புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
15 Posts - 3%
prajai
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
4 Posts - 1%
jairam
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_m10திருமண வாழ்வின் ரகசியங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண வாழ்வின் ரகசியங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 23, 2009 1:23 am

உலகில் எல்லாமே மாறிக் கொண்டிருப்பதைப் போல திருமணங்களும், திருமண வாழ்க்கை முறைகளும் மாறிக் கொண்டிருக்கின்றன. அதனால் இன்றைய திருமணங்கள் எப்படி இருக்கின்றன என்பது பற்றி ஜெர்மனியில் ஒரு விரிவான ஆராய்ச்சியே நடந்திருக்கிறது. 1980-ம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை நடத்தப்பட்ட அந்த நீண்ட கால ஆய்வு பல சுவாரசியமான, எதிர்பாராத உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது.

அவற்றில் சில...

திருமணம் ஒரு `கால் கட்டு' அல்லது `கை விலங்கு' என்று வேடிக்கையாகவோ, சீரியசாகவோ கூறினாலும், மற்றவர்களை விட திருமணமானவர்கள் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு அடிப்படையாக `கொடுத்தல்' என்பதுதான் உள்ளது என்கிறது அந்த ஆய்வு. `சட்டதிட்டமான' திருமண வாழ்வு (`சனிக்கிழமையன்று குழந்தைகளை, கணவர் கவனித்துக் கொண்டால், ஞாயிற்றுக்கிழமை காலை அவர் நண்பர்களோடு வெளியே செல்லலாம்' என மனைவி அனுமதி வழங்குவது போன்றவை) சலிப்பை ஏற்படுத்துவதாகவும், அதிக திருப்தி தராததாகவும் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. அதற்கு மாறாக தம்பதி ஒருவருக்கொருவர் ஆர்வத்தோடு வேலையை பங்கிட்டுக் கொள்வது திருப்தியையும், சந்தோஷத்தையும் தருகிறது என்கிறார்கள்.

வீட்டு வேலையைப் பகிர்ந்து கொள்ளும் கணவரை மனைவிக்குப் பிடிக்கிறது என்று இதுநாள் வரை கூறிவந்தார்கள். ஆனால் அதனால் மட்டும் கணவன் மீது மனைவிக்கு அன்பு பொங்கி விடுவதில்லை, அவள் மனநிறைவு பெற்று விடுவதும் இல்லை என்கிறது புதுஆய்வு.

கணவனும் மனைவியும் சம்பாதிக்கும் குடும்பம் பற்றிய ஆய்வில் தெரிய வந்திருக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா?

மொத்த வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு வருவாயை கணவர் ஈட்டும் குடும்பத்தில் மனைவி மகிழ்ச்சியாக இருக்கிறாராம். அதற்குப் பல காரணங்களை அடுக்குகிறார்கள். கணவரை விட மனைவி குறைவாக வருமானம் ஈட்டும்போது அவரால் நிதிப் பொறுப்புகளிலிருந்து விலகியிருக்க முடிகிறது, குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளவும் முடிகிறது என்கிறார்கள். அதிகமாகச் சமëபளம் பெறும் மனைவிகள் அலுவலகத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. அதேநேரம் கசப்போடு வீட்டிலும் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. மனைவிக்குச் சம்பளம் குறைவாக இருக்கும் நிலையில் தம்பதிகளின் பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிக்கு குழந்தையை யார் அழைத்துச் செல்லும் முறை அல்லது `ஷாப்பிங்'குக்கு யார் செல்வது என்பது போன்ற அன்றாட வேலை அழுத்தங்கள் குறைகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

திருமண உறவில் எப்போதும் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என்பது அவசியமில்லை என்பது பொதுவான கருத்து. இது தொடர்பாக `மகிழ்ச்சி: புதிய அறிவியல் பாடங்கள்' என்ற நூலில் விவரித்துள்ள பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் லேயார்டு, `திருமண வாழ்க்கைத் துணையின் மீது அதிக அக்கறை கொண்டவர்களை விட, தமது சொந்த விஷயத்திலேயே அதிக கவனம் செலுத்துபவர்கள் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்' என்கிறார்.

இன்றைய திருமண வாழ்க்கையில் குழந்தைகளின் நிலையும் அலசப்பட்டிருக்கிறது. சமூகமானது நீதி, நெறி, கலாச்சார மாற்றத்துக்கு உட்பட்டு வருகிறது. குழந்தைப் பருவம் முதலே பெண் குழந்தைகளும், ஆண் குழந்தைகளும் முற்றிலும் வேறுபட்ட சூழலில் வளர்க்கப்படுகிறார்கள். கணவன்- மனைவி- குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பங்களும், கணவன்- மனைவி இருவருமே பணிபுரிவதும் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், குழந்தைகள் உணர்வுரீதியான பாதுகாப்புக் குடையின்றியே வளர்கிறார்கள் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் தங்களைத் தாங்களே உணர்ந்துதான் வாழ்க்கையை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பெரியவர்கள் பல்லாண்டுகளாக உருவாக்கிய நீதி மற்றும் கலாச்சார கட்டமைப்பை குழந்தைகள் ஒரே நாளில் உடைக்க விரும்புகிறார்கள். இளந்தம்பதிகளைப் பொறுத்தவரையில், அவர்களுக்காக நேரம் ஒதுக்கவே அவர்களுக்கு நேரமில்லை. தனக்குத் தலைவலித்தால் டீ போட்டுக் கொடுத்து கணவன் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேச வேண்டும் என்று மனைவி எதிர்பார்க்கிறாள். ஆனால் கணவனோ வீட்டிலும் அலுவலக வேலையில் மூழ்க வேண்டியவனாக இருக்கிறான்.


கணவன், மனைவிக்கிடையிலான உறவும் ஆரோக்கியமாக வளர்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது, ஒருவருடன் இன்னொருவர் நிஜமாகவே அதிக நேரத்தைக் கழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இன்றைய தம்பதிகள் தமது தனிப்பட்ட விருப்பங்கள், ஆசைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும், சுதந்திரம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். கணவன் அல்லது மனைவியாகவே இருந்தாலும் ஓரளவுக்கு மேல் தலையிடுவதை விரும்புவதில்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.



திருமண வாழ்வின் ரகசியங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 23, 2009 1:23 am

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரான பார்கவா, `இந்தியாவில் குடும்ப அமைப்பு உடைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள மனைவிகளின் முயற்சியால்தான் அது இன்னும் கொஞ்சம் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது அவளும் சுதந்திரத்தை விரும்பினால், நம்மால் நமது சமூக விதிகள், நம்முடைய குடும்ப அமைப்பு போன்றவற்றை அதிக காலத்துக்குக் கட்டிக்காக்க முடியாது' என்று குண்டைத் தூக்கி போடுகிறார்.

இந்திய குடும்ப அமைப்பின் ஆதாரமாக உள்ள குடும்பத் தலைவிகள் பற்றிய புதிய ஆய்வு, இன்னும் சில வியப்பூட்டும் விஷயங்களைத் தெரிவிக்கிறது.

இந்தியப் பெண் நீண்ட தூரத்தைக் கடந்து வந்திருக்கிறாள். `நேற்றைய' இந்தியப் பெண்ணுக்கும், `இன்றைய' இந்தியப் பெண்ணுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள். தனது குடும்பம், குழந்தைகள், சமூகத்துக்காக இன்றைய இந்திய குடும்பப் பெண் தனது அடையாளத்தை இழக்கவோ, அமைதியாகக் கஷ்டத்தைச் சுமக்கவோ தயாராக இல்லை என்கிறார்கள்.

திருமண வாழ்வின் மகிழ்ச்சிக்கான அடிப்படையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்திய குடும்பத் தலைவியானவள் தீவிரமாக, எந்தக் குற்ற உணர்ச்சியுமின்றி மகிழ்ச்சியைத் தேட ஆரம்பித்திருக்கிறாள். அதற்காகத் தனது திருமண வாழ்க்கையையே கூட விட்டுக் கொடுக்க அதிகம் தயங்குவதில்லை, என்கிறது ஆய்வுத் தகவல்.

பெண்ணானவள், குடும்பத்தில் மிதியடியாய் உழைத்த காலம் போய்விட்டது. சுயஅதிகாரம் பெற்ற இன்றைய மனைவிகள் கணவன்மாரை கேள்வி கேட்கத் தயங்குவதில்லை.

-``ஏன் நான்தான் சமைக்க வேண்டும் என்கிறீர்கள்? உங்களைப் போல நானும்தான் களைத்துப் போகிறேன். நீங்கள் ஏன் பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு, அழைத்து வரக் கூடாது? நானும் அலுவலகப் பணியில் பிசியாக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

-உங்களுக்காக நான் ஏன் எனது உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்? எனது விருப்பங்களை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது''

... இப்படிப் போகின்றன கேள்விகள்.

இவையெல்லாம் வீட்டுக்குள் முடங்கிப் போகும் விஷயங்கள் இல்லை. பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, சரிப்பட்டு வரவில்லை என்றால் திருமண பந்தத்திலிருந்து விலகி நடக்கவும் பெண்கள் தயாராக இருக்கிறார்கள். அதிலும் பெண்கள் அடிப்படையான விஷயங்களில் விட்டுக்கொடுக்க முன் வருவதில்லை.

மும்பையைச் சேர்ந்த மித்தாலிக்கும், இங்கிலாந்துவாழ் இந்திய மருத்துவ மாப்பிள்ளைக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளை அடிக்கடி இந்தியா பறந்துவர, நெருக்கமாகப் பழகினர். பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர். ஆனால் முதலிரவிலேயே, கணவனால் தன்னை தாம்பத்ய ரீதியாக திருப்திப்படுத்த முடியாது என்பதைப் புரிந்துகொண்டார் மித்தாலி. நான்காவது நாளே திருமணத்தை முறித்துக்கொள்ளும் முடிவுக்கு அவர் வந்துவிட்டார்.

``மற்றபடி அவர் நல்ல கணவர்தான். ஆனால் இந்தத் திருமணத்தில் எதிர்காலமில்லை. ஏன் நான் சமரசம் செய்துகொண்டு போக வேண்டும்? நான் அடுத்து நகர விரும்புகிறேன்'' என்கிறார் மித்தாலி.

நவீன இந்தியப் பெண்ணின் முகம்தான் இந்த மித்தாலி. இப்படி நிறைய மித்தாலிகள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். `திருமண வாழ்க்கை என்பது வாழத்தான்' என்பது இவர்கள் வாதம்!

***



திருமண வாழ்வின் ரகசியங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக