புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_c10மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_m10மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_c10 
21 Posts - 66%
heezulia
மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_c10மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_m10மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_c10மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_m10மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_c10 
63 Posts - 64%
heezulia
மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_c10மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_m10மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_c10மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_m10மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_c10மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_m10மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 30, 2021 8:04 am

மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல 698110
ஓவியம்: லலிதா
-
“மைக்கேலாஞ்சலோ, உன்னைக் கையோடு அழைத்துவரச் சொன்னார்கள்” என்று நண்பர் அழைத்ததும், "எங்கே?” என்றேன். "சிஸ்டைன் தேவாலயத்துக்கு" என்று அவர் சொன்னதும் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. கையிலிருந்த உளியைக் கீழே வைத்துவிட்டு, கேட்டேன். "எதற்காக?” என்ன பதில் வரும் என்று தெரியும் என்றாலும் அது அவர் வாயிலிருந்துதான் வரட்டுமே! "தலைமை பாதிரியாரே அழைத்தார். தேவாலயத்தில் நீ ஏதோ செய்ய வேண்டுமாம்" என்றார் நண்பர்.

உற்சாகத்தோடு கிளம்பினேன். நான் வடித்த சிற்பங்களை அவர்கள் பார்த்திருக்க வேண்டும். என்னுடைய வேலை அவர்களுக்குப் பிடித்திருக்க வேண்டும். தேவாலயத்துக்குச் சில சிற்பங்கள் செய்து தரமுடியுமா என்று கேட்கப் போகிறார்கள். மாட்டேன் என்றா சொல்லப் போகிறேன்? என்னென்ன சிலைகள் கேட்பார்கள்? எவ்வளவு அவகாசம் கொடுப்பார்கள்? சிற்பங்களை உள்ளே எங்கெல்லாம் வைப்பார்கள்? சரி, சரி எங்கே வைத்தால்தான் என்ன? எப்படியும் இறைவனுக்கு அருகில்தான் இருக்கப் போகின்றன. வேறு என்ன வேண்டும், சொல்லுங்கள்?


என்னை அமர வைத்த பிறகு பாதிரியார் சொன்னார்: "கவனமாகக் கேட்டுக்கொள், இது தேவாலயத்துக்காக நீ செய்யப் போகும் பணி. உன் திறமைகளைப் பார்த்திருக்கிறோம் என்றாலும் இங்கே நீ உருவாக்கப் போவது இதுவரை இல்லாத அளவுக்குச் சிறப்பாக இருக்க வேண்டும். முழுக் கவனத்தோடும் முழு மனதோடும் நீ இதைச் செய்து முடிக்க வேண்டும். சம்மதம்தானே?”

“ஓ, நிச்சயம் ஃபாதர். எந்த மாதிரியான படைப்புகள் என்று சொன்னால் இப்போதே தயாராக ஆரம்பித்துவிடுவேன்” என்றேன் அடக்கமாக. “ஆதாம், ஏவாள் தொடங்கி கடவுள் படைத்த முழு உலகையும் நீ படைக்க வேண்டும்” என்றார் பாதிரியார். "ஆ, அற்புதம்” என்றேன் உற்சாகத்தோடு. அப்படியானால் வேலையை ஆரம்பித்துவிடு. "ஓ, கையோடு உளிகளைக் கொண்டுவந்துவிட்டேன் பாருங்கள்” என்று பையை உயர்த்திக் காட்டினேன்.

"உளிகள் எதற்கு? வண்ணங்கள்தானே வேண்டும்?” என்றார் பாதிரியார். "என்னது, வண்ணங்களா?” என்று விழித்தேன். "ஆம், வண்ணங்களில்தானே ஓவியங்களைத் தீட்டமுடியும்” என்று பாதிரியார் சொன்னதும், "என்னது, ஓவியமா?” என்று அதிர்ந்தேன்.

"இதென்ன மைக்கேலாஞ்சலோ எதற்கெடுத்தாலும் அதிர்ந்து போகிறாய்? எவ்வளவு பெரிய கலைஞன் நீ? உனக்குத் தெரியாத வேலையையா கொடுத்துவிட்டேன்?” என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் பாதிரியார். "ஐயோ, ஆமாம் ஃபாதர்” என்று அலறினேன். "நான் ஒரு சிற்பி. என்னைப் போய் ஓவியம் வரையச் சொல்கிறீர்களே? சிறு வயதில் ஏதோ ஓவியம் வரைந்து பழகியிருக்கிறேன், அவ்வளவுதான். இதுவரை பெரிதாக எங்கும், எதற்கும் வரைந்ததில்லை. என்னிடம் போய் இவ்வளவு பெரிய வேலையை ஒப்படைத்தால் என்ன செய்வது? சிற்பம் செதுக்கச் சொல்வீர்கள் என்றல்லவா ஆசையாசையோடு ஓடிவந்தேன்!”

"அதனாலென்ன? எல்லாமே கலைதானே” என்று ஆள்காட்டி விரலை வானத்தை நோக்கிக் காட்டியபடி வெளியேறினார் பாதிரியார். அதென்ன மேலே காட்டுகிறார், ஒருவேளை எனக்கு வந்த சோதனையை இறைவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாரா என்று அண்ணாந்து பார்த்தேன். வெள்ளை வெளேரேன்று இருந்த மேற்கூரையைப் பார்த்துச் சில நிமிடம் குழம்பினேன். பிறகு இத்தாலியே நடுங்கும்படி அலறினேன்.

தவளை பார்த்திருப்பீர்கள். நான்கு கால்களையும் மேலே நீட்டிக்கொண்டு தலைகீழாக அது தத்தளிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? சிஸ்டைன் தேவாலயத்துக்கு வந்தால் அப்படி ஒரு தவளையைக் காண்பீர்கள். கூரையில் என் மூச்சுக் காற்று பட்டுக்கொண்டிருந்தது. என் முதுகிலும் இடுப்பிலும் முழங்காலிலும் கயிறுகள் கட்டப்பட்டிருந்தன. விடிந்ததும் நான்கு பேர் என்னைக் கட்டி, மேலே தொங்கவிட்டுவிட்டுப் போய்விடுவார்கள். மாலை வந்துதான் அவிழ்த்து விடுவார்கள்.

ஆதாமின் கால் விரல்களை வரையும்போது என் வயிற்றை என் முழங்கால் போட்டு அழுத்திக்கொண்டிருக்கும். நான் என்னென்ன வண்ணங்களைக் குழைத்து தீட்டுகிறேன் என்பதைத் தெரிந்துகொள்ள ஓவியத்தை அல்ல, என் உடலைப் பார்த்தாலே போதும். கூரையில் நான் ஒரு பச்சைக் கோடு போட்டு முடிப்பதற்குள் என் முகத்தில் சொட்டுச் சொட்டாகப் பத்துப் பச்சை புள்ளிகள் விழுந்திருக்கும். இமையில் சிவப்பு. உதட்டில் மஞ்சள். இடது கண்ணில் பழுப்பு, வலது கண்ணில் ஊதா. ஒரு மஞ்சள் பூ வரைந்தால் என் தாடையிலிருந்து மஞ்சள் வழியும்.

இல்லை, தவளை அல்ல. நான் ஒரு சிலந்தி. அதுதான் நூலின் கீழே தொங்கிக்கொண்டிருக்கும். இல்லை, நான் ஒரு வௌவால். அதுதான் இரவெல்லாம் கொட்டக் கொட்ட விழித்தபடி தலைகீழாக நின்றுகொண்டிருக்கும்.

தலை விண்விண்ணென்று வலிக்கும். வயிறு அப்படியும் இப்படியும் போட்டுப் பிசையும். கை வலி குறைவதற்குள் கால் வலிக்கும். கால் ஓய்ந்தால் தோள்பட்டை குத்தும். அந்தப் பக்கம் திரும்பினால் இடுப்பில் தொங்கிக்கொண்டிருக்கும் தூரிகைகள் ஒன்று மாற்றி ஒன்று குத்தும். இந்தப் பக்கம் நகர்ந்தால் நான் வரைந்த ஓவியத்தின் மீது நானே முட்டிக்கொள்வேன். என்னை ஏன் இப்படிப் போட்டுப் படுத்துகிறாய் என்று என் உடலே என்னைப் பார்த்துக் கத்தும்.

ஆனாலும் நான் நிறுத்தமாட்டேன். ஒவ்வொருமுறை நான் சலிப்படையும்போதும், வரைந்துகொண்ட இரு மைக்கேலாஞ்சலோ என்று மேற்கூரை என் காதில் கிசுகிசுக்கும். ‘நான் பேசுவதை மட்டும் கேள். இப்போது நீ காற்றில் மிதந்துகொண்டிருக்கிறாய். கூரையில் அல்ல, வானத்தில் வரைந்துகொண்டிருக்கிறாய். நிலவு போல், கதிரவன் போல், நட்சத்திரங்கள் போல், வானவில் போல், மேகம் போல் உன் ஓவியங்கள் உயிர் பெற்று எழுந்து வரட்டும். அச்சத்தையும் தயக்கத்தையும் உடைத்துக்கொண்டு நீ உயர, உயர உன் படைப்புகளும் உயர்ந்துகொண்டே செல்லும். உலகம் கீழிருந்து உன்னை அண்ணாந்து பார்க்கும். அப்போது உன் வலிகளும் துயரங்களும் மறைந்து போயிருக்கும். நீ இருப்பாய். நீ படைத்தவை எல்லாம் இருக்கும்.’

-மருதன்
கட்டுரையாளர், எழுத்தாளர்
நன்றி- இந்து தமிழ் திசை


சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக