புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவன் பாதங்கள் படிந்த திருக்கச்சூர் திருக்கோயில்
Page 1 of 1 •
தொண்டை நாட்டில் உள்ள திருத்தலங்களில் திருக்கச்சூர் சிறப்பான இடத்தைப் பெற்று விளங்குகிறது. சென்னை - செங்கற்பட்டுச் சாலையில் சிங்கபெருமாள் கோயிலுக்கு மேற்கே ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் 2 கி.மீ. சென்றால் இத்திருக்கோயிலை அடையலாம்.
சிறப்புகள்: திருக்கச்சூர் திருத்தலம் பலவகையில் சிறப்புப் பெற்ற தலமாக விளங்குகிறது. பாற்கடலை தேவர்களும் - அசுரர்களும் கடையும்பொழுது அமுதம் திரண்டு வருவதற்காகத் திருமால் கச்சப (ஆமை) வடிவில் இருந்து சிவபெருமானை வழிபட்டதாகத் தல வரலாறு கூறுகிறது. இப்புராண வரலாற்றை எடுத்துக்காட்டும் வகையில் இக்கோயில் தியாகராஜர் சன்னிதி முன்னர் உள்ள மண்டபத்தூண் ஒன்றில் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
ஆலயக்கோயில்: இறைவன் எழுந்தருளியுள்ள கோயில்களைப் பற்றி திருநாவுக்கரசர் பெருமான் தமது திருஅடைவுத் திருத்தாண்டகத்தில் குறிப்பிடும்போது கரக்கோயில், ஞாழற்கோயில், கொகுழக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என்ற பல வகையான கோயில்களைக் குறிப்பிடுகிறார். இத்தலம் "ஆலக்கோயில்' எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. சுந்தரர் பெருமான் தமது திருப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "கச்சூர் ஆலக்கோயில் அம்மானே' என்றே போற்றுவதைக் காணலாம். கல்வெட்டுகளிலும் "திருஆலக்கோயில் உடையார் நாயனார்' என்றே குறிப்பிடுகிறது.
வரலாற்றுச்சிறப்பு: இக்கோயிலில் 80க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலுக்கு அளிக்கப்பெற்ற கொடைகள், அமைக்கப்பட்ட நந்தவனங்கள், அளிக்கப்பெற்ற திருமேனிகள் போன்ற பல வரலாற்றுச் செய்திகளைக் கல்வெட்டுகள் அளிக்கின்றன. முதலாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், சம்புவராயர்கள், விருப்பண்ண உடையார், நரசிங்கராயர் போன்ற மன்னர்கள் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் இவ்வூர் "ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக்களத்தூர் கோட்டத்துச் செங்குன்ற நாட்டு நித்தவிநோத நல்லூர் என்னும் திருக்கச்சூர்' என்று குறிப்பிடப்படுகிறது.
உபயவிடங்கர்: தொண்டை நாட்டில் தியாகராஜர் சன்னிதிக்கும் வழிபாட்டிற்கும் சிறப்புப் பெற்ற தலங்களாக - திருவொற்றியூர், திருவான்மியூர், திருக்கச்சூர் திருக்கோயில்கள் விளங்குகின்றன. இந்த மூன்று தலங்களிலும் தேவர்களும் - முனிவர்களும் விடங்கப் பெருமானான - சோமாஸ்கந்த மூர்த்தியான - தியாகராஜரைத் தரிசிக்க வேண்டினார்கள். இறைவன் தரிசனம் அளித்தார். இம்மூன்று தலங்களும் "உபயவிடங்கத்தலங்கள்' என்ற சிறப்புடன் வழிபடப் பெறுகின்றன. திருக்கச்சூரில் தியாகராஜர் "அமுதத்தியாகர்' என்ற சிறப்புப் பெயருடன் விளங்க அவருக்கான வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
விருந்திட்ட ஈசன்: தானத்தில் சிறந்தது அன்னதானம் ஆகும். இறைவனது அடியார்களுக்கு அன்னம் அளிப்பது மிகவும் சிறபபானதாகும். நமது சமய வரலாற்றில் இறையடியார்களுக்கு அன்னம் படைத்துச் சிறப்புப் பெற்றவர்களில் திருமங்கையாழ்வார், இளையான்குடி மாறநாயனார், அமர்நீதி நாயனார், அப்பூதி அடிகள், மூர்க்க நாயனார், கலிகம்ப நாயனார், இடங்கழி நாயனார், வள்ளலார் பெருமான் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தனது அடியார்கள் பசியால் துன்பப்பட்டபொழுது இறைவன் தானே அவர்களுக்காக உணவு பெற்று வழங்கியதும் உண்டு. திருச்சிக்கு அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி கோயிலில் திருநாவுக்கரசருக்காகக் கட்டமுது பெற்று அளித்தார். சுந்தரர் பெருமானுக்குச் சீர்காழிக்கு அருகில் உள்ள திருக்குருகாவூர் திருத்தலத்திலும், திருக்கச்சூர் திருத்தலத்திலும் உணவு பெற்று வழங்கியதைத் திருமுறைகள் எடுத்துக் கூறுகின்றன.
சுந்தரர் பெருமான் திருக்கழுங்குனறம் கோயிலை வழிபட்டுப் பின்னர் திருக்கச்சூர் திருத்தலம் வருகிறார். இறைவனை வணங்கிய பின்னர் இறைவன் கருணை வேண்டிப் பசியால் அங்கே அமர்ந்திருக்க, இறைவன் தனது அடியாருக்காக வீடு தோறும் சென்று உணவு பெற்றுச் சுந்தரரின் பசியைப் போக்கினார். இறைவனது இந்த அருட்செயலைச் சுந்தரர் பெருமான் தமது திருப்பதிகப் பாடல்களில் போற்றுவதைக் காணலாம்.
முதுவாய் ஓரி கதற முதுகாட்டு
எரிகொண்டால் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவி சூடும்
மலையான் மகள் தன் மணவாளா
கதுவாய்த் தலையில் பலநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமாறு இதுவோ கச்சூர்
ஆலயக்கோயில் அம்மானே
- 7ம் திருமுறை, பாடல் 1
இந்நிகழ்ச்சி பெரியபுராணத்தில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்திலும் விரிவாகக் கூறிப்படுகிறது.
இதனால் இங்கு எழுந்தருளி அருள்புரியம் இறைவனை இரந்திட்ட ஈசன், விருந்திட்ட ஈசன் என்றெல்லாம் போற்றுகின்றனர். தனி சன்னிதியும் இக்கோயிலில் .ள்ளது. சுந்தரர் பெருமானுக்காக இறைவனது திருவடிகள் படிந்த திருக்கச்சூர் திருத்தலம் வழிபாட்டுச் சிறப்புடையதாகும்.
இறை அடியார்களின் பசியைப் போக்க இன்று பலதிருக்கோயில்களில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இத்தலத்தில் எழுந்தருளி அருள்புரியம் இறைவி அஞ்சனாட்சி அம்மன் என அழைக்கப்பட்டுச் சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது. மேலும் இக்கோயிலில் அம்மன் சன்னதிக்கு அருகில் ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இத்தலத்தின் தல மரமாக ஆலமரம் விளங்குகிறது.
திருக்கோயிலின் அமைப்பு: கிழக்கு நோக்கிய திருக்கோயில் எதிரே விநாயகர் கோயிலும், கச்சூர் ஏரியும் அமைந்துள்ளது. கோபுரம் இல்லாத நுழைவாயில், கோபுரம் எழுப்புவதற்கு இறை அன்பர்கள் முயற்சி எடுக்கலாம். நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் அமைந்துள்ளது. தெற்குப் பகுதியில் அமைந்துள்ள தியாகராஜ மண்டபம் வழியே இறைவன் சன்னதிக்குள் நுழைகிறோம். எதிரில் தெற்கு நோக்கி அம்பாள் சன்னதி அமைந்துள்ளது. இறைவன் சன்னதியில் முன்புறம் சாளரம் (ஜன்னல்) அமைந்துள்ளது. இதன் வழியே இறைவனைத் தரிசித்தல் சிறப்பு. இறைவன் எழுந்தருளியுள்ள கருவறை விமானம் கஜபிருஷ்ட (தூங்கானை மாடம்) வடிவில் அமைந்துள்ளது.
ஞானவிநாயகர்: இரண்டாவது திருச்சுற்றில் தென்மேற்கில் ஞானவிநாயகர் சன்னிதி அழகிய சிற்பங்களுடன் காட்சி அளிக்கிறது. விமானத்தில் பூதகணங்கள் வாழைப்பழம் - பலாப்பழத்தைத் தாங்கிய நிலையில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. தூண்களில் விநாயகர், கஜசம்கார மூர்த்தி, இராசிசக்கரம் போன்ற பல அழகிய சிற்பங்களுடன் இச்சன்னிதி விளங்குகிறது. இச்சன்னதியின் முன்மண்டப விதானத்தின் (கூரை) பக்கங்களில் சுந்தரர் வரலாற்றுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் தொடர் சிற்பமாகக் காட்சி அளிக்கிறது. சுந்தரர் வரலாற்றுடன் இத்தலம் தொடர்பு கொண்டு விளங்குவதால் இச்சிற்பங்கள் இங்கே இடம் பெற்றிருக்க வேண்டும். திருக்கச்சூர் ஞானவிநாயகர் சன்னிதி தனிச்சிறப்புடன் விளங்குகிறது.
இச்சுற்றில் தொடர்ந்து முருகன் சன்னிதி, விருந்திட்ட ஈசன் சன்னிதி, பைரவர் சன்னிதி ஆகியவை அமைந்துள்ளன.
மலைமேல் மருந்து: இவ்வூரில் கோயிலுக்கு அருகே உள்ள சிறிய குன்றின் மீது மருந்தீசர் கோயில் அமைந்துள்ளது. இம்மலையை ஒளஷதகிரி எனவும், இறைவனை ஒளஷதீசுவரர் எனவும் அழைக்கின்றனர். இறைவியை அந்தக நிவாரணி, இருள் நீக்கித்தாயார் எனவும் அழைத்துப் போற்றுகின்றனர். இக்குன்றில் மருத்துவ குணம் உடைய மூலிகைகள் இருப்பதாகக் கூறுகின்றனர். மேற்கு நோக்கிய இறைவன் சன்னிதி. வாயில் முன் மண்டபத் தூண்களில் விநாயகர், பட்டினத்தார், வள்ளலார், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரது சிற்ப வடிவங்கள் காணப்படுகின்றன. தூண் ஒன்றில் சுந்தரரை நோக்கியவாறு கையில் அமுதுடன் காட்சி தரும் இறைவனது சிற்பம் சிறப்பானது.
இறைவன் சன்னிதிக்கு வடக்குப் புறத்தில் சண்டிகேசுவரர் சன்னிதி உள்ளது. இதில் நான்கு முகம் உடைய சதுர்முக சண்டிகேசுவரர் வடிவத்தை வழிபடுவது மிகவும் சிறப்பானது.
இக்கோயிலில் உள்ள கொடிமரத்தின் அருகிலிருந்து மக்கள் பக்தியுடன் மண் சேகரித்து எடுத்துச் செல்கின்றனர். இது மருத்துவக் குணம் உடையதாகக் கருதப்படுகிறது. நோய் வாய்ப்பட்டவர்களும் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோயிலில் எழுந்தருளிய இறைவனை "மலைமேல் மருந்தே' எனச் சுந்தரர் பெருமான் போற்றுகின்றார்.
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக்கோயில் அம்மானே
பாடல் - 5
விழாக்கள்: இக்கோயிலில் மாதந்தோறும் விழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் சிறப்பானது. தியாகராஜரை "தொட்டில் பல்லக்கில்' வீதி உலா எடுத்து வருவது சிறப்பு அம்சமாக விளங்குகிறது.
பல சிறப்புகள் கொண்டதும் இறைவன் திருவடிகள் பட்ட திருத்தலமாகிய திருக்கச்சூர் ஆலக்கோயில் இறைவனை வழிபடுவோம்! நலமடைவோம்!!
- கி. ஸ்ரீதரன்
சிறப்புகள்: திருக்கச்சூர் திருத்தலம் பலவகையில் சிறப்புப் பெற்ற தலமாக விளங்குகிறது. பாற்கடலை தேவர்களும் - அசுரர்களும் கடையும்பொழுது அமுதம் திரண்டு வருவதற்காகத் திருமால் கச்சப (ஆமை) வடிவில் இருந்து சிவபெருமானை வழிபட்டதாகத் தல வரலாறு கூறுகிறது. இப்புராண வரலாற்றை எடுத்துக்காட்டும் வகையில் இக்கோயில் தியாகராஜர் சன்னிதி முன்னர் உள்ள மண்டபத்தூண் ஒன்றில் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
ஆலயக்கோயில்: இறைவன் எழுந்தருளியுள்ள கோயில்களைப் பற்றி திருநாவுக்கரசர் பெருமான் தமது திருஅடைவுத் திருத்தாண்டகத்தில் குறிப்பிடும்போது கரக்கோயில், ஞாழற்கோயில், கொகுழக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என்ற பல வகையான கோயில்களைக் குறிப்பிடுகிறார். இத்தலம் "ஆலக்கோயில்' எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. சுந்தரர் பெருமான் தமது திருப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "கச்சூர் ஆலக்கோயில் அம்மானே' என்றே போற்றுவதைக் காணலாம். கல்வெட்டுகளிலும் "திருஆலக்கோயில் உடையார் நாயனார்' என்றே குறிப்பிடுகிறது.
வரலாற்றுச்சிறப்பு: இக்கோயிலில் 80க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலுக்கு அளிக்கப்பெற்ற கொடைகள், அமைக்கப்பட்ட நந்தவனங்கள், அளிக்கப்பெற்ற திருமேனிகள் போன்ற பல வரலாற்றுச் செய்திகளைக் கல்வெட்டுகள் அளிக்கின்றன. முதலாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், சம்புவராயர்கள், விருப்பண்ண உடையார், நரசிங்கராயர் போன்ற மன்னர்கள் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் இவ்வூர் "ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக்களத்தூர் கோட்டத்துச் செங்குன்ற நாட்டு நித்தவிநோத நல்லூர் என்னும் திருக்கச்சூர்' என்று குறிப்பிடப்படுகிறது.
உபயவிடங்கர்: தொண்டை நாட்டில் தியாகராஜர் சன்னிதிக்கும் வழிபாட்டிற்கும் சிறப்புப் பெற்ற தலங்களாக - திருவொற்றியூர், திருவான்மியூர், திருக்கச்சூர் திருக்கோயில்கள் விளங்குகின்றன. இந்த மூன்று தலங்களிலும் தேவர்களும் - முனிவர்களும் விடங்கப் பெருமானான - சோமாஸ்கந்த மூர்த்தியான - தியாகராஜரைத் தரிசிக்க வேண்டினார்கள். இறைவன் தரிசனம் அளித்தார். இம்மூன்று தலங்களும் "உபயவிடங்கத்தலங்கள்' என்ற சிறப்புடன் வழிபடப் பெறுகின்றன. திருக்கச்சூரில் தியாகராஜர் "அமுதத்தியாகர்' என்ற சிறப்புப் பெயருடன் விளங்க அவருக்கான வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
விருந்திட்ட ஈசன்: தானத்தில் சிறந்தது அன்னதானம் ஆகும். இறைவனது அடியார்களுக்கு அன்னம் அளிப்பது மிகவும் சிறபபானதாகும். நமது சமய வரலாற்றில் இறையடியார்களுக்கு அன்னம் படைத்துச் சிறப்புப் பெற்றவர்களில் திருமங்கையாழ்வார், இளையான்குடி மாறநாயனார், அமர்நீதி நாயனார், அப்பூதி அடிகள், மூர்க்க நாயனார், கலிகம்ப நாயனார், இடங்கழி நாயனார், வள்ளலார் பெருமான் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தனது அடியார்கள் பசியால் துன்பப்பட்டபொழுது இறைவன் தானே அவர்களுக்காக உணவு பெற்று வழங்கியதும் உண்டு. திருச்சிக்கு அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி கோயிலில் திருநாவுக்கரசருக்காகக் கட்டமுது பெற்று அளித்தார். சுந்தரர் பெருமானுக்குச் சீர்காழிக்கு அருகில் உள்ள திருக்குருகாவூர் திருத்தலத்திலும், திருக்கச்சூர் திருத்தலத்திலும் உணவு பெற்று வழங்கியதைத் திருமுறைகள் எடுத்துக் கூறுகின்றன.
சுந்தரர் பெருமான் திருக்கழுங்குனறம் கோயிலை வழிபட்டுப் பின்னர் திருக்கச்சூர் திருத்தலம் வருகிறார். இறைவனை வணங்கிய பின்னர் இறைவன் கருணை வேண்டிப் பசியால் அங்கே அமர்ந்திருக்க, இறைவன் தனது அடியாருக்காக வீடு தோறும் சென்று உணவு பெற்றுச் சுந்தரரின் பசியைப் போக்கினார். இறைவனது இந்த அருட்செயலைச் சுந்தரர் பெருமான் தமது திருப்பதிகப் பாடல்களில் போற்றுவதைக் காணலாம்.
முதுவாய் ஓரி கதற முதுகாட்டு
எரிகொண்டால் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவி சூடும்
மலையான் மகள் தன் மணவாளா
கதுவாய்த் தலையில் பலநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமாறு இதுவோ கச்சூர்
ஆலயக்கோயில் அம்மானே
- 7ம் திருமுறை, பாடல் 1
இந்நிகழ்ச்சி பெரியபுராணத்தில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்திலும் விரிவாகக் கூறிப்படுகிறது.
இதனால் இங்கு எழுந்தருளி அருள்புரியம் இறைவனை இரந்திட்ட ஈசன், விருந்திட்ட ஈசன் என்றெல்லாம் போற்றுகின்றனர். தனி சன்னிதியும் இக்கோயிலில் .ள்ளது. சுந்தரர் பெருமானுக்காக இறைவனது திருவடிகள் படிந்த திருக்கச்சூர் திருத்தலம் வழிபாட்டுச் சிறப்புடையதாகும்.
இறை அடியார்களின் பசியைப் போக்க இன்று பலதிருக்கோயில்களில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இத்தலத்தில் எழுந்தருளி அருள்புரியம் இறைவி அஞ்சனாட்சி அம்மன் என அழைக்கப்பட்டுச் சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது. மேலும் இக்கோயிலில் அம்மன் சன்னதிக்கு அருகில் ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இத்தலத்தின் தல மரமாக ஆலமரம் விளங்குகிறது.
திருக்கோயிலின் அமைப்பு: கிழக்கு நோக்கிய திருக்கோயில் எதிரே விநாயகர் கோயிலும், கச்சூர் ஏரியும் அமைந்துள்ளது. கோபுரம் இல்லாத நுழைவாயில், கோபுரம் எழுப்புவதற்கு இறை அன்பர்கள் முயற்சி எடுக்கலாம். நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் அமைந்துள்ளது. தெற்குப் பகுதியில் அமைந்துள்ள தியாகராஜ மண்டபம் வழியே இறைவன் சன்னதிக்குள் நுழைகிறோம். எதிரில் தெற்கு நோக்கி அம்பாள் சன்னதி அமைந்துள்ளது. இறைவன் சன்னதியில் முன்புறம் சாளரம் (ஜன்னல்) அமைந்துள்ளது. இதன் வழியே இறைவனைத் தரிசித்தல் சிறப்பு. இறைவன் எழுந்தருளியுள்ள கருவறை விமானம் கஜபிருஷ்ட (தூங்கானை மாடம்) வடிவில் அமைந்துள்ளது.
ஞானவிநாயகர்: இரண்டாவது திருச்சுற்றில் தென்மேற்கில் ஞானவிநாயகர் சன்னிதி அழகிய சிற்பங்களுடன் காட்சி அளிக்கிறது. விமானத்தில் பூதகணங்கள் வாழைப்பழம் - பலாப்பழத்தைத் தாங்கிய நிலையில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. தூண்களில் விநாயகர், கஜசம்கார மூர்த்தி, இராசிசக்கரம் போன்ற பல அழகிய சிற்பங்களுடன் இச்சன்னிதி விளங்குகிறது. இச்சன்னதியின் முன்மண்டப விதானத்தின் (கூரை) பக்கங்களில் சுந்தரர் வரலாற்றுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் தொடர் சிற்பமாகக் காட்சி அளிக்கிறது. சுந்தரர் வரலாற்றுடன் இத்தலம் தொடர்பு கொண்டு விளங்குவதால் இச்சிற்பங்கள் இங்கே இடம் பெற்றிருக்க வேண்டும். திருக்கச்சூர் ஞானவிநாயகர் சன்னிதி தனிச்சிறப்புடன் விளங்குகிறது.
இச்சுற்றில் தொடர்ந்து முருகன் சன்னிதி, விருந்திட்ட ஈசன் சன்னிதி, பைரவர் சன்னிதி ஆகியவை அமைந்துள்ளன.
மலைமேல் மருந்து: இவ்வூரில் கோயிலுக்கு அருகே உள்ள சிறிய குன்றின் மீது மருந்தீசர் கோயில் அமைந்துள்ளது. இம்மலையை ஒளஷதகிரி எனவும், இறைவனை ஒளஷதீசுவரர் எனவும் அழைக்கின்றனர். இறைவியை அந்தக நிவாரணி, இருள் நீக்கித்தாயார் எனவும் அழைத்துப் போற்றுகின்றனர். இக்குன்றில் மருத்துவ குணம் உடைய மூலிகைகள் இருப்பதாகக் கூறுகின்றனர். மேற்கு நோக்கிய இறைவன் சன்னிதி. வாயில் முன் மண்டபத் தூண்களில் விநாயகர், பட்டினத்தார், வள்ளலார், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரது சிற்ப வடிவங்கள் காணப்படுகின்றன. தூண் ஒன்றில் சுந்தரரை நோக்கியவாறு கையில் அமுதுடன் காட்சி தரும் இறைவனது சிற்பம் சிறப்பானது.
இறைவன் சன்னிதிக்கு வடக்குப் புறத்தில் சண்டிகேசுவரர் சன்னிதி உள்ளது. இதில் நான்கு முகம் உடைய சதுர்முக சண்டிகேசுவரர் வடிவத்தை வழிபடுவது மிகவும் சிறப்பானது.
இக்கோயிலில் உள்ள கொடிமரத்தின் அருகிலிருந்து மக்கள் பக்தியுடன் மண் சேகரித்து எடுத்துச் செல்கின்றனர். இது மருத்துவக் குணம் உடையதாகக் கருதப்படுகிறது. நோய் வாய்ப்பட்டவர்களும் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோயிலில் எழுந்தருளிய இறைவனை "மலைமேல் மருந்தே' எனச் சுந்தரர் பெருமான் போற்றுகின்றார்.
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக்கோயில் அம்மானே
பாடல் - 5
விழாக்கள்: இக்கோயிலில் மாதந்தோறும் விழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் சிறப்பானது. தியாகராஜரை "தொட்டில் பல்லக்கில்' வீதி உலா எடுத்து வருவது சிறப்பு அம்சமாக விளங்குகிறது.
பல சிறப்புகள் கொண்டதும் இறைவன் திருவடிகள் பட்ட திருத்தலமாகிய திருக்கச்சூர் ஆலக்கோயில் இறைவனை வழிபடுவோம்! நலமடைவோம்!!
- கி. ஸ்ரீதரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|