புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_c10தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_m10தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_c10 
16 Posts - 59%
heezulia
தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_c10தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_m10தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_c10தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_m10தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_c10 
58 Posts - 62%
heezulia
தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_c10தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_m10தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_c10தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_m10தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_c10தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_m10தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 13, 2019 8:26 pm

தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா? Wow
-
வயது 61. நான் ஒரு காபி பிரியன். நண்பர் சொன்னதைக் கேட்டு, சர்க்கரை உபாதையைக் குறைக்க வெந்தயத்தையும் நெல்லிக்காயையும் இரவு முழுவதும் வெந்நீரில் ஊற வைத்து, மறுநாள் காலை சாப்பிடுகிறேன்.

ஆனால் சூடான காபியை முதலில் குடித்த பிறகே, இந்த ஊறிய வெந்தயம், நெல்லிக்காயைச் சாப்பிடுகிறேன். ஆனால் அவர் இதை முதலில் சாப்பிட்ட பிறகு, 45 நிமிடங்கள் கழித்து தான் காபி சாப்பிட வேண்டும் என்கிறார்.

நிச்சயமாக என்னால் அது முடியாது. காலையில் நல்ல ஒரு டிகிரி காபியை சூடாக, உறிஞ்சிக் குடிப்பதில் கிடைக்கும் இன்பம் வேறு எதிலும் கிடைக்காது என்பதால், நான் என்ன செய்வது?

-ராமலிங்கம், வளசரவாக்கம், சென்னை.

நீங்கள் குறிப்பிடுவது சரியே! பொழுது முழுவதுமாக புலர்ந்திருக்கவில்லை. பல் துலக்கியவுடன், சூடான டிகிரி காபியை தேடி, நாக்கும் வாயும் பரபரக்கும். அது கிடைத்தவுடன், அதிலிருந்து வரும் நறுமணம் உறங்குபவர்களையும் தட்டி எழுப்பும்,

பார்ப்பதற்கே உவகையூட்டும் அதன் நுரையுடன் கூடிய தன்மை, ருசிப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய ஆனந்த விஷயமாகும்! “காபியை விட முடியாது என்று யார் சொன்னார்கள் நான் ஆயிரம் முறை விட்டிருக்கிறேன்!’ என்று ஒரு விஞ்ஞானி கூறியது, உங்கள் கடிதத்தைப் படித்தவுடன் ஞாபகத்திற்கு வருகிறது.

வெந்தயமும், நெல்லிக்காயும் அந்தச் சுவையை ஒருநாளும் தர இயலாதது தான்! ஆனால் எத்தனையோ மருத்துவச் சிறப்பு வாய்ந்த இந்தச் சேர்க்கை, சர்க்கரையை மட்டுமா குறைக்கிறது?

வாய்ப்புண், குடல் புண், எலும்புகளினுள்ளே ஏற்படும் தேய்மானம், உடல் சூடு, சிறுநீர் எரிச்சல், சுண்ணாம்புச் சத்து குறைந்த நிலை, ரத்தத்தில் அதிக கொழுப்பின் அளவு போன்றவற்றையும் குறைக்கிறதே! காபிக்கு இவற்றைக் குணப்படுத்தும் திராணி இருக்கிறதா? இல்லையே, ஆனாலும் பாழாய்ப் போன நாக்கு நல்லதைக் காலையில் ஏற்க மறுக்கிறது!

உடலுக்கு நன்மை செய்யும் இரு பொருட்களாகிய நெல்லிக்காயையும் வெந்தயத்தையும் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட நீங்கள் மனதைத் திடப்படுத்திவிட்டால் அதன் பிறகு அவை செய்யும் நன்மைகள் எவை? என்று ஒரு பட்டியலே இடலாம்.

அவற்றில் சில-வெந்தயம் பொதுவாக உடலிற்கும் தனித்து நரம்புகளுக்கும் நல்ல பலமளிக்கக் கூடியது. தாது புஷ்டி, பசி உண்டாக்க வல்லது. அதிலுள்ள கொழ கொழப்பும், கசப்பும், நெய்ப்பும் குடலின் வேக்காளத்தையும் பரபரப்பையும் குறைக்க உதவுகின்றன.

மலத்தை இறுக்க உதவக் கூடியது. ஆனால், கடுப்பும் சீதமும் ரத்தமும் மலத்துடனோ மலமில்லாமலோ போகும் போது, வெந்தயம் அதனை மாற்றித் தருகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 13, 2019 8:27 pm

வெந்தயம், கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இது, குளிர்ச்சியை உண்டாக்கும். காய்ச்சல், சீதக் கழிச்சல், வெள்ளைப்படுதல், உடல் எரிச்சல், இளைப்பு நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். மேலும், கல்லீரல் நோய்கள் வயிற்று உப்புசம், மந்தம், குடல் வாயு போன்றவற்றையும் குணமாக்கும், ஆண்மையையும் பெருக்கும்.

தாய் என போற்றப்படும் நெல்லிக்காய், வயது முதிராதபடி இளமையைக் காக்கிறது. பச்சை நெல்லிக்காய் புளிப்பு தூக்கலாகவும், இனிப்பு, கசப்பும், துவர்ப்பு, உரைப்பு சற்று தாழ்ந்தும் உள்ளது. எளிதில் ஜீரணமாகக் கூடியது.

குளிர்ச்சி, வறட்சி தரக் கூடியது. வைட்டமின் – சி நிறைய உள்ளதென்றாலும் தோலின் நிறத்தை நன்கு பாதுக்காக்கவல்லதென்பது அதன் தனிச் சிறப்பு. ஆரோக்கியத்தை விரும்புபவர்கள் நெல்லிக்காய்களை தொடர்ந்து சாப்பிட ஆரோக்கியம் நிலைக்கும். மலத்தை இறுகவிடாது.

குடலிலும் மற்ற குழாய்களிலும் ஏற்படும் அடைப்பை நீக்கும். நுரையீரலுக்கு வலிமை தந்து இருமல், சளி வராமல் பாதுகாக்கும். இதயத்திற்குப் பலம் தந்து தலை சுற்றுதல், களைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். மூளைக்குப் பலம் தந்து ஞாபக சக்தியையும் கடும் உழைப்பிலும் அயராதிருப்பதையும் தரும்.

மென்மையான குரல், தோலின் மென்மை, தெளிந்த முகம் இவை இதன் தொடர்ந்த உபயோகத்தால் கிடைப்பவை. இரும்புச்சத்தும் கண்ணாம்புச் சத்தும் உடலில் சேர இது உதவும். சியவனபிராசம், ஆமலகரஸாயனம் முதலியவை நெல்லிக்கனியாலான சிறந்த ரசாயன மருந்துகள்.

மேற்குறிப்பிட்ட மருத்துவ மேன்மைகளை ஆராய்ந்து பார்க்கும் போது நண்பர் குறிப்பிட்ட படி நீங்கள் சாப்பிட முடியாவிட்டாலும் காலை உணவிற்கு சுமார் முக்கால் மணி நேரத்திற்கு முன்பாவது இந்த இரு பொருட்களின் மருத்துவ பெருமையை உணர்ந்து சாப்பிட முயற்சி செய்யவும் அல்லது இவை சாப்பிட்ட பிறகு நெடுநேரம் நாக்கைக் காக்கவிடாமல் சிறிய அளவில் நறுமணத்துடன் கூடிய சூடான காபியை அருந்தலாமே!

– பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக