புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
16 Posts - 55%
heezulia
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
1 Post - 3%
rajuselvam
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
17 Posts - 3%
prajai
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
4 Posts - 1%
jairam
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2020 1:48 pm

 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Ht4451702869
-

சாதாரணமாக சாலையோரங்களில் வளர்ந்து
செழித்திருக்கும் திருநீற்றுப்பச்சிலை ஆன்மிகரீதியாக
நிறைய பயன்பட்டு வருகிறது. இது மருத்துவரீதியாகவும்
எண்ணற்ற பலன்களைக் கொண்டது.

இதன் முக்கியத்துவம் காரணமாக மூலிகைகளின் அரசன்
என்றே வர்ணிக்கப்படுகிறது. யோகா மற்றும் இயற்கை
மருத்துவர் வித்யாலட்சுமியிடம் இதன் மருத்துவ சிறப்புகள்
குறித்து கேட்டோம்…

‘‘Ocimum Basilicum என்று தாவரவியலில் திருநீற்றுப்பச்சிலை
குறிப்பிடப்படுகிறது. துளசியைப் போல மணம் மிக்க தாவரம்
இது. திருநீற்றுப் பச்சிலையின் முழுத் தாவரமும் மருத்துவ
குணம் கொண்டதாகத் திகழ்கிறது. உருத்திரசடை, பச்சை,
பச்சிலை, சியா அல்லது சப்ஜா, இனிப்பு துளசி போன்ற வேறு
பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இதன் இலைகளுக்கென்று தனி மணம் உண்டு. அது கற்பூரத்தின்
தன்மை கொண்டது. அதில் Linalool, Eugenol, Thymol போன்ற
பொருட்கள் இருப்பதே அதற்கு காரணம். திருநீற்றுப்பச்சிலையில்
வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் போன்றவை காணப்படுகின்றன.
குறைந்த கலோரிகளை கொண்டுள்ள திருநீற்றுப்பச்சிலையில்
பொட்டாசியம், மாங்கனீசியம், கால்சியம் போன்ற தாது
உப்புக்களும் காணப்படுகின்றன.

இவை ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய்க்கிருமிகளுக்கு
எதிராக செயல்படுகிறது.

அதிகாலையில் இதன் இலைகள் ஐந்தினை எடுத்து மென்று
சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் நீங்கும். மேலும் இதன்
சாற்றினை சாப்பிடுவதன் மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படக்கூடிய
கடுமையான வலி குறையும். அதேபோல இதன் விதையை நீரில்
ஊற வைத்து, பிரசவத்துக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் பிரசவத்தால்
ஏற்பட்ட வலி குறையும்.

இந்த இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும்.
இதன் சாற்றினை காதில் விட காது வலி குறையும், மூக்கில் விட
மூக்கடைப்பு தீரும். இலைகளை முகர்ந்து பார்த்தால் தலைவலி,
இதய நடுக்கம், தூக்கமின்மை பிரச்னைகள் சரியாவதுடன் மூக்கு
தொடர்பான சின்னச்சின்ன பிரச்னைகளும் சரியாகும்.

திருநீற்றுப்பச்சிலையின் இலைச்சாறு வாந்தி, சுரம் ஆகியவற்றைப்
போக்கும். காதுவலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு
இதன் இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2020 1:49 pm





இதன் இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால்
மார்புச்சளி, இருமல், வயிறு தொடர்பான வாயு பிரச்னைகள்
சரியாகும். முகப்பருவை விரட்ட இதன் சாறுடன் வசம்பு சேர்த்து
அரைத்துப் பூசினால் நல்ல பலன் கிடைக்கும். இதன் இலையை
அரைத்து இரவில் கட்டியில் பற்று போட்டு வர கட்டிகள் உடையும்.

தேள் கடியினால் வலி ஏற்படும் போது, அதன் கடிவாயில் இதன்
இலையை கசக்கி பூசினால் வலி குறையும். ஒற்றைத் தலைவலி
இருப்பவர்கள் இதன் இலையை தாய்ப்பால் விட்டு மென்மையாக
அரைத்து அதிகாலையில் வலியுள்ள பகுதியில் தொடர்ந்து
மூன்று நாட்கள் பற்று போட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

சப்ஜா விதை என்று அழைக்கப்படுகிற திருநீற்றுப்பச்சிலையின்
விதையை 5 கிராம் அளவு எடுத்து, அதை தண்ணீரில் 3 மணி நேரம்
ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வருவதன் மூலம் உடல்
உஷ்ணம் குறையும்.

மேலும் சீதபேதி, வெள்ளை, வெட்டை, வெட்டைச்சூடு, இருமல்,
வயிற்றுக்கடுப்பு, ரத்தக்கழிச்சல், நீர் எரிச்சல் போன்ற பிரச்னைகளும்
சரியாகும். இந்த விதைகள் வயிற்றுப் போக்குக்கு தீர்வு காண
உதவுகிறது.

இந்த விதையை கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலுக்கு
சுறுசுறுப்பு கிடைக்கும். விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்
பூச்சிக்கடிக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

இந்த தாவரத்தின் மலரானது மிகவும் சக்தி வாய்ந்தவை.
அது அஜீரணம் மற்றும் மூத்திர கடுப்பைப் போக்கும் தன்மையுடையது.
இதில் உள்ள ரசாயனங்கள் உடலில் உள்ள நோய்களைப் போக்கும்
அருமருந்தாக பயன்படுகின்றன.

இதிலுள்ள Carminative வயிற்றுப் பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது.
Diuretic சிறுநீரகக் கோளாறுகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது.
மேலும் இதிலுள்ள Antispasmodic வலி நிவாரணியாக பயன்படுகிறது.
இந்த தாவரத்தின் வேரானது காய்ச்சலைத் தணிக்கும்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கலை குணப்படுத்தும். இதன் வேரை இடித்து
பொடித்து கஷாயம் செய்து காலையும், மாலையும் அருந்தி வந்தால்
வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்றுப் புண்களை ஆற்றும்.

சிறுநீரகத்தை பலப்படுத்தி சிறுநீரை பெருக்கும்.
இது உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட
நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. யோகா மற்றும் இயற்கை
மருத்துவத்தில் மக்களின் நோய் தீர்ப்பதில் திருநீற்றுப்பச்சிலைக்கென்று
தனித்த ஓர் இடம் உண்டு.

இந்த தாவரம் பார்ப்பதற்கு துளசி போன்று காட்சியளித்தாலும்
தனக்கென்று தனித்துவமான பல்வேறு மருத்துவ குணங்களைப்
பெற்றுள்ளது. இதன் இலை, பூ, விதை, வேர் என்று அனைத்து பாகங்களும்
ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்களை உடையது.

எனவே, இதை மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான முறையில்
பயன்படுத்தினால், அதன் பலனை நாம் முழுமையாக பெற்று,
நோய்களை குணப்படுத்தி நலமுடன் வாழலாம்.’’
-
----------------------------------

க.கதிரவன்
நன்றி-தினகரன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக