புதிய பதிவுகள்
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37
by ayyasamy ram Today at 21:50
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
Rutu | ||||
prajai | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Ammu Swarnalatha | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திறனற்ற திமுக திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும் - அண்ணாமலை
Page 1 of 1 •
“24 மணிநேரம் அவகாசம் தருகிறேன், முடிந்தால் கைது செய்யவும்” – வழக்குப்பதிவு குறித்து அண்ணாமலை |
வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன்.
— K.Annamalai (@annamalai_k) March 5, 2023
அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன்.
திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். pic.twitter.com/yLtf9LNfAH
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், "வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்புப் பிரசாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்," என்று அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், "திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னைக் கைது செய்யவும். பொய் வழக்குகளைப் போட்டு ஜனநாயகக் குரல்வளையை நசுக்கிவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.
ஒரு சாமானிய மனிதனாகச் சொல்கிறேன். 24 மணி நேரம் கால அவகாசம் அளிக்கிறேன். முடிந்தால் என் மீது கை வையுங்கள்," என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தி பேசக்கூடிய வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக ஊடகங்களில் தவறான செய்தி பகிரப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்கள், காவல்துறையினர் இடையே ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தொழிலாளர்கள் அச்சத்தில் இருப்பதால் அவர்கள் சொந்த ஊர் திரும்ப முயல்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு தொழில் பாதிக்கப்படும் என்று ஜவுளி, உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் தங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமைக்கு ஆளும் திமுக அரசு தான் பொறுப்பு என்று நேற்று அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "திமுக ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு என்னும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்புப் பிரசாரம், தற்போது ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு வந்துள்ளது," என்று குறிப்பிட்டிருந்தார்.
அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது. தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் தொழில், சேவைத்துறை மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் வட மாநில தொழிலாளர்களின் பெரும் பங்கை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்.
வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும் வெறுப்புப் பிரசாரத்தையும் தமிழர்களாகிய நாங்கள் ஆதரிக்கவில்லை. வட இந்திய சகோதர, சகோதரிகள் தாக்கப்படுவதாக பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதை, தமிழக பாஜக கடுமையாக எதிர்க்கிறது. இதுபோன்ற பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்," எனத் தெரிவித்திருந்தார்.
அந்த அறிக்கையில், "இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் வட மாநில மக்களை ஏளனமாகப் பேசுவதும் அவர்கள் செய்யும் தொழில்களை அவமானப்படுத்துவதுமான திமுக கலாசாரத்தின் விளைவுதான் இன்றைய நிலைக்குக் காரணம்.
திமுக ஆரம்பித்த காலத்தில் இருந்து, தற்போது வரை ஏதோவொரு சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக எம்பிக்கள், அமைச்சர்கள் பேசிய ஏளனப் பேச்சுகள் எத்தனை?" என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
அதோடு, "திமுக இத்தனை ஆண்டுகளாக, வட மாநில மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செய்து வரும் வெறுப்புப் பிரசாரத்தின் காரணமாகத் தற்போது பரவி வரும் போலியான காணொளிகளைக்கூட உண்மையாக இருக்குமோ என்று எண்ணும் அளவுக்கு வட மாநிலங்களில் வசிக்கும் சகோதரர்கள் அச்சத்தில் உள்ளனர். வட மாநில சகோதரர்கள் மேல் தொடர்ந்து நடக்கும் இந்த வெறுப்புப் பிரசாரத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுத்து நிறுத்தி, இந்த அச்சத்தைக் களைவது திமுகவின் பொறுப்பு," என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது, வட மாநில தொழிலாளர்கள் குறித்து தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி, 153, 153A(1)(a), 505(1)(b) IPC, 505(1)(c) IPC ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்குப் பதிவு குறித்து ட்வீட் செய்துள்ள அண்ணாமலை, நான் அறிக்கையில் கூறிய விஷயங்களை காணொளியாகவும் வெளியிடுகிறேன் என்று கூறி வட இந்தியர்கள் குறித்து மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன், கே.என்.நேரு ஆகியோர் பேசிய ஒரு காணொளியையும் பகிர்ந்துள்ளார்.
BBC தமிழ்
தமிழக அரசின் மெத்தனப் போக்கை மறைக்கவே அண்ணாமலை மீது வழக்குப்பதிவு: ஜி.கே. வாசன்
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசினுடைய மெத்தன போக்கை மறைப்பதற்காக அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பல்வேறு துறை சார்ந்த பணிகளை தங்கள் வாழ்வாதாரத்திற்காக செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்ற தவறான செய்திகளின் அடிப்படையிலே, கடந்த இரண்டு நாட்களாக வட மாநில தொழிலாளர்கள் மத்தியிலே அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் மாநிலங்களுக்கு திரும்ப முயற்சிக்கும்போது தமிழக அரசு அதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டு, வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்று உறுதியளித்து பதட்டத்தை குறைத்தார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள, தமாகா உட்பட பல எதிர்கட்சிகள் இந்த பிரச்சனை விரைவில், சுமுகமாக தீர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டன. பாஜக தலைவர் அண்ணாமலை, ஒருபுறம் அரசுப் பணிகளை பாராட்டியும், மறுபுறம் வருங்காலங்களில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காகவும் சில உண்மை நிலைகளை எடுத்துக் கூறினார். நல்ல கருத்துகளை முன்வைத்தார். இருந்தாலும் கூட அவர் கூறிய நல்ல கருத்துக்களை, யோசனைகளை எடுத்துக்கொள்ள முடியாமல், பொறுத்துக்கொள்ள முடியாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியை மனதில் வைத்துக்கொண்டு, அவர் மீது வழக்குப் போட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
இந்த விவகாரத்தில் அரசினுடைய மெத்தன போக்கை மறைப்பதற்காக தமிழக அரசு இந்த நிலையை எடுத்திருப்பது அரசின் நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனவே தமிழக அரசு காழ்ப்புணர்ச்சி அரசியலில் ஈடுபடாமல் பல மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வாழும் மக்களின் நலன் காக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இரட்டை வேடம் போடுவது திமுகவிற்கு இயல்பானது: அண்ணாமலை
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இரட்டை வேடங்கள் போடுவது என்பது திமுகவினருக்கு இயல்பானது.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தமிழகம் அமைதிப்பூங்கா என்று, தொட்டிலையும் ஆட்டி வைக்கும் இரட்டை வேடம் திமுகவிற்கு கைவந்த கலை.
‛ஹிந்தி தெரியாது போடா' என்று முதல்வரின் மகன் டி- ஷர்ட் கலாசாரத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் துவங்கி வைக்க..விமான நிலையத்தில் என்னிடம் ஹிந்தியில் பேசினார்கள் என்று முதல்வரின் தங்கை, திமுகவின் எம்பி ஒரு பொய்யான புகாரை வழங்கி..வட மாநிலத்தவருக்கு எதிரான வன்மத்தைத் துவங்கி வைத்தார். தற்போது சமூகங்களில் உலவும் பல பொய்யான செய்திகளுக்கும் இவையெல்லாம் காரணங்களாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
வட மாநிலத்தவர் தொடர்பான பிரச்னையை திசை திருப்ப இப்போது என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பூரில் விரும்பத்தகாத சம்பவம் நடந்த போது போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?. பிரிவினையில்லாத நல்லிணக்கத்தை நாட்டுப்பற்றுடன் கூடிய தேச ஒற்றுமையை பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
- Code:
முதல்வரின் தங்கை, திமுகவின் எம்பி ஒரு பொய்யான புகாரை வழங்கி..வட மாநிலத்தவருக்கு எதிரான வன்மத்தைத் துவங்கி வைத்தார். தற்போது சமூகங்களில் உலவும் பல பொய்யான செய்திகளுக்கும் இவையெல்லாம் காரணங்களாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அப்பிடி எல்லாம் நடக்கவில்லை என பிறகு மத்திய அரசு அறிக்கை விட்டது.
முதல்வரின் சகோதரிக்கு ஹிந்தி தெரியுமென மேலுமொரு செய்தி.
பிரசாந் கிஷோர் இந்த உத்தியை உபயோகித்து தமிழக மக்கள் அனுதாபத்தை பெறலாம்
என கூறியதாக ஓர் செய்தி அச்சமயம் துழாவியது.
ஆதரிப்பதும் நிராகரிப்பதும் கைவந்த கலை .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கிவைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சி - திமுக-வைச் சாடிய அண்ணாமலை
``முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கிவைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் தற்போது வடமாநிலத்தவர்மீது திரும்பிவிடக் கூடாது" - அண்ணாமலை |
வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகப் பரப்பப்பட்ட வதந்தி பீகார் சட்டமன்றம் வரை எதிரொலித்தது. அதன் காரணமாக பல்வேறு அரசியல் சலசலப்புகளும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இது குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "வெறுப்பையும் பகையையும் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க-வின் மாநிலத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அண்ணாமலை, `வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?’ என்று கேட்பது வெட்கக் கேடு" என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, "நான் இரட்டை வேடம் போடுவதாக ஆர்.எஸ்.பாரதி ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால், இரட்டை வேடங்கள் போடுவது என்பது தி.மு.க-வினருக்கு இயல்பானது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தமிழகம் அமைதிப்பூங்கா என்று, தொட்டிலையும் ஆட்டிவைக்கும் இரட்டைவேடம் தி.மு.க-வுக்குக் கைவந்த கலை.
`இந்தி தெரியாது போடா’ என்று முதல்வரின் மகன் டி-ஷர்ட் கலாசாரத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடங்கிவைக்க... விமான நிலையத்தில் என்னிடம் இந்தியில் பேசினார்கள் என்று முதல்வரின் தங்கை, தி.மு.க-வின் எம்.பி ஒரு பொய்யான புகாரை வழங்கி... வடமாநிலத்தவருக்கு எதிரான வன்மத்தைத் தொடங்கிவைத்தார். தற்போது சமூக ஊடகங்களில் உலவும் பல பொய்யான செய்திகளுக்கும் இவையெல்லாம் காரணங்களாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கிவைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் தற்போது வடமாநிலத்தவர்மீது திரும்பிவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான், ’வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?’ என்று கேட்டிருந்தேன். அதனால்தான் பிரச்னையைத் திசைதிருப்ப, இப்போது என்மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள்.
முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், ஒருசில வட இந்தியத் தலைவர்கள் கலந்துகொண்டவுடன், இந்தியாவைத் தலைமை தாங்க தி.மு.க-வின் தலைமை கண்ட பகல் கனவை நினைத்து, எங்களுக்கெல்லாம் பரிதாபப்படத்தான் தோன்றியதே தவிர, பற்றி எரியவில்லை. பா.ஜ.க மொழித் திணிப்புச் செய்வதாக, குற்றப்பத்திரிகை வாசிக்கும் ஆர்.எஸ்.பாரதி அவர்களே, அறுபதுகளிலிருந்து ஆட்சிக் கட்டிலில் பதவி சுகம் அனுபவித்த, தி.மு.க செய்யாத தமிழ் மொழித் திணிப்பை, பள்ளிகளில் ’தமிழைக் கட்டாயப் பாடம்’ ஆக்கியதன் மூலம், நாங்கள் தமிழ் மொழித் திணிப்பைச் செய்திருக்கிறோம். பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க, தமிழ் மொழித் திணிப்பைச் செய்திருக்கிறது என்பது உண்மைதான்.
வெறுப்பையும் பகையையும் வெளிப்படுத்துவதாக என்மீது ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட கூற்று ஒரு வகையில் சரிதான். தி.மு.க-வின் இரட்டை நிலைப்பாட்டின்மீது வெறுப்பும், அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிமீது பகையும், எனக்கும், நான் சார்ந்த இயக்கத்தினருக்கும் எப்போதும் உண்டு. வடமாநிலங்களிலுள்ள சட்டமன்றங்களில் தமிழகத்துக்கு எதிரான கண்டனக் குரல்களைக் கண்ட பிறகு, எழுந்த அச்சத்தினால், பிள்ளையைக் கிள்ளிவிட்ட நீங்கள் தொட்டிலாட்ட முன்வந்திருக்கிறீர்கள். இரட்டை வேடம் அல்ல, நாடக தி.மு.க-வினர் இருபது வேடங்கள் கூடப் போடுவீர்கள்.
இப்படி, தமிழகத்தில் தொடங்கிவைக்கப்பட்ட வெறுப்பு அரசியலால், திருப்பூரில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடைபெற்றபோது, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்... காவல்துறை அதிகாரிகளுக்கும், தி.மு.க-வினருக்கும், தமிழக முதல்வருக்கும் இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலே, காவல்துறையின் நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தியது யார்... என்ற விசாரணையை சி.பி.ஐ தொடங்க வேண்டும்.
அடிக்கடி திருச்சிக்குச் செல்லும் தமிழகத்தின் டி.ஜி.பி அவர்கள், திருப்பூருக்கு ஏன் நேரிலே சென்று விசாரிக்கவில்லை... திருப்பூரில் உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது... ஆகவே, தமிழகக் காவல்துறையினர் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதை சி.பி.ஐ விசாரித்தால்தான் நாட்டுக்கு உண்மை நிலவரம் தெரியவரும். நாட்டில் பிரிவினையில்லாத நல்லிணக்கத்தையும், நாட்டுப்பற்றுடன் கூடிய தேச ஒற்றுமையையும், பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்தும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
- Sponsored content
Similar topics
» செந்தில் பாலாஜி கைது எல்லாம் சும்மா… அடுத்து இந்த அமைச்சர் தான் – அண்ணாமலை
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
» திமுக ஆட்சியில் கொடுத்த டிவி "நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு: அமைச்சர் அறிவிப்பு!
» திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது
» கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்?
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
» திமுக ஆட்சியில் கொடுத்த டிவி "நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு: அமைச்சர் அறிவிப்பு!
» திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது
» கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|