புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_m10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_m10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10 
26 Posts - 43%
M. Priya
பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_m10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10 
1 Post - 2%
Jenila
பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_m10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_m10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_m10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_m10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_m10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10 
4 Posts - 3%
Jenila
பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_m10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10 
3 Posts - 3%
Rutu
பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_m10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10 
3 Posts - 3%
prajai
பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_m10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_m10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_m10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10 
2 Posts - 2%
manikavi
பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_m10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_m10பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை


   
   

Page 1 of 2 1, 2  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 21, 2017 4:43 pm

"நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத்தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மைத்துனராகவும், தந்தை பாட்டனாராகவும், கணவர் காதலராகவும் வாய்த்திருக்கின்றனர். இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும்போது, என்னுடைய மனம், குருக்ஷேத்ரத்தில் போர் தொடங்கிய போது அர்ஜுனனுடைய மனது திகைத்ததுபோலே, திகைக்கிறது. ஆண்மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத் தகாத காரியம். அது பற்றியே 'சாத்வீக எதிர்ப்பி'னால் இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டுமென்று நான் சொல்கிறேன்.

“நமக்கு நம்முடைய புருஷர்களாலும், புருஷ சமூகத்தாராலும் ஏற்படக்கூடிய கொடுமைகள் எத்தனையோ யாயினும், எத்தன்மை யுடையனவாயினும் அவற்றால் நமக்கு மரணமே நேரிடினும், நாம் அஞ்சக்கூடாது... ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. தர்மத்துக்காக மடிகிறவர்களும் மடியத்தான் செய்கிறார்கள்; ஸாமான்ய ஜனங்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஆதலால் ஸஹோதரிகளே, பெண் விடுதலைக்காக இந்த க்ஷணத்திலேயே தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம். நமக்கு மஹாசக்தி துணைசெய்வாள்"

பாரதியார்


-----

ட்டுரை என்றாலே எழுதுவதற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள் நிறைய இருக்கிறது. கட்டுரை என்பது, வெறும் எழுத்துக்களால் ஆனதன்று என்பது என் கருத்து. எடுக்கும் தலைப்பில் இம்மியளவேனும் எந்த வகையிலாவது அனுபவம் என்பது இருந்தால் மட்டுமே அந்த கட்டுரை உயிர்ப்புடன் இருக்க அதிக வாய்ப்பிருக்கும் என்பது என் வாதம். அந்த வகையில் நான் எடுத்துக்கொண்ட இந்த தலைப்பு – என்னை சுற்றி நிகழ்ந்தவையே என்பதால் இக்கட்டுரையுடன் என்னால் ஒன்றி எழுத முடியும் என்றே நினைக்கிறேன்.

கட்டுரைக்கென தலைப்புக்கள் பல இருந்தாலும் ‘பெண் சுதந்திரம்’ என்பது மிக அதிகமாக விவாதிக்க கூடிய விஷயமாக பேசப்பட்டாலும், இங்கே இன்னும் விடை கிடைக்காத கேள்வியாகவே சுழன்று கொண்டிருக்கிறது.  அதனாலேயே இங்கே பெண் சுதந்திரம் பற்றி எனது கருத்துக்களையும் பெண்கள் சார்பாக  பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தே இந்த கட்டுரை தலைப்பினை தேர்ந்தெடுத்தேன்.

என்னடா இது ஒதுக்கீடு செய்த இடம் போதவில்லையா.... இன்னும் சுதந்திரமா.....? இதற்கே தாளலை இன்னுமா.......?? என்ற ஆண்கள் மற்றும் சில பெண்களின் புலம்பலை புறந்தள்ளி விட்டு, இது பற்றி மாறுபட்ட கோணத்தில் பார்ப்போம்.

அதென்ன மாறுபட்ட கோணம்?

சமூகத்தில் பெண்களுக்குள்ள இடம் – ஆதாவது வீட்டிற்கு வெளியே உள்ள உலகத்தில் - கிடைத்திருக்கும் நடை, உடை, பேச்சு, கருத்து போன்ற சுதந்திரங்களை பற்றி நான் பேசப்போவதில்லை. இத்தகைய சுதந்திரம் (பெண்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கும் வகையில்) அளவிற்கு அதிகமாகவே கிடைத்திருக்கிறது என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

மேலும், இட ஒதுக்கீட்டால் மட்டுமே சுதந்திரம்  கிடைத்து விட்டதாக அக – முக மகிழ்ந்து போகும் மகளீரை நினைத்தாலும் வேதனையாக தான் இருக்கிறது.

பெண்களின் உண்மையான சுதந்திரம் என்பதற்கு இங்கே நம் இளம் பெண்களுக்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கிறது என்பதும் நாம் ஒப்புக்கொள்ளவேண்டிய கசப்பான உண்மை.

இங்கே தெருவில் தனியாக நடந்து போகும் பெண்ணுக்கு மட்டுமல்ல, தன் வாழ்க்கையை தனித்து எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட பல பெண்களின் பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில், இச்சமூகத்தில் அதாவது வீட்டிற்கு வெளியே, பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் என்பது இன்னும் கிடைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். கிடைக்கவில்லை என்பதைவிட மறுக்கப்பட்டிருக்கிறது என்ற வார்த்தை தான் சரியானதாக  இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆக, சமூகத்தில் பெண்களுக்கு சுதந்திரம் எவ்வளவு தூரம் கிடைத்திருக்கிறது என்பது பற்றி அலசுவது அல்ல இந்த கட்டுரையின் நோக்கம். காரணம், சமூகம் என்பது பல குடும்பங்கள் இணைந்தது தானே. குடும்பங்களே சமூகத்தின் அடித்தளம்.

ஒரு நல்ல சமூகத்தை அமைத்துக்கொடுக்கும் அத்தகைய குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவள் பெண். இப்படிப்பட்ட சமூக மூலாதாரமாய் தோன்றும் குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு அவள் குடும்பத்தினரால் எத்தகைய சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தான் நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி.

ஒரு பெண் தன் வீட்டில் எவ்வளவு சுதந்திரமாய் இருக்கிறாள்... என்பது பற்றிய அலசல் தான் இந்த கட்டுரையின் சாராம்சம்.

நான் சொல்ல வருவது, பெண்கள் சுந்திரமான(!) இரவு உடையுடன் சுதந்திரமாய் குழாயடிக்கும், கடைகளுக்கும் வருவதைப்பற்றியல்ல. இஷ்டப்பட்டபடி புடவைகளையும், நகைகளையும் வாங்கி குவித்துக்கொள்வது பற்றியல்ல. இஷ்டப்பட்டதை எல்லாம் அவள் சாப்பிடுவதை பற்றியல்ல.

வீட்டில், அவளது தன்மானம் எந்த அளவிற்கு மதிக்கப்படுகிறது...? அவளது கெளரவம் எந்த அளவிற்கு கெளரவிக்கப்படுகிறது... என்பது பற்றிய அலசலே இந்த கட்டுரை.

இதில் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். பயிர்களின் ஊடே சில களைகளும் வளருவது இயற்கை தான். அதனால், ஒட்டுமொத்த பெண்ணினத்தையே தலைகுனியச்செய்யும் ஒரு சில புல்லுருவிகளை ‘பெண் சுதந்திரம்’ என்ற ஒரு விஷயத்திற்கு விதிவிலக்கானவர்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தொடரும்....




பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 21, 2017 4:44 pm

ரி, இனி விஷயத்திற்கு வருவோம்,

பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனைவிகளிடத்தே தான் வீட்டின் பொறுப்பினை ஒப்படைத்திருக்கிறார்கள். ஆண் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பொறுப்பில் இருப்பதினால், இரட்டிப்பு பொறுப்பினில் கவனம் செலுத்த முடியாத காரணத்தினால் வீட்டுச்சுமையை மனைவியிடம் இறக்கிவைக்கிறான்.

தன்னிடம் வீட்டுப்பொறுப்பினை தன் கணவன் ஒப்படைத்து விட்டதற்காகவே பெரும் புளங்காகிதம் அடைந்து போகிறாள் பெண். எம்மாதிரியான உள்நோக்கத்தோடு பொறுப்பு கைமாறியிருக்கிறது என்பதை கடைசிவரையிலும் உணருவதே இல்லை என்பது தான் பரிதாபத்திற்குரிய விஷயம்.

இங்கே ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். இப்படி சொல்வதினால் ஆண்களை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், பெரும்பாலான ஆண்கள் வீட்டு வேலைகளில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

எத்தனை ஆண்களுக்கு தெரியும் தன் வீட்டிற்கு வரும் பொருட்கள் எந்த ரேஷன் கடையிலிருந்து வருகிறது, பால், காய்கறி, மளிகை பொருட்கள் என்று இப்படி பலவற்றை சொல்லலாம்.

இதில் வேலைக்கு செல்லும் பெண்களாய் இருந்தால் அவர்களது பொறுப்பு இன்னும் இரட்டிப்பாகும். இரட்டிப்பானாலும் வீட்டுச்சுமையை அவள் எப்போதுமே இறக்கி வைக்க நினைப்பதில்லை. வீட்டு பொறுப்பு, அலுவலக பொறுப்பு, குழந்தைகள் வளர்ப்பு என்று வித விதமாய் அவதாரம் எடுக்க தயாராகிவிடுகிறாள்.

அப்படியானால் ஆண்கள் வீட்டுப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டால் வீட்டுப்பெண்கள் கௌரவம் காப்பாற்றப்படுகிறது என்று அர்த்தமா என்ற கேள்வியும் கூடவே வரலாம்.

இல்லை..! நிச்சயம் இல்லை..!! கணவனின் பொறுப்புகளை மனைவியானவள் எவ்வளவு தான் பகிர்ந்து கொண்டாலும்....... கணவனின் கருத்திற்கு, மாற்று கருத்து சொல்லாதவரை மட்டுமே அவள் கௌரவம் காப்பாற்றப்படுகிறது என்பது தான் விரும்பத்தகாத உண்மை. இதுவே எவராலும் மறுக்கமுடியாத உண்மை. இதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

எத்தனை பெண்கள் அவர்களது இயல்பான நிலையில் இருக்கிறார்கள் என்று யாராலாவது சொல்ல முடியுமா? அடுப்படியை தாண்டி, இங்கே அவளது சுயமான சிந்தனைகளுக்கும், செயலாக்கத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என்பது தான் அப்பட்டமான உண்மை, உள்ளங்கை நெல்லிக்கனி போல.

தன் எண்ணங்கள் ஆட்சேபிக்கப்படும் போது தான், தான் இருக்கும் இயல்பு நிலைக்கு ஒரு தடை ஏற்படுவதையே உணர்கிறாள். ஆனால், பெண்ணின் இயல்பான விட்டு கொடுக்கும் சுபாவத்தினால் அமுங்கிப்போகும் பல விஷயங்களில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

கடந்து போன நூற்றாண்டுகளில் பெண்கள் இருந்தது போல் இப்போது இல்லை என்பதை நாம் அனைவருமே அறிவோம். ஆனால், தெரிந்தோ தெரியாமலோ ஆணுக்கு, பெண் சமம் என்று கருத்து வலுவாக திணிக்கப்பட்டதன் விளைவாக, அதனை நம்பி, அதனை செயல் படுத்தும் விதமாக அந்த சமமான அந்தஸ்த்தை அல்லது தன் சுய சிந்தனைகளுக்குண்டான கௌரவத்தை தன் கணவனிடம் ஒரு பெண் எதிர்பார்ப்பதில் தவறில்லை.

ஆனால், அப்படிப்பட்ட சுய எண்ணங்களுக்கு எத்தனை கணவர்கள் தங்கள் மனைவிக்கு மதிப்பளித்துக்கொண்டிருக்கிறார்கள்.............??????????


தொடரும்....




பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 21, 2017 4:49 pm

புகுந்த வீட்டில் இருக்கும் அனைத்து உறவுகளையும் தன் கணவன் மனம் புண்படக்கூடாது என்ற ஒரு காரணத்திற்காகவோ அல்லது தனது எதிர்கால நன்மைக்காகவோ அல்லது தன் குழந்தைகளுக்காகவோ... இப்படி ஏதேனும் ஒன்றினுக்காக அனுசரித்து கொண்டு போவோர் எத்தனையோ பேர்.

தன் மனைவியின் தன்மானம் தன் வீட்டு ஆட்களால் கண்முன்னே ஏலமிடும்போது அதனை எத்தனை ஆண்களால் தடுக்க முடிந்திருக்கிறது? கண்டும் காணாமல் போவோர் எத்தனை பேர்?

இன்னும் சிலர், “இது தான் என் வீடு. இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். உன் வீட்டில் இருப்பவர்கள் இப்படி நடந்து கொண்டால் விட்டு கொடுப்பாய் அல்லவா. அப்படி நினைத்துக்கொள். இல்லையா, அனுசரித்து போக பழகிக்கொள்...” என்று பகிரங்கமாகவே அதற்கு துணை போகிறார்கள்.

கணவனுக்கு ஒரு அவமானம் என்றால் மனைவியானவள் (அது அவளது தாய் வீடே ஆனாலும்) சம்மந்தப்பட்டவர் வீட்டு வாசலை மிதிக்கக்கூடாது. அந்த வீட்டில் நடக்கும் விஷேஷங்களுக்கு அவள் (தனியாகவும்)  போகக்கூடாது, கணவனும் உடன் வரமாட்டான்.

ஆனால், இதே அவமானங்கள் புகுந்த வீட்டினரால் ஒரு பெண்ணுக்கு நிகழும் போது அனுசரித்துக்கொள்ளச் சொல்கிறார்கள். ஏனென்றால், திருமணம் ஆகி வரும் போதே ஒரு பெண் தன் ரத்தபந்தங்கள் மட்டுமின்றி அவளது சுய கவுரவத்தையும் சேர்த்து விட்டு விட்டு வரவேண்டும் என்பது கேட்கப்படாத சீதனங்களில் ஒன்று தானே.

“அட, நீங்க எந்த காலத்துல இருக்கீங்க...? அதெல்லாம் அப்போ.... இப்ப காலம் மாறிப்போச்சு.... ஒவ்வொருத்தர் வீட்லயும் ஆட்சியையும், அதிகாரமும் பொண்டாட்டி கையில தான்.....” என்பவர்களுக்கு,

உண்மை தான். எல்லாவற்றிலும் விதிவிலக்கு என்பது இருக்கத்தானே செய்கிறது. தவிர, விதிவிலக்குகளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லையே. மேலும், இப்பொழுது எல்லா தட்டு மக்களிடமும் கணவன் – மனைவியரிடையே இப்பிரச்சனை நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டு தான் இருக்கிறது. எப்பொழுது நெருப்பு கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்கிறதோ அப்போது நீதி மன்றங்களையும் திரும்பிப்பார்க்க நேரிடுகிறது என்பதையும் மறுக்க முடியாது.

சொந்த வீட்டிலேயே ஒரு பெண்ணின் கவுரவம் கேள்விக்குரியதாய் இருக்கும் போது வாசலுக்கு வெளியே பணி நிமித்தமாய் செல்லும் பெண்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்.

ஆனால், ஒரு ஆண் எந்த சூழ்நிலையிலும் தன் கவுரவத்தை யாருக்காகவும் குறிப்பாக தன் மனைவியிடத்திலும் கூட விட்டுகொடுக்க தயாராய் இருப்பதில்லை என்பது தான் நிரூபிக்க முடியாத உண்மை. எந்த காரணத்திற்காகவும் யாரும் தன்னை சுட்டிக்காட்டி மற்றவரது பார்வைக்கு ஆளாவதை எப்போதுமே விரும்புவதில்லை என்றே சொல்லலாம்.

இது இன்று நேற்று நடப்பது அல்ல. இராமாயண காலந்தொட்டே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இல்லையென்றால், சீதையின் தகிக்கும் கற்பின் தணலை தாங்கமுடியாமல் தவிக்கும் அக்னி தேவனையும் பொருட்படுத்தாது தனக்கு சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் அன்பு மனைவியை தீக்குளிக்க செய்திடுவானா ராமன்?

தன்மானத்திற்கு பங்கம் ஏற்படுவது என்பது சாதாரணமாய் ஜீரணிக்கக்கூடிய விஷயமில்லை. இதுவே ஒரு பெண்ணிற்கு ஏற்படும் உச்சபட்ச அவமானம்.

தினம் தினம் இங்கே தீக்குளித்துக்கொண்டிருக்கும் சீதைகள் ஏராளம்.  ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகம் தன்னுடைய தன்மானத்திற்கு விலைபேசக்கூடும் என்று தெரிந்தே தான் ஆத்திச்சூடி அம்மையார்  முதுமைக்கோலம் ஏற்றார் போலும்.....

சகல சுதந்திரமும் தன் மனைவிக்கு கொடுத்திருப்பதாக சொல்லும் எத்தனை ஆண்களுக்கு தெரியும் அவள் சுயகௌரவமுடந்தான் தன்னோடு வாழ்கிறாள் என்று? – என்ற கேள்வியுடன் இக்கட்டுரையை நான் முடிக்கிறேன்.

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ் வையந் தழைக்குமாம்” – என்ற பாரதியின் கனவு மெய்படுமா...???????????????? பதில் சொல்ல காலமும் காலந்தாழ்த்திக்கொண்டுத்தான் இருக்கிறது.



பெண்மையை போற்றுவோம்!
அவள் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்போம்!!



நன்றி!



- விமந்தனி @ ஈகரை




பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 22, 2017 12:16 pm

அருமையான கட்டுரை அக்கா ,




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 22, 2017 12:44 pm

ஆரம்பமே அருமை.


இடைவெளி சாராம்சம் கேட்கவே வேண்டாம். 


முடிவும் அற்புதம்   


"பெண்மையை போற்றுவோம்!
அவள் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்போம்!!"




அருமை முத்தாரம் 
அருமையான கட்டுரை . சூப்பருங்க சூப்பருங்க 




ரமணியன்  




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Feb 22, 2017 2:48 pm

புத்தகத்தில் வந்த கட்டுரைகளை இங்கே ஈகரையில்) பதிவிடாமல் இருந்தால் நல்லது என நான் கருதுகிறேன். புத்தகத்தை வாங்கி படிக்கலாமே. சற்று யோசியுங்கள். ஒருவரது கடின உழைப்பு வீணாக்காதீர்கள். இங்கு பதிவிடப்படும் அந்த கட்டுரைகளை நான் படிக்க மாட்டேன்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 22, 2017 5:02 pm

மாணிக்கம் நடேசன் wrote:புத்தகத்தில் வந்த கட்டுரைகளை இங்கே ஈகரையில்) பதிவிடாமல் இருந்தால் நல்லது என நான் கருதுகிறேன். புத்தகத்தை வாங்கி படிக்கலாமே. சற்று யோசியுங்கள். ஒருவரது கடின உழைப்பு வீணாக்காதீர்கள். இங்கு பதிவிடப்படும் அந்த கட்டுரைகளை நான் படிக்க மாட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1234361

முற்றிலும் உடன்பாடு அய்யா.  180 கட்டுரைகளில், ஈகரை உறவுகள், அவரவர் (5 )கட்டுரைகளை  மாத்திரம் போடலாமே என்றே நினைத்தேன்.  அதையும் நீக்கிடலாம்.  உங்கள் கருத்து வரவேற்கத்தக்கதே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Feb 22, 2017 11:57 pm

மாணிக்கம் நடேசன் wrote:புத்தகத்தில் வந்த கட்டுரைகளை இங்கே ஈகரையில்) பதிவிடாமல் இருந்தால் நல்லது என நான் கருதுகிறேன். புத்தகத்தை வாங்கி படிக்கலாமே. சற்று யோசியுங்கள். ஒருவரது கடின உழைப்பு வீணாக்காதீர்கள். இங்கு பதிவிடப்படும் அந்த கட்டுரைகளை நான் படிக்க மாட்டேன்.
நீங்கள் சொல்வது உண்மை ஐயா. நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் நான் உங்கள் கருத்திற்கு எதிராக பேசுவதாக நினைக்க கூடாது. ஆதிரா அக்காவிடம் மும்பே சொல்லி விட்டேன் எனக்கும் ஒரு புத்தகம் வேண்டும் என்று.

மேலும் கருத்தரங்க கட்டுரைகள் 180 இருப்பதாக சொன்னார்கள். அனைத்தையும் இங்கு பதிவிடப்போவதில்லையே. நம் தளத்தில் இருந்து 5 கட்டுரைகள் மட்டும் தானே பங்கேற்றிருக்கிறது. மீதம் உள்ள இருவர் பணி நிமித்தம் காரணமாய் நம் தளத்திற்கு வருவதே அரிதாய் இருக்கிறது.

நம் தள கட்டுரையாளர்கள் இங்கே தங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்வது ஒரு சின்ன எசைட்மெண்ட் தான். பள்ளியில் பரிசு வென்ற பிள்ளைகள் வீட்டிலும், தனக்கு தெரிந்தவர்களிடத்தும் காண்பித்து சந்தோஷப்படுகிறார்களே... அதுமாதிரி.

நம் தளத்தின் மீது மதிப்பும், காதலும் கொண்ட நம் உறவுகள் எவரும் இந்த கருத்தரங்க புத்தகத்தை புறக்கணிக்க மாட்டார்கள் என்பது என் கணிப்பு.

இது என் கருத்து. மற்றபடி, பெரியவர்கள் சேர்ந்து என்ன முடிவெடுத்தாலும் சரி. அதற்கு நானும் உடன் படுகிறேன். நான் ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால் நீங்கள், என்னை மன்னிக்கவேண்டும்.  :வணக்கம்:



பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 23, 2017 12:12 am

ராஜா wrote:அருமையான கட்டுரை அக்கா
T.N.Balasubramanian wrote:அருமையான கட்டுரை . சூப்பருங்க சூப்பருங்க
இருவருக்கும் நன்றி. ஆனால், இக்கட்டுரை நமது ஈகரை திண்ணை பேச்சிற்காக நான் எழுதியது. திடீரென்று கட்டுரை அனுப்பவேண்டும் என்று தோன்றியதில் எதைப்பற்றி எழுதுவது என்பதற்கு தயாராகாத நிலையில், நான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த பதிவு நினைவுக்கு வரவே, சட்டென்று அதையே கட்டுரையாக மாற்றி அனுப்பிவிட்டேன்.

இதில் விவாதிக்க கூடிய விஷயங்கள் ஏராளமாய் இருக்கிறது. அப்படித்தான் எனக்கு தோன்றுகிறது. இது கட்டுரை அல்ல. அனைவரது வாழ்வின் நிதர்சனம். இதற்கு பாராட்டுக்கள் மட்டும் போதாது. இதிலுள்ள விஷயங்கள் விவாதத்திற்குரியவை. விமர்சனங்களை எதிர் நோக்கி காத்திருக்கிறது இதிலுள்ள எழுத்துக்கள். ஆனால், அது இனி இங்கு வேண்டாம். திண்ணைப்பேச்சில் தொடரலாம் - நல்ல ஒரு ஆரோக்கியமான விவாதமாய்.....




பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 23, 2017 4:22 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:அருமையான கட்டுரை அக்கா
T.N.Balasubramanian wrote:அருமையான கட்டுரை . சூப்பருங்க சூப்பருங்க
இருவருக்கும் நன்றி. ஆனால், இக்கட்டுரை நமது ஈகரை திண்ணை பேச்சிற்காக நான் எழுதியது. திடீரென்று கட்டுரை அனுப்பவேண்டும் என்று தோன்றியதில் எதைப்பற்றி எழுதுவது என்பதற்கு தயாராகாத நிலையில், நான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த பதிவு நினைவுக்கு வரவே, சட்டென்று அதையே கட்டுரையாக மாற்றி அனுப்பிவிட்டேன்.

இதில் விவாதிக்க கூடிய விஷயங்கள் ஏராளமாய் இருக்கிறது. அப்படித்தான் எனக்கு தோன்றுகிறது. இது கட்டுரை அல்ல. அனைவரது வாழ்வின் நிதர்சனம். இதற்கு பாராட்டுக்கள் மட்டும் போதாது. இதிலுள்ள விஷயங்கள் விவாதத்திற்குரியவை. விமர்சனங்களை எதிர் நோக்கி காத்திருக்கிறது இதிலுள்ள எழுத்துக்கள். ஆனால், அது இனி இங்கு வேண்டாம். திண்ணைப்பேச்சில் தொடரலாம் - நல்ல ஒரு ஆரோக்கியமான விவாதமாய்.....
மேற்கோள் செய்த பதிவு: 1234405

வீட்டில் ஒன்றும் இல்லாதபோது உறவினரோ /நட்புகளோ வந்துவிட்டால் ,
இருப்பதை வைத்து விருந்து படைக்கும் குணமுள்ள பெண்கள் ஆயிற்றே நீங்கள்.
சொல்லியா தரவேண்டும் உங்களுக்கு!! புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக