புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_m10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10 
83 Posts - 55%
heezulia
தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_m10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_m10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_m10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_m10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_m10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_m10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_m10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_m10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_m10தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கப்பானை - அகஸ்தியன் சிறுகதை


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Jun 22, 2020 6:45 pm

தக தக தக… தங்கப் பானை!
கதையாசிரியர்: அகஸ்தியன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை

கேட்டை, மூட்டை, செவ்வாய் ஆகிய மூன்றின் கலவையான என் அருமை மனைவி கமலாவின் அருமைத் தம்பி தொச்சு & ஒரு நிமிஷம்… இந்த கே.மூ.செ அடைமொழி என் அருமை மனைவியைக் குறிக்காது; அவளின் தம்பி தொச்சுவைக் குறிக்கும்! & என் வீட்டுக்கு வந்தபோது என் இடது கண், இடது தோள், இடது காது, இடது கை, இடது பக்கம் இருக்கும் இதயம் என எல்லாமே ஆயிரம் வாலா சரவெடியாய் படபடத்தன!

கமலாவை நான் கல்யாணம் பண்ணிக்கொண்டபோது, சீதனமாக நிறையக் கொடுத்தார்கள். அவற்றோடு இலவச இணைப்பாக தொச்சு வையும் சேர்த்துக் கொடுத்துவிட்டார்கள். அவன் பின்னாளில் அங்கச்சியைக் கலியாணம் செய்துகொண்டு தனியாகப் போய்விட்டாலும், அவ்வப்போது வந்து தன் தொப்பை, கைப்பை இரண்டையும் நிரப்பிக்கொள்வான். தாய்ப்பாசமே உருவான என் மாமியாரும், சகோதர பாசத்தை உருக்கி வடிவமைக்கப்பட்ட என் மனைவி கமலாவும் தொச்சு வரவேற்பு கமிட்டி என்ற நிரந்தர அமைப்பை நிறுவி, அவனுக்கு ராஜோபசாரங்கள் செய்வது பற்றி விவரமாகக் கூறினால், அது அபசாரம் ஆகிவிடும்.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். ‘‘தொச்சு, என்னப்பா சமாசாரம்?’’ என்று கேட்டேன்.

‘‘தொச்சுவா? வா… வா!’’ என்று மதுரைமணியின் ‘கந்தா வா… வா’ பாணியில் கமலாவும் மாமியாரும் அவனை வரவேற்றார்கள்.

‘‘அத்திம்பேர்… ஒரு பிரமாதமான ஐடியாவோட வந்திருக்கேன்!’’

‘‘ஓஹோ… ஐடியா ஓட, நீ மட்டும் தனியா வந்திருக்கியா?’’ என்றேன் குதர்க்கமாக.

‘‘கொன்னுட்டீங்க அத்திம்பேர்! எப்படித்தான் சட் சட்னு இப்படிப் புகுந்து விளையாடறீங்களோ!’’

‘பெரிதாக அஸ்திவாரம் போடு கிறான்; சுதாரி!’ என்று உள்ளுணர்வு சொல்லியது. அதன் காரணமாக, வயிற்றில் புளி கரைத்தது. இப்படி புளி கரைக்கும் உணர்வு, பின்னால் என் பணம் கரையப்போகிறது என்பதற்கான அறிகுறி!

‘‘வீட்டுக்கு வந்தவனை ‘வாடா, உட்காரு! ஒரு கப் காபி சாப்பிடறியா?’ என்று கேட்க வேண்டாம்… இப்படி மட்டம் தட்டிப் பேசாமல் இருக்கலாம்’’ என்று நொடித்தாள் கமலா.

‘‘காபிக்கு என்ன அவசரம் அத்திம் பேர்? உங்களுக்குத் ‘தங்கப் பானை’ தெரியும்தானே?’’

‘‘தங்கைப் பானை, அக்கா பானை… ஒரு எழவும் தெரியாது!’’ என்றேன்.

‘‘சொல்லுடா… டி.வி. நிகழ்ச்சி ‘தங்கப் பானை’தானே, நம்ம ஜிகினாஸ்ரீ நடத்தற நிகழ்ச்சிதானேடா? இப்ப என்ன அதுக்கு?’’ என்றாள் கமலா.

‘‘அதேதான்! அதுக்கு எழுதிப் போட் டேன். வருகிற வாரம் வரச்சொல்லி இருக்காங்க. அத்திம்பேர், நீ, அங்கச்சி மூணு பேரும் போயிட்டு வாங்க..!’’

‘‘நான் எதுக்கு? இதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க போய் பரிசு, பணம் எல்லாம் ஜெயிச்சுண்டு வாங்க..!’’ என்றேன்.

‘‘அப்படியே இவர்கிட்ட கொண்டு வந்து கொடுத்தால், அக்காவுக்குப் பொங்கல், தீபாவளி, மதர்ஸ் டே, சிஸ்டர்ஸ் டே, காபி டேன்னு பாத்துப் பாத்து அனுப்புவார். குழந்தை வேலை மெனக்கெட்டுப் பதிவு பண்ணிட்டு வந்து கூப்பிடறானே… ஆயிரம் பிகு!’’

‘‘விடுக்கா..! அத்திம்பேர் வர லைன்னா டிஸ்டர்ப் பண்ணாதே! நீ, அங்கச்சி, நான் மூணு பேரும் போக லாம். நீதான் லீடர்!’’

‘‘சரிடா! பரிசு கிடைச்சா சந்தோஷம். இல்லாட்டாலும் டி.வி&யில நாம வந்ததே சந்தோஷம்னு இருந்துட்டா போச்சு..!’’

‘‘ஆனா, ஒரே ஒரு பிரச்னைக்கா!’’

‘‘என்னது?’’

‘‘டி.வி. ஷோவுக்கு வர்ற ரெண்டு பெண்களும் ஒரே மாதிரி புடவை கட்டிண்டு வரணுமாம்…’’

இதைத் தொடர்ந்து என்னென்ன வசனங்கள் வரும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, வருமுன் காப்போனாக, ‘‘அதுக்கென்ன… இரண்டு புடவை வாங்கிட்டா போச்சு!’’ என்றேன்.

கமலா முகத்தில் ஆயிரம் வாட் பிரகாசம்! தொச்சுவின் முகத்தில் பத்தாயிரம் வாட் பிரகாசம்! என் மாமி யார் முகத்திலோ, அரசியல் கட்சியின் மாநாட்டுப் பந்தல் போல் ஒளி வெள்ளம்!

‘‘வாங்கறது வாங்கறோம், பட்டுப் புடவையாவே வாங்கிடலாம்! டி.வி. ஷோவுக்கு எடுப்பா இருக்கும். சரி, தொச்சு… பரிசு கிடைத்தால், முதல் பரிசாக எவ்வளவு கிடைக்கும்?’’

‘‘டீமுக்கு ஒரு லட்சம்! நம்ம நிகழ்ச்சி 100&வது நிகழ்ச்சியாம். அதனால பரிசு இன்னும் அதிகமாகக்கூட இருக்கும் கிறாங்க! சரி அக்கா, அங்கச்சியை எப்ப வரச்சொல்லட்டும்? புடவை வாங்கணுமே?’’ என்று கேட்டான் தொச்சு. சந்தடி சாக்கில் கந்தகப் பொடி மன்னன்!

‘‘மத்தியானமே வரச் சொல்லேண்டா..!’’



avatar
Guest
Guest

PostGuest Mon Jun 22, 2020 6:47 pm

புடவைக் கடையில் கமலாவும் அங்கச்சியும் ஒரே மாதிரி இரண்டு பட்டுப் புடவை வாங்குவதற்குள் படுத்திய பாட்டை விவரிக்கலாம் என்றால், மூன்று மெகா சீரியல்களை ஒரே சமயத்தில் பார்ப்பது போன்று அழுகை அழுகையாக வருகிறது. ஆகவே தவிர்க்கிறேன்.
அல்லி டி.வி&யில் ‘தங்கப் பானை’ நிகழ்ச்சி ஆரம்பம்.

ஒரு சைஸ் சின்ன அளவு ஜீன்ஸ், இரண்டு சைஸ் சின்ன அளவு பனியன் அணிந்து வந்த கள்ளூரி மானவி… சட், கல்லூரி மாணவி… காம்பியர் பண்ண வந்தாள்.

‘‘அள்ளி டி.வி. ஏராளமான பரிசுகளை அல்லித் தருகிற தங்கப்பானை நிகழ்ச்சி. வரவேற்கிறோம், இந்த 100&வது நிகழ்ச்சியில் களந்து கொல்ல…’’ என்று தொடங்கி, போட்டியாளர்களை அறிமுகம் செய்யத் துவங்கினாள்.

என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. கமலாவும், அங்கச்சியும் உடன்பிறவாச் சகோதரிகள் மாதிரி மேக்&அப்பில் ஜொலித்தார்கள்.

நிகழ்ச்சி தொடங்கியது. உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு மூன்றையும் மூன்று தட்டுகளில் வைத்துப் பெயரைக் கேட்டாள் ஜிகினாஸ்ரீ. எதிரணி பாவம், ஃபாஸ்ட் ஃபுட்டின் அடிமைகள் போல! விழிவிழியென்று விழித்தார்கள். தொச்சு, சாப்பாட்டின் அடிமை. அவன் சட்டென்று சரியாகச் சொல்ல, அங்கச்சி கதவிடுக்கில் மாட்டிக் கொண்ட எலி மாதிரி கீச்சுக்குரலில் கத்திச் சிரித்தாள். ஒவ்வொரு ரவுண் டுக்கும் பாயின்ட்டுகள் ஏறிக்கொண்டே போய், இறுதியில், கமலா டீம் வெற்றி பெற்றதாக ஜிகினாஸ்ரீ அறிவிக்க, ஒரே ஆரவாரம்… கைத்தட்டல்!

என் மாமியாரை அவர் இஷ்டப்படி செய்யவிட்டிருந்தால் மாவிலைத் தோரணம், இலைக் கோலம், பந்தல், வாழை மரம், மேளதாளம், பூரண கும்பம் என விஸ்தாரமாக ஏற்பாடு செய்திருப்பாள், கமலா அண்ட் கோ&வை வரவேற்க!

வழக்கத்தைவிட அட்டகாசமான அலட்டலுடன் தொச்சு, ‘‘அத்திம்பேர்… பாத்தீங்களா, எதிர் டீமை சுருட்டிட் டோம்’’ என்றான்.

‘சுருட்டறது உனக்குக் கைவந்த கலைதானேடா!’ என வாய் வரை வந்து விட்டது. ‘‘பார்த்தேன்… ஊதித் தள்ளிட் டீங்களே! சரி, பரிசு எப்போ கிடைக்கு மாம்?’’ என்றேன்.

‘‘அதில் ஒரு சின்ன பிரச்னை, அத்திம்பேர்! பரிசுத் தொகையை டெல்லி யில்தான் கொடுப்பாங்களாம். நேரே போய் வாங்கிக்கணும்!’’
‘‘தொச்சுவுக்குப் பரிசு வாங்கின சந்தோஷத்தைவிட டெல்லி போய் வரணுமே, செலவாகுமே என்று ஒரே கவலை’’ என்றாள் கமலா.

‘‘சரி, சரி… எதுக்கு மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்கிறே? டிக்கெட் நான் வாங்கிக் கொடுக்கறேன்!’’

‘‘அதுக்கு ஏன் அலுத்துக்கறேள்? பரிசுப் பணத்தை நானா தலைமேல் வெச்சுக் கட்டிக்கப்போறேன்?’’ என்று முகத்தைச் சுழித்தாள் கமலா.
‘‘அத்திம்பேர்… சௌக்கியமாக வந்து சேர்ந்துட்டோம். ஜன்பத் ஓட்டல்லதான் ரூம் போட்டிருக் கோம். சௌகரியமா இருக்கு. ஷாப்பிங் போகும்போது உங்களுக்கும் ஏதாவது வாங்கிண்டு வர்றோம். என்ன வேணும்னு கேக்கச் சொல்றா அக்கா!’’
‘‘வேறென்ன வேணும்… கடன் தான் வேணும்!’’ என்றேன்.

தொச்சு ‘ஓ’வென்று சிரித்து, ‘‘அத்திம்பேர், நகைச்சுவைல உங்களை யாரும் அடிச்சுக்க முடியாது!’’ என்று ஒரு ஐஸ்&பெர்க்கையே என் தலை மேல் வைத்தான்.

அப்போது கமலா அவனிடமிருந்து போனை வாங்கி, ‘‘பாருங்கோ… விழாவில் ஒரே மாதிரி புடவை கட்டிண் டால் நல்லா இருக்கும்னு சொல்றா. அதனால எங்களுக்கு ஒரே மாதிரி ரெண்டு பனாரஸ் பட்டுப் புடவை வாங்கிக்கறோம். என்ன, காதுல விழுந்ததா?’’ என்று கேட்டாள்.

நான்தான் விழுந்தேன் சோபாவில்!

கால்டாக்ஸி கொள்ளாமல் சாமான்களை (டெல்லி பர்ச்சேஸ்!) அடைத்துக்கொண்டு கமலா டீம் என் வீட்டு வாசலில் வந்து இறங்கியது.

‘‘அத்திம்பேர், 500 ரூபாயாக இருக்கு. கால்டாக்ஸிக்குப் பணம் கொடுத்துடுங்கோ!’’ என்ற தொச்சு, சாமான்களை எல்லாம் இறக்கிக் கூடத்தில் பரப்பிவிட்டு, சோபாவில் சரிந்து ‘உஸ்’ஸென்று பெருமூச்சு விட்டான்.

‘‘தொச்சு… பரிசாகக் கொடுத்த செக் எங்கே? காட்டு, பார்க்கலாம்!’’ என்றேன்.

‘‘விழாவில் வெற்றுக் கவர்தான் கொடுத்தாங்க. அப்புறம், ஒரு லட்சம் ‘கேஷ்’ கொடுத்தாங்க!’’

‘‘சரி, அதைத்தான் காட்டேன்!’’

‘‘அடாடா..! ஒரு மனுஷன் இப்படியா பணத்துக்கு றெக்கை கட்டிண்டு பறப்பான்? போன இடத்தில் நாலு சாமான் வாங்கி இருப்பாங்களே, அதுக்குப் பணம் தேவைப்பட்டி ருக்காதான்னு யோசிக்க வேணாமா? பாருங்கோ, எவ்வளவு சாமான் வாங் கிண்டு வந்திருக்கோம்.

அக்காவும் அங்கச்சியும் கோல்டன் ஜுவல்லரிக்குள் போகும்போதே எனக்கு ‘பக்’குனு இருந்தது. கடையா அது?! மூணு ஜோடி வளையலே 60,000 ஆயிடுத்து!’’

‘‘மூணாவது ஜோடி யாருக்கு?’’

‘‘உங்க அக்காவுக்கு! கேள்வியைப் பாரு..! என் அம்மான்னு ஒருத்தி இருக்கிறது எப்படித் தெரியும் உங்க கண்ணுக்கு?’’

‘‘அப்புறம் அத்திம்பேர்… டாக்ஸி, ஓட்டல் பில், பனாரஸ் பட்டுப் புடவை, டிஜிட்டல் கேமரா அது இதுன்னு…’’

‘‘பூராத்தையும் காலி பண்ணி யாச்சா?’’

‘‘பூரா இல்லை அத்திம்பேர்! கால் டாக்ஸிக்காக 500 ரூபாய் மிச்சப் படுத்திண்டு வந்தேனே!’’

‘‘அடடா! உன் சாமர்த்தியமே, சாமர்த்தியம் தொச்சு!’’

‘‘அப்புறம் ஒரு சின்ன விஷயம், அத்திம்பேர்! அல்லி டி.வி. சார்பா ஒரு முதியோர் இல்லம் அட்ரஸ் கொடுத்து, அதுக்கு 10,000 ரூபா டொனேஷன் அனுப்பும்படி சொல்லி இருக்காங்க. மறக்காம அனுப்பிடுங்கோ! நம்மளை மதிச்சு இவ்வளவு தூரம் கூப்பிட்டுப் பரிசு கொடுத்தவங்க சொன்னபடி செய்யறதுதான் நமக்கு மரியாதை!

அப்போ, நானும் அங்கச்சியும் கிளம்பறோம்’’ என்று அவர்களுக்கான சாமான்களை பேக் செய்துகொண்டு புறப்பட்டார்கள்.

பானை பிடித்தவள் பாக்கியசாலி தான்! ஆனால், பானை பிடித்தவளைப் பிடித்தவன்? வேணாம், சொல்ல மாட்டேன். எதுக்கு வம்பு?

********************************************************************************

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக