புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10 
26 Posts - 43%
M. Priya
கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10 
1 Post - 2%
Jenila
கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10 
4 Posts - 3%
Jenila
கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10 
3 Posts - 3%
Rutu
கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10 
3 Posts - 3%
prajai
கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10 
1 Post - 1%
manikavi
கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து... பாரதிசந்திரன்


   
   
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Mon Jan 10, 2022 8:25 pm

மௌனம் உடையும். அள்ள...

கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...



பாரதிசந்திரன்



கவிஞர் அமீர்ஜானின் கவிதைகளைப் பார்த்த, படித்த பொழுதெல்லாம் மெளனம் எனும் உள்பிரளய லார்வாக்கள் பீறிட்டுக் கிளம்பி, இனம் காட்டி அலைகின்றன. பாதரசத் துளியென ஒன்றிதிரண்டு பெருவடிவெடுத்து உரு காட்டி நிற்கின்றன. அவ்வடிவழகைத் தொடல் சுகமானது.

நிசப்தங்களின் ஆழ்வெளிப்பரப்பில் எவ்வித ஊடாடலுமின்றி மௌனித்த பயணம், சப்தக்காடுகளின் சாயல் பெற்று ஊதக்காற்றின் உரசலாகி உடைபட்டதென்னே?

ஏன் மௌனம் மௌனிக்கவில்லை?

மௌனம் எப்போதும் உள்ளே மௌனமாகவே இருப்பதில்லை.

தீராத வலியும், முற்றுப்பெறா கேள்விகளும், தேடித்தேடி இம்சித்தே கனலாகி நிற்கின்றன. அந்த மௌனம் என்ற ஒன்று அதாகவே உடைந்து சப்தரூபத்தை எடுக்கிறது. அதுவே ஞானப்பிரவாகமாகவும், வெற்றுப் பிளிறலாகவும் மையம் தரிக்கிறது.

மௌனம் உடைந்து, தீர்க்கதரிசனங்களை அள்ளி வீசி, அடைகடலுக்குள் அமிழ்த்தி, ஆழ்நிலைக் கனாக்களுக்கான விடைகளை எழுதிச் செல்கின்றது அகோரம் தாண்டிய விசாரணையை உலகம், மௌனமொழிகளைக் கொண்டே புரிந்துகொள்கின்றது.

இவையெலாம், உண்டு வெளிவந்தவுடன் உணவு குறித்த சம்பாஷணைகள். நிழலைத் தேடி, நிஜத்தைத் தேடி, எதிரைத் தேடி அலையும் நாக்குகள் கண்ட சுவை. எல்லாம் புதிய கட்டுமானத்தினால் உண்டாக்கப் பெற்றவை. ரசம் பூசிய கண்ணாடிகள் பார்ப்பவரைப் பார்ப்பவராகக் காட்டும் பரிமாணமற்றச் சுயங்களின் சுத்த வடிவம்.

“என்னைக் காட்டும்

நானும்

நானைக் காட்டாத

என்னையும்

பிரித்தெடுக்க முடியாமல்

நானும்

நானுமாகி நானின்றி

இருக்கின்றேன் நான்”



உலகறிந்த வெளியுருவமும், தான்மட்டுமே அறிந்த உள்ளுருவமும் போராடிப் போராடித் திரியும் இருமைத்தனம் எல்லோருமறிந்த நயமே. பிரித்தறிதலே தன்னையறியும் ஞானம். தத்துவார்த்தப் புரிதலும், வெளிக்காட்டலும் இக்கவிதைகளில் அதிகமாகப் புலர்ந்துள்ளன.



நிழல், நான், மனம், காட்சி (பார்த்தல்) எனும் சொல்லாட்சிகளும், அதன் நளின வெளிப்பாடும் சமூகத்தையும் தன்னையும் மாறி மாறி அடையாளப் படுத்துகின்றன. காலஓட்டம் அதன் முதிர்ச்சியை எழுத்தின் அடியாள சிந்தனைக்குச் சிம்மாசனம் போட்டு அமர வைத்திருக்கிறது.

“திரியின் முனையில்

எரிகிறது

இருள்”



“உள்ளிருந்து வெளியேறினால் தான்

ஆரோக்கியமாக இருக்கும்

மனிதத்தைத் துவம்சிக்கும்

மலமும் மதமும்“



கவிதைக்குள் வார்த்தைகள், வெவ்வேறு மெட்டுகளில் வர்ணங்கள் பலபூசி விஸ்வரூப தரிசனங்களைக் காட்டுகின்றன. வாசகர்களுக்குச் சலிப்பைத் தராத வாஞ்சையுடன் அவை வலம்வருகின்றன.

“கல்லெறிந்த கண்ணாடியில்

காணமுடியவில்லை

என் முகம் –

சிதறிப் போயிருந்தேன்

நான் சில்லுகளில்”



வாழ்வின் அர்த்தப்பாடுகளில் உணரத்தவறும் மெல்லிய உணர்வுத் தேவைகளை இனம்கண்டு கொண்டு, தன் வார்த்தைகளில் கிஞ்சித்தும் குறைவுறாது அதை வடித்து, வாசிப்பவரிடமும் நெளிந்து உள்நுழையச் செய்யும் ஏராளமான உணர்வுகளின் கண்காட்சிதான் இவரின் கவிதைகளில் அதிகம் உள்ளன.

தன்னோடு நெருக்கமானவர்களின் மனநிலையையும் அதன் உரசல்களின் தீரத்தை, அப்படியே ஓவியமாக்கித் தருவதென்பது கவிஞர் அமீர்ஜானுக்கு மட்டுமே முடிந்தவொன்று. கவிதைப் படைப்பில், நவீன வடிவமைப்பொன்றை பல கவிதைகளில் செய்து பார்த்திருக்கிறார்.

கவிதையின் முதலடியில் பயன்படும் வார்த்தையின் எதிர்பொருள் தரும் வார்த்தைகள் அடுத்த அடியில் பயன்படுத்தப் பெற்றிருக்கின்றன. இவை பொருள் தேடலை ஆழப்படுத்துகின்றன.

அழுது* சிரித்து,

பின்* முன்,

போதாமை* இருப்பு,

சலிப்பு* சளைக்காமல்,

பார்த்து* பார்க்காமல்,

பிடிக்காதிருந்த* பிடித்திருந்த,



சங்கப்பாடல்களின் காட்சிப்படுத்துதலைப் போல, சில கவிதைகள் மனக்கண் முன் தொடர் காட்சிப்படுத்துதலை ஒன்றிணைத்து இலயித்தலை உருவாக்குகின்றன.

“வலியத் தொடரும் வலி” கவிதையில், வலியின் நெருடல் அப்படித்தான் தொடர்காட்சிப்படுத்துதலைப் பெற்றிருக்கிறது. இதுபோல் பல கவிதைகள் குறும்படங்களுக்கான கருவாகப் பூத்திருக்கின்றன.

‘இறப்பு’ - மனிதர்கள் கண்டுபிடிக்க முயன்று, முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் தேடலது. அதனை, மிக எளிமையாக ‘முயன்று தோற்றல்’ கவிதை விளக்குகிறது. தேடல்களின் பதிலது. இதன் தொடர்ச்சியைக் “காற்று வாங்கும் ஜுவாலை” கவிதை முடித்து வைக்கிறது. முடிவு

‘நானும் நீயுமற்ற நாமில் தேடும்படியாக எதுவும் இல்லை’ எனும் வரியில் தொடர்கிறது.

”கரைவிட்டு

வெளியேறி அவரவர் திசையில்

பயணிக்கிறது

காற்று வாங்க...

அக்கினியின் ஜுவாலை”

சூபித் தத்துவம் போல் விளங்கும் இக்கவிதைக்குள் எல்லாம் சூட்சுமமாகி, விளங்கிப் பின் மர்மமாகி விடுகிறது. இனம்புரியாக் காதல், அது முதல் காதல். அது தரும் உணர்வுப் பெருவெள்ளம் சொல்லவொணாதது. அதைக் குமுதா வழிப் புலப்படுத்த முயல்கிறார் ஆசிரியர்.

கவிஞர் அமீர்ஜான் கவிதைகளில், முதல் காதலும் வெளிப்படுகிறது. கடைசியும் புனிதமுமான முதியோர் காதலும் வெளிப்படுகிறது. ‘குமுதா’ கவிஞர் கூறிமுடிக்காத இன்னுமொரு காவியம் ‘எனக்கான வாழ்க்கை’ கவிதையாகும்.

“நான் ஐம்புலன்களின் வழிச் சிதைக்கப்படுகின்றேன். எனக்குள் தேடும் என்னை அவை காணவிடாமல் செய்கின்றன” கவிஞர் கூறுவதைத்தான் பல மதங்கள் தத்துவார்த்தமாகவும் சித்தாந்தமாகவும் உரைக்கின்றன. தத்துவம், ஞானம், உணர்வு என விரிந்த தளத்தை கவிதைகள் வியாபித்திருக்கின்றன.

”நீரில் மிதக்கும் என்நிழலை .

அள்ளியெடுக்க முடியாமல்

நான்.”

மௌனம் நிழலைக்கூட விட்டுவைக்கவில்லை. அதை அள்ளியெடுக்க முயற்சிக்கிறது.

நாமும் கவிதைக்குள் நம்மை அள்ளியெடுக்க முயற்சிப்போம்...

“உண்டில்லையென

ஆட்டிப் படைக்கின்றன

என்னை”



இவரின் கவிதைகள்.

சிறந்த உணர்வு வெளிப்பாடுகளின் கவிதைகள் இவருடைய கவிதைகள். தத்துவார்த்தம், தொன்மம், நவீனம், உளவியல், பாசம், அழகு, சமூகம் என விரிகிற கவிதையோவியமாக இவைகள் திகழ்கின்றன.

நன்றி: படைப்பு. காம் (தகவு- மின்னிதழ்) ஜனவரி-2022

bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக