ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஹித் சர்மா சதம்: உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

Go down

 ரோஹித் சர்மா சதம்: உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா Empty ரோஹித் சர்மா சதம்: உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

Post by ayyasamy ram Thu Jun 06, 2019 3:39 am

 ரோஹித் சர்மா சதம்: உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா RohitSharma

Rohit Sharma நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்
====================

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா
சதம் அடிக்க இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது
முதல் போட்டியில் இன்று (புதன்கிழமை) தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை
இழந்து 227 ரன்கள் எடுத்தது.

228 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஷிகர் தவான் மற்றும்
ரோஹித் சர்மா களமிறங்கினர். தென்னாப்பிரிக்க அணியில்
ரபாடா மற்றும் மோரிஸ் மிரட்டலாக பந்துவீச ரோஹித்
மற்றும் தவான் திணறினர்.

இதன் விளைவாக தவான் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ரோஹித் களத்தில் விக்கெட்டை பாதுகாத்து
விளையாடினார். கோலியும் அதேபோல் விளையாடி வந்தார்.
இந்த நிலையில், கோலி 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில்
பெலுவாயோ பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனால், ஆட்டத்தில் சற்று விறுவிறுப்பு ஏற்பட்டது.

ஆனால், ராகுல் ஒத்துழைப்பு அளிக்க ரோஹித் ரன் குவிக்கும்
பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆடுகளம் வேகப்பந்து
வீச்சுக்கு ஒத்துழைத்ததால், சுழற்பந்துவீச்சில் ரன்
குவித்தனர்.
இதனிடையே, ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார்.

இந்த இணை நன்றாக விளையாடி வந்த நிலையில்,
ராகுல் 26 ரன்களுக்கு ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார்.
ரோஹித், ராகுல் இணை 3-வது விக்கெட்டுக்கு 85 ரன்கள்
சேர்த்தது. இது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.

இதன்பிறகு, ரோஹித்துடன் தோனி இணைந்தார்.
வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 5-க்கு கீழ்
இருந்ததால் இந்த இணையும் நெருக்கடி இல்லாமல்
விளையாடியது.

தாஹிர் மற்றும் ஷம்ஸி பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டதால், தென்னாப்பிரிக்க அணி 6-வது பந்துவீச்சாளர் இல்லாமல்
திணறியது இந்த ஆட்டத்தில் தென்பட்டது.

ரோஹித் சர்மாவும் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 23-வது சதத்தை எட்டினார். இதையடுத்து, இந்திய அணி வெற்றியை நெருங்கியது.

தென்னாப்பிரிக்காவும் ரபாடா மூலம் நெருக்கடி தந்தது. ஆனால், ரோஹித் கேட்ச்சை மில்லர் தவறவிட, அனைத்தும் இந்திய அணிக்கு சாதகமாகவே அமைந்தது.

இந்திய அணியின் வெற்றிக்கு 15 ரன்களே தேவை என்ற நிலையில், 34 ரன்கள் எடுத்திருந்த தோனி மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய பாண்டியா வந்த வேகத்தில் 3 பவுண்டரிகள் அடித்து வெற்றி இலக்கை அடையச் செய்தார்.

இதன்மூலம், இந்திய அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஹித் சர்மா 144 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 122 ரன்கள் எடுத்தார். ஹார்திக் பாண்டியா 7 பந்துகளில் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்டநாயகன் விருதை ரோஹித் சர்மா தட்டிச் சென்றார்.

முதல் வெற்றி பெற்றதையடுத்து, இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 15 மாதங்களுக்குப்பின் ரோஹித் சர்மா அற்புதமான சதம்: புதிய சாதனை படைத்த ரோஹித்: கோலி,கில் ஏமாற்றம்
» டி20 அதிவேக சதம்: சிக்சர் மழையில் உலக சாதனையை சமன் செய்தார் ரோஹித் சர்மா
» தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா
» பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
» இனி உலகக் கோப்பையை வெல்வது ஜெர்மனி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum