புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் இருக்கும்வரை நடக்காது..!
Page 1 of 1 •
மனிதனும் அப்படித்தான். வெளியே அமைதியாக - ஆனந்தமாக இருப்பதாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் ஏதோவொரு சிந்தனை விழித்துக்கொண்டேதான் இருக்கும்.
கிராமத்தில் இருக்கும் வீடுகளில் பெரியது அது. பலரும் பல விஷயங்களுக்காக அந்த வீட்டுப் பெரிய மனிதரைப் பார்க்க வருவது வாடிக்கை. அன்று சாது ஒருவர் அந்த வீட்டுக்கு வந்தார்.
பெரிய மனிதர் படுத்திருந்தார். சாது அவரை நெருங்கி ``ஐயா’’ என்று குரல் கொடுத்தார்.
‘‘எனது அமைதியைக் கெடுக்காதீர்கள்!’’ என்றார் பெரிய மனிதர்.
உடனே சந்நியாசி சிரித்துவிட்டுச் சொன்னார், ‘‘கெடக்கூடிய நிலையில் இருந்தால், அது அமைதியே அல்ல!’’
உண்மைதான். எந்தச் சூழலிலும் நாம் அமைதியாக இல்லை என்பதே உண்மை. எரிமலைகள் வெளியே அமைதியுடன் திகழ்வது போன்று தோற்றம் தந்தாலும் உள்ளே எரிமலைக்குழம்பு கனன்றுகொண்டுதான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் பீறிட்டு வெளிப்படலாம்.
மனிதனும் அப்படித்தான். வெளியே அமைதியாக - ஆனந்தமாக இருப்பதாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் ஏதோவொரு சிந்தனை விழித்துக்கொண்டேதான் இருக்கும். இப்படியான எவ்விதச் சிந்தையும் இன்றி ஒருவரால் வெளியேயும் உள்ளேயும் சும்மா கிடக்க முடிகிறது என்றால், அவரே மகா புருஷர் என்கின்றன நம் ஞான நூல்கள். கிடைத்தற்கரிய சொர்க்க வாய்ப்பு இது.
விஸ்வாமித்திரரின் மகன் அஷ்டகன். ஒரு முறை இவன், அசுவமேத யாகம் செய்தான். அழைப்பை ஏற்று அரசர்களும் முனிவர்களும் யாகத்துக்கு வருகை தந்தனர்.
யாகம் முடிந்ததும் அஷ்டகன், பிரதர்த்தனன், வசுமனஸ், சிபி ஆகிய நால்வரும் ஒரே தேரில் சென்றனர். அப்போது எதிரில் நாரதர் வருவதைக் கண்டு அவரையும் தேரில் ஏற்றிக்கொண்டனர்.
``நாரதரே! நாங்கள் புகழ் மிக்க அரசர்கள். நீங்களோ சிறந்த மகரிஷி. இப்போது நம் ஐவரில், நால்வர் மட்டுமே சொர்க்கம் செல்லலாம் எனில், தேரிலிருந்து இறங்க வேண்டியவர் யார்?’’ என்று அவர்கள் கேட்டதும், ``அஷ்டகன்!’’ என்றார் நாரதர்.
``ஏன்?’’ - அரசர்கள் கேட்டனர்.
``நான், அஷ்டகனின் அரண்மனையில் இருந்தபோது பல்லாயிரம் பசுக்களைக் காட்டி, அவற்றைத் தானம் செய்து விட்டதாகப் பெருமிதத்துடன் கூறினான். செய்ததைச் சொல்லிக்காட்டிப் புகழ்ந்து கொள்பவனுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடையாது!’’ என்றார் நாரதர்.
உடனே, ``மூவர் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியும் என்றால், நால்வரில் யார் இறங்க வேண்டும்?’’ என்று அரசர்கள் கேட்டனர்.
``இப்போது இறங்க வேண்டியவன் பிரதர்த்தனன். ஒரு முறை, இவனுடன் மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் சென்றேன். ஒருவர் பின் ஒருவராக மூன்று பெரியவர்கள் மூன்று குதிரைகளையும் தானமாகக் கேட்டுப் பெற்றனர். இழுப்பதற்குக் குதிரை இல்லாமல், தானே தேரை இழுத்தான் பிரதர்த்தனன்.
ஆனால், ‘எதைத்தான் தானமாகக் கேட்பது என்று இந்தப் பெரியவர்களுக்குத் தெரியவில்லையே!’ என்று மனதுக்குள் சலித்துக்கொண்டான். தானம் கொடுத்துவிட்டு நொந்துகொள்பவனுக்கு எப்போதும் சொர்க்கத்தில் இடமில்லை!’’ என்றார் நாரதர்.
``மூவரில் இருவருக்குத்தான் சொர்க்கத்தில் அனுமதி எனில் யார் இறங்க வேண்டும்?’’ என்று அரசர்கள் மீண்டும் கேட்டபோது, ``வசுமனஸ்’’ என்றார் நாரதர்!
``இவனிடம் உள்ள உயர்ந்த ரதத்தை ஒருவன் கேட்டபோது, ‘எனக்கு இந்த ரதத்தில் எந்த உரிமையும் இல்லை. எவர் வேண்டுமானாலும், எப்போதும் இதை என் அனுமதியின்றிப் பயன்படுத்தலாம்’ என்று நயமாகச் சொன்னானே தவிர, தானம் செய்வதைத் தவிர்த்தே வந்தான். வெறும் வார்த்தை தானம் சொர்க்கம் வழங்காது!’’ என்று விளக்கினார் நாரதர்.
இப்போது அடுத்த கேள்வியை அவர்கள் கேட்டனர், ``சரி, சிபியும் நீங்களும் தேரில் இருக்க... ஒருவர் இறங்கிவிட வேண்டும் எனில் யார் இறங்க வேண்டும்?’’
நாரதர் சட்டென்று சொன்னார், ``நானே!’’ என்று.
இதைக் கேட்டு அனைவரும் திகைத்தனர். அவர்களைப் பார்த்துப் புன்னகைத்த நாரதர் காரணத்தை விளக்கினார்.
``சிபி எந்த நாளிலும் தானத்தைப் புகழுக்காகவோ, புண்ணியத்துக்காகவோ செய்தவன் இல்லை. இல்லாதவருக்கு உதவுவதே இருப்பவனது கடமை என்று நினைப்பவன். நம்மில் சொர்க்கம் செல்ல அவனே முழுத் தகுதி உடையவன்!’’ என்றார் நாரதர்.
தற்புகழ்ச்சி, சலிப்பு, வார்த்தை ஜாலங்கள் போன்றவை யாவும் `நான்’ எனும் அகங்காரத்தால் விளைபவை அல்லவா? நான் எனும் எண்ணம் கொண்ட நெஞ்சில் அமைதி தங்கியதில்லை!
அன்பர் ஒருவர் ரமண மகரிஷியை தரிசிக்க வந்தார். அப்போது உணவு வேளை. பகவான் ரமணர் பக்தர்களுடன் சாப்பிட அமர்ந்தார். அவரை தரிசிக்க வந்த அன்பர் ஒருவர் பகவான் ரமணரை அணுகி, ‘`எனக்குச் சிறிது பிரசாதம் கொடுங்கள்!’’ என்று கேட்டார்.
அதாவது, ரமண மகரிஷி தனது உணவிலிருந்து சிறிது கொடுக்க வேண்டும் என்று விரும்பினார் அந்த அன்பர். அதை அவர் பிரசாதமாகக் கருதினார்.
இதை உணர்ந்துகொண்ட ரமணர், ‘`சாப்பிடுபவன்... ‘நான்’ என்ற எண்ணம் இல்லாமல் சாப்பிட்டால் அதுவே பிரசாதம்தான்!’’ என்றாராம்!
புத்தரிடம் யார் யாரோ சீடர்களாக இருந்து, ஞானம் பெற்றனர். ஆனால், ஆனந்தனுக்கோ புத்தர் கண் மூடிய கடைசி நாள் வரை ஞானம் கிட்டவில்லை.
புத்தர் மரணத்தின் மடியில் விழுந்த நாளில், ``இவ்வளவு காலம் உங்களுடன் இருந்தும் கைவராத ஞானம், இனிமேலா எனக்கு வாய்க்கப்போகிறது?’’ என்று வருந்தினான் ஆனந்தன்.
``ஆனந்தா! ‘எனக்கு மூத்தவன்’ என்பதை இன்று வரை நீ மறக்கவில்லை. அந்த நினைப்பில் உனக்கு ஒரு கர்வம் இருக்கிறது. நான் உன்னுடனேயே இருக்க வேண்டும், உறங்க வேண்டும் என்று நீ விதித்த நிபந்தனையை நான் ஏற்றுக்கொண்டேன். எனக்கே நிபந்தனை விதித்தவன் என்ற அகந்தையும் உன்னை விட்டு அகலவே இல்லை. ‘நான்’ இருக்கும் வரை, உனக்கு ஞானம் வர வாய்ப்பு இல்லை. ‘நான்’ இறந்ததும் ஒருவேளை நீ ஞானி ஆகலாம்’ என்று அருளினார்.
இந்த `நான்’ எனும் அகங்காரம், அமைதியை அழிப்பதோடு, தகுதியை உணர்ந்துகொள்ளும் பக்குவத்தை அறவே அற்றுப்போகச் செய்துவிடும். சுயத்தை இழக்கச் செய்யும். நம்மிடமிருந்து `நான்’ தொலையட்டும்; வாழ்க்கை மலரட்டும்!
விகடன்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
அருமையான ஆன்மீக தகவல் .
ரசித்தேன்.
சிறந்த நீதி நெறி /விளக்கம்.
ரசித்தேன்.
சிறந்த நீதி நெறி /விளக்கம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|