புதிய பதிவுகள்
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
காப்பு
* திருச்சானூர் தேவியின்
திருவருள் வேண்டும்,
திருமாலைப்பாடி
திருவடி வணங்க
திருச்சானூர் தேவியின்
திருவருள் வேண்டும்!
-
* ஒருக்காலும் மறவாத
உளமிருக்க, நினைக்க
திருக்கோலம் நெஞ்சில்
நிலைத்திருக்க என்றும்,
திருச்சானூர் தேவியின்
திருவருள் வேண்டும்!
-
* மறுக்காமல் அருள்வாய்
மகா லக்ஷ்மி!
மணக்கும் பாக்களில்
பொருளாய் நீயிருந்து
மறுக்காமல் அருள்வாய்
மகா லக்ஷ்மி!
-
* தாமரைப் பூக்கொண்டு
உனைத் துதித்தேன்,
சந்நதி வணங்கி
மனம் பதித்தேன்!
மறுக்காமல் அருள்வாய்
மகா லக்ஷ்மி!
திருச்சானூர் தேவியின்
திருவருள் வேண்டும்!
-
சுப்ரபாதம்
-------------
-
மார்கழி மாதம் வைகறை நேரம்
மாதவா கேசவா மைவிழி திறவாய்!
மங்கல இசையுடன் தமிழ்ப்பண் ஒலிக்க
கண்ணா கார்மேக வண்ணா எழுவாய்!
பார்புகழ் வேங்கட பதியின் நாயகா
ஆர்கலி தீர்க்க அறிதுயில் கொண்டவா,
பார்வைச் செங்கண் பரிதி ஒளிவிட
பார்கவி பாடினேன், பைய இமை
திறவாய்!
குவிமலரும் விரிந்ததுகாண் கோயில்
மணி ஒலித்ததுகாண்
நவில்தேவர் சூழ்ந்திருக்க நாற்றிசையும்
கைகூப்ப
கவியமுதம் சுவைத்து கண்ணமுதம்
தந்தருள
புவிஏழும் புரப்பவனே போதுஇது
விழி திறவாய்!
-
-------------
-
மார்கழி மாதம் வைகறை நேரம்
மாதவா கேசவா மைவிழி திறவாய்!
மங்கல இசையுடன் தமிழ்ப்பண் ஒலிக்க
கண்ணா கார்மேக வண்ணா எழுவாய்!
பார்புகழ் வேங்கட பதியின் நாயகா
ஆர்கலி தீர்க்க அறிதுயில் கொண்டவா,
பார்வைச் செங்கண் பரிதி ஒளிவிட
பார்கவி பாடினேன், பைய இமை
திறவாய்!
குவிமலரும் விரிந்ததுகாண் கோயில்
மணி ஒலித்ததுகாண்
நவில்தேவர் சூழ்ந்திருக்க நாற்றிசையும்
கைகூப்ப
கவியமுதம் சுவைத்து கண்ணமுதம்
தந்தருள
புவிஏழும் புரப்பவனே போதுஇது
விழி திறவாய்!
-
பாத யாத்திரை
* ஆயிரம் கோடி
விழிகளில் தரிசனம்!
ஆங்கே கோவிந்த
நாம சங்கீர்த்தனம்!
* பாயிரம் பாடியே
பயணம் தொடங்கினேன்
பதி திருப்பதி - மலைப்
படிகளில் ஏறினேன்!
* கோயிலாம் திருமலை
கோபுரம் எதிரே
கோதையின் மாலை
சூடினோன் உள்ளே!
* வேய்ங்குழல் வேந்தனை
காணத் தவித்தே
வாயி லடைந்தேன்
வாழி வெங்கடேசா!
* இயக்கிய பக்தியால்
எளிதில் பிராகாரம்
எல்லாம் கடந்தவன்
எதிரில் நின்றேன்!
* மயக்க மறுத்தேன்
இமைக்க மறந்தேன்!
மலை மாலையாய்
கண்ணீர் வடித்தேன்!
* வியக்கும் விஸ்வ
ரூப தரிசனம்
விடியும் வேளையில்
கிடைத்தது பாக்கியம்!
* தயங்கும் ஜீவனை
தடுத்தாட் கொள்ளவே
தான் ஏழு மலைமீது
நின்றாய், சத்தியம்!
நின்ற திருக்கோலம்
பாற்கடல் பள்ளியில்
கிடந்தாய்!
பாண்டவர் தூதனாய்
நடந்தாய்!
பார்த்த சாரதியாய்
அமர்ந்தாய்!
பதி திருப்பதிதனில்
நிமிர்ந்தாய்!
நின்ற திருக்கோலம் கண்டேன்,
திருமேனி
என்ற சமுத்திரம் உண்டேன்,
விழியாலே!
வென்றவை தோற்றவை யாவும்
சமர்ப்பித்தேன்!
குன்றம் திருமலை
கோவிந்தன் நாமம்
ஒன்றே நிச்சயம்
ஒன்றே சத்தியம்
நன்றே இதுவென்று
நான் தேர்ந்து கொண்டேன்.
திருச்சூர்ணம்
பூத்த பொழில் காடு
புன்முறுவல்!
யாத்த செந்தழிழ்ப்பா
திருச்சூர்ணம்!
கோர்த்த மணிமார்பில்
கோவிந்தன்
சேர்த்த ஸ்ரீதேவி
நம் தாயார்!
காத்த கைத்தலங்கள்
தமிழ் வேதம்,
காட்டும் திருவடிகள்
அரண் நமக்கே!
* ஆயிரம் கோடி
விழிகளில் தரிசனம்!
ஆங்கே கோவிந்த
நாம சங்கீர்த்தனம்!
* பாயிரம் பாடியே
பயணம் தொடங்கினேன்
பதி திருப்பதி - மலைப்
படிகளில் ஏறினேன்!
* கோயிலாம் திருமலை
கோபுரம் எதிரே
கோதையின் மாலை
சூடினோன் உள்ளே!
* வேய்ங்குழல் வேந்தனை
காணத் தவித்தே
வாயி லடைந்தேன்
வாழி வெங்கடேசா!
* இயக்கிய பக்தியால்
எளிதில் பிராகாரம்
எல்லாம் கடந்தவன்
எதிரில் நின்றேன்!
* மயக்க மறுத்தேன்
இமைக்க மறந்தேன்!
மலை மாலையாய்
கண்ணீர் வடித்தேன்!
* வியக்கும் விஸ்வ
ரூப தரிசனம்
விடியும் வேளையில்
கிடைத்தது பாக்கியம்!
* தயங்கும் ஜீவனை
தடுத்தாட் கொள்ளவே
தான் ஏழு மலைமீது
நின்றாய், சத்தியம்!
நின்ற திருக்கோலம்
பாற்கடல் பள்ளியில்
கிடந்தாய்!
பாண்டவர் தூதனாய்
நடந்தாய்!
பார்த்த சாரதியாய்
அமர்ந்தாய்!
பதி திருப்பதிதனில்
நிமிர்ந்தாய்!
நின்ற திருக்கோலம் கண்டேன்,
திருமேனி
என்ற சமுத்திரம் உண்டேன்,
விழியாலே!
வென்றவை தோற்றவை யாவும்
சமர்ப்பித்தேன்!
குன்றம் திருமலை
கோவிந்தன் நாமம்
ஒன்றே நிச்சயம்
ஒன்றே சத்தியம்
நன்றே இதுவென்று
நான் தேர்ந்து கொண்டேன்.
திருச்சூர்ணம்
பூத்த பொழில் காடு
புன்முறுவல்!
யாத்த செந்தழிழ்ப்பா
திருச்சூர்ணம்!
கோர்த்த மணிமார்பில்
கோவிந்தன்
சேர்த்த ஸ்ரீதேவி
நம் தாயார்!
காத்த கைத்தலங்கள்
தமிழ் வேதம்,
காட்டும் திருவடிகள்
அரண் நமக்கே!
நிஜபாத தரிசனம்
நிஜபாத தரிசனம் கண்டேன்!
நிழலான இகசுகங்கள்
அற்பமென உணர்ந்தேன்
நிஜபாத தரிசனம் கண்டேன்!
புஜங்களில் சங்கொடு
சக்கரம் தாங்கினாய்!
புவிதனை வராக
மூக்கினில் ஏந்தினாய்!
கஜராஜன் கால், முதலை
கவ்விய வேளையில்
கருடனில் பறந்து
சக்கரம் ஏவினாய்!
கண்ணனாய் பிறந்து
கம்சனை வீழ்த்தினாய்!
மன்னனாய் துவாரகை
மகுடம் சூடினாய்!
சபையில் திரௌபதி
தன்மானம் கூட்டினாய்!
சகலரும் வணங்க
ஸ்ரீபாதம் காட்டினாய்!
பார்த்தனைக் காக்க
தேரை ஓட்டினாய்!
பாரோரை வழிநடத்த
கீதையை சாற்றினாய்!
ஊற்றாக கவிதையை
உள்ளத்தில் ஊட்டினாய்,
ஏற்றென் பாமாலை
இளநகை மீட்டினாய்!
நிஜபாத தரிசனம் கண்டேன்!
நிழலான இகசுகங்கள்
அற்பமென உணர்ந்தேன்
நிஜபாத தரிசனம் கண்டேன்!
புஜங்களில் சங்கொடு
சக்கரம் தாங்கினாய்!
புவிதனை வராக
மூக்கினில் ஏந்தினாய்!
கஜராஜன் கால், முதலை
கவ்விய வேளையில்
கருடனில் பறந்து
சக்கரம் ஏவினாய்!
கண்ணனாய் பிறந்து
கம்சனை வீழ்த்தினாய்!
மன்னனாய் துவாரகை
மகுடம் சூடினாய்!
சபையில் திரௌபதி
தன்மானம் கூட்டினாய்!
சகலரும் வணங்க
ஸ்ரீபாதம் காட்டினாய்!
பார்த்தனைக் காக்க
தேரை ஓட்டினாய்!
பாரோரை வழிநடத்த
கீதையை சாற்றினாய்!
ஊற்றாக கவிதையை
உள்ளத்தில் ஊட்டினாய்,
ஏற்றென் பாமாலை
இளநகை மீட்டினாய்!
சங்கீர்த்தனம்
வனமெல்லாம் மரகதம்
வானெல்லாம் நீலம்
மனமெல்லாம் திருவடிகள்
வாக்கெல்லாம் கோவிந்தன்!
-
தினமெல்லாம் அவன்பூஜை
தெருவெல்லாம் சங்கீர்த்தனம்
உணர்வெல்லாம் பக்திவெள்ளம்
உறவெல்லாம் அவன்உறவே!
-
நினைவெல்லாம் திருச்சூர்ணம்
நிகழ்வெல்லாம் அவன்செயலே
கனவெல்லாம் திருமலையே
கவியெல்லாம் அவன்புகழே!
-
புனலெல்லாம் புஷ்கரணி
பூவெல்லாம் தோமாலை
வினையெல்லாம் வீழ்ந்ததுவே
வீடானது வைகுந்தம்!
-
வனமெல்லாம் மரகதம்
வானெல்லாம் நீலம்
மனமெல்லாம் திருவடிகள்
வாக்கெல்லாம் கோவிந்தன்!
-
தினமெல்லாம் அவன்பூஜை
தெருவெல்லாம் சங்கீர்த்தனம்
உணர்வெல்லாம் பக்திவெள்ளம்
உறவெல்லாம் அவன்உறவே!
-
நினைவெல்லாம் திருச்சூர்ணம்
நிகழ்வெல்லாம் அவன்செயலே
கனவெல்லாம் திருமலையே
கவியெல்லாம் அவன்புகழே!
-
புனலெல்லாம் புஷ்கரணி
பூவெல்லாம் தோமாலை
வினையெல்லாம் வீழ்ந்ததுவே
வீடானது வைகுந்தம்!
-
ஆத்ம சமர்ப்பணம்
நாழிகை கடந்து நாளானது
நாளும் நகர்ந்து இரவானது
காலைக் கதிரவன் சுடரானது
காவிரி போல்மனம் கூத்தாடுது!
-
ஆழி மழைக்கண்ணா உனைத் தேடுது
ஆரா அமுதனுன் புகழ் பாடுது
பூவிரி சோலைகள் போதவிழ் மலர்கள்
மாமலை வேங்கடம் மாபெரும் கோபுரம்.
கோயிலின் வாயிலில் கூப்பிய கோலத்தில்
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா வென
கூவிய மனதுடன் கூப்பிய கரத்துடன்
ஆவி அடைக்கல மானது காத்தருள்!
-
தேவியை ஏந்திய மார்பினைக் கண்டேன்
தேடிய பாதம் நான்பற்றிக் கொண்டேன்
பாவியேன் கடைத்தேறு பாதையைக்
காட்டுவாய்!
-
பற்றிய வினைகளைப் பஞ்சென
ஊதுவாய்!
-
நாழிகை கடந்து நாளானது
நாளும் நகர்ந்து இரவானது
காலைக் கதிரவன் சுடரானது
காவிரி போல்மனம் கூத்தாடுது!
-
ஆழி மழைக்கண்ணா உனைத் தேடுது
ஆரா அமுதனுன் புகழ் பாடுது
பூவிரி சோலைகள் போதவிழ் மலர்கள்
மாமலை வேங்கடம் மாபெரும் கோபுரம்.
கோயிலின் வாயிலில் கூப்பிய கோலத்தில்
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா வென
கூவிய மனதுடன் கூப்பிய கரத்துடன்
ஆவி அடைக்கல மானது காத்தருள்!
-
தேவியை ஏந்திய மார்பினைக் கண்டேன்
தேடிய பாதம் நான்பற்றிக் கொண்டேன்
பாவியேன் கடைத்தேறு பாதையைக்
காட்டுவாய்!
-
பற்றிய வினைகளைப் பஞ்சென
ஊதுவாய்!
-
திருக்கல்யாணம்
--
திருச்சானூர் தேவி திருப்பதி மலை
வாசன்
திருக் கல்யாண வைபோகமே!
-
மருக்கொழுந்து வாசம் மாவிலை
தோரணம்
மணிமுத்துப் பந்தல் பூலோகமே!
-
கடைக் கண்ணாலே திருமகள் நோக்க
கள்ளச் சிரிப்பினால் மாலவன் கேட்க
இமைப்பில் அரங்கேறும் நாடகம் காண
எத்தனை பிறவி தவமிருந்தேனோ?
-
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
அடியைப் பற்றி அணிகலன் பூட்டி
ஸ்ரீதேவி சமேதனாய் ஸ்ரீவேங்க டேசன்
வலம்வர கல்யாண வைபோகமே!
-
மேளங்கள் முழங்க மேகங்கள் பூச்சிந்த
தேவர்கள் துதிக்க திசையெல்லாம் களிக்க
மங்கலநாண் தேவி மார்பில் அரங்கேற
ஆனந்தம், ஆனந்தம் ஆனந்தமே!
-
பல்லாண்டு பல்லாண்டு
மலையப்ப ஸ்வாமிக்கு
பல்லாண்டு பல்லாண்டு
மலைநகராம் திருப்பதிக்கு
பல்லாண்டு பல்லாண்டு!
-
திருத்துழாய் வேந்தனுக்கு
பல்லாண்டு பல்லாண்டு
திருமகள் சமேதனுக்கு
பல்லாண்டு பல்லாண்டு!
-
திருவடியாம் கருடனுக்கு
பல்லாண்டு பல்லாண்டு
திண்தோள்சேர் சக்கரம்
சங்கிற்கும் பல்லாண்டு!
-
அயனமர்ந்த உந்திக்கு
பல்லாண்டு பல்லாண்டு
சயனமாம் அனந்தனுக்கும்
பல்லாண்டு பல்லாண்டு!
-
அமுதூறும் பாற்கடலே
பல்லாண்டு பல்லாண்டு
ஆழ்வார்கள் அனைவருக்கும்
பல்லாண்டு பல்லாண்டு!
-
சரணம்!
ஆள்வினை வேண்டும் ஆக்கமும்
வேண்டும்
அன்றாடப் பணிகள் நிறைவுற வேண்டும்
ஊழ்வினை பொடிபட உன்னருள்
வேண்டும்
உண்மையில் உள்ளம் தோய்வுற
வேண்டும்!
வாழ்வில் சுற்றம் வளமுற வேண்டும்
வாக்கு மனமுடல் வழிபட வேண்டும்
தோள்களில் சங்கு சக்கரம் தரித்தோய்
தூய திருவடி சரணம்! சரணம்!
-
==================================
நன்றி- குங்குமம்- ஆன்மீகம்
--
திருச்சானூர் தேவி திருப்பதி மலை
வாசன்
திருக் கல்யாண வைபோகமே!
-
மருக்கொழுந்து வாசம் மாவிலை
தோரணம்
மணிமுத்துப் பந்தல் பூலோகமே!
-
கடைக் கண்ணாலே திருமகள் நோக்க
கள்ளச் சிரிப்பினால் மாலவன் கேட்க
இமைப்பில் அரங்கேறும் நாடகம் காண
எத்தனை பிறவி தவமிருந்தேனோ?
-
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
அடியைப் பற்றி அணிகலன் பூட்டி
ஸ்ரீதேவி சமேதனாய் ஸ்ரீவேங்க டேசன்
வலம்வர கல்யாண வைபோகமே!
-
மேளங்கள் முழங்க மேகங்கள் பூச்சிந்த
தேவர்கள் துதிக்க திசையெல்லாம் களிக்க
மங்கலநாண் தேவி மார்பில் அரங்கேற
ஆனந்தம், ஆனந்தம் ஆனந்தமே!
-
பல்லாண்டு பல்லாண்டு
மலையப்ப ஸ்வாமிக்கு
பல்லாண்டு பல்லாண்டு
மலைநகராம் திருப்பதிக்கு
பல்லாண்டு பல்லாண்டு!
-
திருத்துழாய் வேந்தனுக்கு
பல்லாண்டு பல்லாண்டு
திருமகள் சமேதனுக்கு
பல்லாண்டு பல்லாண்டு!
-
திருவடியாம் கருடனுக்கு
பல்லாண்டு பல்லாண்டு
திண்தோள்சேர் சக்கரம்
சங்கிற்கும் பல்லாண்டு!
-
அயனமர்ந்த உந்திக்கு
பல்லாண்டு பல்லாண்டு
சயனமாம் அனந்தனுக்கும்
பல்லாண்டு பல்லாண்டு!
-
அமுதூறும் பாற்கடலே
பல்லாண்டு பல்லாண்டு
ஆழ்வார்கள் அனைவருக்கும்
பல்லாண்டு பல்லாண்டு!
-
சரணம்!
ஆள்வினை வேண்டும் ஆக்கமும்
வேண்டும்
அன்றாடப் பணிகள் நிறைவுற வேண்டும்
ஊழ்வினை பொடிபட உன்னருள்
வேண்டும்
உண்மையில் உள்ளம் தோய்வுற
வேண்டும்!
வாழ்வில் சுற்றம் வளமுற வேண்டும்
வாக்கு மனமுடல் வழிபட வேண்டும்
தோள்களில் சங்கு சக்கரம் தரித்தோய்
தூய திருவடி சரணம்! சரணம்!
-
==================================
நன்றி- குங்குமம்- ஆன்மீகம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[quote="ayyasamy ram"]
-
* ஒருக்காலும் மறவாத
உளமிருக்க, நினைக்க
திருக்கோலம் நெஞ்சில்
நிலைத்திருக்க என்றும்,
திருச்சானூர் தேவியின்
திருவருள் வேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1181521
-
* ஒருக்காலும் மறவாத
உளமிருக்க, நினைக்க
திருக்கோலம் நெஞ்சில்
நிலைத்திருக்க என்றும்,
திருச்சானூர் தேவியின்
திருவருள் வேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1181521
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181523ayyasamy ram wrote:
* பாயிரம் பாடியே
பயணம் தொடங்கினேன்
பதி திருப்பதி - மலைப்
படிகளில் ஏறினேன்!
*
திருமலைக்கு பாதயத்திரை அனுபவம் மிகவும் அருமையாக இருக்கும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181525ayyasamy ram wrote:
தினமெல்லாம் அவன்பூஜை
தெருவெல்லாம் சங்கீர்த்தனம்
உணர்வெல்லாம் பக்திவெள்ளம்
உறவெல்லாம் அவன்உறவே!
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|