புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10 
69 Posts - 58%
heezulia
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10 
41 Posts - 35%
mohamed nizamudeen
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10 
111 Posts - 60%
heezulia
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 17, 2019 6:59 pm

ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா 12
-
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா 12a
-
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா 12b
-
வாழ்க்கையில் என்னை இந்தளவுக்கு உயர்த்தியது ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம்தான். அந்த டைட்டிலிலேயே கட்டுரை எழுதுவது மனசுக்கு மகிழ்ச்சி. வாழ்க்கை கண்ணாடி மாதிரி. அதன் மீது கீறலோ, கல்லோ விழாதபடி பார்த்துக்கணும். இல்லையென்றால் மனவருத்தத்தை தவிர்க்க முடியாது.நான் கொஞ்சம் நேர்மையை எதிர்பார்ப்பவள்.

அதனாலேயோ என்னவோ எனக்கு நட்பு வட்டாரம் என்பது இல்லாமலே போய்விட்டது. எனக்கு இருக்கும் ஒரே நட்பு நளினி அம்மா மட்டுமே. நட்பாகப் பழகுகிறார்கள் என்று அவரிடம் அதிக உரிமையும் எடுத்துக் கொள்ளமாட்டேன்.

ஒரு டி.வி.சீரியலில் நடிக்கும் போதுதான் நளினி அம்மாவின் அறிமுகம் கிடைத்தது. முதல் நாள் சந்திப்பிலேயே என்னை மிகவும் கரிசனத்துடன் விசாரித்தார். நாளடைவில் ஓர் ஆசானாக என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டார். அவர்தான் சினிமா துறையில் எப்படி பழக வேண்டும், எப்படி பேச வேண்டும், உடைகள் எப்படி இருக்க வேண்டும், பிறரை எப்படி மதிக்க வேண்டும் என்று எல்லாப் பண்பு களையும் வளர்த்துக் கொள்ள உதவி செய்தார்.

இப்போது மதுமிதா என்றால் எல்லாருக்கும் தெரியுது. நளினி அம்மா என் வாழ்க்கையில் இடம் பெற்றிருக்கவில்லை என்றால் என்னால் இந்த உயரத்தைத் தொட்டிருக்க முடியாது. ஒரு வேளை அவரை நான் என் வாழ்க்கையில் சந்திக்காமலேயே இருந்திருந்தால் நடிப்பு தவிர்த்து, வேறெதுவும் விவரம் தெரியாதவளாகவே இருந்திருப்பேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 17, 2019 6:59 pm

சினிமாவுக்கு வந்த காலக்கட்டத்திலிருந்து சமீபத்தில் நடைபெற்ற என்னுடைய திருமணம் வரை எல்லாமே நளினி அம்மாவின் வழிகாட்டுதல்படியே நடந்தது. எங்கள் இருவருக்குமிடையே அம்மாவுக்கும் மகளுக்குமான பந்தம், பாசம் இருந்தது. ஒரு தாய் தன் மகளுக்கு என்ன செய்யணுமோ அந்தளவுக்கு நளினி அம்மா என் வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்துள்ளார்.

வாழ்க்கையில் சில சமயம் நான் துவண்டு போகும்போது என்னையும் அறியாமல் டயல் செய்யும் தொலைபேசி எண் நளினி அம்மாவுடையதாகத்தான் இருக்கும். சோர்ந்து போகும் வேளையில் அவர் அளிக்கும் உற்சாகமான வார்த்தைகள் என் மனதுக்கு மருந்தாக அமைந்திருக்கிறது.

இந்தக் கலியுகத்தில் மனிதாபி மானம், பொதுநலம் என்பது சுத்தமாக மறைந்துவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு சின்ன விபத்து என்றால் எல்லோரும் ஓடிச்சென்று காப்பாற்றுவதைப் பார்க்கலாம். இப்போது அந்த நிகழ்வை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போடுவதோடு இல்லாமல் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க என்ற ஈவு இரக்கமற்ற செயல்களைத்தான் பார்க்க முடிகிறது. உதவி செய்ய எல்லோரும் பயப்படுகிறார்கள். அந்த மாதிரி சமூகத்தில் நளினி அம்மாவின் நட்பு எனக்கு பெரிதாக இருந்தது.

சில சமயம் எல்லோரும் வித்தியாசமாக இருக்கிறார்கள்; நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன் என்று நினைப்பேன். அதுபோன்ற சமயங்களில் ‘எல்லாரும் ஒரே மாதிரி இருக்காங்க. நீதான் வித்தியாசமா இருக்கிறாய்’ என்று பதில் வந்தது. என்னுடைய சின்ன வயதிலேயே அப்பாவை இழந்துவிட்டேன்.

அண்ணன் தம்பி யாரும் இல்லை. நாங்க மொத்தம் நான்கு பெண்கள். அம்மாதான் எங்களுக்கு தைரியத்தை ஊட்டி வளர்த்தார்கள்.
வாழ்க்கை எனும் கண்ணாடியில் கல் அடி படாமல் இருக்கணும்னா நம்மை நாம் பிஸியாக வைத்துக் கொண்டாலே போதும். வீட்டு வேலையோ வெளி வேலையோ ஏதோ ஒரு வேலையில் பிஸியாக இருந்தால் பிற விஷயங்களில் கவனம் செலுத்தி பேசக் கூடாத விஷயங்களைப் பேசி கல் அடி வாங்குவதைத் தவிர்த்துவிடலாம்.

‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தில் நடிக்கும் போது எனக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு அவதிப்பட்டேன். அப்போது ஒரு சீரியலும் நடித்துக் கொண்டிருந்தேன். குறைந்த ரத்த அழுத்தம் இருந்தது. பகலில் சீரியல், இரவில் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும். மருத்துவரிடம் முதல் உதவி பெற்ற பிறகு ‘என்ன நடந்தாலும் நான் படப்பிடிப்பு போக வேண்டும்’ என்று சொல்லிவிட்டேன்.

ஏன்னா, படக்குழுவுக்கு என்னால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதுதான் என் நோக்கம். பிரச்சனைக்கு நாங்கள் காரணம் அல்ல என்ற கடிதத்தை வாங்கிக் கொண்டுதான் மருத்துவர் டிஸ்சார்ஜ் கொடுத்தார். திட்டமிட்டபடி இரண்டு ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டேன். அந்த சமயத்தில் சுந்தர்.சி சார் பெரிதும் பாராட்டினார்.

கல்யாண டைமில் படப்பிடிப்புக்கு அழைத்தபோது அடுத்த நாளே போகத் தயாராக இருந்தேன். அந்தளவுக்கு நான் வேலை பைத்தியம். மனோரமா ஆச்சியைவிட ஒரு படி அதிகமாக உயரம் தொடணும் என்ற லட்சியத்துடன் உழைத்து வருகிறேன். எந்தத் துறையாக இருந்தாலும் நம் மீது கல் அடி விழாதபடிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் பிறரை கேள்வி கேட்க முடியும்.

எனக்கு இப்போது திருமணம் நடந்துள்ளது. நான் என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் போன்ற
உறவுகளுக்குச் செய்யவேண்டிய கடமைகள் இருக்கிறது. இல்லத்தரசியாக என் கடமையைச் செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.
அதை நான் செய்யாமல் என் வீட்டுக்காரரை கேள்வி கேட்டால் என்னைப் பார்த்து ‘நீ என்ன யோக்கியமா’ என்ற கேள்வி வருவதைத் தவிர்க்க முடியாது. எக்காரணத்தைக் கொண்டும் கல் அடி விழாதபடிக்கு நேர நிர்வாகம், நடிப்பு, குடும்ப பொறுப்புகள் என்று எல்லா விஷயத்திலும் சரியாக இருக்க வேண்டும் என்று முன்பை விட அதிக முனைப்புடன் உழைத்து வருகிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 17, 2019 7:00 pm

நளினி அம்மா எனக்கு செய்த இன்னொரு நல்ல காரியத்தைப் பற்றியும் சொல்ல வேண்டும். பத்தடி நிலமாக இருந்தாலும் அது சொந்தமாக இருக்கணும் என்று விரும்பாதவர்கள் யாரும் இல்லை. அப்படி எனக்கும் ஆசை இருந்தது. நான் பண விஷயத்தில் தாம் தூம்னு செலவு செய்வேன். அதற்கு அணை போட்டது நளினி அம்மா. பணத்தை சேமிக்க கற்றுக் கொள் என்று சேமிப்பைப் பற்றி சொன்னார். நான் இவ்வளவுக்கும் அவர் ரிலேஷன் இல்லை.

இந்த உலகத்தில் கவரிங் நகை கொடுப்பதாக இருந்தாலும் யோசிப்பாங்க. அறிமுகமே இல்லாத ஒரு மார்வாடி எனக்கு சவரன் சவரனாக தவணையில் தங்கம் கொடுத்தார். அந்த மார்வாடியை நளினி அம்மாதான் அறிமுகம் செய்து வைத்தார்.

ஒரு நாள் நளினி அம்மா என்னை அழைத்து நீ சொந்தமா வீடு வாங்க முயற்சி செய். சிறிது சிறிதாக தங்கம் சேர்த்து வை என்று சொன்னதோடு தனக்குத் தெரிந்த மார்வாடியை அறிமுகப்படுத்தினார். அதன்படி மாதாமாதம் தவணை முறையில் நகை வாங்கினேன். ஆறேழு வருட சேமிப்புக்குப் பிறகு அந்த நகையை விற்று ஒரு வீடு வாங்கினேன். நளினி அம்மாவின் நம்பிக்கை வீணாகதபடிக்கு குறிப்பிட்ட தேதியில் பணம் செலுத்தி என்னுடைய நற்பெயரையும் தக்க வைத்து வருகிறேன். மார்வாடி… ‘நல்ல கஸ்டமரைக் கொடுத்தீங்க’ என்று நளினி அம்மாவிடம் சொல்லி மகிழ்ச்சியடைந்தாரம்.
என்னுடைய திருமண வாழ்க்கை ஆரம்பித்தபோது நளினி அம்மா சொன்ன விஷயம்… நீ உண்மை, நேர்மையை எதிர்பார்க்கக்கூடியவள். அதை எல்லாரிடமும் எதிர்பார்க்காதே. எல்லாத்தையும் சினிமாத்தனமா யோசிக்க வேண்டாம். நீ சமைத்தால் புருஷன் ருசித்துச் சாப்பிடணும் என்று நினைக்காதே. உன் அழகை வர்ணிக்கணும் என்று நினைக்காதே.

அதையெல்லாத்தையும் கனவாக நினைத்துக் கொள். கனவில் நடந்தது நிஜத்தில் நடக்கும் என்று நினைத்தால் கல் அடிதான் விழும். புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே நான் சொன்ன புத்திமதிகளை ஏற்று எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்க கற்றுக் கொள். விட்டு கொடுத்துப் போ. வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காணலாம் என்றார். அதன்படிதான் என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன்.

ஒரு சில வீட்டுக்கு போகும் போது காப்பி கிடைக்கும் என்று நினைத்து செல்லும் போது பூஸ்ட் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோம். தண்ணியே தராத வீட்டில் பூஸ்ட் எதிர்பார்க்கும் போது ஏமாற்றம்தான் மிஞ்சும். வாழ்க்கையில் எதையும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்க்காமல் கிடைக்கும் ஒரு விஷயமே எல்லையற்ற சந்தோஷத்தைத் தரும்.

எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை ஏமாற்றத்தைத் தவிர்ப்பதோடு, அதாவது கல் அடியிலிருந்து தப்பிக்க உதவுவதோடு இல்லாமல் வாழ்க்கையை அமைதியாக வழி நடத்தவும் உதவியாக இருக்கும். எல்லாரும் நல்லா இருக்கணும். எல்லாருக்கும் நல்லது செய்யணும். எல்லாருக்கும் நல்லதே நடக்கணும். இதுதான் என்னுடைய பிரார்த்தனை.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

நன்றி-வண்ணத்திரை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக