புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_c10ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_m10ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_c10ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_m10ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_c10ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_m10ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_c10ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_m10ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_c10ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_m10ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_c10ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_m10ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Apr 22, 2016 10:59 pm

ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா?

SRM பல்கலைக்கழகமும் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து "தமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப்படிப்பை" நடத்தி வருகிறது. இதுவரை 5 வருடங்கள் வெற்றிகரமாக இந்தப்படிப்பு நடந்து வருகிறது. ஆறாவது ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது. விருப்பம் இருப்பவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து பயன் அடையலாம். இதுவரை 500 மாணவர்கள் இந்தப்பயிற்சி எடுத்துள்ளனர்.

வகுப்புகள் மாதம் இரண்டு சனி ஞாயிறு மட்டுமே நடைபெறும்.

ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? GkARM5bwQHSl7t2mlAhB+srm-univ-logo_0

ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? BUXY9ieyTWGZ3vJ3ejqk+dheiva_logo

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Apr 23, 2016 4:16 pm

வகுப்பு 2 செமஸ்டர்களாக நடைபெறுகிறது.

ஆறு மாதத்திற்கு ஒரு செமஸ்டர்

நடைபெறும் இடம் : வடபழனி SRM University

ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? GUZGTOrYSHuVu6I31daO+3961721665_3bec821297_b

ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர் Dr.மு.பெ.சத்தியவேல் முருகனார்

ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? 8lbFgcoESeCmuzOj6nf0+DSC_0547

வகுப்பில் சேர >qpsamy@gmail.com<மின்னஞ்சல் அனுப்பவும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 24, 2016 4:53 pm

ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? 3838410834 ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? 103459460 விருப்பமுள்ளவர் சேர்ந்து பயன்பெறலாம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 02, 2016 12:02 am

பாடத்திட்டங்கள்:-

முதல் செமஸ்டர்
1) தமிழக சமய வரலாறு
2) தமிழ் ஆகமமும் கோயிற்கலையும்
3) தமிழ் மந்திரங்களும் மறை ஒழுகலாறும் ( சைவ அனுட்டானம்)
4) சிவதீக்கையும் வகைகளும்

இரண்டாவது செமஸ்டர்
1) சைவ சித்தாந்தம் - ஓர் அறிமுகம்
2) கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்)
3) வாழ்வியல் சடங்குகள்
4) கோயில் நாட்பூசை முறைமைகள்

> இதுதவிர மாணவர்களுக்கு சிவதீக்கையும் தரப்படும்.
> சடங்குகள் செய்ய செய்முறைப் பயிற்சியும் வழங்கப்படும்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 02, 2016 12:10 am

தமிழ் அருட்சுனைஞர்(அர்ச்சகர்) – Diploma in Tamil Arutsunaignar (ஓர் ஆண்டு (இரண்டு பருவம்)
பட்டயப்படிப்பு) – ஒரு செய்தி தொகுப்பினைக்காண : http://dheivathamizh.org/video/

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 02, 2016 12:13 am

தமிழ் வழிபாட்டிற்காக தெய்வத் தமிழ் அறக்கட்டளை செய்து வரும் பணிகள் யாது?

பதில்: கருவறையிலிருந்து கல்லறை வரை, பிறப்பிலிருந்து இறப்பு வரை, தொடக்கம் முதல் அடக்கம் வரை நம் வாழ்வில் பதினாறு இல்ல சடங்குகள் உள்ளன. அதுமட்டுமல்லாது திருக்கோவில் நாட்பூசை, திருக்கோவில் குடமுழுக்கு போன்ற வழிபாட்டு முறைகளை SRM பல்கலைக் கழகம், தமிழ்ப்பேராயம் மூலம் தமிழ் அர்ச்சகர்களை இந்தத் தெய்வத் தமிழ் அறக்கட்டளை உருவாக்கியுள்ளது.

இதற்கான பாடநூல்களையும், பயிற்சி செய்வதற்கான ஆசிரியர் குழுவையும் எங்களது ஆசான் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதுவரை ஐந்து குழாம் அதாவது ஐந்து ஆண்டுகள் இந்த வகுப்பு நடைபெற்று, ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக அர்ச்சகர்கள் ஒரு பட்டயப்படிப்பினை நிறைவு செய்து அவரவர் இல்ல சடங்குகளையும், கோவில் வழிபாட்டுகளையும், குடமுழுக்குகளையும் செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாது இந்தக் குறைந்த கட்டணத்தில், SRM பல்கலைக் கழகம் வடபழனி வளாகத்தில் மாதம் இரு சனி, ஞாயிறுகளில் மட்டுமே இந்த வகுப்பு நடைபெறுகிறது. ஒரு பகுதிநேரப் படிப்பாகவும், ஒரு பட்டயப்படிப்பாகவும், இந்த வழிபாட்டு முறையை பாடத்திட்டமாக SRM தமிழ்ப்பேராயம் எங்கள் தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் ஆசிரியர் உருவாக்கிய பாடத்திட்டத்தினை, ஏற்றி போற்றி இன்றைக்கு ஐந்தி ஆண்டுகள் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் அர்ச்சகர்களை உருவாக்கி, ஆறாம் ஆண்டில் படியெடுத்து வைத்திருக்கிறது.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 02, 2016 12:15 am

கேள்வி: கருவறையில் கன்னித்தமிழ் செல்லவேண்டும் என்றால் தமிழர் செய்யவேண்டியது என்ன?

பதில்: இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொரு கோவில்களிலும் பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கிறது மாதந்தோறும். எடுத்துக்காட்டாக பிரதோஷம் என்ற வழிபாட்டைப் பார்த்தீர்கள் என்றால் எல்லா சிவன் கோவில்களிலும் நிறைந்த கூட்டம் இருக்கிறது. ஆனால் பிரதோஷம் என்பதுகூட திரிந்த தமிழ், தூய தமிழில் பார்த்தீர்கள் என்றால் கழுவாய் வழிபாடு என்று பெயர். இந்த கழுவாய் வழிபாட்டை எப்படி செய்யவேண்டும், எதற்காக இந்த நாளில் என்ன செய்யவேண்டும் என்பது இன்றைய தமிழனுக்குத் தெரியாது. ஆனால் இதற்கான நூல்கள், குறுந்தகடுகளை தெய்வத்தமிழ் அறக்கட்டளை உருவாக்கியிருக்கிறது. வழிபாட்டு முறையின் பகுத்தறிவு என்பது தெளிந்து வழிபட வேண்டும், அறிவோடு அர்ச்சிக்க வேண்டும், புரியாத மொழியில் ஒரு அர்ச்சனையோ ஒரு சடங்கோ இருந்தால் நாம் இறைவனிடம் ஒன்றி இருக்க முடியாது. இறைவனிடம் மனதளவில் ஒன்றி இல்லை என்றால் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. எனவே ஒவ்வொரு தமிழனும் தன் வாழ்க்கைச் சடங்குகளை தமிழிலே கொண்டு வருவதற்கான ஒரு உறுதியை பூண்டான் என்றால் கருவறையில் தமிழும் வரும், இல்லங்களில் வழிபாடுகள் மட்டுமல்லாமல் சடங்குகளிலும் தமிழ் வரும்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 02, 2016 12:16 am

கேள்வி: இல்லச்சடங்குகளில் தமிழ் வழிபாடு பற்றி கூறுங்கள்?

பதில்: ஏற்கனவே சொன்ன மாதிரி பதினாறு சடங்குகள் இருக்கிறது. பதினாறு சடங்குகள் வரும்பொழுதே நாம் ஒரு புரோகிதரைக் கூப்பிடுகிறோம். அந்த புரோகிதர் வருகிறார், அவர் என்ன மந்திரம் சொல்கிறார்?, ஏது சொல்கிறார்?, அதனுடைய உள் அர்த்தம் என்ன? என்பது நம் யாருக்கும் தெரிவது கிடையாது. ஆனால் அந்த முறை உண்மையிலேயே தமிழருடைய முறையா என்பதும் நமக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் நம் ஆதித் தமிழர்கள் சங்க இலக்கியங்களிலும், சமய இலக்கியங்களிலும் என்ன விட்டு சென்றிருக்கிறார்கள் என்பதை யாரும் தேடவில்லை. அந்த மாதிரி தேடலை நீங்கள் தொடங்கினீர்கள் என்றால் இந்த மாதிரி நூல்கள் நிச்சயம் விடை கொடுக்கும். இந்த நூல்கள் மூலமாகத்தான் இந்த அர்ச்சகர்களை உருவாக்கியிருக்கிறார்கள். எனவே உங்கள் இல்லச் சடங்குககளை, அதாவது ஆண்டுத் திதியாக இருக்கலாம், புதுமனை புகுவிழாவாக இருக்கலாம், திருமணமாக இருக்கலாம், ஏன் இன்று பிரபலமாகப் பேசப்படுகிற சூரியா-ஜோதிகா இல்ல திருமணமே தேவார திருமறை ஓதித்தான் நடத்தப்பட்டு இருக்கிறது. எங்கள் ஆசிரியர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள்தான் இதை நடத்திவைத்தார்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 02, 2016 12:17 am

கேள்வி: தமிழ் நாட்டில் தமிழ் இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே, புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில் இதே நிலைதானா?

பதில்: பொதுவாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் வெளிநாடு செல்லும் பொழுது பல பண்பாடு, கலாச்சாரங்களை எடுத்துச் செல்கிறார்கள். இல்லை என்று மறுக்கமுடியாது. அதே சமயத்தில் தமிழ் வழிபாடு என்பது பெருமளவில் வெளிநாடுகளில் இருக்கிறதா என்றால் குறைந்தே இருக்கிறது. ஆனால் இன்றைக்கு தமிழர்கள் இறைவனை தமிழிலே வழிபடவேண்டும் என்பதை முதன்மைக் குறிக்கோளாக சுவிஸ்நாட்டில் இருக்கிற ஒரு செய்வினைக்கூடம் என்ற தன்னார்வ அறக்கட்டளை, தமிழர்கள் இறைவனை தமிழிலே வழிபடவேண்டும், இல்ல சடங்குகளும் தமிழிலே செய்யவேண்டும் என்று ஒரு உலக பிரகடனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மாநாடு நடத்தி இருபத்துஏழு நாடுகளிலிருந்தும் மக்கள் வந்து அந்த மாநாட்டு தீர்மானத்திற்கு முன்மொழிந்தார்கள். இன்றைக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே இந்த தமிழ் வழிபாட்டுக்கான ஒரு புரிதலும், தெளிதலும் இன்று வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் அவரவர் கோவில்களில் தமிழ்தான் வழிபடவேண்டும், அவர்களுடைய சடங்குகளும் தமிழில்தான் இருக்கவேண்டும் என்கிற ஒரு வேகம் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டு தமிழர்களிடம் இன்னும் அது விதைக்கப்பட வேண்டும், அவர்களுக்கு இதற்கான புரிதலையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 02, 2016 12:19 am

கேள்வி: தமிழ்வழிபாட்டிற்கு தடை எது, அர்ச்சர்களா?, அரசா?, நீதிமன்றமா?

பதில்: இது எதுவுமே கிடையாது. தமிழர்களின் மனப்போக்குதான். ஏனென்றால் ஒரு கோவிலுக்குச் செல்கிறோம் பூ, பழம், தேங்காய் இவையனைத்தும் வாங்கி செல்கிறோம். அர்ச்சனைக்கான பணத்தை செலுத்தி அர்ச்சனை செய்வதற்கு சொல்கிறோம். எல்லா கோவில்களிலும் அரசே எழுதி வைத்திருக்கிறார்கள் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று. அப்பொழுது யாரும் அந்த குருக்களிடம் கேட்பதில்லை தமிழில் செய்யுங்கள் என்று. குருக்களை கேட்டீர்கள் என்றால் இங்கு யாரும் கேட்கவில்லை அதனால் நாங்கள் சமசுகிருதத்தில் பண்ணுகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர் பண்ணாவிட்டாலும் நீங்கள் கவலைப்படவேண்டாம். உங்களது கையில் தேங்காய், வாழப்பழத் தட்டு எப்படி இருக்கிறதோ அதேமாதிரி திருப்புகழும், தேவாரமும், திருவாசகமும் அடங்கிய சிறிய நூலை கையில் எடுத்துக்கொண்டு நீங்களாகவே அங்கு பாடினீர்கள் என்றால் அந்தத் தமிழ் வழிபாடு என்பது அங்கே நிற்கிற மக்களிடையே பரவ ஆரம்பிக்கும். இதைத்தான் நாங்களும் செய்துகொண்டிருக்கிறோம், எங்களது அடியார் கூட்டங்களும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். சிவன் கோவிலுக்குச் செல்கிறீர்களா தென்னாடுடைய சிவனே போற்றி என்று சொல்லுங்கள், முருகன் கோவிலுக்குச் செல்கிறீர்களா அரோகரா என்று சொல்லுங்கள், ஐயப்பன் கோவிலில் சரணம் ஐயப்பா என்று சொல்கிறார்கள் இல்லையா, அந்த முழக்கங்கள் எல்லாம் குறைந்து விட்டன. அந்த முழுக்கங்கள் இல்லாததால்தான் மக்களிடையே இந்த வழிபாட்டு முறை தெரியாமல் போய்விட்டது.

எனவே இந்த முழக்கங்கள் மூலமாகத்தான் இன்றைக்கு தமிழ்வழிபாட்டினைக் கொண்டுவரவேண்டுமே தவிர, இங்கு அரசு ஆணை போடலாம், இன்றைய தேதியில் நீதிமன்றத்தில் எந்தத் தடையும் கிடையாது. ஏன் தமிழ்நாட்டில் இருக்கிற சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு மூத்த நீதிபதி மதுரையில் சென்ற மாதம் பிப்ரவரி 28ந்தேதி இல்ல சடங்குகளையும், கோவில் வழிபாட்டு முறைகளிலும் தமிழே இருக்கவேண்டும் என்று ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். எனவே நீதிமன்றத்திலும் இதற்கான தடை இல்லை. ஒரு மத வழிபாடு என்பதும், ஒரு வாழ்வியல் சடங்கு என்பதும் ஒரு தனி மனிதனுடைய உரிமை. அங்கே தமிழர்கள் தமிழில் வழிபடுவதற்கு அரசியல் சாசனமும் வழிவகுக்கிறது. அரசும் எந்தத் தடையும் இல்லை, நீதிமன்றத்திலும் எந்தத் தடையும் இல்லை, எனவே அந்தக் கோவிலில் இருக்கிற குருக்களிடம் நாம் யாரும் விண்ணப்பம் வைப்பதில்லை, அப்படி விண்ணப்பத்தை பத்து நபர்கள் கேட்கும் பொழுது அவர்களுக்கும் மனமாற்றம் வரும். இந்த விண்ணப்பம் வைக்காத காரணம், தமிழர்களே அன்றி இதற்கு எந்த விதமான தடையும் இல்லை, தமிழர்கள்தான் இதற்கு தடையாக இருக்கிறார்கள், அதனால் இந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுதான் இந்த தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் நோக்கம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக