புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
27 Posts - 53%
heezulia
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
22 Posts - 43%
rajuselvam
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
17 Posts - 3%
prajai
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
9 Posts - 1%
jairam
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்டாரப் பாட்டு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 02, 2014 5:07 pm

ஆன்ம வீரம், படை வீரத்தினும் பெரிதென்னும் உண்மையைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே தமிழ்நாடு அறிந்துகொண்டது. நாடாளும் வேந்தரது மறப்படையையும் வெல்லும் ஆற்றல், அறப்படையை எடுத்து ஆளும் ஆன்ம வீரரிடம் உண்டு என்பது பண்டைத் திருத்தொண்டர் சரித்திரத்தால் நன்குணரப்படும்.

சைவ சமயத்தை தமிழ்நாட்டில் நிலை நிறுத்திய நால்வருள் ஒருவராய திருநாவுக்கரசரை ஒரு சிறந்த ஆன்ம வீரராகக் கருதி, அவர் வாழ்க்கையையும் வாய்மொழியையும் பாரதியார் நன்கு உணர்ந்துள்ளார். மாநில வேந்தரது மறப்படையின் வலிமையை அறப்படையால் வெல்லலாகுமென்று ஆயிரத் திருநூறு ஆண்டுகட்கு முன்னரே உலக மக்களுக்கு அறிவித்தவர் திருநாவுக்கரசர். அவரது ஆன்ம வீரம் பாரதியார் உள்ளத்தில் புகுந்து உந்துவதாயிற்று.

இவ்வுலகில் புயவலியும் படைவலியும் படைத்தோரே வீரராகக் கருதப்படுகின்றனர். புயவலியினும், படைவலியினும் பெரிய ஆன்மத் திறல் படைத்த வீரராகத் திருநாவுக்கரசர் விளங்கினார். சமண சமயத்தைக் கைவிட்டு அப்பெரியார், சைவ நெறியைச் சார்ந்தபொழுது, சமண மன்னன் சீற்றமுற்றான். இதனால் நாவுக்கரசரைக் கொணருமாறு வேம்படை தாங்கிய வீரரைப் போக்கினான். அவ்வீரர், அப்பர் இருந்த இடம் போந்து வீரமொழி பேசி ஆரவாரித்தனர் எனினும், அவரது உருண்டு திரண்ட மேனியைக் கண்டு அப்பர் சிறிதும் அஞ்சினாரல்லர்; அவர் கையிலமைந்த படைக்கலங்களைக் கண்டு இறையளவும் கலங்கினாரல்லர்; ""நாமார்க்கும் குடியல்லோம், நமனை யஞ்சோம்'' என்று வீரப்பாட்டிசைத்தார். இவ்வாறு மன்னனது பரந்த படையின் முன்னே தமியராய், அஞ்சா நெஞ்சினராய் நின்று, அவன் மறப்படையைத் தம் ஆன்மவலியால் வென்ற அப்பரது வீரப்பாட்டு பாரதியார் உள்ளத்தைக் கவர்ந்தது.

யார்க்குங் குடியல்லேன் யான்என்ப
தோர்ந்தனன் மாயையே - உன்தன்
போர்க்கஞ் சுவேனோ பொடியாக்கு
வேன்உன்னை மாயையே


என்று தம்மை அச்சுறுத்திய மாயையைப் பழித்துப் பாடியுள்ளார். இப்பாட்டில் திருநாவுக்கரசரது வீரவுள்ளம் விளங்கக் காணலாம். பாரதியார் பாடிய வீரப்பாடல்களுள் தலையாய நிற்கும் தகுதி வாய்ந்தது, "அச்சமில்லை' என்று தொடங்கும் "பண்டாரப் பாட்டே' யாகும். அப்பாட்டிலே,

பச்சைஊன் இயைந்தவேற் படைகள்வந்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


என்றெழுந்த அடிகள், நாவுக்கரசரை எதிர்த்து நின்ற மன்னன் படையைப் போன்ற மறப்படையைக் குறிப்பன என்று கருதுவது பொருத்தமுடையதாகும். மேலும், திருநாவுக்கரசரைத் துன்புறுத்தக் கருதிய அரசன், அவரை நீற்றறையிலிட்டான். அந்நீற்றறையின் வெம்மையை,""மாசில் வீணையும் மாலை மதியமும்'' எனப்பாடி நாவுக்கரசர் தம் மனச் செம்மையால் வென்றார்.

ஏழு நாள் நீற்றறையில் ஏதமின்றி இருந்து வெளிப்பட்ட நிலையிலும் அவர் பெருமையை அரசன் அறிந்தானில்லை. பிறகு நஞ்சு கலந்த உணவை ஊட்டச் செய்தான். அந்த நஞ்சு கலந்த மாந்தரை நாவுக்கரசர் பகைவரெனக் கருதினாரல்லர்; அவரிட்ட சோற்றை உண்டு மகிழ்ந்தார். இங்ஙனம் பகைவரிட்ட நஞ்சையும் நண்பரிட்ட நல்லமுதெனக் கருதியுண்ட நாவுக்கரசர், "பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர்'' என்னும் திருக்குறளுக்கு நனி சிறந்த சான்றாயினார். இவ்வாறு நாவுக்கரசர் ஆற்றிய அருஞ்செயலை வள்ளுவர் அருளிய கருத்தோடு கலந்து,

நச்சைவாயி லேகொணர்ந்து நண்பர்ஊட்டு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


என்று பாரதியார் நல்ல தமிழ் விருந்தளித்தார். ""ஊனம் ஒன்றில்லாத இறைவனுக்கு ஆட்பட்ட உத்தமர்'' வேறொன்றையும் பொருளாகக் கருதார். மண்ணும் விண்ணும் நிலைகுலைந்தாலும், ஞாயிறும் திங்களும் திசை மாறினாலும் அன்னார் மனந் துளங்குவதில்லை. இவ்வுண்ணையை,

வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிவென்....
ஊனமொன் றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே

என்று அப்பர் தம் தேவாரத்தில் அருளிப் போந்தார். அவ்வான்மத் திறலின் அருமையறிந்த பாரதியார்,

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


என்று கற்றாரும் கல்லாரும் அறியும் முறையில் விளக்கிப் போந்தார். உரன் என்னும் கருவியால் ஐம்பொறிகளையும் காத்து நின்ற அப்பரை வெல்ல இயலாது வான் மங்கையர் தோற்றொழிந்தனர். காதல் புரியும் மாதரார்,

கண்கள் வீசு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லை


என்ற பாரதியார் பாட்டு இவ்வரலாற்றை நினைவூட்டுகின்றது. ஆகவே, முற்காலக் கவிஞராகிய திருநாவுக்கரசரது வீர வாழ்க்கையும் வீரப்பாடலும் பாரதியார் உள்ளத்தைக் கவர்ந்து வீரக் கவிதையை விளைத்தன என்று கூறுதல் மிகையாகாது. - (ரா.பி.சேதுப்பிள்ளை, நூல்: "தமிழின்பம்'.)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக