புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_c10தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_m10தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_c10 
21 Posts - 66%
heezulia
தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_c10தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_m10தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_c10தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_m10தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_c10 
63 Posts - 64%
heezulia
தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_c10தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_m10தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_c10தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_m10தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_c10தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_m10தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 03, 2019 5:06 pm

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி உள்ளார் சர்ச்சை சாமியார் நித்யானந்தா.
பதிவு: டிசம்பர் 03,  2019 16:01 PM
புதுடெல்லி,

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா 201912031601052097_Rapeaccused-Nithyananda-Sets-Up-Kailaasa-Island-Nation_SECVPF

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.


குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களின் அடிப்படையில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்  நித்யானந்தா.

நாள்தோறும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவரும் நித்யானந்தா, 'கைலாஷ்' என்ற பெயரில் தனிநாடு அமைக்கப்போவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, விர்ச்சுவல் இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் நித்யானந்தா.

தனது கனடா நாட்டு சீடரான சாரா லாண்ட்ரியிடம் தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசஞ்சரில் உரையாடிய நித்யானந்தா, வாடிகன் போல குட்டி நாட்டை அமைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அண்மையில் வெளியிட்ட வீடியோவில் தனிநாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா கைலாசா என்று பெயர் வைத்துள்ளார்.

தனிநாடு இணைய தளத்தில்  இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளார் நித்யானந்தா.

கைலாசா இந்து நாட்டின் தற்போதைய மொத்த மக்கள் தொகையாக 10 கோடி பேர் என்று பலரையும் வியக்கவைக்கும் வகையில் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த நாட்டுக்கென்று பாஸ்போர்ட், மொழி உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு அமைச்சரவையையும் உருவாக்கி உள்ளார். நாட்டின் பிரதமருக்கு இணையாக கைலாசா நாட்டின் பிரதமராக நித்யானந்தா இருப்பார். இந்தியாவைப்போல், உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் ராணுவத்திற்கு தனித் துறை அமைத்துள்ளார் நித்யானந்தா. ஒவ்வொரு நாளும் அங்கு அமைச்சரவை கூட்டத்தையும்  நடத்தி வருகிறார்.

கைலசா நாடு குறித்து அவர் வெளியிட்டிருக்கும் இணையதளத்தில், ‘இந்த நாடு எல்லைகள் கடந்தது. சனாதனத்தைக் காப்பதற்காக இந்த நாடு அமைக்கப்படுகிறது. தங்களுடைய நாட்டில் இந்து மதத்தை பின்பற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கான நாடு என்று குறிப்பிட்டுள்ளார். கைலாசா என்பது எல்லைகள் இல்லாத ஒரு நாடு. உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை கடைபிடிக்கும் உரிமையை இழந்து உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது

கைலாசா அரசாங்கத்தில் 10 துறைகள் உள்ளன, அவற்றில் ஒன்று ‘அலுவலகத்திற்கு பொறுப்பானது’.  அரசாங்கத்தின் சர்வதேச உறவுகள், டிஜிட்டல் ஈடுபாடு, சமூக ஊடக அலுவலகம்.  வீட்டு விவகாரங்கள், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கல்வி ஆகியவை பிற துறைகளாகும். நித்யானந்தா கைலாசத்திற்கு  தனி நாடு அந்தஸ்து வழங்க ஐநாவை நாட உள்ளார்.

பாஸ்போர்ட் இரு நிறங்களில் ( தங்கம் மற்றும் சிவப்பு)  அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதாம். இங்கு இந்துக்கள் மட்டுமே வாழ முடியும். இந்த நாட்டை சட்ட ரீதியாக அறிவிக்கும் பணிகளையும் சட்ட செயற்பாடுகளையும் அமெரிக்காவை சேர்ந்த மிகப் பெரிய நிறுவனம் ஒன்று பொறுப்பேற்று செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன..!!

தினத்தந்தி தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 03, 2019 5:07 pm

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா 201912031601052097_bassport._L_styvpf

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Dec 03, 2019 5:49 pm

இந்த போலி சாமியாரை எப்படி தப்ப விட்டார்கள் ? எல்லாம் பணம் செய்கிற வேலை . மல்லையாவை தப்ப விட்டதுபோல !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 03, 2019 9:25 pm

கணக்கு எங்கோ உதைக்கிறதே! நான் கணக்கில் கொஞ்சம் வீக்.

விக்கிபீடியா தகவலின்படி உலகில் இந்து சமயத்தை பின்பற்றும் மக்கள் தொகை 1.15 பில்லியன். இந்தவகையில் கைலாச தீவில்-Kailaasa Nation- (நாட்டில்) 10 கோடி பேரா?
Population:
100 million Adi Shaivites; 2 Billion practicing Hindus (கைலாச இணையத் தகவலின்படி.)

வாங்கியதாக சொல்லப்படும் கைலாச நாட்டை (தீவை) உள்ளடக்கிய மொத்த தீவுகளில் வாழும் மக்கள் தொகை 30,000, முழு நாட்டின் மொத்த சனத்தொகை 17 மில்லியன் ஆகும்.இந்த நிலையில் அந்த நாட்டின் ஒரு சிறு தீவில் 10 கோடி மக்களா? ஐயாயிரம் பேர் கூட வாழ முடியாத ஒரு தீவில் 100 மில்லியன் (100 million Adi Shaivites; 2 Billion practicing Hindus) கொஞ்சம் ஓவராக தெரியவில்லை?

ஒருமணி நேரம் திரும்பத் திரும்ப ஒன்றையே ஒளிபரப்பும் தொலைக்காட்சி வேறு உள்ளது.

இதேபோல் ரஜ்னீஷ் சந்திர மோகன் (ஓஷொ) ஒரேகனில் ரஜனீஷ்புரம்  என்ற நகரை உருவாக்கினார். பல தில்லுமுல்லுகள் கைது,பல நாடுகளில் உள்நுழைய தடை………...இப்படி பல ……..

அத்போல் அருனாசலம் ராஜசேகரனுக்கும் என்ன நிலையோ?

இருந்தாலும் இந்த தில் இருக்கே!..........................................?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 04, 2019 4:42 am

எவ்வளவு நாளைக்கு நம்மள அடிப்பாங்க.
டாய் டூய்னு கத்துவாங்க, அப்புறம் உன் வேலைய பாரு,
நான் என் வேலையை பார்க்குறேன்னு போய்டுவாங்க.

'இந்தக் கோட்டைத் தாண்டி நான் வரமாட்டேன்,
நீயும் வரக்கூடாது'னு பிரச்னை முடிஞ்சிரும்.

நித்யானந்தா

kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Thu Dec 05, 2019 3:36 pm

வணக்கம்
நம் காவல் துறை அங்கு போகுமா அல்லது, யாருக்காவது பணம் ட்ரான்ஸ்பேர் ஆகும் வரை இருந்து விட்டு அப்டி இல்லை இப்படி இல்லை என பதில் அளிக்குமா.
இல்லை அப்டி போய் சாமி தரிசனமும் பிரசாதமும் வாங்கி வருமா
இல்லை அந்த கணிக்கில்(சாமியார் கணக்கில்) பணம் போடுவர்களுக்கு வரி விளக்கு கிடைக்குமா
யாம் அறியோம் பரம்பொருளே

நன்றி
ராம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 05, 2019 4:04 pm

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா 201912051346047008_Nityananda-Kailasa-country-What-is-the-procedure-for_SECVPF

சென்னை,

தமிழகத்தில் பிறந்த நித்யானந்தா இன்று இன்டர்போல் போலீசாருக்கு சவால் விடும் வகையில் தொடர் சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு நபராகவே மாறியிருக்கிறார்.

'கைலாசா' என்ற ஒரு நாட்டை நித்யானந்தா உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது. அதற்கு ஏற்றார் போல தனி பாஸ்போர்ட், தனி சின்னங்கள், அமைச்சரவை என தனி நாடு அமைக்கப்போவதாக செய்திகள் வெளியானது.

இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் `கைலாசா’ என்ற ஹேஷ்டேக் முதல் 10 இடத்துக்குள் இருக்கிறது.

இந்த தனி நாடு விவகாரம் குறித்து ட்விட்டரில் துடிப்பாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், "தனது இரட்டை குடியுரிமை என்பது இந்தியாவில் ஒரு விஷயம் அல்ல. விசா பெறுவதற்கான நடைமுறை என்ன ? அல்லது விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறதா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

அஷ்வினின் பதிவுக்கு ஏராளமானவர்கள் பதில் அளித்துள்ளனர். அஷ்வின், நீங்கள் பார்வையிடப்போகிறீர்களா? இல்லை அங்கே குடியுரிமை வாங்கப் போகிறீர்களா? என சிலர் கமென்ட் செய்துள்ளனர்.

தினத்தந்தி

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 05, 2019 5:08 pm

இது அய்யாசாமி ராம் சாரின் பதிவு.

எவ்வளவு நாளைக்கு நம்மள அடிப்பாங்க.
டாய் டூய்னு கத்துவாங்க, அப்புறம் உன் வேலைய பாரு,
நான் என் வேலையை பார்க்குறேன்னு போய்டுவாங்க.

'இந்தக் கோட்டைத் தாண்டி நான் வரமாட்டேன்,
நீயும் வரக்கூடாது'னு பிரச்னை முடிஞ்சிரும்.

நித்யானந்தா


அதே சாமியார்??? சொல்கிறார்....................... நான் ஒரு புறம்போக்கு...





avatar
Guest
Guest

PostGuest Thu Dec 05, 2019 5:09 pm

நாட்டை வாங்கியது உறுதிப்படுத்தப்படவில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 05, 2019 5:57 pm

அப்பிடி எல்லாம் அவ்வளவு சுலபமாக வாங்கிவிடமுடியாது.
அனாதையாக கேட்பாரற்று இருக்கும் குட்டி குட்டி தீவுகள் பசிபிக் மஹாசமுத்ரத்தில் உள்ளன.
குறைவான மக்கள் ஜனத்தொகை . காட்டு மிருகங்களை வேட்டையாடி /மீன் பிடித்து உண்டு
வாழ்கின்றவர்கள். (உதாரணம் சென்டினல் தீவு .இந்திய அரசுக்கு சொந்தமாக இருந்தாலும்
யாரும் உள்ளே போக அனுமதி கிடையாது. }
இதையெல்லாம் தனக்கு சொந்தமென கொண்டாட பெரிய நாடுகள் விரும்புவதில்லை.
அவைகளை சீர்திருத்தி அடிப்படை வசதி செய்து நவீன கால உபகரணங்களை அங்கே
நிறுத்தி முன் கொண்டு வர அநேக அநேக கோடி கோடி ரூபாய் செலவழியும். பிரதி பலன் ஒன்றும் இருக்காது. அது மாதிரி ஏதாவது தீவில் நித்தி இருக்கிறாரா அல்லது வேறெங்கும் இருந்துகொண்டு பீலா விடுகிறாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

இதை வைத்து யாராவது பயஸ்கோப் எடுப்பார்கள் இனிவரும் காலங்களில்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக