புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்!
நம் தேச தந்தையிடம், நான் வியந்த விஷயங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று, கோட்சே இவரை சுட்டதும், இவர், 'ஹே ராம்... ஹே ராம்...' என்று, உயிர் போகிற அவதியில் கூட, உச்சரித்த வார்த்தைகள்.
ஓர் எறும்பு, சுள்ௌன்று கடித்தால் கூட, 'சே... சனியன்...' என்று, உடனே, அதைப் பிடித்து, நசுக்கி கொன்று, உரு தெரியாமல் ஆக்கி, தரையில் தேய்க்கும் மனித இனத்தின் மத்தியில், உயிர்போகும் வலியிலும், இப்படி ஒருவரால் பிரதிபலிக்க முடியும் என்றால், அவரது பண்பு நலன்களில், குறையே இருக்க முடியாது அல்லவா?
'மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம், மாணிக்க கோயிலடா...' என்று பாடினார், ஒரு திரை கவிஞர்.
'பழிக்குப் பழி' என்று ஒரு பழமொழி உண்டு. தாக்கம் ஒன்றை தனக்கு ஏற்படுத்தினால் பதிலுக்கு, 'சும்மா விட மாட்டேன் உன்னை!' என்று மென்மையாகவும், 'பழிக்குப் பழி; குத்திற்கு குத்து; வெட்டிற்கு வெட்டு' என்று கடுமையாகவும் இதற்கு பொருள் கொள்ளலாம்.
'சாரி... மன்னிக்கவும்' என்று பிறரிடம் கூறினால், முன்பெல்லாம் வந்த பிரதிபலிப்பு வேறு. இப்போது வரும் பதில் வேறு. 'அப்படி சொல்லாதீர்கள்...' என்று முன்பு கூறியவர்கள், இப்போது என்ன சொல்கின்றனர் தெரியுமா? 'சரி, பரவாயில்லை...' என்கின்றனர்.
இதனால், மனித மனங்களின் உள்ளே ஊறி வந்த ஈரம், இப்போது மெல்ல காய்ந்து வருகிறதோ என்று கூட, எண்ணத் தோன்றுகிறது.
திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும், 'உனக்கு கெடுதல் செய்தவனை சும்மா விடாதே...' என்கிற பண்பாட்டையே(?) அதிகம் போதிப்பதாக நான் உணருகிறேன். இதன் காரணமாக, 'மன்னிப்பாவது கின்னிப்பாவது...' என்கிற மனநிலை, மனித மனங்களின் நடுவே விதைக்கப்பட்டு வருகிறதோ என்று ஐயப்பட வேண்டியிருக்கிறது.
ஒரு மேடையில், முதலில் பேசிய ஒருவர், தனக்கு பின்னால் பேச இருந்த ஒரு பேச்சாளரை, தேவையில்லாமல் வம்பிற்கு இழுத்ததோடு, வீண் விமர்சனமும் செய்தார்.
'போச்சு! அடுத்த பேச்சாளர் பேசும்போது, இது பெரிய மேடை சண்டையாக வர போகிறது...' என்று விழா ஏற்பாட்டாளர்கள் பயந்து விட, 'பார்வையாளர்கள் ஒரு சுவையான வாக்கு வாதத்திற்கு நாம் தயாராக வேண்டியது தான்...' என்று காதுகளை தீட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். நடந்ததோ வேறு...
'என் மீது கொண்ட அக்கறையின் காரணமாக, சகோதரர் பல விஷயங்களை பேசினார். அவற்றில் எது உண்மையோ அதை திருத்திக் கொள்கிறேன்...' என்று பேசி, அனைவர் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட பண்பாளராகி விட்டார். இதை, ஒரு நாகரிக மன்னிப்பாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது.
'எத்தகைய தவறையும், மன்னிக்கும் மிக உயர்ந்த நீதிமன்றம், தாயின் உள்ளம் தான்...' என்று எங்கோ படித்தது, நினைவிற்கு வருகிறது. ஆனால், இந்த உயர்ந்த கோவில் கூட, இன்று சிதிலமடைந்து வருவதை செய்தித்தாள்களில் காண்கிறோம்.
தண்டித்து இன்புறுகிறவர்களின் மகிழ்ச்சியை, இறுதியான மகிழ்ச்சி என்று கூறிவிட முடியவில்லை. காரணம், இந்த செயலுக்கு மட்டும் மறு விளைவு உண்டு. 'வெட்டினவனை வெட்டு...' என்று சட்டத்தை, காவல் துறையை நம்பாத கூட்டங்கள் கொக்கரிக்க, இந்த பின்னணியே காரணம். ஆனால், மன்னிப்பு என்பது, கோப்பை கட்டி பரணில் போட்டு விடுகிற, ரியாக் ஷனற்ற ஆக் ஷன்.
பழி வாங்குவதிலும், தண்டிப்பதிலும் சுகம் காணும் மனிதர்கள், 'மன்னிப்பதில் தான், அதிக சுகம் இருக்கிறது...' என்பதை அறியாதவர்கள் என்றே, கூற வேண்டும். ஒரு சில முறை முயன்று பார்க்கட்டும், இவர்கள் சுகம் கண்டு விடுவர்.
நமக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்களை, இரண்டாக பிரித்து கொள்ள வேண்டும். முதலாமவர்கள் வேண்டுமென்றே நம்மை பாதிக்க செய்தவர்கள்; இவர்கள் உள் நோக்கம் உடையவர்கள்.
இரண்டாமவர்கள், எவ்வித உள்நோக்கமும் இல்லாதவர்கள்; வேறு வகையில் கூறினால், வேண்டுமென்றே தவறு செய்யாதவர்கள். இப்பிரிவினர் அவசியம் மன்னிக்கப்பட வேண்டியவர்கள்.
முதலாமவர்களை, மன்னிப்பது கடினம் தான். இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கே நம்பிக்கை இராது, நாம் மன்னிப்போம் என்று! இவர்களுக்கு நாம் இனிய அதிர்ச்சி கொடுக்கலாம். இதுவும் ஒரு வகையில் தண்டனை தான்.
மாறாக, அவர்களும் பாதிப்பு அடைய வேண்டும் என, நாம் நடந்து கொண்டால், அது, பழிவாங்கும் கணக்கிற்கல்லவா மாற்றப்பட்டு விடும்!
லேனா தமிழ்வாணன்
நம் தேச தந்தையிடம், நான் வியந்த விஷயங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று, கோட்சே இவரை சுட்டதும், இவர், 'ஹே ராம்... ஹே ராம்...' என்று, உயிர் போகிற அவதியில் கூட, உச்சரித்த வார்த்தைகள்.
ஓர் எறும்பு, சுள்ௌன்று கடித்தால் கூட, 'சே... சனியன்...' என்று, உடனே, அதைப் பிடித்து, நசுக்கி கொன்று, உரு தெரியாமல் ஆக்கி, தரையில் தேய்க்கும் மனித இனத்தின் மத்தியில், உயிர்போகும் வலியிலும், இப்படி ஒருவரால் பிரதிபலிக்க முடியும் என்றால், அவரது பண்பு நலன்களில், குறையே இருக்க முடியாது அல்லவா?
'மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம், மாணிக்க கோயிலடா...' என்று பாடினார், ஒரு திரை கவிஞர்.
'பழிக்குப் பழி' என்று ஒரு பழமொழி உண்டு. தாக்கம் ஒன்றை தனக்கு ஏற்படுத்தினால் பதிலுக்கு, 'சும்மா விட மாட்டேன் உன்னை!' என்று மென்மையாகவும், 'பழிக்குப் பழி; குத்திற்கு குத்து; வெட்டிற்கு வெட்டு' என்று கடுமையாகவும் இதற்கு பொருள் கொள்ளலாம்.
'சாரி... மன்னிக்கவும்' என்று பிறரிடம் கூறினால், முன்பெல்லாம் வந்த பிரதிபலிப்பு வேறு. இப்போது வரும் பதில் வேறு. 'அப்படி சொல்லாதீர்கள்...' என்று முன்பு கூறியவர்கள், இப்போது என்ன சொல்கின்றனர் தெரியுமா? 'சரி, பரவாயில்லை...' என்கின்றனர்.
இதனால், மனித மனங்களின் உள்ளே ஊறி வந்த ஈரம், இப்போது மெல்ல காய்ந்து வருகிறதோ என்று கூட, எண்ணத் தோன்றுகிறது.
திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும், 'உனக்கு கெடுதல் செய்தவனை சும்மா விடாதே...' என்கிற பண்பாட்டையே(?) அதிகம் போதிப்பதாக நான் உணருகிறேன். இதன் காரணமாக, 'மன்னிப்பாவது கின்னிப்பாவது...' என்கிற மனநிலை, மனித மனங்களின் நடுவே விதைக்கப்பட்டு வருகிறதோ என்று ஐயப்பட வேண்டியிருக்கிறது.
ஒரு மேடையில், முதலில் பேசிய ஒருவர், தனக்கு பின்னால் பேச இருந்த ஒரு பேச்சாளரை, தேவையில்லாமல் வம்பிற்கு இழுத்ததோடு, வீண் விமர்சனமும் செய்தார்.
'போச்சு! அடுத்த பேச்சாளர் பேசும்போது, இது பெரிய மேடை சண்டையாக வர போகிறது...' என்று விழா ஏற்பாட்டாளர்கள் பயந்து விட, 'பார்வையாளர்கள் ஒரு சுவையான வாக்கு வாதத்திற்கு நாம் தயாராக வேண்டியது தான்...' என்று காதுகளை தீட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். நடந்ததோ வேறு...
'என் மீது கொண்ட அக்கறையின் காரணமாக, சகோதரர் பல விஷயங்களை பேசினார். அவற்றில் எது உண்மையோ அதை திருத்திக் கொள்கிறேன்...' என்று பேசி, அனைவர் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட பண்பாளராகி விட்டார். இதை, ஒரு நாகரிக மன்னிப்பாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது.
'எத்தகைய தவறையும், மன்னிக்கும் மிக உயர்ந்த நீதிமன்றம், தாயின் உள்ளம் தான்...' என்று எங்கோ படித்தது, நினைவிற்கு வருகிறது. ஆனால், இந்த உயர்ந்த கோவில் கூட, இன்று சிதிலமடைந்து வருவதை செய்தித்தாள்களில் காண்கிறோம்.
தண்டித்து இன்புறுகிறவர்களின் மகிழ்ச்சியை, இறுதியான மகிழ்ச்சி என்று கூறிவிட முடியவில்லை. காரணம், இந்த செயலுக்கு மட்டும் மறு விளைவு உண்டு. 'வெட்டினவனை வெட்டு...' என்று சட்டத்தை, காவல் துறையை நம்பாத கூட்டங்கள் கொக்கரிக்க, இந்த பின்னணியே காரணம். ஆனால், மன்னிப்பு என்பது, கோப்பை கட்டி பரணில் போட்டு விடுகிற, ரியாக் ஷனற்ற ஆக் ஷன்.
பழி வாங்குவதிலும், தண்டிப்பதிலும் சுகம் காணும் மனிதர்கள், 'மன்னிப்பதில் தான், அதிக சுகம் இருக்கிறது...' என்பதை அறியாதவர்கள் என்றே, கூற வேண்டும். ஒரு சில முறை முயன்று பார்க்கட்டும், இவர்கள் சுகம் கண்டு விடுவர்.
நமக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்களை, இரண்டாக பிரித்து கொள்ள வேண்டும். முதலாமவர்கள் வேண்டுமென்றே நம்மை பாதிக்க செய்தவர்கள்; இவர்கள் உள் நோக்கம் உடையவர்கள்.
இரண்டாமவர்கள், எவ்வித உள்நோக்கமும் இல்லாதவர்கள்; வேறு வகையில் கூறினால், வேண்டுமென்றே தவறு செய்யாதவர்கள். இப்பிரிவினர் அவசியம் மன்னிக்கப்பட வேண்டியவர்கள்.
முதலாமவர்களை, மன்னிப்பது கடினம் தான். இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கே நம்பிக்கை இராது, நாம் மன்னிப்போம் என்று! இவர்களுக்கு நாம் இனிய அதிர்ச்சி கொடுக்கலாம். இதுவும் ஒரு வகையில் தண்டனை தான்.
மாறாக, அவர்களும் பாதிப்பு அடைய வேண்டும் என, நாம் நடந்து கொண்டால், அது, பழிவாங்கும் கணக்கிற்கல்லவா மாற்றப்பட்டு விடும்!
லேனா தமிழ்வாணன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அருமை அம்மா,நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1178253krishnaamma wrote:மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்!
நம் தேச தந்தையிடம், நான் வியந்த விஷயங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று, கோட்சே இவரை சுட்டதும், இவர், 'ஹே ராம்... ஹே ராம்...' என்று, உயிர் போகிற அவதியில் கூட, உச்சரித்த வார்த்தைகள்.
லேனா தமிழ்வாணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமையான பதிவு அம்மா!!
மன்னிப்பின் மகத்துவம் குறைந்து விட்டது!
Sorry என்ற வார்த்தையை எளிதாக பயன்படுத்த துவங்கிவிட்டோம். மன்னிப்பு என்ற வார்த்தையை தமிழில் கேட்க சொல்லுங்கள் பார்க்கலாம், நான் அதற்கு தயாராக இல்லை என்பது தான் பதில்.
மன்னிப்பின் மகத்துவம் குறைந்து விட்டது!
Sorry என்ற வார்த்தையை எளிதாக பயன்படுத்த துவங்கிவிட்டோம். மன்னிப்பு என்ற வார்த்தையை தமிழில் கேட்க சொல்லுங்கள் பார்க்கலாம், நான் அதற்கு தயாராக இல்லை என்பது தான் பதில்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மிக அருமை அம்மா
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|