புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_c10மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_m10மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_c10 
16 Posts - 59%
heezulia
மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_c10மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_m10மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_c10மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_m10மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_c10 
58 Posts - 62%
heezulia
மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_c10மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_m10மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_c10மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_m10மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_c10மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_m10மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்!


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Mar 15, 2016 4:44 pm

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளும் அதிமுகவிற்கும், திமுக கூட்டணிக்கும் எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்துள்ளன. அதிலும் திமுகவுடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பால் உற்சாகம் குன்றிய கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில், அவர்களை கட்சி தாவி விடாமல் இழுத்து பிடிப்பதற்காகவும் கூட்டணிக்கான முஸ்தீபுகளில் விஜயகாந்த் தீவிரம் காட்டி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், 15 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி உருவாக உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பினை பற்ற வைத்திருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அதிமுகவுடன் தோழமை கொண்டுள்ள 7 கட்சிகளை அழைத்து திடீர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்தப் பேச்சுவார்த்தையில், இந்திய குடியரசு கட்சியின் செ.கு.தமிழரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, அகில இந்திய பார்வார்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் கதிரவன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், புதிய கட்சியான சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் தனித்தனியே பங்கேற்றனர். அவர்களிடம்,போட்டியிட விரும்பும் தொகுதிகள்,தேர்தல் பிரசார வியூகங்கள் ஆகியவை குறித்து ஜெயலலிதா விரிவாகப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு மேற்கண்ட 7 கட்சிகளின் தலைவர்கள் அளித்த பேட்டியிலும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். அதே போல திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு நேற்று முன்தினம்(ஞாயிறு) 19 அமைப்புகளும், நேற்று(திங்கள்) 27 அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன.பெரிய கட்சிகள் எதுவும் வராத நிலையில், சிறுசிறு அமைப்புகள்,சமுதாய இயக்கங்கள் பக்கம் திமுக கவனத்தைத் திருப்பியுள்ளது.

இந்நிலையில் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக பாஜக தலைமையில் கூட்டணி அமைத்தே தீருவோம் என்று அக்கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே தென்படுகிறது. இதே நிலைதான் பாமகவிற்கும் நீடிக்கிறது. எங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகள், பாமக கூட்டணியில் இணையலாம் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும், பாமக மட்டுமே அரசியல் களத்தில் தனித்து இயங்குகிறது.

பலமுனைப் போட்டியில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நிகழ்வுகள் சென்றுகொண்டிருக்கின்றன. இதில், தேமுதிக விஜயகாந்த் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால், அது நிச்சயம் அதிமுக-திமுக வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்று கூறப்படுவதால் அனைத்துத் தரப்பினரின் கவனமும் தேமுதிக பக்கம் திரும்பியுள்ளது.

தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்ட போதிலும் கூட்டணி வைக்கவும் தேமுதிக கதவுகள் திறந்தே உள்ளன. அதனால், 3 கட்ட பிரசாரத்தை முடித்துவிட்டு தற்போது 4ம் கட்ட பிரசாரத்தையும் தொடங்கியுள்ள மக்கள் நலக் கூட்டணி தேமுதிகவுடன் இணைய விரும்புகிறது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் சி.மகேந்திரன், " திமுக, அதிமுகவுக்கு எதிரான கொள்கையுடைய விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக வந்தாலும் சரி அல்லது விஜயகாந்துடன் மக்கள் நலக் கூட்டணி சென்றாலும் சரி எந்தவித கௌரவ பிரச்னையோ, தயக்கமோ கிடையாது" என்று கூறியிருக்கிறார்.

விஜயகாந்த் தரப்பில் கூட்டணி அமைப்பது குறித்தும்,வெற்றி வாய்ப்புக் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுவருகிறது. மேலும், தனித்துப் போட்டி என்பதை தவறாக சில மாவட்டச் செயலாளர்கள் புரிந்துகொண்டார்கள் என்பதை உணர்ந்து தேமுதிக தலைமை அவர்களிடம் உண்மையை விளக்கி, சரி கட்டி வருகிறது. தனித்துப்போட்டி என்ற விஜயகாந்தின் அறிவிப்பை தொடர்ந்து, ஒரு சில மாவட்டங்களில் தேமுதிகவை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் சிலர் கட்சியிலிருந்து விலகி, திமுக மற்றும் அதிமுக பக்கம் தாவி வருகின்றனர். தேர்தல் நெருக்கத்தில் இது இன்னும் தீவிரமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடைசி நேரம் வரை கூட்டணிக்கு வந்துவிடுவார் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த திமுகதான், விஜயகாந்த் மீது செம கடுப்பில் இருக்கிறது.

இதனால் தேமுதிக மீதான இமேஜை காலி செய்வதற்காக, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலருடன் திமுக மாவட்டச் செயலாளர்கள் பலர் தொடர்ந்து பேசி வரும் தகவல்கள் விஜயகாந்துக்கும் எட்டியுள்ளது. மேலும் திமுகவுடன் கூட்டணி அமையும் என்ற எதிர்பார்ப்பில் தேர்தல் சீட் கேட்டு பணம் கட்டிய பலர், அவ்வாறு அமையாமல் போனதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு படையெடுத்த அவர்கள், தாங்கள் கட்டிய பணத்தை திருப்பித்தருமாறு கேட்டு வருவதால் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனால்தான் அவர்களை சமாதானப்படுத்தும் நோக்குடனும், கட்சித் தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடனும் தேமுதிகவும் கூட்டணி அமைக்க உள்ளது என்பதை உணர்த்தும் விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே மக்கள் நலக்கூட்டணி உடன் கைகோர்க்க எவ்வித தயக்கமும் இல்லை என்பதால்தான் விஜயகாந்த் எந்த இடத்திலும், மக்கள் நலக் கூட்டணியை விமர்சிக்கவில்லை. அவரின் விமர்சனத்திற்கு இலக்காக இருப்பது அதிமுக மற்றும் அதிமுக. அதனால் மக்கள் நலக்கூட்டணி பக்கம் தேமுதிக கவனத்தைத் திருப்பி, தம்மோடு இணைத்துக்கொள்ள விழையும் என்றே கூறப்படுகிறது.



அத்தோடு,ஐ.ஜே.கே.,த.மா.கா.,புதிய தமிழகம்,புரட்சி பாரதம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு அமையும் பட்சத்தில் விஜயகாந்த் தலைமையில் மெகா கூட்டணி உறுதிப்படும் என்று தெரிகிறது.

நன்றி விகடன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக