புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
4 Posts - 3%
prajai
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
1 Post - 1%
kargan86
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
1 Post - 1%
jairam
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
8 Posts - 5%
prajai
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
2 Posts - 1%
viyasan
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_m10பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 1:36 am

மக்காவில் இருக்கும் இறை இல்லமான கஅபாவிற்குச் சென்று ஆண்டுதோறும் ஹஜ் செய்வது இஸ்லாமிய சமுதாயத்தின் மீது கடமையாகும். ஹஜ் செய்வதற்கான தகுதிகள் யாரிடம் இருக்கிறதோ அந்த முஸ்லிம் தன் வாழ்நாளில் ஒரு தடவை ஹஜ் செய்வது கடமையாகும். ஒன்றிற்கு மேற்பட்ட முறை செய்யும் ஹஜ் உபரியான தாகக் கருதப்படும், ஹஜ் என்பது இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஹஜ் செய்யும் ஒரு பெண்ணிற்கு 'ஜிஹாத்' செய்த நன்மையை அல்லாஹ் கொடுக்கிறான்.

''இறைத்தூதர் அவர்களே! பெண்களின் மீது ஜிஹாத் கடமையா?' என ஆயிஷா(ரழி) அவர்கள் கேட்ட தற்கு, 'ஆம்! அவர்கள் மீது போர் இல்லாத ஜிஹாத் இருக்கிறது. அது ஹஜ்ஜும் உம்ராவும் ஆகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்:அஹ்மத், இப்னுமாஜா)

புகாரியின் மற்றோர் அறிவிப்பில் ஆயிஷா(ரழி) வாயிலாக, ''இறைத்தூதர் அவர்களே! செயல்களில் சிறந்ததாக ஜிஹாத் செய்வதை நாங்கள் கருதுகிறோம். எனவே, நாங்களும் ஜிஹாதில் பங்கு பெறவேண்டாமா?' என ஆயிஷா(ரழி) கேட்டதற்கு, ஜிஹாத்களில் சிறந்தது அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் ஆகும்' என்று கூறினார்கள்'' என இடம் பெற்றுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 1:37 am

1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெண் இருவ ருக்கும் பொதுவான சில விதிமுறைகள் உள்ளன. அவை,

1. முஸ்லிமாக இருக்கவேண்டும்.

2. பைத்தியமல்லாது சீரிய சிந்தனையுடன் இருக்க வேண்டும்.

3. சுதந்திரமான நிலையில் இருக்கவேண்டும்.

4. பருவ வயதை அடைந்திருக்கவேண்டும்.

5. மக்கா வரை சென்று திரும்பும் அளவிற்கு பொருளா தார (மற்றும் உடல் வலிமை) வசதியாக இருக்க வேண்டும்.

பெண்களைப் பொறுத்தவரை அவளுடன் துணை யாகச் செல்லக்கூடிய திருமண உறவு தடை செய்யப்பட்ட ஆண் இருக்கவேண்டும். அதாவது கணவன், தந்தை மகன், சகோதரன் போன்றவர்கள், அல்லது பால்குடி சகோதரன், தாயின் கணவன் அல்லது கணவனின் மகன் போன்றவர்கள் உடன் இருக்கவேண்டும்.

''நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை பிரசங்கம் செய்யும் போது, திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்ட ஆண் அவளுடன் இருந்தேயன்றி எந்த ஓர் ஆணும் ஒரு பெண்ணுடன் தனித்திருக்கக் கூடாது. தனக்குத் திருமண உறவு தடுக்கப்பட்டுள்ள ஆண் துணையின்றி எந்த ஒரு பெண்ணும் தனிமையில் பயணம் செய்யக்கூடாது.' என்று கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத் தூதர் அவர்களே! என் மனைவி ஹஜ் செய்வதற்காகத் தனியாகச் சென்றிருக்கிறாள். நானோ இன்ன யுத்தத்தில் பங்கெடுப் பதற்காக உள்ளேன்.' எனக் கேட்டார். அதற்கு, 'நீ சென்று உன் மனைவியுடன் 'ஹஜ்' செய்துகொள்!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினாக்ள்'' என இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

ஒரு பெண், திருமணம் செய்வது தடுக்கப்பட்ட நபர் துணையின்றி மூன்று நாட்கள் பயணம் செய்யக்கூடாது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரழி) அறிவிக்கிறார் (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

இவ்வாறே ஒரு பெண் தனிமையில் பயணம் செய்வ தைத் தடை செய்கின்ற நபிமொழிகள் அதிகமாக உள்ளன. ஏனெனில் பெண்ணைப் பொறுத்தவரை பலவீனமான வள். பயணத்தின்போது பல சிரமங்கள் உள்ளன. இதை ஆண்கள் தாங்கிக் கொள்வர். பெண்ணைத் தீயவர்கள் பெரும்பாலும் ஓர் ஆசைப் பொருளாகவே கருதுகிறார் கள். இதனால் அவளுக்கு ஆபத்துகள் நேரக்கூடும். இந் நிலையில் அவர்களுக்குத் துணையாக ஆண்கள் தேவைப்படுகிறார்கள்.

ஹஜ்ஜிற்காகப் பெண்ணுடன் செல்பவர், திருமண உறவு தடுக்கப்பட்ட முஸ்லிமாக, பருவமடைந்தவராக, பைத்தியம் போன்றவையன்றி, அறிவுடையவராக இருக்கவேண்டும். ஏனெனில், இறைமறுப்பாளரிடம் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது. மேற்குறிப்பிட்ட தகுதிகளில் எவரும் துணை யாகக் கிடைக்காத பட்சத்தில் அவளுக்குப் பகரமாக ஹஜ் செய்வதற்கு ஒருவரை ஏற்பாடு செய்வது அவளுக்குக் கடமையாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 1:50 am

2. உபரியான 'ஹஜ்ஜை மேற்கொள்வதாக இருந்தால் கணவனின் அனுமதியைப் பெறவேண்டும். கணவனுக் குச் செய்யவேண்டிய கடமைகளில் பாதிப்புகள் நிகழா திருக்கவே இவ்வாறான சட்டம் உள்ளது.

''உபரியான ஹஜ்ஜை மேற்கொள்வதை விட்டும் மனைவியைத் தடுக்கின்ற உரிமை கணவனுக்கு இருக்கி றது'' என முக்னீ என்ற நூலில் 3ழூ ழூ240 ல் கூறப்பட்டுள்ளது.

அறிஞர் இப்னுல் முன்திர் குறிப்பிடுகிறார்.

''நான் அறிந்த மார்க்க அறிஞர்கள் எல்லோருமே உபரி யான ஹஜ்ஜிற்காக ஒரு பெண் வெளியே செல்வதை தடுப்பதற்குரிய அதிகாரம் கணவனுக்கு உண்டு; கணவனுக் குள்ள உரிமைகளை நிறைவேற்றுவது மனைவியின் மீது கடைமையாகும். கடமை அல்லாத ஒன்றிற்காக கடமையை மீறலாகாது'' அடிமைக்கும் எஜமான னுக்கு மிடையிலும் இதே சட்டம் தான் எனக் கூறி யுள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 1:51 am

3. ஹஜ் மற்றும் உம்ராவை ஆண்களுக்குப் பகரமாக ஒரு பெண் நிறைவேற்றுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பில் 26ழூ ழூ13 ல் குறிப்பிடுகிறார்.

மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி ஒரு பெண் இன்னொரு பெண்ணிற்குப் பதிலாக ஹஜ்ஜை நிறைவேற்றலாம் எனக் கூறியுள்ளனர். அது அவளுடைய மகளாகவும் இருக்கலாம். மகள் அல்லாமலும் இருக்க லாம். இவ்வாறே ஓர் ஆணுக்குப் பதிலாக ஒரு பெண் ஹஜ் செய்வதும் கூடும். நான்கு இமாம்கள், மற்றும் அறிஞர்கள் அனைவரும் இவ்வாறே கூறியுள்ளனர்.

கத் அம் கோத்திரத்தைச் சேர்ந்த பெண் தன் தந்தைக்குப் பதிலாக ஹஜ் செல்வதற்கான அனுமதியை நபி(ஸல்) அவர்கள் அவளுக்கு அளித்தார்கள். அப்பெண் நபி(ஸல்) அவர்களி டத்தில் 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தையின் மீது ஹஜ் செய்வது கடமையாகியுள்ளது. அவரோ வயோதியராக இருக்கிறார் (நான் என்ன செய்வது) எனக் கோரி னார், அப்போது அவருக்குப் பகரமாக ஹஜ் செய்வதற்கு அவளுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளை யிட்டார்கள்.

பெண்ணுடைய இஹ்ராமை விடவும் ஆணுடைய இஹ்ராம் பூரணத்துவம் பெற்றதாக இருந்த போதிலும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 1:51 am

4. ஒரு பெண் ஹஜ்ஜிற்குச் செல்லுகின்ற வழியில் அவளுக்கு மாதவிடாய் அல்லது பிரசவம் ஏற்பட்டுவிடுமானால் அதற்காக அவள் பின்வாங்க வேண்டிய அவசியமில்லை, இஹ்ராம் நிய்யத்து வைக்கும் வேளையில் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தூய்மை நிலையில் உள்ள பெண்களைப் போன்று இஹ்ராம் நிய்யத்து வைப்பாள். ஏனெனில் நிய்யத்திற்கு சுத்தமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அவளுக்கு இல்லை.

முக்னீ என்ற நூலில் 3ழூ ழூ293, 294 ல் ''இஹ்ராம் நிய்யத்தின் போது ஆண்களுக்கு குளிப்பது எவ்வாறு சுன்னத்தோ அதைப் போன்றே பெண்களும் குளிப்பது சுன்னத்தாகும். மாதவிடாய் மற்றும் பிரசவம் பெண்களின் விஷயத்தில் அது மிகவும் ஏற்றமானது. இஹ்ராம் என்பது ஒரு வணக்கமாகும். எனவே மாதவிடாய் மற்றும் பிரசவப் பெண்களும் குளிப்பது அவசியம். இதற்குத் தெளிவான ஆதாரம் உள்ளது.'' எனக் கூறப்பட்டுள்ளது.

துல் ஹ{லைதஃபா என்ற இடத்திற்கு நாங்கள் வந்தோம். அப்போது, அஸ்மா பின்த் உமைஸ் என்பவர் பிரசவமானார். அவர்கள் முஹம்மத் இப்னு அபீபக்கர் அவர்களைப் பெற்றெடுத்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடத்தில் ஒருவரை அனுப்பி, 'நான் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டுவருமாறு' வேண்டினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ குளித்துவிட்டு (மர்ம உறுப்பில்) ஒரு துணியை கட்டிக் கொண்டு இஹ்ராம் அணிந்துகொள்!' என்று கூறினார்கள்கி என ஜாபிர்(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

ம்பிரசவமானவர்களும், மாதவிடாய்ப் பெண்களும் ஹஜ்ஜின்போது இஹ்ராம் அணிந்து தவாஃபைத் தவிர அதன் அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்கி என இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவுத்)

''ஆயிஷா(ரழி) அவர்கள் மாதவிடாயாகி இருந்த போது ஹஜ்ஜிற்கு இஹ்ராம்ஆடையை அணிவதற்காக குளிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.''

மாதவிடாய் மற்றும் பிரசவமான பெண்கள் இஹ்ராம் ஆடையை அணியும் போது குளிப்பது ஏற்றம். என்று கூறப்பட்டுள்ளதன் நோக்கம் தூய்மையாக இருக்கவேண்டும்; வெறுக்கத்தக்க வாடையின் மூலம் மக்கள் ஒன்று கூடும் இடத்தில் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

இஹ்ராம்ஆடை அணிந்த நிலையில் பெண்களுக்கு மாதவிடாய், பிரசவம் ஏற்பட்டுவிடுமானால் அதனால் இஹ்ரா மிற்கு எந்தப் பாதிப்புமில்லை. அவர்கள் தங்கள் இஹ்ராமி லேயே இருக்கவேண்டும். இஹ்ராம் மூலம் தடுக்கப்பட்ட வற்றிலிருந்து விலம் இருக்கவேண்டும். மாதவிடாய், பிரசவத் தீட்டிலிருந்து தூய்மையாகி குளிக்கும் வரை தவாஃப் செய்வது கூடாது. 'தமத்துவு' என்ற ஹஜ்ஜின் வகையை நிறைவேற்றுவதாக எண்ணி உம்ராவிற்கு இஹ்ராம்ஆடை அணிந்து அரஃபா நாள் வரும் வரை தூய்மையாகவில்லையானால் அவள் ஹஜ்ஜிற்காக இஹ்ராம் நிய்யத்து வைக்க வேண்டும். அந்த ஹஜ்ஜை உம்ராவுடன் சேர்த்து ஒரே இஹ்ராமில் ஹஜ் உம்ராவை செய்துவிடவேண்டும். அப்போது 'ம்ரான்' என்ற ஹஜ்ஜின் வகையைச் செய்தவர்களாக ஆம் விடுவார்கள்.

ஆயிஷா(ரழி) அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது .

''உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்த நிலையில் ஆயிஷா(ரழி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அந்நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி)அவர்களிடம் வந்தார்கள். அப்போது அவர் அழுது கொண்டிருந்தார். (அதைப் பார்த்து) ''நீ ஏன் அழுகிறாய், உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?'' என்று கேட்டார்கள். அதற்கு, 'ஆம்' என ஆயிஷா(ரழி) பதில ளித்தார். இது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும். எனவே ஹாஜிகள் செய்கின்ற எல்லா கிரியைகளையும் நீ செய்துகொள்! 'தவாஃப்' மட்டும் செய்யாதே!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' என்பதை ஆயிஷா(ரழி) அவர்களே அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பில், ''நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி)அவர்களிடம் வந்தபோது, அவர்கள் அழுது கொண் டிருப்பதைக் கண்டு, உனக்கு என்ன நேர்ந்தது?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு, 'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது.' மக்கள் எல்லாம் இஹ்ராம் நிலையிலிருந்து விடுபட்டு விட்டார்கள். நானோ விடு படவில்லை. கஅபாவை தவாஃப் செய்யவுமில்லை. மக்கள் அனைவரும் ஹஜ்ஜின் கடமையைச் செய்வதற் காக புறப்பட்டுச் செல்கிறார்கள்' எனக்கூறினார். இது அல்லாஹ் ஆதமுடைய பெண் மக்களின் மீது விதித்தது தான். எனவே நீ குளித்து விட்டு திரும்ப இஹ்ராம்ஆடை அணிந்துகொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். அவ்வாறே அவர்கள் செய்தார்கள். நிற்க வேண்டிய எல்லா இடங்களிலும் நின்றார்கள். சுத்தமான பின்பு கஅபாவை 'தவாஃப்' செய்து, ஸஃபா மர்வா மலைக்கி டையில் சயீ எனும் தொங்கோட்டம் ஓடினார்கள். அதன் பின்னர் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷாவிடம், நீ உன்னு டைய ஹஜ் மற்றும் உம்ராவை முடித்து இஹ்ராமிலிருந்து விடுவிக்கப்பட்டவளாம் விட்டாய்! எனக் கூறினார்கள்.

'தஹ்தீபுஸ்ஸ{னன்' என்ற நூலில் 2ழூ ழூ303ல் இப்னுல் கையிம் குறிப்பிடுகிறார்.

ஆயிஷா(ரழி) முதலில் உம்ராவிற்காக இஹ்ராம் நிய்யத்து வைத்தார்கள். பின்னர் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது ஹஜ்ஜிற்கான எண்ணத்தை (நிய்யத்தை) வைத்துக் கொள்ளும் படி நபி(ஸல்) அவர்கள் கட்டளை யிட்டார்கள். இதன் மூலம் அவர்கள் 'ம்ரான்' என்ற ஹஜ் வகையைச் செய்தவர்களானார்கள். எனவே தான் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரழி) அவர்களிடத்தில் நீ கஅபாவை 'தவாஃப்' செய்து ஸஃபா மற்றும் மர்வா மலைக் கிடையில் ஓடினால் அது உன் ஹஜ்ஜிற்கும், உம்ராவிற்கும் போதுமானதாகும்கி என்று கூறினார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 1:52 am

5. இஹ்ராம் நிய்யத்து வைக்கும் போது பெண்கள் செய்யவேண்டியவை.

இஹ்ராம் நிய்யத்து வைத்த நிலையில் ஆண்கள் எதையெல்லாம் மேற்கொள்ள வேண்டுமோ அதை யெல்லாம் பெண்களும் மேற்கொள்ள வேண்டும். குளித்தல், சுத்தம் செய்தல், முடியைக் களைதல், நகம் வெட்டுதல், கெட்ட வாடையைப் போக்குதல் போன்ற செயல்களைச் செய்யவேண்டும். ஏனெனில் இஹ்ராம் நிய்யத்து வைத்த பின்னர் இதுபோன்ற செயல்களைச் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இவை அவளுக்கு அவசியமில்லை என்றாலும் செய்துதான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. அது இஹ்ராம் சம்பந்தப் பட்ட செயல்களில் உள்ளவையும் அல்ல. இஹ்ராம் அணியும்போது அவள் தன் உடம்பில் அதிகம் வாடை வீசாத வாசனைப் பொருட்களைப் பூசிக் கொள்ளலாம்.

''நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜிற்குச் சென்றோம். இஹ்ராம் நிய்யத்து வைக்கும் வேளையில், எங்கள் நெற்றியில் கஸ்தூரி மணப்பொருளைத் தடவுவோம். எங்களில் ஒருத்திக்கு வியர்வை ஏற்பட்டால் அவளுடைய முகத்தில் கஸ்தூரி வடியும். அதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள், எங்களைத் தடுக்கவில்லை.'' என ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவுத்)

இமாம் ஷவ்கானி நைலுல் அவ்தார் 5ழூ ழூ12 ல் குறிப்பிடுகிறார்.

கஸ்தூரி வடிவதைப் பார்த்தும் நபி(ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தது அது அனுமதிக்கப்பட்டதைக் குறிக்கிறது. அது தவறாக இருக்குமானால் அதைப் பார்த்து விட்டு நபி(ஸல்) அவர்கள் வாய்மூடி இருக்க மாட்டார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 1:53 am

6. ''இஹ்ராம் அணிந்த நிலையில் பெண்கள் முகத்தை மறைத்திருப்பது கூடாது, இரண்டு கண்கள் மட்டும் தெரியும் விதத்திலுள்ள முகமுடியால் முகத்தை மூடுவதும் கூடாது. இதை நபி(ஸல்) தடை செய்துள் ளார்கள்.'' (நூல்: புகாரி)

கை உறைகளையும் அணியக் கூடாது. அன்னிய ஆண்கள் பார்க்கும் போது முகமுடி அல்லாத துணியால் முகத்தை மூடிக் கொள்ளலாம், கை உறை அல்லாத துணிகளால் முன்கையையும் மறைத்துக் கொள்ள்லாம், காரணம் அன்னிய ஆடவர்களை விட்டும் முகம் கைகளை இஹ்ராமின் போதும் மற்ற நேரத்திலும் மறைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னுதைமிய்யா கூறுகிறார்.

''பெண் தன்னை மறைத்து வைத்துக் கொள்ளக் கூடியவளாவாள். எனவே அவள் அணிந்திருக்கிற ஆடையையே இஹ்ராமின்போதும் அணிந்து கொள் ளலாம். ஆனால் அவள் முகத்தை மறைப்பதையும், கை உறைகள் அணிவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஒரு பெண் தன் முகத்தைத் தொடாத விதத்தில் அதை மறைத்துக் கொள்வது அவளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. முகத்தைத் தொடும் விதத்தில் இருந்தாலும் அதுவும் அனுமதிக்கப்பட்டது தான் என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

தன் முகத்தை மூடும் துணி முகத்தில் படாமலிருப் பதற்காக குச்சிகள், கைபோன்றவற்றால் மறைப்பது தேவையற்றதாகும். முகம் மற்றும் நகைக்கு இடையில் நபி(ஸல்) சமப்படுத்தித்தான் கூறியுள்ளார்கள். கையும் முகமும் ஆண்களின் உடம்பைப் போன்றதுதான், தலையைப் போன்றதல்ல.

நபி(ஸல்) அவர்களின் மனைவியர் இஹ்ராமின் போது முகத்தைத் தொடும்படியான திரையை (அன்னிய ஆண்கள் முன்னிலையில்) தொங்கவிட்டுள்ளார்கள்.

'பெண்ணின் இஹ்ராம் அவளுடைய முகத்தில் இருக்கிறது.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எந்த அறிஞரும் அறிவிக்கவில்லை. இது சில முன்னோர்களின் கூற்றாகும்.

இப்னுல் கையிம் அவர்கள் தஹ்தீபுஸ் ஸ{னன் என்ற நூலில் 2ழூ ழூ350 ல் கூறுகிறார்கள்.

பெண்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது தங்கள் முகத்தை அவசியம் திறந்து வைக்கவேண்டும் என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் பற்றி ஒரு எழுத்துக்கூட அறிவிக்கப் படவில்லை. துவாரமிடப்பட்ட முகத்திரையை அணி வதைத்தான் தடை செய்துள்ளார்கள்.

அஸ்மா(ரழி) இஹ்ராம் அணிந்திருந்தபோது தன் முகத்தை மறைத்திருந்ததாக ஹதீஸில் வந்துள்ளது. ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

''நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும் போது எங்களைக் கடந்து ஒரு வாகனக் கூட்டம் சென்றது. நாங்களோ இஹ்ராம் அணிந்திருந்தோம். அப்போது நாங்கள் எங்கள் முகத்தை தலையிலுள்ள துணியால் மறைத்துக் கொள்வோம். அக்கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் முகத்தைத் திறந்து கொள்வோம்.'' (நூல்: அபூதாவுத்)

எனவே இஹ்ராம் அணிந்த இஸ்லாமியப் பெண்ணே நீ அறிந்துகொள்!

முகத்திற்க்கும், கைகளுக்கும் என்று சொந்தமாக தைக்கப்பட்ட துணிகளால் முகத்தை மறைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறே கை உறைகளை அணிவதும் தடுக்கப் பட்டுள்ளது. பிற ஆண்களின் பார்வையை விட்டும் உன் முகம் கைகளை மறைப்பது கடமையாகும். முகத்தைத் தொடாமலிருக்கும் துணியை அணிவதற்காக எதையாவது குச்சி அல்லது தலைப்பாகை போன்றவற்றை வைப்பதற்கும் எவ்வித ஆதாரமுமில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 1:53 am

7. பெண்கள் இஹ்ராம் அணியும்போது சாதாரண பெண்கள் அணிகின்ற ஆடம்பரமில்லாத ஆடையில் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம். ஆண்களுக்கு ஒப்பான ஆடைகளையோ, உறுப்புக்களை வெளிப் படுத்திக் காட்டக்கூடிய இறுக்கமான ஆடைகளையோ ஒழுங்காக மறைக்காத விசாலமான ஆடைகளையோ, கால்கள் கைகள் வெளியே தெரியும் விதத்திலான குட்டையான ஆடைகளையோ அணியக் கூடாது. அது விசாலமானதாக, கட்டியானதாக இருத்தல் வேண்டும்.

இப்னுல் முன்திர் அவர்கள் கூறுகிறார்கள். ''பெண்களைப் பொறுத்தவரையில் இஹ்ராமின்போது சட்டை, மேல் அங்கி, பைஜாமா, தலையையும், மார்பையும் மறைக்கும் பர்தா, கால் உறை ஆகியவை அணிவது அனுமதிக்கப்பட்டதாகும் என அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளார்கள். (முக்னி 3ழூ ழூ328)

பச்சை நிறம் போன்ற குறிப்பிட்ட நிறமுள்ள ஆடையைத்தான் அணியவேண்டும் என்பதில்லை. சாதார ணமாக பெண்கள் அணிகின்ற சிகப்பு, பச்சை, கருப்பு போன்ற எந்த நிறமுள்ள ஆடையை வேண்டுமானாலும் பெண்கள் அணிந்து கொள்ளலாம். தேவைப்படும்போது ஆடைகளை மாற்றிக் கொள்வதும் அவளுக்கு அனுமதிக் கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 1:54 am

8. இஹ்ராம் நிய்யத்து வைத்த பின்னர் தனக்கு மட்டும் கேட்கும் விதத்தில் தல்பியா சொல்வது சுன்னத்தாகும்.

இப்னு அப்துல் பர்ரி கூறுகிறார்: பெண்கள் தங்கள் சப்தத்தை உயர்த்தி தல்பியா சொல்லாமல் இருப்பதுதான் அவர்களுக்குச் சுன்னத்தாக இருக்கிறது என்றும், மேலும் அவள் தனக்கு மட்டும் கேட்கும்படி அதைக் கூற வேண்டும் என்றும் அறிஞர்கள் ஏகோபித்துக் கூறுகின்றனர். ஏனெனில் பெண்கள் சப்தத்தை உயர்த்திக் கூறுவதால் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் சப்தமிட்டு ஆண்களைப் போன்று பாங்கு இகாமத் சொல்வது அவர்களுக்கு அனுமதிக்கப்பட வில்லை. தொழுகையில் இமாம் தவறு செய்யும் போது ஆண்களைப் போன்று தஸ்பீஹ் சொல்லாமல் கையின் மேல் தட்டவேண்டும் என்பது பெண்களுக்கு சுன்னத்தாக ஆக்கப்பட்டுள்ளது. (அல்முக்னி 2ழூ ழூ330,331)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 1:54 am

9. பெண்கள் தவாஃப் செய்யும்போது, உடலை முழுமையாக மறைக்கவேண்டும்.
சப்தத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும். பார்வை யைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும். ஆண்களுடன் நெரிச லில் ஈடுபடக்கூடாது. குறிப்பாக 'ஹஜருல் அஸ்வத், ருக்னுல்யமானி பக்கம் செல்லும்போது கவனம் தேவை. நெரிசலுடன் கஃபாவை நெருங்கி செய்வதை விட நெரிசல் இல்லாத தூரமான இடத்திலிருந்து தவாஃப் செய்வதுதான் பெண்களுக்குச் சிறந்ததாகும். ஏனெனில் நெரிசலில் ஈடுபவடுவது தடுக்கப்பட்டுள்ளது. அதனால் பல குழப்பங் கள் ஏற்படுகின்றன. கஅபாவிற்கு அருகில் செல்வதும், ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவதும் முடிந்தால் செல்வது தான் சுன்னத்தாக இருக்கிறது. ஒரு சுன்னத்தை நிறை வேற்றுவதற்காக தடுக்கப்பட்ட செயலைச் செய்யக் கூடாது. இப்படிப்பட்ட நிலையில் பெண்கள் விஷயத்தில் அது சுன்னத்தாகவே கருதப்பட மாட்டாது. நெரிசலின் போது அந்த கல்லின் பக்கம் வரும் நேரத்தில் தன்கையால் சுட்டிக் காட்டினால் போதுமானது.

இமாம் நவவீ அவர்கள் மஜ்மூவு என்ற நூலில் 8ழூ ழூ37ல் கூறுகிறார்கள்.

தோழர்கள் கூறியுள்ளார்கள். பெண்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது அவர்களுக்கு உகந்ததல்ல. இரவிலும் மற்ற நேரங்களில் மக்கள் அதிகமாக இல்லாத நேரத்திலும் தவாப் செய்யும் இடம் காலியாக இருந்தாலே தவிர அந்தக்கல்லைத் தொடுவதும் உகந்ததல்ல. இதனால் அந்தப் பெண்களுக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு ஏற்படுகிறது.

முக்னி என்ற நூலில் 3ழூ ழூ331 ல் கூறப்பட்டுள்ளது. பெண்கள் இரவு நேரத்தில் கஅபாவை தவாஃப் செய்வது அவர்களுக்கு சிறந்தது. ஏனெனில் அந்நேரத்தில்தான் அவர்கள் மறைவாகவும் நெரிசல் இல்லாமலும் தவாஃப் செய்யவும், ஹஜருல் அஸ்வதைத் தொடவும் முடியும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக