புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_c10என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_m10என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_c10 
20 Posts - 65%
heezulia
என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_c10என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_m10என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_c10என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_m10என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_c10 
62 Posts - 63%
heezulia
என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_c10என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_m10என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_c10என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_m10என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_c10என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_m10என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு!


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Tue Jan 12, 2010 9:23 am








என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Police
ல்யாணிஎன்கிற முகம் தெரியா அன்பரிடமிருந்து என்னுடைய ‘என் டயரி’ வலைப்பூவில்
நான் இட்டிருந்த ‘நலமா ஞாநி?’ பதிவுக்கு ஒரு பின்னூட்டம் வந்தது. அதன்
சாராம்சம் கீழே:


“இது
இந்தப் பதிவுக்குப் பொருத்தமில்லாததாக இருந்தபோதிலும், நீங்கள் விகடனில்
பணியாற்றுகிறவர் என்பதால் இந்த யுஆர்எல் இணைப்பை உங்களுக்கு அனுப்ப
விரும்புகிறேன். (இணைப்பு: என்டிடிவி.காம்.)
மிகுந்த மன வருத்தம் அளிக்கக்கூடிய இந்தச் செய்தியை என்டிடிவி.காம்.-ல்
படித்தேன். எனக்குத் தெரிந்த வரையில் இந்தச் செய்தி துரதிர்ஷ்டவசமாக
எந்தத் தமிழ்ப் பத்திரிகைகளிலும், செய்தித் தாள்களிலும் வெளிச்சத்துக்குக்
கொண்டு வரப்படவில்லை. விகடனாவது தனது வெப் பேஜில் இதை ஒரு செய்தியாக
வெளியிட்டிருக்கும் என்று எதிர்பார்த்தேன். இல்லை. என்டிடிவி
வெளியிட்டிருக்கும் இந்தச் செய்தி என்னை மிகுந்த
வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட தமிழ்நாடு அமைச்சர்களின்
மீதான என்னுடைய கோபத்தை வெளிப்படுத்த என்னிடம் போதிய வார்த்தைகள் இல்லை.
இறந்துபோன அந்தக் காவலரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத்
தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட அந்தத் தார்மிக மற்றும் அற நெறி
உணர்வுகள் அற்ற, தகுதியற்ற அமைச்சர்கள் தினம் தினம் தூக்கம் கெட்டு, குற்ற
உணர்ச்சியோடும் குடைகிற மனத்தோடும் நெடுங்காலம் வாழ வேண்டும் என்று இறைவனை
வேண்டுகிறேன்!”

கல்யாணி கொடுத்திருந்த இணைப்பில் கண்ட என்டிடிவி செய்தியின் தமிழாக்கம் கீழே:

காவலர் ஒருவர் சாலையில் தாக்கப்பட்டார்; அமைச்சர்கள் அதிர்ச்சியுடன் காரில் அமர்ந்திருந்தனர்; உதவிக்கு யாரும் வரவில்லை!

மிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.வெற்றிவேல் என்கிற காவலர் சாலையில் விழுந்து துடிதுடித்தபடி உதவி கேட்டுக் கெஞ்சிக்கொண்டு இருக்கிறார். 44 வயதுடைய அவரின் கால்கள் ஒரு ரவுடிக் கும்பலால் துண்டிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி
பகுதியைச் சேர்ந்த இந்தச் சாலை வழியாக அரசு கார்களின் அணிவகுப்பு ஒன்று
கடக்கிறது. தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் (மொய்தீன் கான்) மற்றும்
ஹெல்த் மினிஸ்டர் (எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்) இருவரும் அந்த அணிவகுப்பில்
இருக்கிறார்கள். கார்களின் ஊர்வலம் நிற்கிறது. இரு அமைச்சர்களுமே தங்கள்
கார்களை விட்டு இறங்கவில்லை. அவர்களுடன் அரசுத்துறை அதிகாரிகளான மாவட்ட
ஆட்சியாளரும், ஹெல்த் செக்ரெட்டரியும் இருக்கிறார்கள்.

எட்டு
நிமிடங்கள் கழிந்த பிறகு, கலெக்டர் ஜெயராமன் மிகுந்த தயக்கத்துடன்
ஒருவழியாகக் காரை விட்டுக் கீழே இறங்குகிறார். ஆனால், யாருமே அடிபட்டுக்
கிடக்கும் அந்தக் காவலரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முன் வரவில்லை.
கடைசியாக கலெக்டர் ஆம்புலன்ஸுக்குப் போன் செய்கிறார். ஆனால், அது வரவில்லை.

இருபது
நிமிடங்களுக்குப் பிறகு, அந்த போலீஸ்காரர் அந்தக் கார்களில் ஒன்றில்
கிடத்தப்படுகிறார். (அப்போதும் அமைச்சர்கள் தங்கள் கார்களை வழங்க
முன்வரவில்லை.) மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அந்தக் காவலர்
இறந்துவிடுகிறார்.

ஆம்புலன்ஸ் வந்து போன பிறகு, ஹெல்த் மினிஸ்டர் தன் காரை விட்டுக் கீழே இறங்குகிறார்.

பின்னர்
இது பற்றி அவரது கருத்தைக் கேட்டறிய முயன்றபோது, அவர் தன்னைத் தனியே
விடுமாறு என்டிடிவி நிருபரிடம் கோபத்துடன் எரிந்து விழுகிறார்.

நடந்த
நிகழ்வுகளில் எந்தத் தவறும் இல்லையென்று, அந்த கார் ஊர்வலத்தில்
கலந்துகொண்ட மூத்த அதிகாரியான வி.கே.சுப்புராஜ் சொல்கிறார். “அந்தச்
சூழ்நிலையில் என்ன செய்யமுடியுமோ அதை நாங்கள் சிறப்பாகவே செய்தோம்.
ஆம்புலன்ஸ் வருவதற்கு 20 நிமிடங்கள் ஆகிவிட்டன. போலீஸார் சிறப்பாகச் செயல்பட்டனர்...” என்று என்டிடிவி-க்கு அளித்த தொலைபேசி பேட்டியில் சொன்னார் அவர்.

கீழே
வீடியோ இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது அந்த அமைச்சர்களின் விசிட்டைப்
படமெடுப்பதற்காகச் சென்ற ஃப்ரீலான்ஸ் காமிராமேனால் பதிவு செய்யப்பட்ட
காட்சியாகும். இது மிகக் கொடூரமான காட்சியாகவும், குழந்தைகள் பார்க்க
முடியாத அளவுக்கு மோசமானதாகவும் உள்ளது.

(என்டிடிவி.காம்-ல்
அந்த வீடியோ இணைப்பும் உள்ளது. உயிருக்குப் போராடும் காவலரின் உடம்பு
கொடூரம் தெரியாத அளவுக்கு மாஸ்க் செய்யப்பட்டுள்ளது.)


வீடியோ
காட்சியைப் பார்த்தபோது வயிறு பற்றி எரிந்தது. ‘என்னங்கடா இது அக்கிரமா
இருக்கு’ என்று ஆத்திரம் வந்தது. தமிழ்த் திருநாட்டில் காவலர் ஒருவருக்கே
பாதுகாப்பு இல்லை; அதுவும் மாண்புமிகுக்கள் கண் எதிரேயே துடிதுடித்துக்
கிடக்கும் அவரைக் காப்பாற்ற நாதியில்லை என்றால், நாமெல்லாம் எந்த மூலை
என்கிற பயம் வந்தது.

வேறு யாரோ ஒரு காவலரின் குடும்பப் பிரச்னையால்
அவரைத் தாக்கத் திட்டமிட்டவர்கள் ஆள் மாறி, வெற்றிவேலைக் கண்டம்துண்டமாக
வெட்டிப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். வெட்டுப்பட்டவர் யாராக
வேண்டுமானாலும் இருக்கட்டும்; தீவிரவாதியாகவேகூட இருக்கட்டும். உடனடியாக
அவரைக் காப்பாற்ற முனைவதுதானே மனிதப் பண்பு!

சமீபத்தில்தான் உச்ச
நீதிமன்றம் பொன்னான ஒரு தீர்ப்பை வழங்கியது. சாலையில் அடிபட்டுக்
கிடக்கும் நபரைக் கொண்டு வந்து சிகிச்சைக்குச் சேர்த்தால், எந்த
மருத்துவமனையும் போலீஸ் எஃப்ஐஆர், லொட்டு லொசுக்கு என்று கேட்டு
அலைக்கழிக்கக்கூடாது; உடனடியாக அவருக்குச் சிகிச்சை அளித்துக் காப்பாற்ற
வேண்டும்; மற்ற சம்பிரதாயங்களைப் பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்கிறது
அந்தத் தீர்ப்பு. இங்கே அடிபட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டு போகவே அத்தனை
தயக்கம். இதற்கும் உச்ச நீதிமன்றம் பிறகு ஒரு தீர்ப்பு வழங்குமோ என்னவோ!

அடிபட்டு
உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் ஒரு காவலரைக் காப்பாற்ற அமைச்சர்களே
தயங்கும்போது, சாமானிய மக்களைக் குறை சொல்ல என்ன இருக்கிறது!

ஆங்கிலத்தில் ‘Ill Joke’ என்று ஒரு வகை நகைச்சுவைத் துணுக்குகள் உண்டு. அப்படி ஒரு வேதனையான நகைச்சுவைத் துணுக்கு இதோ:

மந்திரி 1: “எனக்கு ரொம்ப மென்மையான, இரக்கமுள்ள மனசு. உங்களுக்கு எப்படி?”

மந்திரி 2: “எனக்கும் அப்படித்தான்! ஒருத்தர் வேதனையில துடிக்கிறதைப் பார்க்க எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். மனசு தாங்காது!”

மந்திரி 1:
“அப்ப சரி, ரெண்டு பேருமே கண்ணை மூடிக்கிட்டு இங்கே கார்லேயே இருப்போம்.
ஆம்புலன்ஸ் எப்ப வந்து அவரைக் கூட்டிட்டுப் போகுதோ, போகட்டும்!”







என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Jan 12, 2010 9:35 am

என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! 67637 என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! 67637 என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! 67637 என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! 67637 என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! 67637 என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! 67637 என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! 67637 என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! 67637

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Tue Jan 12, 2010 9:52 am

இப்படிப்பட்ட அரசியல்வாதிகழும் இருக்கதான் செய்கிறார்கள் அழுகை



என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Riki
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Feb 03, 2010 11:57 am

அடிபட்டு
உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் ஒரு காவலரைக் காப்பாற்ற அமைச்சர்களே
தயங்கும்போது, சாமானிய மக்களைக் குறை சொல்ல என்ன இருக்கிறது!


அழுகை
VIJAY
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் VIJAY



யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Feb 03, 2010 1:01 pm

rikniz wrote:இப்படிப்பட்ட அரசியல்வாதிகழும் இருக்கதான் செய்கிறார்கள் என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! 67637

மன்னிக்கவும் அனைவரும் அப்படிதான் இருகிறார்கள்

என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு! Icon_cheers முருகா




யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக