புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
20 Posts - 65%
heezulia
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
62 Posts - 63%
heezulia
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 7:38 am

வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  RX7TJGWQoKUnyXnez3oD+29CHSUJBADAMI1


சாளுக்கிய மன்னர்கள் கி.பி. 6-ம் நூற்றாண்டிலிருந்து 12-ம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவையும் மத்திய இந்தியாவையும் ஆண்டுவந்தனர். சாளுக்கிய மன்னர்களில் தலை சிறந்த அரசராக இரண்டாம் புலிகேசி விளங்கினார். இவர் வாதாபிக்கு அருகில் உள்ள அய்கோல் நகரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்துவந்தார். பல நாட்டு மன்னர்களுடன் போரிட்டு, தனது ஆட்சி எல்லையை விரிவுபடுத்தினார். கட்டிடக் கலை மீது அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார்.
     

சாளுக்கிய மன்னர்கள் அய்ஹோல், வாதாபி போன்ற நகரங்களைத் தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், அருகில் உள்ள பட்டடக்கல் நகரை மிகப் புனிதமாகக் கருதினர். மன்னர்கள் முடி சூட்டிக்கொள்வதற்காகவே இந்த நகரம் உண்டாக்கப்பட்டிருந்தது.
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  5ysIcEGlS3OXEq5s74BZ+22CHSUJIHOLE
வட கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள இந்த நகரம் மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. திராவிடக் கட்டிடக் கலையையும், வட இந்தியக் கட்டிடக் கலையையும் சேர்த்து இங்கு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 7:43 am

பட்டடக்கல் யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வளாகத்தில் 8 கோயில்களும் ஊருக்கு வெளியே 2 கோயில்களும் உள்ளன. இதில் ஒன்று மட்டும் ஜைனக் கோயில். மற்ற ஒன்பதும் சிவன் கோயில்கள். மன்னர்கள் பட்டம் சூட்டிக்கொள்வதற்காக இந்த நகரம் அமைக்கப்பட்டதால் செல்வச் செழிப்பு மிக்க தலைநகராகக் கட்டப்பட்டது.
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  IIw6BUpcQx27bW9b1wjR+29CHSUJBADAMI
கோயில்களின் வெளித் தோற்றம் மிக அழகாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கல்லும் முப்பரிமாணத் தோற்றத்தில், மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. கோயில் தூண்களில் உள்ள சிற்பங்களும் சுற்றுச் சுவர்களில் உள்ள சிற்பங்களும் கலைநயம் மிக்கவையாகக் காட்சியளிக்கின்றன.
மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ள பட்டடக்கல்லில் இருந்து 10 கி.மீ. தொலைவில் ஐஹோல் என்ற இன்னொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் இருக்கிறது. இது சாளுக்கிய மன்னர்களின் முதல் தலைநகரமாக இருந்தது. இங்கு ஏராளமான கல்வெட்டுகள் இருக்கின்றன. இவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளும் பல்லவர்களுடன் இருந்த மோதல்களும் ஆட்சி முறையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஐஹோலில் பலவிதமான கட்டிடக் கலைகளும் பரிசோதனை முயற்சியில் செய்து பார்க்கப்பட்டன. இங்குள்ள சிவன், துர்கை சிலைகள் மிக அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Kc3Mjx03SYEQOB9hdtgT+29CHSUJPATTADAKAL2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 7:53 am

வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  78LOQfl5QwmocSPsBFRF+29CHSUJPATTADAKAL
பட்டடக்கல்லில் இருந்து 22 கி.மீ. தூரத்தில் இருக்கிறது வாதாபி. இதுவும் சில காலம் சாளுக்கியர்களின் தலைநகரமாக இருந்தது. குடைவரைக் கோயில்களுக்கு வாதாபி புகழ்பெற்றது. அகத்தியர் ஏரியைச் சுற்றியுள்ள குன்றுகளில் கி.பி. 6-ம் நூற்றாண்டுக்கும் 8-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவனுக்காக உருவாக்கப்பட்ட முதல் குடைவரை கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே விஷ்ணு, புத்தர், கணபதி சிலைகளும் வடிக்கப்பட்டிருக்கின்றன. வாதாபி குன்றிலிருந்து பார்க்கும்போது பச்சை நிற ஏரியும் சுற்றியுள்ள கிராமமும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். முதலாம் நரசிம்மவர்ம பல்லவர் இரண்டாம் புலிகேசியை வாதாபியில் அழித்ததால், வாதாபிகொண்டான் என்ற பெயரைப் பெற்றார்.
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  JxGvDCmLSsRm7vapN6Uk+29CHSUJPATTADAKAL1
சாளுக்கிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மராட்டியர்களும் இஸ்லாமியர்களும் ஆங்கிலேயர்களும் படையெடுத்த காரணத்தால் பல சிலைகள் சேதமடைந்திருக்கின்றன. ஆனாலும் சாளுக்கியர்களின் கட்டிடக்கலையின் சிறப்பை அவை எந்தவிதத்திலும் குறைத்துவிடவில்லை. அய்ஹோலும் வாதாபியும் கட்டிடக் கலையில் சிறந்து விளங்கினாலும் பட்டடக்கல் நகர் இவை இரண்டை விடவும் பலவிதங்களில் சிறப்புப் பெற்று விளங்குகிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக