புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
1 Post - 1%
Kavithas
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
1 Post - 1%
bala_t
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
1 Post - 1%
prajai
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
291 Posts - 42%
heezulia
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
6 Posts - 1%
prajai
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
4 Posts - 1%
manikavi
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 17, 2021 6:28 am


அனைத்து சாதி அர்ச்சகர் என்ற திட்டம், தொல் அர்ச்சக குடிகளை அழிக்கும் திட்டம் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை, அனைத்து சாதியிலும் அர்ச்சகர்கள், பல காலமாக அவரவர் சார்ந்த கோயில்களில் இருந்தே வருகிறார்கள்.

அதேநேரத்தில், தமிழக பெரும்பான்மை ஆகம கோயில்களில் பல நூறாண்டுகளாக சிவாச்சாரியார், பட்டாச்சாரியர் என்ற இரு மரபுகளே பூஜை செய்து வருகிறார்கள்.

இவர்களே பிரதான அர்ச்சககுடிகள். ஒரு சிறுபான்மை மரபு. பாரம்பர்யம் மிக்க தொல்குடிகள்.

நாட்டுப்பசுவைப் போல, இவர்களைப் பாதுகாக்க வேண்டியது இந்த சமூகக் கடமை.

பாரதத்தின் உச்சியில் உள்ள காஷ்மீர் பண்டிட்களைப் போல்... பாரதத்தின் பாதமான தமிழகத்தில் உள்ள இந்த அர்ச்சககுடிகளுக்கு நடந்த அடையாள அழிப்பை, அராஜகத்தை சொல்லி மாளாது.

இத்தகைய அரசியலால் வைணவ அர்ச்சககுடிகள் பலரும் இடம் மாறிவிட்டனர். பெரும்பாலானவர் கோயிலை விட்டு வெளியேறி, தங்கள் வாழ்வியலை மாற்றி அமைத்துக்கொண்டு விட்டனர்.

மீதி இருப்பது சிவாச்சாரியார் அர்ச்சககுடிகளே. கிராமங்களிலும் ஆகம கோயில்களிலும் இன்றுவரை தொண்டு செய்து வருகின்றனர்.

கடந்த 100 ஆண்டு பிராமண வெறுப்பு அரசியல், இந்த சிவாச்சாரியார் அர்ச்சககுடிகளை படிப்படியாக அடையாள அழிப்பை, உரிமை அழிப்பை செய்துவருகிறது.

ஊருக்கு ஒரு குடி குடும்பமாக உள்ள இந்த அர்ச்சககுடிகளும், தங்கள் சக்திக்கு மீறி இந்த திராவிட மிஷனரி அரசியலை எதிர்த்தே வருகிறார்கள்.

ஆனால் எவ்வளவு காலம் எதிர்த்துக்கொண்டே இருப்பது........

உண்மையில் தமிழகத்தில் குரலற்றவர்களாய் உள்ள ஒரே சமூகம் சிவாச்சாரியார் சமூகமே. எந்த மீடியாவும், கட்சியும், அமைப்பும், சாதி சங்கங்களும், மடங்களும், ஆன்மீக அமைப்புகளும், சைவ அமைப்புகளும் ஒரு சிறு முனகல் அளவுகூட அர்ச்சககுடிகளின் உரிமைகளை அவர்கள் நிலையை, வலி, வருத்தங்களை இந்நிமிடம் வரை பேசவில்லை என்பதே துரதிருஷ்ட உண்மை.

இங்கே பொது சமூகத்தில், உள்ள பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் என்று பலரும் இந்த அனைத்து சாதிஅர்ச்சகர் என்ற நிலை வந்துவிட்டால், பிராமணர்களை ஒடுக்கிவிட்டோம் என்ற மாயை மனோநிலையில் உள்ளார்கள்.

அனைத்து சாதி அர்ச்சகர் நிலையால் ஒரு துரும்பு அளவுக்குக்கூட வைதிக, வேத, கன்னட, தெலுங்கு, கணக்குபிள்ளை பிராமணர்களுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது .

மற்ற பிராமணர்களுக்கு, சிவாச்சாரியார் களுக்கு எதிரான ஒரு நிலை வந்துவிட்டதே என்ற வருத்தம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் பிராமணர்களுக்கு ஒரு இழப்பும் இதனால் இல்லை.

காரணம் இவர்கள் எவரும் ஆகமகோயில் பூஜையோ, சிவாலய பூஜையோ செய்யவில்லை.

திராவிடவாதிகள், பிராமண எதிர்ப்பு என்ற வகையில், பாரம்பர்ய அர்ச்சக தொல்குடிகளை அழித்ததே இவர்கள் கண்ட பலன்.

எந்த அர்ச்சககுடிகளை ஒடுக்குகின்றார்கள் என்றால்,
கோயில் வழிபாட்டுக்கென்றே சிவபெருமான் சிருஷ்டித்த, ஆகமப்படி உருவாக்கப்பட்ட குடியாகிய #ஆதிசைவ அந்தணர்களுக்கு எதிராகவே இந்த ஒடுக்குதல் நடைபெறுகிறது.

பல நூறாண்டுகளாக #கோயில் வழிபாட்டிற்கென்றே உள்ள குடியாகிய, சமூகமாகிய, ஆதிசைவ #அந்தணர்களுக்கு எதிராகவே இந்த அனைத்துசாதி அர்ச்சகர் சட்டம் வலியுறுத்தப்படுகிறது.

இன்றைக்கு பல கிராமங்களில், கடந்த 100 ஆண்டு அரசியலால் #கோயில்வழிபாட்டுகுடிகளாகிய ஆதிசைவ குருக்கள்கள்
#திராவிடஅரசியல் கொடுமை தாங்காமல் வெளியேறிவிட்டார்கள் .

கிராம சிவாலயங்களில் சட்டம் போடாமலேயே அனைத்து சாதி அர்ச்சகர் நடைமுறைக்கு வந்துவிட்டது .

ஆக, இருக்கும் பெரும் ஆகமக் கோயிலுக்கே அனைத்துசாதி அர்ச்சகர் போட்டி. அங்குள்ள ஆதிசைவ அர்ச்சககுடிகளையும் ஒடுக்குவதே இனி வரும்கால திட்டம்.

இப்படியான நிலையால் அர்ச்சககுடிகள் In செக்யூர் நிலைக்கு தள்ளப்பட்டதோடு, தங்கள் வாரிசுகளை ஆகம கல்வி பயில வரும்காலத்தில் அனுப்புவார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுவிட்டது. அதோடு அர்ச்சகுடி குடும்பங்களே ஒரு அச்சத்தில் உள்ளனர்.

இன்றைய நிலையில் ஆகம கல்வி பயின்ற சிவாச்சாரியார் இளைஞர்கள் சுமார் 5000 பேராவது உள்ளார்கள். அவர்களின் மனோநிலை, எதிர்காலம் கேள்விக்குறியே.

கல்வி படிப்பும் இவர்கள் படிக்கவில்லை என்பதால் தனியார் கோயில், வெளிநாடு கோயில் என சுயத்தை இழக்கவேண்டியதுதான்... நடோடிகளாய் சுற்றவேண்டியதுதான்...

வரும்காலத்தில் நீதிமன்றம் என்ன இந்த விசயத்தில் முடிவெடுக்கு என தெரியவில்லை..... பார்ப்போம்.

தமிழக தொலைக்காட்சி, பத்திரிகையாளர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு தமிழகத்தில் #ஆதிசைவர் என்று ஒரு சமூக குடி பற்றி தெரியுமா? புரிதல் உண்டா? என்பது சந்தேகமே?

இப்படியே சென்றால் கோயில் சார்ந்த ஆதிசைவர் என்ற குடி தமிழகத்தில் இருந்தது என்பதை #பெரியபுராணத்திலும், #சைவபுராணம் புத்தகத்தில் மட்டுமே காண முடியும்.

சிவார்ப்பணம்.
தில்லை கார்த்திகேயசிவம்.



அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 17, 2021 6:30 am

இந்து மதத்தை, கலாச்சாரத்தை, கோவில்களை அழிக்க நினைக்கும் திமுகவின் அடுத்த ஆயுதம் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்னும் அதிவிப்பு.



அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 17, 2021 12:02 pm

சிவா wrote:இந்து மதத்தை, கலாச்சாரத்தை, கோவில்களை அழிக்க நினைக்கும் திமுகவின் அடுத்த ஆயுதம் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்னும் அதிவிப்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1350150


 நேற்று காலை நோயாளி உறவினரை சென்னையில் புகழ் பெற்ற  ஆஸ்பத்திரியில்  பார்க்கப் போயிருந்தேன்.  (அதான் நேற்று ஈகரை பக்கம் வர தாமதமாகிவிட்டது. இதுவும் ஒரு சாக்கு. அது நிற்க ).
மருத்துவமனையின் டீனுடன் ஒருவர் தகராறு செய்துகொண்டு இருந்தார். என்ன என்று பக்கத்தில் இருந்த நர்ஸை விஜாரித்தேன். சென்னையில்  IT யில், சிஸ்டெம் ஆபரேஷன் பிரிவில் வேலை செய்பவர், அந்த மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ள உறவினருக்கு அவர்தான் ஆபரேஷன் பண்ணுவேன் என்றும் தனக்கு ஆபரேஷன் டிவிஷனில் வேலை செய்து பழக்கம் இருக்கிறது என்று தகராறு செய்து கொண்டு இருந்தார்.

அவர் ஆபரேஷன் பண்ணலாமா கூடாதா?

@சிவா
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 17, 2021 12:15 pm

நெத்தியடி தலைவரே...
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் 200.gif?cid=34c25aaa9nxdft676rfgln7686pgm4tyz8se6l1cxlmyxmaq&rid=200



அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
https://www.aanmeegam.in/

Postaanmeegam Tue Aug 17, 2021 12:56 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:இந்து மதத்தை, கலாச்சாரத்தை, கோவில்களை அழிக்க நினைக்கும் திமுகவின் அடுத்த ஆயுதம் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்னும் அதிவிப்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1350150


 நேற்று காலை நோயாளி உறவினரை சென்னையில் புகழ் பெற்ற  ஆஸ்பத்திரியில்  பார்க்கப் போயிருந்தேன்.  (அதான் நேற்று ஈகரை பக்கம் வர தாமதமாகிவிட்டது. இதுவும் ஒரு சாக்கு. அது நிற்க ).
மருத்துவமனையின் டீனுடன் ஒருவர் தகராறு செய்துகொண்டு இருந்தார். என்ன என்று பக்கத்தில் இருந்த நர்ஸை விஜாரித்தேன். சென்னையில்  IT யில், சிஸ்டெம் ஆபரேஷன் பிரிவில் வேலை செய்பவர், அந்த மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ள உறவினருக்கு அவர்தான் ஆபரேஷன் பண்ணுவேன் என்றும் தனக்கு ஆபரேஷன் டிவிஷனில் வேலை செய்து பழக்கம் இருக்கிறது என்று தகராறு செய்து கொண்டு இருந்தார்.

அவர் ஆபரேஷன் பண்ணலாமா கூடாதா?

@சிவா
மேற்கோள் செய்த பதிவு: 1350155

சிப்பு வருது சிப்பு வருது

aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
https://www.aanmeegam.in/

Postaanmeegam Tue Aug 17, 2021 1:01 pm

சிவா wrote:இந்து மதத்தை, கலாச்சாரத்தை, கோவில்களை அழிக்க நினைக்கும் திமுகவின் அடுத்த ஆயுதம் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்னும் அதிவிப்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1350150

கடவுளே இல்லையென்று சொன்னவர்கள் இப்போது இப்படி செய்வதால் மதக்கலவரம் மற்றும் சாதிக்கலவரதிற்கு வழிவகை செய்யும்.. 

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - இதுவே திமுக-வின் பிரதான கொள்கை போலும்!

வந்த 100 நாளிலேயே இப்படியென்றால்.. போக போக தெரியும்.. சோகம்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 17, 2021 1:57 pm

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் - இத்திட்டம் , போகப்போகத்தான் தெரியும் நல்லதா? கெட்டதா? என்று!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 17, 2021 3:54 pm

கர்ப்பகிரகத்தில் ஏன் எல்லோரும் நுழைய முடியவில்லை அதை கட்டிய கொத்தனார் ஏன் நுழையமுடியவில்லை, செதுக்கிய சிற்பி ஏன் நுழையமுடியவில்லை , சிற்பிக்கு சோறுபோட்ட அவன் மனைவி ஏன் நுழையமுடியவில்லை என கிளம்பிவிட்டார்கள் ஒரு சிலர்

கிளப்பிவிட்டது இப்போதைய அறமில்லா அமைச்சர், தன் அதிகாரம் மீறி எல்லை
ஆலயத்து கர்பகிரகம் தனித்து காக்கபட வேண்டும் என்பது அக்காலத்து விதி, அது இந்துமதத்துக்கு மட்டுமல்ல யூத மதத்திலும் இன்னும் சில பண்டைய மதங்களிலும் இருந்தது

அதற்கு காரணம் தீண்டாமை அல்ல, அல்லவே அல்ல‌

ஞானிகளுக்கான ஞானி சாலமோன் அமைத்த ஆலயத்திலே முக்கியமான பீடத்திற்கு குரு தவிர யாரும் நுழைய அனுமதியில்லை என்கின்றது சான்றுகள், ஆம் அவன் கட்டிய ஆலயத்து கர்ப்பகிரஹத்துக்குள் அவனே நுழையவில்லை

ராஜராஜ சோழனும் அப்படியே தன் ஆலயத்தில் தள்ளி நின்றான், ஏன் அப்படி விதி வைத்தார்கள்?

முதல் விஷயம் பாதுகாப்பு, சிலைகளும் அவற்றின் நகைகளும் இன்னு விலைமதிக்கபடா பொக்கிஷங்களும் அந்த சந்ததியில்தான் இருந்தன, கருவறை தெய்வமே எல்லா வளங்களுக்கும் சாட்சியாய் நின்றது

எல்லோரையும் உள்ளே விட்டால் அதை காப்பதும் சிரமம், இன்னொன்று அழகிய சிலைகளை சேதபடுத்தும் ஆபத்தும் உண்டு

முக்கியமான விஷயம் பாதுகாப்பு என்பதால் தள்ளி இருந்து மக்களை தரிசிக்க வைத்தார்கள்

கருவறையும் அதன் நகையும் பொன்னும் வைரமும் ஒரு நாட்டின் செழுமையின் அடையாளமாய் இருந்தது
இன்று டிரம்போ மோடியோ வருகின்றார்கள் என்றால் ஓடிசென்று நெருங்கமுடியுமா? தள்ளி நின்றுதான் தரிசிக்கமுடியும்

மானிடருக்கே இப்படி என்றால் அன்று தெய்வத்தின் சிலைகளுக்கு எப்படி எல்லாம் பாதுகாப்பு வழங்கியிருப்பார்கள்

அடுத்த விஷயம் எல்லா மக்களையும் கருவறையில் அனுமதித்தால் மூல தெய்வத்தின் பாதம் முதல் முகம் வரை தொட்டு வணங்குவார்கள், அந்த தெய்வத்தின் மேல்தான் பக்தி அதிகம் ஓங்கும்

எல்லோரும் தொட்டு அல்லது எல்லோரும் அபிஷேகமும் அலங்காரம் செய்தால் என்னாகும்?

சிலையின் ஆயுள்தான் என்னாகும்? எல்லோரும் தொட்டால் சேதமாகாதா? இதனால் தள்ளி இருந்து வணங்க சொன்னார்கள்

இன்னொன்று ஆகம விதி

சைவ உணவும் கட்டுபாடான விரதமும் இன்னும் மந்திர உச்சாடனைகளில் தேர்ச்சியும் முழுநேரமும் இறைவனை பற்றி சிந்தித்து அந்த பாடங்களில் தேர்ச்சியும் முதிர்ச்சியும் பெற்றவர்களே அங்கு அனுமதிக்கபட்டனர்

முதல் காரணம் அவர்கள் வாழ்வினை முழுநேரமும் கடவுளுக்காக அர்பணித்தவர்கள், கடவுளின் பணியாளர்கள்
மனசாட்சியும் தெய்வபக்தியும் நிறைந்தவர்கள்

அவர்களால் ஆலய பீடமோ சிலையோ நகையோ எதுவும் ஆகாது எனும் நம்பிக்கையில் அனுமதிக்கபட்டாரகள்
ஆம் இறைவனுக்கு வாழ்வினை முழுக்க அர்பணித்தவர்களே செல்லலாம் என்பதுதான் பண்டைய மதங்களின் விதி, அதன் தொடர்ச்சியான இந்துமதத்தின் விதியும் கூட‌

ஆலயத்தையும் வழிபாட்டையும் தவிர ஏதுமறியா குருக்கள் அங்கு அனுமதிக்கபட்டனர்

காரணம் கர்பகிரகத்து அமைப்பு முதல் தன்மை வரை சிலையின் பராமரிப்பு வரை அவர்களுக்குத்தான் தெரியும்

சும்மா நேரம் போகவில்லை என்றாலோ இல்லை நாளில் 10 நிமிடம் கடவளை வணங்க அல்லது புலம்ப வருபவர்களை கர்பகிரகத்தில் விட என்ன அவசியம் உண்டு?

மனமும் சிந்தனையும் உடலும் எல்லாமும் ஆலயத்தில் பின்னி பிணைந்த மானிடர்களே குருக்கள் என மகா தூய்மையான சந்நிதானத்தில் அனுமதிக்கபட்டார்கள்

அதிலும் வழிபாட்டு நேரம் மட்டும் செல்லமுடியுமே தவிர அமரவவோ அங்கு ஓய்வெடுக்கவோ அனுமதி இல்லை
இன்னும் சிலர் சொல்வார்கள் சமஸ்கிருதம் ஏன்?

அங்குதான் இருக்கின்றது ரகசியம்

இந்நாடு அன்றே மொழியால் பிரிந்தாலும் மதத்தால் ஒன்றாயிருந்தது

அன்றைய பாரதத்திலும் பாரதத்துக்கு வெளியிலேயும் இந்து ஆலயம் இருந்தன மொழிவேறு
ஒரு இந்து எந்த ஆலயத்துக்கு சென்றாலும் புரிந்து வழிபடும் மொழியாக இணைப்பு மொழியாக சமஸ்கிருதம் இருந்தது

இன்று இஸ்லாமியர் தொழுகைக்கும் அழைப்புக்கும் அரேபிய மொழி உலகளாவிய நிலையில் இருக்கின்றதல்லவா?

கிறிஸ்தவருக்கு ஆங்கிலம் உண்டல்லவா?

அப்படி இந்து ஆலயங்களை இணைத்த மொழி சமஸ்கிருதம், அதுதான் உண்மை, அதுதான் சத்தியம்
கவனியுங்கள்

அந்த ஆலயத்தை கட்ட சொல்லி பொன்னும் பொருளும் கொடுத்து வழிபாட்டு மானியமும் கொடுத்த அரசன் உள்ளே செல்ல முடியாது

அவனோ அவனின் குடும்பமோ கர்ப்பகிரகத்தினுள் நுழைய முடியாது

அரசனின் பலம் வாய்ந்த தளபதிகளும் நுழைய முடியாது

அதாவது அந்த சமூகம் அப்படி கட்டுபட்டு நின்றது, கடவுளுக்காக வாழ்வோர் மட்டும் உள்ளே சென்றால் போதும் மன்னனே ஆயினும் வெளியில் நிற்க என வகுத்தது

மன்னனும் அதை ஏற்று மனமார பின்பற்றினான்

ஆம் ஆலயத்தில் ஆண்டான் அடிமை பார்ப்பான் சூத்திரன் வைசிகன் எனும் பேதத்தை யாரும் கண்டதில்லை
ஆலயத்துள் நுழைய எல்லோருக்கும் அனுமதி இருந்தது, இந்த மதுரை வைக்கம் போன்ற ஆலயங்களில் இருந்த சர்ச்சை சில காலமே. அதுவும் வெள்ளையன் வந்து செய்த குழப்பங்களின் பின்பே

அப்பொழுதும் மற்ற ஆலயங்களில் எல்லோரும் செல்லும் அளவுதான் நிலமை இருந்தது, அங்கெல்லாம் சிக்கல் இல்லை

இறந்த ஆடுமாடுகளை சுமப்போர், வெட்டியான் போன்ற சிலரால் நோய்பரப்பும் ஆபத்து இருப்பதால் சிலரை பொதுஇடங்களில் அக்கால சமூகம் அனுமதிக்கவில்லை

ஆலயமும் பொதுவிடம் என்பதால் நோய்தடுப்புக்காக சில தொழில் செய்வோரை அனுமதிக்கவில்லை
அது சாதிவிரோதம் அல்ல, பைரவர் கபாலி மாவிரதர் போன்ற சைவ அடியார்கள் கூட ஆலயத்துனுள் அனுமதிக்கபடவில்லை, அவர்களை கண்டும் இந்து சமூகம் தள்ளி நின்றுதான் வணங்கிற்று

மற்றபடி ஆலயத்துள் யாரும் செல்லலாம் ஆனால் மகா முக்கியமான கர்ப்பகிரகத்தில் கடவுளுக்கு அர்பணிக்கபட்டோரும் மகா நம்பிக்கைக்கு உகந்தோரும் பந்த பாசம் அறுத்தோரும் மட்டும் செல்லலாம் எனும் விதி இருந்தது

குருக்கள் செல்வாரே அன்றி குருக்களின் மனைவியும் மக்களும் செல்லமுடியுமா?

பார்ப்பான் என்பதுதான் கர்ப்பகிரகத்தில் நுழையும் தகுதி என்றால் பிராமண பெண்களும் குழந்தைகளும் செல்லலாமே? சென்றார்களா?

இல்லை ஒரு காலமும் இல்லை

பாதுகாப்புக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் அன்றே ஏற்படுத்தபட்ட விஷயங்களை இன்றளவும் பின்பற்றி வருகின்றது தூய்மையான இந்துமதம்

கர்ப்பகிரகம் பார்ப்பனருக்கு மட்டுமான இடம் அல்ல, கடவுளுக்காக அர்ப்பணிக்கபட்ட மற்ற சாதியின வழிபாடு நடத்தும் எத்தனையோ ஆலயங்கள் இங்கு உண்டு

கத்தோலிக்க கிறிஸ்தவ பீடங்களிலும் குருக்கள் தவிர யாரும் வழிபாடு நடத்தமுடியாது, பெண்களுக்கு பீடத்தில் வழிபாடு நடத்த அனுமதி இன்றும் இல்லை

பீடத்தை அடுத்த அந்த நற்கருணை பெட்டியினை குருவானவர் தவிர யாரும் தொடக்கூடாது, திறக்க கூடாது
அவர்கள் காக்கும் புனிதம் அப்படி

இன்றும் புனிதமான மெக்காவின் கபாவில் அரசகுடும்பம் தவிர யாரும் செல்லமுடியாது

எல்லோரையும் அனுமதித்தால் அந்த மகா புண்ணிய இடத்தை பராமரிப்பது கடினம் என்கின்றது சவுதி அரச குடும்பம்

அட வேளாங்கண்ணி கோவிலிலே மூல விக்கிரகத்தை யாரும் தொடமுடியாது

பீடத்துக்குள்ளே பக்தர்கள் செல்லமுடியாது, காரணம் அந்த காணகிடைக்கா சொரூபத்துக்கான பாதுகாப்பு
இதுதான் இந்து ஆலயங்களிலும் நடக்கின்றது, அது தீண்டாமையாம்

ஆம் தனித்துவமும் புனிதமுனான விஷயங்களை எல்லோருக்கும் பொதுவாக தூரத்தில் வைப்பதுதான் சரி
அனுமதிக்கபட்ட சிலரை மட்டும் வைத்து வழிபடுவதுதான் சால சிறந்தது

அதில் மந்திர உச்சாடனை,சிலையினை உருவேற்றுதல் என சில விஷயங்கள் உண்டு என நம்புபவர்கள் நம்பட்டும்

நம்பாதோர் அதில் இருக்கும் பாதுகாப்பு இன்னபிற விஷயங்களை நம்பினாலோ போதும்

ஒரு மருத்துவருடன் நோயாளி கைகுலுக்கினால் அடுத்த நோயாளி வருமுன் மருத்துவர் கைகளை பலமுறை டெட்டால் போட்டு கழுவுகின்றார் மருத்துவர்

ஏன் நோய் பரவிவிடுமாம், ஆம் கொரோனா காலத்தில் இது தெளிவாய் விளங்கும்

எல்லோரையும் கர்பகிரகத்தில் விட்டு சொரூபத்தை தொட்டு வணங்க சொன்னால், ஒவ்வொரு முறையும் சிலையின் பாதத்தை கழுவுவது நடக்கும் காரியமா?

இதனால்தான் தள்ளி நின்று வணங்க சொன்னார்கள் அன்றைய இந்துக்கள்

ஆலயங்களை கழுவி விடுவதும் மிக சுத்தமாக பார்த்துகொள்வதும் இந்த தத்துவமன்றி வேறல்ல‌

அதில் சூத்திரன் அது இது தீட்டு என சொல்ல ஒன்றுமில்லை இன்றைய சுத்தத்தின் அவசியத்தை அன்றே சொன்னது இந்துமதம்

குருவானவர் பூஜை செய்யும் பொழுது மணி அடிக்கின்றார்களே ஏன்?

அந்த ஓசை கேட்கும் பொழுதுஎல்லோர் கண்ணும் கர்ப்பகிரகம் நோக்கி திரும்ப வேண்டும், அந்த தெய்வத்தை எல்லோரும் ஒன்றாய் தொழ வேண்டும்

அரசன் முதல் ஆண்டிவரை அன்று மணியோசை எழுப்பும் பொழுது தள்ளி நின்று வணங்கினார்கள்

மாறாக நீங்களே சென்று வணங்கிவிட்டு வாருங்கள் என அனுப்பினால் கூட்டம் என்னாகும்? கருவறை என்னாகும்?

இதெல்லாம் அன்றே திட்டமிட்டு உருவாக்கபட்ட நுட்பமான விஷயங்கள்

வைர நகையினை ஒருவர் வைத்திருந்தால் அதை பொத்தி பொத்தி பாதுகாப்பாரா இல்லை? எல்லோரும் வந்து பாருங்கள் என எல்லோர் கையிலும் கொடுப்பாரா?

வைர கண்காட்சியிலே அது பாதுகாப்பாக தள்ளிதான் வைக்கபட்டிருக்கும்

உயர்ந்த மதிப்புமிக்க பொருட்களுக்கான இடம் அப்படியானது, மகா மகா தூய்மையான கற்பகிரகமும் அப்படியே

ஆழ சிந்தித்தால் அதிலுள்ள உண்மை விளங்கும்

புனிதமான விஷயங்களில் சாணி அடிக்க வேண்டாம்

அங்கு பிறப்பால் எதுவும் வருவதில்லை தனக்கு பின் மகனும் பேரனும் கர்ப்பகிரகத்தில் வந்து தட்சனை பிச்சை வாங்க வேண்டும் என எந்த பிராமணனும் நினைப்பதில்லை

மாறாக திராவிட கட்சி தலைவர்கள்தான் தங்கள் கட்சியின் தலமை பதவி பிறப்பால் நிர்ணயிக்கபடுகின்றது
என் அப்பனுக்கு பின் எனக்கு, எனக்கு பின் என்மகனுக்கு அவனுக்கு பின் என் பேரனுக்கு என பிறப்பால் வரும் உரிமையினை நிலைநாட்டுகின்றார்கள்

ஆலயங்களும் அவற்றின் அமைப்புகளும் நுட்பமான நிர்வாகம், பக்தி, இயங்குமுறை , பாதுகாப்பு, உடல்நலம் இன்னும் ஏகபட்ட விஷயங்களை உள்ளடக்கியவை

பெண்களுக்கு கர்பகிரகத்தில் அனுமதியில்லை என்பதை விட நோக்க வேண்டிய விஷயம் அவர்கள் மந்திரங்களை உச்சரிக்க கூட அனுமதியில்லை

காரணம் மந்திரங்கள் உடலை சூடாக்க கூடியவை அது பெண்களின் கர்ப்பையினை பாதிக்கும் என்பதால் அனுமதி இல்லை

இதே அனுமதிதான் கருவறையிலும் மறுக்கபட்டது, மாத விலக்கான நாள் மட்டுமல்ல சூடு நிறைந்த கருவறை மந்திர உச்சாடனைகளுடன் சேர்ந்தால் பெண்ணின் கர்ப்பபை பாதிக்கபடும்

இதனாலே அவளுக்கு விலக்கு அளித்தது இந்துமதம்

கர்ப்பகிரகம் செல்ல அவளுக்கு அனுமதியில்லை தவிர, பூச்சூடி பட்டு உடுத்தி தேர்போல் வர அவளை அனுமதித்தது, பாடல் பாடவும் ஆடவும் அவளுக்கு தடை இல்லை

சில மதங்களை போல் முக்காடு இட்டு, முழுக்க மூடி புண்ணாக்கு மூட்டைபோல் வர சொல்லவில்லை இந்துமதம், அது பெண்களை பெண்ணாக கொண்டாடியது

ஆக ஒரு காலத்தில் இருந்த மிக பெரும் அறிவான சமூகத்தால் ஏற்படுத்தபட்டவை, அறிவும் ஆழ்ந்த கவனமும் இருந்தால் அது புரியும், புரிந்தால் கை எடுத்து வணங்க தோன்றும்

சில விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம், முதலில் கற்பகிரகம் நுழைய வேண்டும் என்பார்கள், பின் தொட வேண்டும் என்பார்கள் மெல்ல ஆலயத்தில் மீன்குழம்பும் கருவாட்டு பொறியலும் சமைக்க அனுமதிக்க வேண்டும் என்பார்கள், ஒவ்வொன்றாய் சொல்லி ஆலயத்தை மீன் சந்தையாக ஆக்க நினைப்பார்கள்

அவர்களுக்கு கொடுக்கபட்டிருக்கும் அசைன்மென்ட் இதுதான், அதனால் இப்படி ஏதாவது சொல்லிகொண்டே இருப்பார்கள்

இவ்வளவு சொல்வார்கள், சரி பூசாரி மகன் பூசாரி என கற்பகிரகத்தில் நுழைவதில்லை ஆனால் தலைவன் மகன் அடுத்த முதல்வராவார், அவருக்கு பின் அவர் மகனும் அவர் மகனும் முதல்வராவார்களே, பிறப்பால் ஏற்ற தாழ்வு எங்கே உண்டு என கேளுங்கள்

நடிகனுக்கு பின் அவர் மகன் நடிகனாய் வந்து சம்பாதிக்கலாம் இன்னொருவன் வந்தால் வளரவிடாமல் அடிப்பார்கள், அவனவன் போராடி வரும் இடத்தை நடிகன் மகன் எளிதாக வரமுடிகின்றதே எப்படி பிறப்பால் ஏற்றம் எங்கே இருக்கின்றது என கேளுங்கள்

பதிலே வராது...

ஸ்டான்லி ராஜனின் முகநூல் பதிவு





அனைத்து சாதியினரும் அர்ச்சகர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 17, 2021 9:14 pm

கிருத்துவ மடாலயங்களில் எந்த கிருத்துவரும் பாதிரியாராக சபைதனை நடத்தமுடியுமா?
இஸ்லாமிய தர்காக்களில் யார் வேண்டுமானாலும் மவுல்வியாக முடியுமா?
 யாரோ விட்டு சென்ற பெரிய ட்ரஸ்டுகளில் யார் வேண்டுமானாலும்,கட்சிக்காரர்தான்  உரிமை /சொந்தம் கொண்டாடமுடியுமா?  குடும்ப ஆட்சிதான் அங்கேயும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 17, 2021 9:19 pm

ஆனால் தலைவன் மகன் அடுத்த முதல்வராவார், அவருக்கு பின் அவர் மகனும் அவர் மகனும் முதல்வராவார்களே, 



தலைவனின் மகனுக்கு சவாலாக இருப்பான் ஒருவன் எனத்  தெரிந்தால் அவனை நசுக்கவும் தயங்கமாட்டார்கள், அரசியல் தலைவர்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக