புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
73 Posts - 46%
heezulia
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
4 Posts - 3%
prajai
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
1 Post - 1%
M. Priya
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
1 Post - 1%
eraeravi
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
1 Post - 1%
Kavithas
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
304 Posts - 43%
heezulia
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
6 Posts - 1%
prajai
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
4 Posts - 1%
manikavi
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_m10தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்- பாரதிசந்திரன்


   
   
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Sat Dec 31, 2022 10:21 pm

தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்
(நிறைவேறாத ஆசை- சிறுகதை விமர்சனம்)


பாரதிசந்திரன்

காற்றுவெளி” ஐப்பசி மாத மின்னிதழில் வெளிவந்த “நிறைவேறாத ஆசை” எனும் இந்தச் சிறுகதை, படிப்போரின் உள்ளத்தினுள் அமிழ்து கிடக்கும் ஆயிரம் ஆயிரம் உணர்வுகளைத் தட்டி எழுப்பிக் கிளை விடச் செய்யும் தன்மை வாய்ந்தது. அச்சிறுகதையின் தன்மைகுறித்துக் காண்பது தேவையாகிறது

“மனதின் உள்ளே புதைக்கப்பட்டிருக்கும் ஆசைகளும், எண்ணங்களும், நினைவுகளும், கனவில் வெளிப்படும் அத்தகைய கனவுக் காட்சிகளையே கலை இலக்கியங்களாகப் படைப்பது தான் மிகையதார்த்தவாதம் ஆகும்” எனும் இலக்கியக் கோட்பாடு ஒரு சிறுகதையைப் படித்தவுடன் அப்படியே பொருந்துகிறது அந்தச் சிறுகதை தான், எழுத்தாளர் சுந்தரிமணியன் எழுதிய ‘நிறைவேறாத ஆசை
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் NDxZW2C


உலக உயிர்களின் அடிப்படை மூலக்கூறுகள் தன் தாயின் பாசத்திற்கு நெருங்கிய தொடர்பை எப்பொழுதும் பெற்றிருப்பவை ஆகும். தாயின் உடலோடு, தாயின் மனதோடு, தாயின் செயல்களோடு உருவாகி அதை உள்வாங்கித் திரிபவைகள் தான் எல்லா உயிர்களும்.

அம்மா… அம்மா… அம்மாவின் கருவறையை விட உலகில் பெரிது எது? அம்மாவோடு நெருங்கிய நினைவலைகள், இறக்கும் வரை நீண்டு கிடக்குமே, அதனைத் தொட்டுத் தடவிப் பார்த்து எவ்விதக் கற்பனையும் கலக்காமல் அப்படியே உருவம் அமைத்துத் தந்திருப்பது தான், இச்சிறுகதையின் மாபெரும் உத்தியாக இருக்கிறது.

’மிகைஎதார்த்தவாதம்’ எதையும் ஆராய்வதை மறுக்கிறது. ஒழுங்கு அமைத்தலை வெறுக்கிறது. இருப்பதை அப்படியே ஆழ்மனத்தைத் தூரிகையோடும், பேனாவோடும் நினைத்துக் கலையழகும் கவினழகும் காண வேண்டும்’ என்பது மிகைஎதார்த்த வாதத்தின் அறிவுரையாகும்.

சிறுகதையின் தொடக்கமானது, அந்த நாளில் நடந்த நிகழ்வுகுறித்த சிந்தனையாகத் தொடங்குகிறது. ஒரு நிமிடச் சிந்தனை, பத்து ஆண்டுகளை அது சுமந்து நிற்கிறது.

தாய் இறந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதாகக் கதை தொடங்குகிறது. அந்த நிமிடத்தில் தாயின் வாழ்வில் குறைந்தது 10 ஆண்டுகளினுடைய சிறப்பை மனம் அசை போடுகிறது. அன்புமகளின் மனம் படுகிற வேதனையை இந்தச் சிறுகதை அப்படியே வெளிப்படுத்துகிறது.

ஜி. நாகராஜனின் ’நாளை மற்றும் ஒரு நாளே’ என்கின்ற நாவலில் உள்ள காலம் எவ்வளவு குறுகியதோ, அத்தன்மையைப் போல் இச்சிறுகதையும் காலத்தால் சிறிதாகி, நினைவூட்டங்களால் நீண்டு தரமிக்க இலக்கியமாக மாறி இருக்கிறது.

அன்புமகள் தன் தாயின் நினைவுகளைத் தன் ஒவ்வொரு செயலின் பொழுதும் நினைத்துப் பார்த்துக் கொள்ளும் தன்மையை இச்சிறுகதை எடுத்துக்காட்டுகிறது. தன் வாழ்க்கையில் நடந்த சோகங்களின் ஒட்டுமொத்தப் பிரிவையும் அந்த நினைவோட்டத்தில், சிறுகதை ஆசிரியர் நினைத்துப் பார்த்துத் தன் வலியைக் கதையினூடாக வாசகனுக்கு அனுப்புகிறார்.

அம்மா இறந்ததற்குக் காரணம், அப்பாவின் இறப்பும், அண்ணனின் இறப்பும் தான் காரணம் எனக் காரணம் கற்பிக்கின்றாள். அது முக்கியமான காரணம் அல்லவா? எந்தத் தாயாலும் தன் மகன் இறப்பை, தன் முன்னால் காணவா முடியும்?

தன் கணவனுக்கு முன் தான் இறந்து விட வேண்டும் என்று எல்லாப் பெண்களும் வயது முதிர்ந்த காலத்தில் நினைக்கிறார்கள். இதுவே அன்பின் முதிர்ச்சியாகும். ஒருவரைப் பிரிந்து ஒருவர் இருக்க முடியாது என்பதை அன்றில் பறவை கொண்டு கூறும் இனமல்லவா நம் இனம்.

மூவரின் இறப்பு. அதாவது அப்பா முதலில் இறக்கிறார். பின் அண்ணன் இறக்கிறார். இதெல்லாம் தாங்க முடியாது தாயும் நோய் வாய்பட்டு இறக்கிறார். இதை எல்லாம் தாங்கிக் கொண்டு அன்புமகள் துன்பத்தோடு நினைத்துப் பார்க்கிறார். வலியின் நெருடல்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவில் இருக்கின்றன என்பது விளங்குகிறது.

இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், அம்மாவோடு வாழ்ந்த நாட்கள். அன்பு மகள் கண் முன்னே நிழலாடுகின்றன. அம்மாவின் சர்க்கரை குறைவான காப்பி. அவள் போடுகின்ற அந்த முறை. தினம் தினம் பேரக்குழந்தைகளுக்குச் செய்து தரும் உடனடிப் பலகாரங்கள். அதன் சுவை, பணம் இருந்தும் இப்பொழுது எங்களால் அதனைச் செய்து சாப்பிட முடியவில்லை. செய்தாலும் அந்தச் சுவை வரவில்லை என்பதாக ஒவ்வொரு செயல்களிலும் தன் தாயை நினைத்து நினைத்துப் பூரிக்கிறாள் அன்பு மகள்.

அப்பாவிற்கும் அம்மாவிற்கும் இடையில் வாக்குவாதம் தொடர்ந்து இருக்கும். அப்படி இருந்து வந்தாலும் அதற்குள் காணப்பட்ட அன்பையும், பாசத்தையும் உணர்ந்து பார்க்கும் உணர்வுகள்,

முதியோர்காதலை ரசிக்கும் ரசனையே தம்மை ஈடற்ற வாழ்வை வாழச் செய்யும் என்பது தானே படிப்பினை. அதனை இக்கதையில் ஆசிரியர் பலவாறாக நினைத்துப் பார்த்துச் சந்தோஷப்படுகிறார்.

அப்பாவின் மேல் அம்மா கொண்ட காதலை உணர்ந்த உணர்வு அத்தகையது.

அப்பாவின் குணம், அம்மாவை நேரடியாகப் பாராட்டாமல் தன் நெருக்கமானவர்களிடம் அம்மாவின் செயல்களைப் பாராட்டிக் கூறுவதும், கோலத்தை ரசிப்பதுமான உணர்வு, அதைக் கண்டும், அதன் உள்ளார்ந்த உணர்வுகளைப் புரிந்து கொண்டு கூறியிருக்கின்ற விதம் சிறப்பாகும்.

அன்பு மகள் தன் அம்மாவைப் போலவே வாழ வேண்டும் என இயங்குகிறாள். ஏங்குகிறாள். சேலை கட்டும் அழகு உள்பட. சேலை கட்டும் லாபகம் கூடத் தன் தாயின் சாயலில், அதன் மென்மையில் இருக்க வேண்டும் எனும் ஆவல். அதன் உணர்வு மிகவும் மெல்லியதானது.

தாயின் வாழ்வியல் கூறுகள் அனைத்தும் ரசனைக்கு உட்படுத்தப்பட்டு அடுத்த தலைமுறைக்கு அப்படியே பரிணாமம் ஆகி இருக்கின்றன.

தாய் சமைத்து வைக்கும் இடியாப்பமும் புதினா சட்னியும் இனி எப்பொழுது சாப்பிட போகிறோம் எனும் ஏக்கம் சிறுகதை ஆசிரியரின் எழுத்தில் தெரிகிறது. பிரிவு எவ்வளவு கசப்பானது. அதுவும் முழுமையாகப் பிரிந்து விடும்பொழுது ஆழமான துன்பம் வாட்டி வதைக்கத்தான் செய்கிறது.
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்-  பாரதிசந்திரன் LTwOqcT


படைப்பின் பரிமாற்றம் இந்த இடத்தில், உலகளாவிய மானிட சமூகத்தின் ஆழ்மனப் பதிவு ஒற்றுமைகளை எல்லாம் தொட்டுப் பார்க்கின்றன. உண்மையான இலக்கியம் எதுவோ, அது இவ்வேலையைக் கட்டாயம் செய்யும். அவ்வாறான இலக்கியமே, பொதுவியல் தன்மை பெற்று உலகம் தழுவியதாக அடையாளப் படுகிறது. அவ்வகையில் நிறைவேறாத ஆசை சிறுகதை உலகப் பொதுமைக்குமான தரத்தைத் தன்னிடத்தில் கொண்டுள்ளது என்பதைக் காலம் இலக்கியவாதிகளுக்கு விளக்கும்.

சிறுகதை ஆசிரியரின் மன ஓட்டங்கள் அப்படியே சர்ரியலிச பாணியில் ஒன்றன் பின் ஒன்றாக அல்லாது, சரியாக மனப் பேதலித்தல் நிலையில் எங்கெங்கு செல்கிறதோ, அங்கங்கு கதையின் ஓட்டம் இருக்கிறது.

எண்ணங்கள் அலைபாயும் போக்கில், அதை அப்படியே எழுதுவது எழுத்தாளனுக்கு பெரும் சவால். அதைவிட அந்த அனுபவ வெளிப்பாட்டை வாசகனுக்குக் கடத்துவது அதைவிடச் சவாலாக இருக்கும். ஆனால், இச்சிறுகதை அப்படியே சென்று விடாமல், வாசகனுக்கு அந்த உணர்வுகளைக் கடத்துகிறது.

மேம்பட்ட எழுத்து நடை கொண்ட எழுத்தாளர்களே இது போன்ற உணர்வுக் கடத்தலைச் செய்ய முடியும். அதற்கு இச்சிறுகதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒரு பக்கம் தாயின் சோகம். இன்னொரு பக்கம் தாயோடு வாழ்ந்த வாழ்வியலின் இன்பம். இவை இரண்டும் இக்கதையில் சாமர்த்தியமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

தாயின் பிரிவு தாங்காத அன்பு மகளின் தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம் இது. கதை படித்து முடிக்கும்பொழுது, இந்தப் பேரழுத்தம், நம் தூக்கத்தையும் கெடுக்கத்தான் செய்கிறது.


சிறுகதை விமர்சனம்:
பாரதிசந்திரன்
9283275782
chandrakavin@gmail.com



சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக