புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*யார் இராவணன்* ? Poll_c10*யார் இராவணன்* ? Poll_m10*யார் இராவணன்* ? Poll_c10 
16 Posts - 59%
heezulia
*யார் இராவணன்* ? Poll_c10*யார் இராவணன்* ? Poll_m10*யார் இராவணன்* ? Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
*யார் இராவணன்* ? Poll_c10*யார் இராவணன்* ? Poll_m10*யார் இராவணன்* ? Poll_c10 
58 Posts - 62%
heezulia
*யார் இராவணன்* ? Poll_c10*யார் இராவணன்* ? Poll_m10*யார் இராவணன்* ? Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
*யார் இராவணன்* ? Poll_c10*யார் இராவணன்* ? Poll_m10*யார் இராவணன்* ? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
*யார் இராவணன்* ? Poll_c10*யார் இராவணன்* ? Poll_m10*யார் இராவணன்* ? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*யார் இராவணன்* ?


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Wed Oct 12, 2016 12:10 pm

யார் இராவணன் ?

காமம்
கோபம்
ஆசை
பற்று
அகங்காரம்
அலட்சியம்
சோம்பேரித்தனம்
அவசரம்
சுயநலம்
பொறாமை

இந்த அவகுணங்களை ஒற்றை வார்த்தையில் இராவணன் என்று குறிப்பிடப்படுகிறது

*இராவணன் என்று பிறந்தான்* ?
துவாபர யுகத்தின் ஆரம்ப நிலையில் பிறந்தான்

*இராவணனின் ஆயுள்* ?
துவாபர யுகம் 1250 வருடங்கள்
கலியுகம் 1250 வருடங்கள்
மொத்தம் 2500 வருடங்கள்

*இராவணன் ஆட்சி* ?
முழு உலகத்தின் மீதும் அவனுடைய ஆட்சி நடக்கிறது.

*இராவணனின் அழிவு* ?
ஆன்மா என்னும் சீதைகள் பூமியில் அவகுணங்களால் சிறைபிடிக்கப்பட்டு துன்புறும் போது பரமாத்மா என்னும் ராம் தெய்வீக குணங்களை கொண்டு விடுவிக்கிறார்.  தீயகுணங்களை அழிக்கிறார்.

*இராவணன், ராம் அடையாளம் என்ன* ?
தீய குணங்களுக்கு உருவம் கிடையாது. இராவணனை பார்க்க இயலாது. ஒளிப்புள்ளியாக உள்ள பரமாத்மா ராமை பார்க்க இயலாது. இருவரின் அடையாளமும் உணரத்தான் முடியும்.

*எப்படி உணர்வது* ?
நான் யார் ? என்ற கேள்வியை யாரால் கேட்கமுடியுமோ அவர்களால் *உணரவும் முடியும். முயற்சி தேவை*.



இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 12, 2016 4:13 pm

ஒருவரை தாழ்த்த , உலகில் உள்ள எல்லா கெட்ட குணங்களையும் எழுதி ,அந்த கலவைதான் அவர் என்பது போல் இருக்கிறது உங்கள் பதிவு .
ராவணன் சிவனின் பக்தன் சாமவேதம் நன்கு கற்று உணர்ந்தவன் . வீணை வாசிப்பதில் வல்லுநன் .
சிறந்த பாடகன் .

*இராவணன், ராம் அடையாளம் என்ன* ?
தீய குணங்களுக்கு உருவம் கிடையாது. இராவணனை பார்க்க இயலாது. ஒளிப்புள்ளியாக உள்ள பரமாத்மா ராமை பார்க்க இயலாது. இருவரின் அடையாளமும் உணரத்தான் முடியும்.

*எப்படி உணர்வது* ?
நான் யார் ? என்ற கேள்வியை யாரால் கேட்கமுடியுமோ அவர்களால் *உணரவும் முடியும். முயற்சி தேவை*.

தீய குணங்களுக்கு ராவணன். நற்குணங்களை ராமன் . இருவரையும் பார்க்கமுடியாது . உணரத்தான் முடியும் . ரொம்பவே சரி .
உணறுவதற்கு முன்னாலேயே ஒருவரை பற்றிய biased opinion வைத்துக் கொண்டால் எப்பிடி உணரமுடியும் ?
நானும் ஒரு ஹிந்துமதம் பேணும் ஆத்திகன் தான் .
அதற்காக கிருத்துவ இயேசுவையே , இஸ்லாமிய அல்லாஹ்வையே குறை காண்பதோ குற்றம் கண்டுபிடிப்பதோ செய்து அவர்களை தாழ்த்த மாட்டேன் .

நம்மை நாமே உணரவேண்டுமெனில் , நிஷ்களமான மனதுடன் , அவரவர் பரம்பொருளை உபாசித்தால் போதுமானது .

திரு முத்துபாண்டியன் அவர்களே ,உங்களை குறை காணுவதாக எண்ணவேண்டாம் .
நீங்கள் பதிவிட்ட விஷயங்களில் எனக்கு கருத்து உடன்பாடு இல்லை .

ஒருவரை தாழ்த்திக் கூறி மற்றவன் அடையும்  முன்னேற்றம் ஸ்திரமானது இல்லை  என்பது எந்தன் அபிப்பிராயம் .

தவறாக நினைக்கவேண்டாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 12, 2016 4:17 pm

சீவனே சிவம்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 13, 2016 6:02 pm

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனவன் இராவணன்.

இராவணனிடம் குறை இருக்கலாம் - அதற்காக அவன் கீழானவன் அல்லன்.
நாட்டின் உடைமைகள் யாவும் அந்நாட்டின் மன்னனுக்குச் சொந்தம் -
இராவணன் அன்னை சீதாவை தனது நாட்டின் எல்லைதாண்டிச் சென்று கொண்டு வரவில்லை- அவன் அசுரன் - அவனது செயல் அவனது இடத்தில் இருந்து பார்த்தால்  தவறு இல்லை என்பது தெரியும்.

ஆனால் இராம இராஜ்ஜியம் அளித்த நம் ஸ்ரீராமரிடமும் குறைகள் இருக்கவே செய்கின்றன.

முக்காலத்திலும்  வாதிக்கப்படும் வாலிவதம், அன்னையை அரச நீதி என்னும் பெயரால் அக்னியில் இடவைத்தது, அனைத்திற்கும் மேலாக மகாக் கொடுமை நிறைமாத கர்ப்பிணியான அன்னையைக்(கண்கள் கலங்குகின்றன- உடல் வியர்க்கின்றது - வாயோ ஓ வென்று கதறுகிறது அடியனுக்கு இப்போது) கானகத்தில் தனித்து விட்டது - இவையெல்லாம் கௌசல்யா சுபுத்திரனுக்குப் பெருமை சேர்ப்பனவா அன்பரே.

பிராட்டி செய்த பிழைதான் என்ன ! அவதார நோக்கம் நிறைவேற தன்னையே தியாகம் செய்துகொண்ட அமிர்தேஸ்வரியை நிந்தனைக்குள்ளாக்கியதை நியாயப்படுத்த முடியுமா !  

அடியன் இராமபக்தன் - அதற்காக அவனது பிழைகளையும் மாபாதகச் செயல்களையும் சொல்லி இராமர்   கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் நியாயம் கேட்கிறேன்.

கல்மனம் கொண்ட நம் ராமன்தான் கல்லாகி விட்டானே  அன்னை விவகாரத்திலேயே - எல்லாம் என் விதி - கோவில் தூணில் அப்பப்போது முட்டிக்கொண்டதுதான் மிச்சம்.

இது அடியனின் வேதனைக் குரல் - விவாதப் பொருள் அல்ல.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 14, 2016 1:59 pm

பிறன்மனை நயத்தல் என்ற பெரும்பிழையை இராவணன் செய்தான் .

பிறன்மனை நோக்குதலே தவறு ; அப்படி இருக்கும்போது பிறன்மனையைத் தூக்குவது எவ்வளவு பெரிய தவறு ! அந்தத் தவறை இராவணன் செய்தான் .அதனால்தான் அவன் இன்றளவும் வெறுக்கப்படுகின்றான் .

ஆனால் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் அடுத்தவன் மனைவியை விரும்புவது ; கடத்திக்கொண்டு போவது எல்லாம் சர்வ சாதாரண நிகழ்வுகளாக மாறிவிட்டது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Oct 21, 2016 9:37 am

M.Jagadeesan wrote:பிறன்மனை நயத்தல் என்ற பெரும்பிழையை இராவணன் செய்தான் .

பிறன்மனை நோக்குதலே தவறு ; அப்படி இருக்கும்போது பிறன்மனையைத் தூக்குவது எவ்வளவு பெரிய தவறு ! அந்தத் தவறை இராவணன் செய்தான் .அதனால்தான் அவன் இன்றளவும் வெறுக்கப்படுகின்றான் .

ஆனால் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் அடுத்தவன் மனைவியை விரும்புவது ; கடத்திக்கொண்டு போவது எல்லாம் சர்வ சாதாரண நிகழ்வுகளாக மாறிவிட்டது .
மேற்கோள் செய்த பதிவு: 1224352

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வதும் அதில் அடக்கம்.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 21, 2016 4:17 pm

இராவணன் சிறந்த சிவ பக்தன் . அசுரன் . சாகா வரம் பெற வேண்டி ,சிவனை துதிக்கிறான் .
சிவனும் அவன் முன்தோன்றி என்ன வரம் வேண்டுமென கேட்க , சாகாவரம் கேட்கிறான் .
பிறந்தவர் யாவரும் சாகத்தான் வேண்டும்.அதுதான் உலக நியதி எனக் கூற , சாமர்த்தியமாக கேட்பதாக எண்ணி , என் மகளையே ,நான் மனைவியாக அடையவேண்டும். அதனால் எனக்கு மரணம் சம்பவிக்கட்டும் என்கிறான். நடக்க முடியாதது, ஆகவே மரணம் சம்பவிக்காது என அவன் எண்ணம் .
அப்பிடியே ஆகட்டும் என சிவன் வரம் தர ,  நாடு திரும்புகிறான் .
பிறிதொரு காலத்தே அவன் மனைவி கருவுற , ஜோதிட வல்லுநர்கள், பிறக்கப்போகும் குழந்தையால் இவனுக்கு மரணம் சம்பவிக்கும் எனக் கூற , இவனும் மண்டோதரியிடம், குழந்தையை பிறந்தவுடன்  கொன்று விடு என கூறுகிறான் . தாய் வீடு பிரசவத்திற்கு வந்த மண்டோதரி , பிறந்த குழந்தையை
உயிருடன் மண்ணில் புதைத்து விடுகிறாள் .
அதே சமயம் குழந்தை வரம் கேட்கும் ஜனகருக்கு அசரீரி மூலம் , குறிப்பிட்ட இடத்தில நிலத்தை உழுதால் குழந்தை கிடைக்கும் என தகவல் . அப்பிடி கிடைத்த பெண்தான் ஜானகி என்கின்ற சீதா .

இராவணன் பிறன்மனை நாடியது விதிவசத்தால்தான் . அவன் கையே அவன் கண்ணை சுட்டது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 21, 2016 9:32 pm

வாழ்வே விதிவசம் தானே ஐயா !

விதிவழி அல்லது வேறிலை வாழ்வு.

விதியை மதியால் வெலலாம் என்பார்-

மதியே விதியின் வழியே செல்லும்

கதிதனை அறியார் கலங்கித் திரிவார்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக