புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_c10மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_m10மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_c10 
49 Posts - 52%
heezulia
மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_c10மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_m10மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_c10மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_m10மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_c10மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_m10மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_c10மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_m10மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_c10 
91 Posts - 56%
heezulia
மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_c10மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_m10மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_c10மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_m10மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_c10மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_m10மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 29, 2014 10:55 pm

மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? 1013782_648156185257482_1370981593_n

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், வாரணாசி லோக்சபா தொகுதியில், "நான் ஜெயிப்பது முக்கியம் அல்ல, மோடி தோற்கடிக்கப்படவே ண்டும்' என்ற கோஷத்தோடு, மோடிக்கு எதிராக களம் இறங்கியதில் இருந்தே, மோடியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளன.

கெஜ்ரிவால், தன் வழக்கமான நாடக பாணியில், ""போட்டியிடுவது குறித்து வாரணாசி மக்களிடம் அனுமதி கேட்கப்போகிறேன்,'' என கூறி, கடந்த 25ம் தேதி, சிவகங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் வாரணாசிக்கு வந்து இறங்கும் முன்பே பரபரப்பை கிளப்ப துவங்கினார். ரயிலில் பயணித்தபடியே, ""பா.ஜ., என் கூட்டங்களை சீர்குலைக்க சதி வேலைகளில் ஈடுபடப் போகிறது'' என, "ட்வீட்' செய்தார்.அதற்கு ஏற்ப, கெஜ்ரிவாலின் "அனுமதி கேட்கும் கூட்டங்களில்' அவர் மீது முட்டையும், மையும் வீசப்பட்டன. பேனியாபாக் பகுதியில் நடந்த அவரது பொது கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட, போலீசார், தடியடி நடத்தினர்.இவற்றின் மூலம், தன் வருகையை, வெற்றிகரமாக, ஒரு ஊடக சம்பவமாக கெஜ்ரிவால் மாற்றிக் கொண்டார்.

இதற்கு இடையே, பொது கூட்டத்தில் கூடி இருந்த 40 ஆயிரம் பேரிடம் அனுமதி கேட்க, "வாக்கெடுப்பு' ஒன்றை நடத்தினார்.மாலை 6:31க்கு துவங்கிய இந்த வாக்கெடுப்பு, தமிழக சட்டசபை வாக்கெடுப்புகளை விட வேகமாக, 6:39க்கே முடிந்து விட்டது அதில் தனக்கு "அனுமதி' கிடைத்து விட்டதாக கெஜ்ரிவால் அறிவித்தார்.கெஜ்ரிவால் மீது முட்டை வீசிய நபர்கள், பா.ஜ.,வினர் தான் என, போலீசார் தெரிவிக்க, "பா.ஜ.,வினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது, அதனால் தான் அவர்கள் இப்படி செய்கின்றனர்' என, ஆம் ஆத்மி மற்றும் பிற கட்சியினர் ஊடகங்களில் செய்திகளை பரப்ப துவங்கினர்.அதோடு, தற்போது, வாரணாசி தொகுதியில் உள்ள, 3.5 லட்சம் முஸ்லிம் ஓட்டுகள், மோடிக்கு எதிரானவையாக இருக்கும் என்பதும்; அனைத்து முஸ்லிம்களும் மோடிக்கு எதிராக கெஜ்ரிவாலுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்பதும், வடமாநில ஆங்கில ஊடகங்களின் கருத்தாக உள்ளது. இதன் அடிப்படை என்ன?

வாரணாசி தொகுதியில், 3.5 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 16 லட்சம் வாக்காளர்கள் உள்ள அந்த தொகுதியில், வழக்கமாக ஓட்டு பதிவு, 42 சதவீதமாக இருக்கும். அதாவது 6.7 லட்சம் ஓட்டுகள் வரை பதிவாகும். அதில் பாதிக்கும் மேல் முஸ்லிம் வாக்காளர்கள் என்பதாலேயே ஊடகங்களும், ஆய்வாளர்களும் மோடியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.மோடிக்காக, குஜராத் முஸ்லிம்கள் வாரணாசியில் பிரசாரம் செய்தாலும், அதை முறியடிக்கவும்; சிறுபான்மையினர் ஓட்டுகளை ஒரே வேட்பாளர் அள்ளும் வகையிலும், பா.ஜ.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் திட்டம் போட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நோக்கத்தில் தான், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முக்தர் அன்சாரி நிறுத்தப்பட்டு உள்ளார் என்றும், அவர் தான் சிறுபான்மையினரின் ஓட்டை அள்ள உள்ள நபர் என்றும், வாரணாசி தொகுதி குறித்து நன்கு அறிந்த அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கமாக முஸ்லிம் ஓட்டுகளை கவர முனையும் சமாஜ்வாதி கட்சி, இந்த முறை கைலாஷ் சவுராசியா என்ற, "டம்மி' வேட்பாளரை நிறுத்தி உள்ளது. காங்கிரஸ் இதுவரை எந்த வேட்பாளரையும் அறிவிக்கவில்லை, ஆனால், அந்த கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா நிறுத்தப்படலாம் என, கூறப்படுகிறது. அதாவது, வேறு எந்த பெரிய கட்சியும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி சிறுபான்மையினரின் ஓட்டை பிரிக்க விரும்பவில்லை. அதற்கு விசை கொடுக்கும் வகையில், ஊழலுக்கு எதிராக பேசிவந்த கெஜ்ரிவாலும், தற்போது, மதவாதம் பற்றியே அதிகம் பேசுகிறார்.

ஒவ்வொரு முறையும், பா.ஜ.,வுக்கு சாதகமான அலை எழும்போது, உ.பி.,யில் சிறுபான்மை வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப் போட தவறுவதில்லை என, கூறப்படுகிறது. 1998 முதல், 2.7 லட்சம் ஓட்டுகளுக்கு மேல், வாரணாசி தொகுதியில் யாரும் பெற்றதில்லை. இந்த நிலையில், அனைத்து சிறுபான்மை வாக்காளர்களும் மோடிக்கு எதிராக ஓட்டுப்போட முடிவெடுத்தால், அது மோடிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும். மேலும், இந்த முறை, பா.ஜ.,வில் பிராமண சமுதாயத்தினர் ஓரங்கட்டப்பட்டு உள்ளதால், அந்த சமுதாயத்தின் ஓட்டுகள் முன்பு கிடைத்த அளவிற்கு கணிசமாக கிடைக்காது என, ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அந்த குட்டையை மேலும் குழப்பும் வகையில் தான் காங்கிரஸ், பிராமண சமுதாயத்தை சேர்ந்த ஆனந்த் சர்மாவை களத்தில் இறக்க உள்ளது. பா.ஜ.,வும் இதை அறிந்து தான் இருக்கிறது. அதனால், தான், அப்னா தல் என்ற, சிறிய ஜாதி கட்சி ஒன்றோடு கூட்டணி வைத்து உள்ளது.

அந்த கட்சி, வாரணாசி தொகுதிக்கு உட்பட்ட ஐந்து சட்டசபை தொகுதிகளில், இரண்டில் செல்வாக்கு பெற்றது. கடந்த லோக்சபா தேர்தலில், அந்த தொகுதியில், அந்த கட்சி 66 ஆயிரம் ஓட்டுகளை பெற்றது. அவற்றில் பெரும்பான்மை மோடிக்கு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பா.ஜ.,விற்கு கணக்கு இடிக்கும். ஏனெனில், கடந்த முறை இங்கு வென்ற பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு, 2.03 லட்சம் ஓட்டுகள் தான் கிடைத்தன. இதை அப்னா தல் ஓட்டுகளோடு கூட்டினால், 2.69 லட்சம் ஓட்டுக்கள் தான் கிடைக்கின்றன. ஆனால், எதிரணியினர் கையில் சிறுபான்மையின ஓட்டுகளோடு சேர்த்து, பகுஜன் சமாஜ் கட்சிக்கு தவறாமல் ஓட்டளிக்கும் தலித் சமூகத்தின் ஓட்டுகளும் உள்ளன. அதனால், 3.5 லட்சம் ஓட்டுகளுக்கும் மேலாக பெற்றால் தான், மோடிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. இதற்கு பா.ஜ., நம்பி இருப்பது, "மோடி அலை'யை மட்டும் தான். ஒவ்வொரு முறையும் பா.ஜ.,விற்கு சாதகமான சூழல் உருவாகும் போதும், வாரணாசி தொகுதியில் வாக்கு பதிவு விகிதம் அதிகரிக்கும். இப்படி தான், 1998லும், 1999லும் தொடர்ச்சியாக வந்த தேர்தல்களில், "வாஜ்பாய் அலை' காரணமாக முறையே, 47 மற்றும் 45 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அதாவது, 42ல் இருந்து 47 ஆக ஓட்டு பதிவு விகிதம் அதிகரிக்குமானால், கூடுதலாக, 800 ஆயிரம் ஓட்டுகள் வரை பதிவாகும். அப்போது, மோடி 3.5 லட்சம் ஓட்டுகள் என்ற, இலக்கை தொட முடியும். ஆனால், இதிலும் ஒரு பிரச்னை உள்ளது. சிறுபான்மை ஓட்டுகளை கவர கெஜ்ரிவால் முயற்சிப்பார் என, அனைவரும் எண்ணிக் கொண்டு இருந்த வேளையில், கங்கையில் குளியல், கோவில்களில் வலம் வருவது என, இந்து ஓட்டுகளை படு சாதுர்யமாக குறிவைத்து உள்ளார்.

இதனால், அதிகரிக்கும் வாக்கு பதிவு விகிதத்தில் இருந்து கிடைக்கும் ஓட்டுகளில் ஒரு பங்கு அவருக்கும் செல்ல வாய்ப்பு உள்ளது என, அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர். தொகுதியில் புது முகமாச்சே! அவருக்கு ஓட்டு கிடைக்குமா' என, எண்ணும் போது, 1977ல், ஜனதா கட்சி, துவங்கப்பட்ட மூன்றே மாதங்களில், கட்சி அலுவலகம் கூட இல்லாத இடங்களில் ஓட்டுகளை அள்ளியதை நினைவில் கொள்ள வேண்டி உள்ளது. அதனால், வெள்ளப்பெருக்கு எடுக்கும் கங்கை போல, வாக்கு பதிவு விகிதம் அதிகரித்தால் தான், மோடியால் வெற்றி பெற முடியம். வரும் மே, 12ம் தேதி, வாரணாசியில் ஓட்டு பதிவு நடக்க உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக