின் தாயார் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்ததோடு பாதிரியாருக்கு எதிராக ஏராளமான பெண்களிடம் ஆபாச சாட்டிங் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், தடயங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைச் சமர்ப்பித்தார்.

இதனிடையே கடந்த 11ஆம் தேதி காட்டாத்துறை அருகே உள்ள ஆலந்தட்டுவிளையைச் சேர்ந்த பெண் ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ இளம்பெண்களுக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கூறி குமரி மாட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்ததுடன் பாதிரியார் தொடர்பான ஆபாச வீடியோக்களையும் பதிவுகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

தேவாலயத்திற்கு வரும் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய குமரி பாதிரியார்
அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் குமரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த புகார் மனுவில், "நான் அவர் மதபோதகராகப் பணியாற்றிய ஆலயத்துக்கு சென்றேன். முதலில் சாதாரணமாகப் பேசி ஆசி வழங்கினார். பின்னர் தவறான முறையில் என்னைத் தொட்டுப் பேசத் தொடங்கினார். இதனால் சம்பந்தப்பட்ட மத வழிபாட்டு பங்கை விட்டு மாறி நாங்கள் சென்று விட்டோம். எனினும் அவர் என் தாயாரிடம் எனது செல்போன் நம்பரை வாங்கி என்னிடம் பேசினார்.

ஒரு கட்டத்தில் செய்வதறியாது நானும் பேசினேன். ஆனால் பாலியல் ரீதியாக வாட்ஸ்-அப்பில் பேசினார். வீடியோ கால் செய்து தொந்தரவு செய்தார். என்னை மட்டுமல்லாது பல பெண்களிடம் அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை நான் தெரிந்து கொண்டு எச்சரித்தேன். நான் போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறினேன். அதற்கு என்னை மிரட்டினார். எனவே இது தொடர்பாக மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்ட டிருந்தது.

இந்தப் புகார் அடிப்படையில் பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வியாழக்கிழமை மாலை நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாலியல் குற்றம் தொடர்பாக இதுவரை ஐந்து பெண்கள் பாதிரியார் பெனடிக் ஆன்டோ மீது ஆன்லைன் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் பாதிரியார் பெனடிக் ஆன்டோ மீதான புகார்களின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினார். இதை அறிந்த பாதிரியார் தலைமறைவாகிவிட்டார்.

சிறையில் உள்ள ஆஸ்டின் ஜினோவின் தாயார் மினி அஜிதா பிபிசி தமிழிடம் பேசுகையில், "பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதுடன் அந்தப் பெண்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

எனது மகனுடன் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் பாதரியாரிடம் பாவ மன்னிப்பு வாங்கச் சென்றபோது பாதிரியாருடன் அறிமுகம் ஏற்பட்டது. பிறகு அந்த மாணவியின் செல்போனுக்கு இரவு நேரங்களில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி, அந்த மாணவியை அறை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன அந்தப் பெண் பாதிரியார் குறித்து பெற்றோரிடம் சொல்ல முடியாததால் என் மகனிடம் 'தன்னை காப்பாற்றுமாறு' உதவி கேட்டுள்ளார். பாதிரியார் அந்தப் பெண்ணுக்கு அனுப்பிய புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பியுள்ளார்.

கல்லூரி மாணவிக்கு அளித்த பாலியல் தொந்தரவு குறித்த எனது மகன் பாதிரியாரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையை சரி செய்து கொள்ளலாம் என வழக்கறிஞர் மூலம் எனது மகனை அந்தப் பாதிரியார் தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.

என் மகன் அங்கு செல்வதற்கு முன் வீட்டில் இருந்த பொருட்களை அவரே உடைத்துவிட்டு பாதிரியார் பெண்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை என் மகன் சித்தரித்து அந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்துவிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக என் மகன் மீது பாதிரியார் பொய் புகார் அளித்ததால் போலீசார் என் மகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாதிரியார் வீட்டுக்குச் சென்றபோது அவர் நாடகமாடி வீட்டிலுள்ள பொருட்களை உடைத்ததாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது என் மகன் பாதிரியார் லேப்டாப்பை எடுத்து வந்து விட்டான். அந்த லேப்டாப்பில் 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன.

எனவே, நிரபராதியான தனது மகனுக்கு நியாயம் வழங்கவேண்டும் என்று காவல் துறையிடம் வேண்டிக் கொள்கிறேன். பாதிரியார் போர்வையில் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து ஆபாச செயல்களில் ஈடுபட்டு வந்த பெனடிக் ஆன்டோ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்டின் ஜினோவின் தாயார் மினி அஜிதா கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசினார். அவர், "பாதிரியார் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான ஆபாச புகைப்படங்கள், வீடியோ மற்றும் பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் மீது வியாழக்கிழமை சைபர் கிரைம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். மேலும் அந்த வீடியோ தொடர்பான உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது," என்றார்.

மேலும் "பாதிரியாரிடம் மற்றொரு லேப்டாப் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாதிரியார் தலைமறைவாகியுள்ளதால் அந்த மடிக்கணினியைக் கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும் விரைவில் பாதிரியார் கைது செய்யப்படுவார். அப்போது அவரிடம் உள்ள செல்போன் ஹாட்டிஸ்க், பென்டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படும்.

ஒருவேளை அவரிடம் உள்ள மின் சாதனப் பொருட்களில் இருந்து வீடியோ புகைப்படங்கள் அழிக்கப்பட்டிருந்தால், தடயங்களை அழித்ததாக கூடுதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் மீட்டெடுக்கப்படும்," என்று அந்த சைபர் கிரைம் அதிகாரி தெரிவித்தார்.

பிபிசி தமிழ்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:35 pm

பசுந்தோல் போர்த்திய புலி 

மதம் பிடித்தவர்கள் மதச்சேவை செய்யவந்தால் 

இதுவும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 18, 2023 5:30 am

ஒரு விஷயம் புரியவே இல்லைங்க...

செய்யுறது அயோக்கியதனம், அதை ஏன் போட்டோ எடுத்து ஆதாரத்தோட செய்யணும்.

சரி அந்த படங்கள் எல்லாம் எப்படி வெளி வந்தது? வெளியிட்டது யார்?

கொஞ்சம் யோசிச்சா இது அந்த ஒரு பாதிரி மட்டும் சம்பந்தபட்ட விஷயம் மாதிரி தெரியல.

பல பெண்கள் இருக்கும் படங்கள் என்பதால் இது சம்பந்த பட்ட ஏதோ பெண்ணின் மொபைலில் சேகரிக்கபட்ட படங்களாக இருக்க வாய்ப்பில்லை.

இது அந்த பாதிரியின் மொபைலில் சேகரிக்கபட்டவையாக மட்டுமே இருக்க வாய்ப்பு.

சரி இதை சேகரித்து வைக்க வேண்டிய அவசியம் என்ன?

வேற என்ன, சம்பந்தபட்ட பெண்களை மிரட்டி வேறு காரியங்களை சாதிக்கவாக இருக்கலாம் அல்லவா?

இந்த பாதிரியுடன் வேறு கூட்டாளிகளும் இருக்க வாய்ப்பு நிறையவே உள்ளது.

இது இன்னொரு பொள்ளாச்சி விவகாரமாக இருக்கவும் வாய்ப்பு நிறையவே உள்ளது.

ஆனால் இந்த சர்ச்சை எந்த ஒரு தீர்வையும் தராது, ஏனென்றால் அவர்கள் சார்ந்துள்ள சமூகம் அப்படி.

சம்பந்தபட்ட பெண்களும் நீதி தேடி வெளியே வரப்போவதில்லை. அப்படியே வர நினைத்தாலும் இந்நேரம் அடக்கபட்டுருப்பார்கள்.

எதுவும் சொல்வதற்கில்லை...

அந்த பெண்கள் பாவம் இல்லையா என்றால் நிச்சயம் இல்லை, அவன் பாதிரி, கல்யாணம் போன்ற பந்தங்களுக்கு வாய்ப்பே இல்லை என்பது நல்லாவே தெரியும். நம்பினேன், ஏமாத்திட்டான்ன்னு எல்லாம் சொல்ல முடியாது.

இந்த உறவின் ஒரே நோக்கம் உடல் பசி மட்டுமே. அதுங்களுக்கு எத்தனை வயசாகுது? எல்லாம் தெரிஞ்சே இவ்வளவு தைரியமா அதுவும் செல்பீ எடுத்து கொண்டாடணும்ன்னா எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும்?

துக்க நாட்கள்னாலே கொஞ்சம் அதிகமா துக்கத்தை ஆற்றிடாங்க போல.

பெரியார் பேத்திகளுக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை இதுங்க.

போய் தொலையட்டும் கவலை கொள்ள தேவையில்லை.

ஆனால் ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத மாதிரி சில பேர் அந்த பெண்கள்ன்னு கண்ணீர் வடிக்கிறது பெண்கள் மேலான கரிசனமெல்லாம் ஒன்றும் இல்லை. தன்னையொத்த பாதிரி மீதான பாசம் மட்டுமே.

உப்பை தின்னவன் தண்ணீர் குடிச்சித்தான் ஆகணும், அது பாதிரியோ, இல்லை வேற மாதிரியோ எல்லோருக்கும் பொருந்தும்.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm

ஒரு விதத்தில் நீங்கள் கூறுவது ஒப்புக்கொள்ளவேண்டியதே.

பெண்களின் எதிர்க்கும் துணிவின்மை ஒரு காரணமாக இருக்கலாம்.
இசைவதா /வேண்டாமா என்ற போராட்டத்தில் இசைவதால் 
காரியம் கை  கூடுமெனில் இசையவேண்டியதுதான் என்ற எண்ணமும் ஒரு காரணமாக 
இருக்கலாம். நவீன மருத்துவ உலகில் கிடைக்காத தடை மாத்திரைகளா?

ஆன காரியம் இனிமேலும் தொடர கைபேசி வீடியோக்கள் இருக்கவே இருக்கிறது.
அதை காட்டியே ஆசையை தீர்த்துக்கொள்ளவேண்டியதுதான்.

போகட்டும் நமக்கேன் இந்த வம்பெல்லாம்?

(ஆமாம் ......பொள்ளாச்சி விஷயம் என்னாச்சு? ஹீரோ வெளியில்தான் இருக்கிறாரா?
வம்பெல்லாம் இல்லீங்க ---சும்மா ஒரு ஜெனெரல் நாலெட்ஜுக்குத்தான் )

@சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக