ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா?

4 posters

Go down

சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Empty சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா?

Post by krishnaamma Tue Dec 20, 2016 11:29 am

எந்த நல்லது, கெட்டதுகளிலும் கலந்து கொள்ளாதவர்களை பற்றி, 'எல்லாரும் இருந்தும், ஏன் இப்படி, தங்களை, தனிமைப் படுத்திக் கொள்கின்றனர்...' என, நினைப்போம்.

நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ளும் நம்பிக்கையற்று, ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பது பற்றி சிந்தித்து பார்ப்போம்...

தோற்றம், குடும்பம், தொழில் மற்றும் சமூகம் என, ஏதாவது பாதிப்பு தங்களுக்கு நேர்ந்திருந்தால், 'பார்ப்பவர் இது பற்றி கேட்பரே...' என்று தயங்குவது, முதலாவது காரணம்.

'உங்க மகனுக்கு, ஏன் இன்னும் திருமணம் ஆகலை... ஏன் இப்படி மெலிஞ்சு, உருத்தெரியாம போயிட்டீங்க... முகத்துல, ஏன் இவ்வளவு பரு; மருத்துவரை பாக்கலையா... பொண்ணு அவளா திருமணம் செய்துகிட்டான்னு (ஓடிப் போயி) கேள்விப்பட்டோம்; பலர் வீட்லயும் (?) இது நடக்கிறது தான்; இப்பெல்லாம் இது சகஜம்...' என்று உள்குத்து பேச்சுகள், வரத்தான் செய்யும்.

இவற்றை, நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளவே, இத்தகைய கேள்விகளை கேட்டும், பேசியும், நம்மை ஆழம் பார்க்கிறது இச்சமூகம்.

நம் பாதிப்புகள் பற்றி, நாம் அக்கறையாக இருக்கிறோமே தவிர, கவலைப்பட்டு, முகவாய் கட்டைக்கு, முட்டுக் கொடுக்கவில்லை என்பதை, இச்சமூகத்திற்கு சொல்லவாவது, இவர்களை நாம் சந்திக்க வேண்டும்.

இதற்கான களங்களே நல்லதும், கெட்டதும் நடக்கும் இடங்கள்.

'உள்ளுக்குள் எவ்வளவோ கவலைகள் இருந்தாலும், அவற்றை வெளிக்காட்டி கொள்ளாத, மென்று ஜீரணிக்கிற பக்குவம், நமக்கும் சிறிது இருக்கிறது...' என, மற்றவர்களை நம்ப வைக்க வேண்டும்.

இது தவிர, நமக்காக பரிந்து பேச, ஆறுதல் சொல்ல, தைரியம் அளிக்க முன்வருவோரும் உண்டு. இவர்கள் தரும் ஊக்கம், நம்மை, புது மனிதர்களாக ஆக்கும். அடைந்து கிடந்தால், இது நடக்குமா?
அடுத்து, நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ளும் போது, இச்சமூகத்தால், நாம் எப்படி பார்க்கப்படுகிறோம், மதிக்கப்படுகிறோம் என்பது, நமக்கே புரிய வரும்.

வசதி மிகுந்தவருக்கு, தடபுடல்; வசதி குறைந்தவருக்கு சம்பிரதாய வரவேற்பு என்று வழங்கப்படும் போது, 'இதை, எப்படியும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்...' என்கிற எண்ணம் அந்த செல்வந்தருக்கும், 'இவர்கள் எல்லாரும், என்னை இன்னும் மதிக்க வேண்டும்...' என்கிற உணர்வு, சராசரி மனிதருக்கும் வரும். இது, மிக பெரிய உந்து சக்தியாக அமையும்.

இத்தகைய மன எழுச்சியை, வேறு எந்த சந்தர்ப்பத்திலும், நாம் பெற முடியாது. நம் நண்பர்கள், நல விரும்பிகள், நம் குடும்பத்தினர் மற்றும் நம் தொழில் வட்டமும் தர முடியாத மன எழுச்சியை, உத்வேகத்தை, ஒரு நிகழ்வு தருமானால், அதை எப்படி நாம் தவிர்க்கலாம்.

நாம் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கிடைக்கும் அறிமுகங்கள், நமக்கு, பல வகையிலும், என்றாவது ஒரு நாள் உதவக் கூடும். 'இவர், போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல, பி.ஏ.,வா இருக்காரு; இவரு, பிரபல மருத்துவமனையில் அக்கவுன்டன்ட்; இவர், என் கூட படிச்சவரு... தலைமை செயலகத்துல, அதிகாரியா இருக்காரு; இவருக்கு, மலேஷியாவுல நகைக் கடை இருக்கு...' என்று 'மளமள'வென்று அறிமுகமாகும் போது, பின்னால், ஒருநாளில் அது பயன்படும் பாருங்கள்... அதை, எழுத்தால் எழுதி மாளாது.

அழைப்பிற்கு செல்வது என்பது சுப காரியம்; அழையாமலேயே செல்வது, இறுதிச்சடங்கு. 'தகவல் இல்லை, எனக்கு யாரும் சொல்லவில்லை...' என்பதெல்லாம், ஏற்க முடியாத வாதம். துக்க வீட்டினரின் அதிர்ச்சி அலை, அந்த வீட்டையே புரட்டிப் போட்டிருக்கும். யாருக்கு வரும், நம் நினைப்பு!

நல்லவற்றில் பகிர்ந்து கொள்ள கூட தவறலாம்; ஆனால், தவறியவர் வீட்டில், தவறாது கலந்து கொண்டு ஆறுதலும், தேறுதலும் கூறி, முடிந்தால், நான்கு தோள்களும், ஒரு தோளாகி துணையிருந்தால், அது, காலமெல்லாம் நெஞ்சில் சுமந்து, உரியவர்களால் போற்றப்படும்.

மேலும், மன கேள்வியையும், கோணத்தையும் மாற்றுங்கள். 'நான் ஏன் கலந்து கொள்ள வேண்டும்...' என்று, நமக்கு நாமே எதிர் கேள்வி கேட்டு, அதற்கு காரணங்களும், நியாயங்களும் தேடுவதை விட்டு, நாம் கலந்து கொள்வதில் இருக்கக் கூடிய நியாயங்களையும், காரணங்களையும் தேடிப் பழகுவோம்.

இனியும், நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ள, எதிர்மறையான காரணங்களை, தேட வேண்டாம்.

லேனா தமிழ்வாணன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Empty Re: சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா?

Post by சசி Tue Dec 20, 2016 6:04 pm

நல்ல. பகிர்வு அம்மா.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Empty Re: சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா?

Post by Hari Prasath Tue Dec 20, 2016 8:28 pm

அருமை...சூப்பருங்க



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Empty Re: சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா?

Post by ayyasamy ram Wed Dec 21, 2016 6:53 am

சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? 103459460 சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82064
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Empty Re: சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா?

Post by krishnaamma Wed Dec 21, 2016 9:49 am

சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Empty Re: சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum