புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
1 Post - 1%
Kavithas
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
1 Post - 1%
bala_t
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
1 Post - 1%
prajai
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
1 Post - 1%
M. Priya
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
296 Posts - 42%
heezulia
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
6 Posts - 1%
prajai
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
4 Posts - 1%
manikavi
நெல்சன் மண்டேலா Poll_c10நெல்சன் மண்டேலா Poll_m10நெல்சன் மண்டேலா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்சன் மண்டேலா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:49 am

நெல்சன் மண்டேலா 245px-Nelson_Mandela-2008_%28edit%29

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela,
18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013)



மாறுதல் என்பது சொல் அல்ல,
அது ஒரு செயல்!
அது போர் அல்ல, அமைதி!
குழந்தைகளின் விரல்களைத் தொட்டுக்கொண்டிருக்கும்
விதைகளின் பச்சையமே அது!


-மூஸியாஅபுஜமால்

உலகம் இரண்டாக இருக்கிறது. ஒன்று, கறுப்பு... மற்றொன்று வெள்ளை.

கறுப்பு, தீமையின் நிறமாகவும் வெள்ளை, நன்மையின் நிறமாகவுமென, காலங்காலமாக ஒரு தவறான எண்ணம் உலகம் முழுக்க மனித மனங்களில் புரையோடிக்கிடக்கிறது. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், நாடு பிடிக்கும் வெறியில், கப்பல்களில் புறப்பட்ட ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்களின் திட்டமிட்ட சதியினால் விதைக்கப்பட்ட நஞ்சு இது! மக்களை மனரீதியாகவும் அடிமைப்படுத்த அவர்கள் உருவாக்கிய தந்திரங்கள்தான் எத்தனையெத்தனை!

அவர்கள், கதைகளை உருவாக்கினர். அந்தக் கதைகளின் தேவதைகளுக்கு வெள்ளை ஆடைகளும், சாத்தான்களுக்குக் கறுப்பு ஆடைகளும் அணிவிக்கப்பட்டன. அவர்கள் செஸ், கேரம் என விளையாட்டுக்களைக் கண்டுபிடித்தனர். அந்த விளையாட்டுகளிலும் கறுப்பு மதிப்புக் குறைவான நிறமாகவே தீர்மானிக்கப்பட்டு, நம் மனதினுள் இயல்பாக இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது. அவர்கள், இறப்பு வீடுகளின் துக்கத்தை வெளிப்படுத்தக் கறுப்பு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தனர். மண வீடுகளுக்கு வெள்ளை நிறத்தை அடையாளப்படுத்தினர். இவ்வாறாக, அவர்கள் உருவாக்கிய புரை இன்னும் நம்மைவிட்டு விலகவில்லை.

ஆனால், அவர்கள் உருவாக்கிய விதிகளில் ஒன்றுமட்டும் இன்று நிறம் மாறிஇருக்கிறது. அது சமாதானத்தின் நிறம். அவர்கள் வெள்ளையாக அதன் நிறத்தை உருவாக்கியிருந்தனர். ஆனால், அதன் நிறம் இன்று கறுப்பு. அவர் பகைவருக்கும் அருளிய நன்நெஞ்சர்... 'நெல்சன் மண்டேலா'!

1990, பிப்ரவரி 11... ஞாயிற்றுக் கிழமை மாலை, நேரம் சரியாக 4.15.

தென் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற விக்டர் வெர்ஸ்டர் சிறைச்சாலையின் வாசலில், கறுப்பும் வெள்ளையுமாக லட்சக் கணக்கில் மக்கள் கூட்டம். அரை வட்ட வடிவில் பெருந்திரளாக நிற்கும் அவர்களது கண்கள் அனைத்தும் இறுக மூடிக்கிடக்கும் இரும்புக் கதவையே பார்த்துக்கொண்டு இருக்கின்றன. இன்னும் சில நிமிடங்களில் மகத்தான தலைவன் மண்டேலா, அந்த வாசல் வழியாக வெளிவரப் போகிறார்.

அவர்கள் உற்சாகத்துடன் பாடும் விடுதலைப் பாடலும் வாத்தியக் கருவிகளின் இசையுமாக, ஆப்பிரிக்கக் கண்டமே அதிர்வதை உலகம் உன்னிப் பாகக் கவனிக்கிறது. அவர்களின் கரங்களில் கறுப்பு, பச்சை, மஞ்சள் நிறத்திலான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் கொடிகள் படபடக்கின்றன. சர்வதேசச் செய்தி நிறுவனங்கள், ஆயிரக் கணக்கான கேமராக்களுடன் அந்த அற்புத விநாடிக்காகக் காத்திருக்கின்றன. உலக வர லாற்றில் எந்தச் சிறைக்கு முன்பும் இப்படியரு கூட்டம், ஒரு விடுதலையின் பொருட்டுக் கூடியதில்லை!

அதோ, சிறைக் கதவுகளின் க்ரீச்சிடும் சத்தம். கறுப்புச் சூரியன், கதவுகளுக்கு அப்பால் காத்திருக்கிறது. வெளியே லட்சக்கணக்கான கண்கள் இமைக்காமல் காத்திருக்கின்றன. அதோ, கதவு திறக்கிறது! 27 வருடங்களுக்குப் பிறகு, அவரைக் கண்ட வெறியில் கேமராக்கள் பெரும் ஒளி வெள்ளத்துடன் அவரது முகத்தை முற்றுகையிடுகின்றன. ''லாங் லிவ் நெல்சன் மண்டேலா!'' குரல்கள் விண்ணைப் பிளக்கின்றன. கண்களில் நீர் கொட்ட, பரவசத்தில் அவர்களது கைகள் இதயத்தில் கூம்பி நிற்கின்றன.

நானூறு வருட அடிமைச் சங்கிலிகளை அடித்து நொறுக்கிக்கொண்டு, அதோ அவரது பாதம் பூமியை முத்தமிடுகிறது. 72 வயதிலும் உறுதிமிக்க, கம்பீரமான அந்த உயர்ந்த மனிதர் தன் ஒளி சிறக்கும் கண்கள் வழியாக, தன் நிலத்தையும் மக்களையும் நோக்கிப் புன்னகைத்துக் கை உயர்த்தி அசைக்கிறார்.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் கோடியில் விரிந்த நிலப்பரப்பு... தென் ஆப்பிரிக்கா. அதன் தலைநகரமான கேப் டவுனில்இருந்து கிழக்கே ஏறக்குறைய 800கி.மீ. தொலைவில் ஒரு மாகாணம். அதன் பெயர், ட்ரான்ஸ்கீய்.

கிழக்கே நீலத் தண்ணீராக விரிந்துகிடக்கும் இந்தியப் பெருங் கடலுக்கும் வடக்கில் உயர்ந்த ட்ராகன்ஸ்பெர்க் மலைத் தொடருக்கும் இடையே காணப்படும் அழகிய நிலப் பரப்பின் பெயர்தான் ட்ரான்ஸ்கீய். ஆயிரக்கணக்கான ஓடைகளும் நதிகளும் அந்தப் பூமிக்கு இடையறாது உயிர்த் தன்மை கொடுத்துக்கொண்டு இருப்பதால், எங்கு திரும்பினாலும் பச்சைப்பசேலெனச் சமவெளிகள். சுருக்கமாகச் சொல்வதானால், அது உருளும் மலைத்தொடரின் மேலமைந்த வசீகர வனப்பரப்பு.

அப்படிப்பட்ட எழில் கொஞ் சும் மாகாணத்தில், சுலு மற்றும் சோஸா என இரண்டு இனக் குழுக்கள் தங்களுக்குள் சண்டையும் சமாதானமுமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பெரும் பான்மையினராக இருந்த சோஸா இனத்தைச் சேர்ந்தவர் காட்லா ஹென்றி. காட்லா, அந்தப் பகுதியில் நாட்டாமை. அவர்களை ஆண்ட 'தெம்பு' அரசர்கள் அவருக்கு அந்தப் பதவியை அளித்திருந்தனர். காட்லாவுக்கு 4 மனைவிகள், 13 குழந்தைகள். மனைவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந் தால் மட்டுமே, அங்கு குழுத் தலைவர்களுக்கு மரியாதை கிடைக்கும். அது சோஸா இனக் குழுவில் எழுதப்படாத விதி. ஒவ்வொரு மனைவிக்கும் தனித் தனி வீடுகள். வலக்கை மனைவி, இடக்கை மனைவி, பெரிய மனைவி, துணை மனைவி என ஒவ்வொரு மனைவிக்கும் பட்டப் பெயர்கள் வேறு. இதில் காட்லாவின் மூன்றாவது மனைவியும், பட்டப்படி வலக்கை மனைவி யுமானவர் 'நோசெகேனி பேனி'.

'கூணு' என்பது பேனி வசித்த கிராமத்தின் பெயர். அந்தக் கிராமம் முழுவதுமே சோளக்கதிர் வயல்வெளிகளால் ஆனது. அந்தக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் இருந்தன. அனைத்தும் ஒன்றே போல் தோற்றம்கொண்டு இருப்பவை. ஒரு மரம் நடப்பட்டு, சுற்றிலும் வட்டமாக மண் சுவர் எழுப்பப்பட்டு இருக்க... மேலே கூரை, கீழே சாணம் மெழுகிய குளிர்ச்சியான தரை. அந்தக் குடிசைக்குள் நுழைவதற்கு, ஓர் ஆள் குனிந்து செல்லக் கூடிய ஒரே ஒரு வழி. அதுதான் வாசல். இந்த இருண்ட சிறிய வீட்டில், 1918ம் வருடம், ஜூலை 18ல் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு நடந்தேறியது. குடிசைக்கு வெளியே கூடியிருந்த சோஸா இனப் பழங்குடிப் பெண்கள் பேனியின் கதறலையும், உடன் ஒரு சிசுவின் அழுகுரலையும் கேட்டு, அதற்காகவே காத்திருந்தது போலத் தங்களது மூதாதையர்களையும் வனதேவதைகளையும் வாழ்த்தி, பாடல்களைப் பாடத் துவங்கினர். நாட்டாமையின் குழந்தையாதலால், அவர்களிடம் களிப்பும் சந்தோஷமும் அதிகமாகவே இருந்தது. சற்று தொலைவில் இருந்த ஆண்கள் வாத்தியக் கருவிகளை இசைத்து, பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:52 am


குடிசையிலிருந்து, கையில் ஓர் ஆண் சிசுவுடன் ஒரு முதியவள் வெளியே வந்து, குல வழக்கப்படி வானத்துக்கும் பூமிக்கும் குழந்தையைக் காண்பித்துவிட்டு, உள்ளே எடுத்துச் சென்றாள். தொடர்ந்து அந்த வனப் பகுதியில் வாத்தியங்களின் இசை எதிரொலித்துக்கொண்டு இருந்தது. சில நாட்களுக்குப் பின், காட்லா வந்தார். தாதி, மகனைத் தூக்கி வந்து அவரின் கைகளில் கொடுத்தாள். காட்லா பெருமையுடன் தன்னைச் சூழ்ந்திருப்பவர்களை ஒரு முறை பார்த்தபடி, தன் மகனைத் தூக்கி முத்தமிட்டார். 'ரோலிலாலா' என உரக்கக் கூவினார். எல்லோரும் 'ரோலிலாலா... ரோலிலாலா' என அந்தப் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லி மகிழ்ந்தனர்.

இதர சோஸா பெண்களைப் போலவே, குழந்தை ரோலிலாலாவை பேனி இடுப்பில் கட்டப்பட்ட துணியால் எப்போதும் முதுகில் கங்காருவைப் போலச் சுமந்தபடி, வீட்டு வேலைகளையும் வெளி வேலைகளையும் செய்துவந்தாள்.

ரோலிலாலா ஐந்து வயதாகி ஓரளவு பேச ஆரம்பித்ததுமே, தனியாகக் குடிசையைவிட்டு வெளியில் சுற்ற ஆரம்பித்துவிட்டான். நண்பர்களுடன் ஆடு மாடுகளை மேய்க்கச் சென்று, ஆறு குளங்களில் கண்கள் சிவக்க நீச்சலடிப்பதும், உண்டிவில்லால் பறவைகளைக் குறி பார்த்து அடிப்பதும், மரங்களில் ஏறித் தேனை எடுப்பதும், தூண்டில் போட்டு மீன்களைப் பிடிப்பதும், பசுக்களின் மடியிலிருந்து நேரடியாக வாய் வைத்துப் பாலைக் குடிப்பதும் அவனுக்குப் பிடித்தமான விளையாட்டுக்கள். அதே போல, இரண்டு எதிர் எதிர் அணிகளாகப் பிரிந்து குச்சியால் குச்சியைத் தள்ளிச் செல்லும் ஆட்டம் என்றால், சோறு தண்ணி இல்லாமல் மெய்ம்மறந்து ஆட்டத்தில் இறங்கிவிடுவான். பேனி வந்து எத்தனை முறை கூப்பிட்டாலும் போக மாட்டான்.

வீட்டில் காட்லா வரும் சமயங்களில் மட்டும் தலைகீழ்! அவரது மடியில் அமர்ந்தபடி, தங்களது சோஸா மக்களின் பழைய போர்களைப் பற்றியும், அவர்கள் வேட்டையாடும்போது ஏற்பட்ட துணிச்சலான அனுபவங்களையும் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்வான்.

ஏழு வயதானபோது, ரோலிலாலாவை அருகில் வெள்ளைக்காரப் பெண்மணி நடத்தி வந்த பள்ளியில் சேர்க்க அழைத்துச் சென்றார் காட்லா. அந்தப் பள்ளியின் சட்டதிட்டங்களின்படி, அங்கு படிக்க வரும் ஆப்பிரிக்கச் சிறுவர்களுக்கு அந்த வெள்ளைப் பெண்மணியே ஓர் ஆங்கிலப் பெயரைச் சூட்டுவாள். அதன் பிறகு அந்தப் பெயர்தான் நிலைத்துவிடும். அதன்படி ரோலிலாலாவுக்கு 'நெல்சன்' என்று பெயர் சூட்டி, ''இனி, அந்தப் பெயரில்தான் அவனை அழைக்கவேண்டும்'' என்றாள் அந்த வெள்ளைக்கார ஆசிரியை.

காட்லாவால் அந்தப் பெயரைச் சரியாக உச்சரிக்க முடியவில்லை. வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தார். வரவில்லை. காட்லா, மகனைப் பள்ளி யில் விட்டுவிட்டு வீடு திரும்பினார். மகனின் இந்தப் பெயர் மாற்றத்தின் காரணமாக அவருக்குள் எதையோ இழந்த தவிப்பு. அவனைத் தன்னிட மிருந்து யாரோ பிடுங்கிக்கொண்ட தைப் போல ஓர் உணர்வு!

கறுப்பு காந்தம்; கவர்ந்து இழுக்கும் வசீகரம். அழுத்தமும் உறுதியும் மிக்க நிறம். கறுப்பின் இந்தச் சிறப்புக் குணங்களுடன் இருந்தான் சிறுவன் ரோலிலாலா. அவன் தாய் நோசெகேனி பேனிதான் இந்த அருங்குணங்களின் ஊற்றுக்கண்.

வேரில் ஊற்றும் நீர் கண்ணுக்குத் தெரியாமல் மரத்தில் ஏறி இளநீராக மாறுகிற மாயத்தைப் போல, அவளது அன்பும் பராமரிப்பும் மண்டேலாவின் ரத்தத் திசுக்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி உரமேற்றியது.

பேனி வசித்த கூணு கிராமத்தில், சோஸா இனத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். அமாவெங்கு எனும் வேறொரு இனத்தைச் சேர்ந்தவர்களும் அங்கே சொற்பமாக வசித்து வந்தனர். அவர்கள் ஆப்பிரிக்காவின் இன்னொரு பெரிய இனமான சுலு இனத்தவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, விரட்டியடிக்கப்பட்டவர்கள். கூணு கிராமத்தில் வெள்ளையர்கள் குடியேறியபோது, அவர்களிடம் அமாவெங்கு இனத்தவர்கள், வேலைக்காரர்களாகச் சேர்ந்தனர். தொடர்ந்து இவர்கள் கிறிஸ்துவர்களாகவும் மாறிய காரணத்தால், வெள்ளையர்களின் ஆட்சியில் பல அடித்தட்டு வேலைகளுக்குப் பணியமர்த்தப்பட்டனர். இதனால் நடை, உடை, பாவனைகள் அனைத்திலும் வெள்ளையர்களைப் போலவே நடந்துகொண்டனர். இதன் காரணமாக சோஸா இனத்தவர்கள், அமாவெங்கு இனத்தவர்களைக் கண்டாலே அருவருப்புடன் ஒதுங்கி நடந்தனர்.

ஆனால், பேனி வருங்காலத்தின் மாறுபாடுகளை முன்கூட்டியே தெரிந்துகொண்டவளாக அமாவெங்கு இனத்தவரிடம் அன்பு காட்டினாள். தன் மகனும் அவர்களைப் போலவே ஆங்கிலக் கல்வி கற்று, அவர்களைக் காட்டிலும் உயர்ந்த நிலையை எய்த வேண்டும் என விரும்பினாள்.

ஆனால், மண்டேலாவின் தந்தையான காட்லா ஹென்றிக்கோ உடல், பொருள், ஆவி அனைத்தும் சோஸா இனம்தான். மரங்களிலும் கற்களிலுமாகத் தன் மூதாதையர்களை அடையாளம் கண்டு, தெய்வமாக வழிபடுபவர். எனவேதான், மகனுக்குத் தான் வைத்த பெயரான ரோலிலாலாவைப் பள்ளி ஆசிரியை நெல்சன் என மாற்றியபோது, தனது கைகளிலிருந்து தன் மகனை யாரோ பிடுங்கிச் செல்வதைப் போன்ற வலியை உணர்ந்தார். இந்த வலிக்கான நிவாரணியாக அவருக்குள் சட்டென ஒரு எண்ணம் தோன்றியது. அவர் உதடுகள் ஒரு பெயரை உச்சரித்தன. 'மண்டேலா' என தனக்குள் இரண்டொருமுறை சொல்லிப்பார்த்தார். அது அவருடைய பாட்டனாரின் பெயர். அதைத் தன் மகனுக்கு வெள்ளைக்கார ஆசிரியை இட்ட புதிய பெயரான நெல்சனுடன் இணைத்தார். இனி அவன்... நெல்சன் மண்டேலா!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:52 am


நெல்சனுக்கு அப்போது ஒன்பது வயது. ஒரு நாள், பள்ளி விட்டு வீடு திரும்பிய நெல்சன், வீட்டின் வெளியே சிலர் கூட்டமாக நிற்பதைப் பார்த்தான். ஏதோ விபரீதம் என்று புரிய, கூட்டத்தை விலக்கி வேகமாகக் குடிசைக்குள் நுழைந்தான். வீட்டின் நடுவே கட்டிலில் படுத்திருந்த அவன் அப்பா காட்லா, கடுமையான இருமலால் அவதிப்பட்டுக்கொண்டு இருந்தார். அம்மா பேனி அவசரமாகப் பச்சிலை அரைத்துக்கொண்டு இருப்பதையும், கட்டிலின் அருகே அப்பாவின் இளைய மனைவி நோடியாமினி அமர்ந்திருப்பதையும் பார்த்தான். காட்லா இருமியபடியே மகனைப் பார்த்தார். அவரது கண்கள் மகனுக்கு எதையோ சொல்ல விரும்பின. ஆனால், அவரால் எதுவும் பேச இயலவில்லை. இருமல் அதிகரித்தது. புகையிலைக் குழலை எடுத்துப் பற்றவைத்துத் தரும்படி இருமலினூடே இரைந்தார். பேனிக்கு அதைத் தர விருப்பம் இல்லை. இளம் மனைவியான நோடியாமினியும் பயந்து விலகி நிற்க, காட்லா கடும் கோபத்துடன் பார்த்தார். மனைவியர் இருவரும் உடனே புகையிலைக் குழலைப் பற்றவைத்து காட்லாவிடம் நீட்டினர். படுத்தவாக்கிலேயே அதை வாங்கி வாயில் வைத்து, நிதானமாகப் புகையை இழுத்துவிட்டார் காட்லா. அவரது வாயிலிருந்தும் நாசித் துளைகளிலிருந்தும் வெளிப்பட்ட புகை, மெள்ள காற்றில் பிரிபிரியாகப் பிரிந்து பரவ, காட்லாவின் உடல், பூரண அமைதிக்குள் ஆழத் தொடங்கியது. விறைத்த அவரது கை விரல்களிலிருந்து விடுபட்டு, அணையாத நெருப்புடன் தரையில் விழுந்தது புகைக்குழல்.

காட்லா இறந்த சில நாட்களுக்குப் பின்... ஒரு நாள் அதிகாலை, பேனி தன் மகனைச் சீக்கிரமாக எழுப்பினாள்; குளிப்பாட்டினாள். அவனது உடைகளை வாரிச் சுருட்டிக்கொண்டாள். மகனை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டாள். நெல்சனுக்குத் தாங்கள் எங்கே போகிறோம் என ஒன்றுமே தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் நன்றாகப் புரிந்தது... கூணு கிராமத்துக்கும் தனக்குமான வாழ்க்கை முழுமையாக முடிந்துவிட்டது.

இப்போது அவர்கள் இருவரும் தங்களது கிராமத்தைக் கடந்து வெகுதூரம் வந்துவிட்டு இருந்தனர். நெல்சனுக்கு அது மிகவும் புதிய அனுபவம். அடர்ந்த காட்டினூடாகவும் மலைமேடுகளினூடாகவும், அம்மாவைப் பின்தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தான். அவர்களது கால்களின் பின்னால் கிராமங்கள் பல கடந்து சென்றன. மாலை மயங்கியது. பறவைகள் சத்தமிட்டபடி தத்தமது கூடடையத் தொடங்கின வேளையில், தாயும் மகனுமாக மலை உச்சியில் இருந்த அந்தப் பெரும் நிலப்பரப்பை அடைந்தனர்.

அவர்களின் முன், மேற்கத்திய பாணியில் அறுகோண வடிவத்தில் கட்டப்பட்ட அரண்மனை போன்ற இரண்டு கட்டடங்கள், சுற்றிலும் எண்ணற்ற குடிசைகள் புடை சூழ, பிரமாண்டமாக நின்றிருந்தன. விரிந்துகிடந்த தோட்டத்தில், பல அழகிய வண்ண மலர்களுடன், எண்ணற்ற செடி கொடிகளும், பல்வேறு மரங்களும் காட்சியளித்தன. நெல்சன் அதுவரை தன் கற்பனையில்கூட அப்படியரு பிரமாண்டத்தைப் பார்த்ததில்லை.

அரண்மனையின் முற்றத்தில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாகப் பழங்குடி மக்கள் அமர்ந்திருந்தனர். அப்போது, கறுப்பு நிற போர்டு கார் ஒன்று, தட்தட்டெனச் சத்தமிட்டபடி அரண்மனையினுள் நுழைந்தது. அடுத்த கணம் பழங்குடியினர், 'ஜோன்ஜின்டேபா வாழ்க! ஜோன்ஜின்டேபா வாழ்க!' என்று கோஷமிட்டபடி, ஓடிச் சென்று சூழ்ந்தனர். அவர்களை நோக்கிக் கையசைத்தபடி, கோட் சூட் அணிந்த, சற்றுக் குட்டையான, கறுத்த மனிதர் ஒருவர் காரினுள்ளிருந்து வெளிப்பட்டார். ஒவ்வொருவருடனும் கைகுலுக்கியபடி, அவர்களது கோரிக்கைகளையும் வேண்டுகோள்களையும் கவனமாகக் கேட்டுக்கொண்டவாறே, மெதுவாக நகர்ந்து வந்த அவரை, நெல்சன் தன் தாயின் கையை இறுக்கப் பிடித்தபடி, ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தான்.

ஜோன்ஜின்டேபா, தெம்பு வம்சத்தின் தற்போதைய பிரதிநிதி. சோஸா இனக் குழு மக்களின் தலைவர். அவர் இந்தப் பதவியில் அமர முக்கியக் காரணமாக இருந்து, கிங்மேக்கராகச் செயல்பட்டவர் நெல்சனின் அப்பாவான காட்லா ஹென்றி.

பேனியின் வாய்மொழி மூலம், தன் நண்பனின் இறப்புச் சேதியைக் கேட்டு, அதிர்ச்சியில் ஒரு நிமிடம் கண்கலங்கி நின்றார் ஜோன்ஜின்டேபா. அவரின் கைகள் நெல்சனின் தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தன. ''இனி இவன் என் மகன். இந்த அரண்மனைதான் இனி இவன் வீடு. நீங்கள் இனி கவலைப்பட வேண்டாம்!” என பேனியிடம் உறுதி கூறினார். தன் எண்ணம் ஈடேறியவளாக, பேனி உள்ளம் மகிழ்ந்தாள்.

மறுநாளே, ஜோன்ஜின்டேபாவிடம் விடைபெற்று, தன் கிராமத்துக்குப் புறப்பட்டாள். தன் தாய்க்கு விடை கொடுக்கும்போது, சிறுவன் நெல்சனிடம் கொஞ்சம்கூட வருத்தமே இல்லை. மாறாக, அளவற்ற உற்சாகம்தான் அவன் உள்ளம் பூராவும் நிரம்பியிருந்தது.

''பணம், பொருள், வசதி, அந்தஸ்து என எது குறித்தும் நான் அதற்கு முன் யோசித்ததுகூடக் கிடையாது. ஓர் ஏழைச் சிறுவனுக்கு இது போல் திடீரென ஒரு வசதிமிக்க வாழ்க்கை எதிர்ப்பட்டால், அவன் எத்தகைய மனநிலையில் பிரமிப்பானோ, அதுபோன்றதொரு பிரமிப்பில்தான் நானும் திளைத்திருந்தேன்” என இந்தச் சம்பவம் குறித்து மண்டேலா, பிற்பாடு தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:52 am


மேக்வேணி எனும் அந்த நகரம் ஏற்கெனவே மேற்கத்திய வாழ்க்கைக்கு நன்கு பழக்கப்பட்டிருந்தது. ஆண்கள் கால்சராய் மற்றும் சட்டை அணிந்திருக்க, பெண்கள் குட்டைப் பாவாடை, இறுக்கமான மேல்சட்டை ஆகியவற்றை அணியும் வழக்கத்துக்கு மாறியிருந்தனர். ஒரு காட்டுச் சிறுவனுக்கு அந்த அரண்மனையின் பிரமாண்ட கதவுகள் உள்ளன்போடு விரிந்தன. துவக்கத்திலிருந்த இடைவெளிகள் நாளடைவில் முழுவதுமாக மறைந்து, நெல்சனும் அந்த அரண்மனைக்கு முழுவதுமாகப் பழக்கப்பட்டான். மேலாடையின்றி புழுதிக் காட்டில் திரிந்த காலங்கள் மறைந்தன. இப்போது நெல்சனுக்கு உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள் கிடைத்திருந்தனர். அவர்கள் ஜோன்ஜின்டேபாவின் மூத்த மகன் ஜஸ்டிஸ் மற்றும் மகள் நோமாபூ. நெல்சன் வந்ததிலிருந்தே மூவரது வாழ்க்கையிலும் களிப்பும் உற்சாகமும் களைகட்டத் துவங்கியது.

ஜோன்ஜின்டேபாவின் மனைவி, தன் இன்னொரு மகனாகவே நெல்சனை பாவித்தாள். ஜஸ்டிஸ், நெல்சனைவிட நான்கு வயது மூத்தவன் என்றாலும், நெல்சனின் தோளில் நட்போடு கை போட்டு, அழைத்துச் செல்வான். கால்பந்து, கிரிக்கெட் என விளையாட்டில் மட்டுமின்றி, ஆட்டம் பாட்டம் என அனைத்திலும் பிரகாசிப்பான் ஜஸ்டிஸ். நெல்சனோ இதற்கு முற்றிலும் தலைகீழ், விளையாட்டு, வேடிக்கைகளில் அதிகம் ஆர்வம் இல்லாத அவனுக்கு, அரண்மனையின் வேறொரு பகுதி மிகவும் ஈர்த்தது. அது ஜோன்ஜின்டேபாவின் அரசு தர்பார்.

சோஸா இனத்தில் ஏற்படும் அனைத்து பஞ்சாயத்துப் போக்குவரத்துகளுக்கும் அங்குதான் தீர்ப்பு வழங்கப்படும். ஊர் தலைக்கட்டுகளும் பெரிசுகளும் அங்கே கூடினாலே, சபை களைகட்டும். பிரச்னைகளைப் பேசித் தீர்த்த நேரம் போக, மற்ற நேரங்களில், வெள்ளை இனத்தவர்களுடன் தங்களது இனத்தவர்கள் வெறும் அம்பு வில்லுடன் நடத்திய வீர தீர சாகசக் கதைகள் ஓடும். அப்போது அனைவரது பேச்சிலும் உணர்ச்சி கொப்பளித்து வழியும்.

அவற்றைக் கேட்டபடி அமர்ந்திருக்கும் நெல்சனுக்கும் தனது மூதாதை யர்கள் பட்ட வேதனைகளின் வரலாறு, கண்களில் நீரை வரவழைக்கும். அதுவரை தனது சோஸா இனத்தைப் பற்றி மட்டுமே உயர்வாக எண்ணி வந்த நெல்சனுக்கு, அவர்களின் பேச்சுக்கள் மூலமாக ஆப்பிரிக்கா என்னும் பரந்த கண்டம், கண் முன் விரியத் துவங்கியது. ஆப்பிரிக்கக் கறுப்பர்கள் வெவ்வேறாகப் பிரிந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒன்று என்பதும், அவர்களின் பொது எதிரி வெள்ளையர்கள்தான் என்பதும், வியாபாரத்துக்காகக் கப்பலில் வந்து இறங்கியவர்கள் பின்னர் தங்களை முழுமையாக அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்கிற வரலாறும் மெள்ள மெள்ளப் புரியத் தொடங்கியது. அந்தக் கணத்தில், நெல்சனுக்குள் விழுந்தது ஒரு தீப்பொறி!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:53 am


மிகமிகத் துயரமான கண்ணீர்
ஒரு கறுப்பு நங்கையின் கண்ணீர்தான்
ஏனெனில், அவளை அழவைப்பது சுலபமல்ல!


-ரே டுரம்

முதன்முதலாக காதல் மூலிகையின் சாறு நெல்சனின் இதயத்தில் சொட்டியபோது, அவருக்கு வயது பதினைந்து. கறுத்த உதட்டுக்கு மேல் ரோமங்கள் எட்டிப் பார்க்கத் துவங்கியிருந்தன. தான் ஒருபெரிய மனிதனாகிவிட்ட தோரணையை உலகுக்கு அறிவிக்கும்விதமாக, நறுவிசான ஆடைகள் அணிந்து, ஒரு கனவானுக்கான தோரணையுடன் வலம் வருவார்.

மேக்வேணி நகரில் இருந்த மெதடிஸ்ட் தேவாலயத்தில் ஞாயிறுகளில் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெறும். ஜோன்ஜின்டேபாவின் மூத்த மகன் ஜஸ்டிசுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமை நெல்சன் அந்தத் தேவாலயத்துக்குப் புறப்பட்டார். ஜஸ்டிஸின் கண் சிமிட்டலில், அங்கு வரும் அழகான பெண்கள் குறித்த தகவலும் இருந்தது. ஆனாலும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்காதவராக நெல்சன் தன் வழக்கமான, மிடுக்கான ஆடைகளுடன், அதே சமயம் கிராமத்து மனம்கொண்டவராக தேவாலயத்தினுள் நுழைந்தார். தேவாலயத்தின் அமைதியினூடே, ஒரு பெண் புறா அடிக்கடி குறுக்கும் நெடுக்குமாகச் சடசடத்துப் பறந்தது. அவள் பெயர் விண்ணி. தேவாலய பாதிரியாரின் இளைய மகள். அவளது கண்களின் கறுப்பு, நெல்சனின் வெள்ளை இதயத்தோடு அன்று முதல் சதுரங்கம் ஆடத் துவங்கியது. பிரார்த்தனை முடிந்து தேவாலயத்துக்கு வெளியே வாசலில் கலைந்து போகும் கூட்டத்தினூடே, இருவரது கண்களும் சந்தித்துக்கொண்டன.

நெல்சன், செயல் வீரர். ஒரு பகல் பொழுதில், தேவாலயத்தின் அருகில் இருந்த மர நிழலில், விண்ணியிடம் தன் காதலைத் தெரிவித்து, சம்மதமும் பெற்றுவிட்டார். என்றாலும், நெல்சனுக்குள் ஒரு பதற்றம். காரணம், விண்ணியின் மேற்கத்திய நாகரிகமும், குடும்பத்தினரின் பணக்காரத்தனமும்!

அவர்களும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும், பாதிரியாராக இருந்ததால் உள்ளூர ஒரு வெள்ளைத்தனம் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் இருந்தன. நெல்சனோ மனதளவில் இன்னும் கூணு கிராமத்து பழங்குடிச் சிறுவனாகவே இருந்தார்.

விண்ணிக்கு ஒரு அக்கா உண்டு. பெயர் நோமாம்போண்டோ. அவ ளுக்குத் தங்கையின் காதல் பற்றித் தெரிய வர, ''வேண்டாம் விண்ணி! நெல்சன் நமக்குச் சரிவராத கிராமத்தான்'' என வெளிப்படையாகத் தடுத்தாள். ''இல்லை அக்கா! அவர் நாகரிகம் தெரிந்தவர். நம் குடும்பத்துக்கு முற்றிலும் பொருத்தமானவராக இருப்பார்'' என்றாள் விண்ணி. ''அப்படியானால், அவனை நாளை வீட்டுக்கு அழைத்து வா. அவன் எப்படி நடந்துகொள்கிறான் என்பதைப் பொறுத்து முடிவுசெய்வோம்'' எனக் கூறியதோடு, வீட்டிலும் அனைவரிடமும் இந்தத் தகவலைப் பரப்பிவிட்டாள் நோமாம்போண்டோ.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:53 am


பதினைந்தே வயதான நெல்சன், அன்று காலை வழக்கம்போல தனது தேர்ந்த உடையில் விண்ணியின் வீடு நோக்கிப் புறப்பட்டார். வீட்டை நெருங்க நெருங்க, உள்ளூர அவரது கிராமத்து மனம் நடுங்கத்துவங்கியது. ரெவெரண்ட் மட்யோலோவும் அவரது மனைவியும் மிகுந்த கண்ணியத்தோடு நெல்சனை வரவேற்றார்கள். அவர்களது கண்ணியமான வரவேற்பே நெல்சனுக்குள் இன்னும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அறிமுகப் படலங்களுக்குப் பிறகு, உணவு மேஜைக்கு நெல்சன் அழைக்கப்பட்டார். அங்கு அவருக்கான பரீட்சை காத்திருப்பது தெரியாமல், அவர்களோடு ஒருவராக மேஜை முன் அமர்ந்தார்.

உணவு பறிமாறப்பட்டது. வறுத்த கோழி இறைச்சியை, பாதிரியார் குடும்பத்தினர் முள் கரண்டியாலேயே லாகவமாக வெள்ளையர்களைப் போலச் சிறிது சிறிதாகத் துண்டித்துச் சாப்பிட, அதுவரை அப்படிச் சாப்பிட்டுப் பழக்கமில்லாத நெல்சனுக்கு வியர்த்துக் கொட்டியது. அனைவரின் கண்களும் தன்னை ஓரக்கண்ணால் வேவு பார்ப்பதை அறிந்துகொண்டதாலோ என்னவோ, அவர் கையில் பிடித்திருந்த முள் கரண்டிகளுக்கு நடுவே இறைச்சித் துண்டு சிக்காமல் நழுவி நழுவி விளையாட்டுக் காட்டத் துவங்கியது. தனது எண்ணம் பலித்துவிட்ட சந்தோஷத்தில் நோமாம்போண்டோ வெற்றிப் புன்னகை பூக்க, விண்ணியோ தன் கண் எதிரே காதலன் படும் அவமானங்களைக் காணச் சகியாதவளாகத் தலை திருப்பிக்கொண்டாள். ஒரு கட்டத்தில் அனைவரும் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நெல்சனையே வேடிக்கை பார்க்க... சட்டென நெல்சன் இறைச்சித் துண்டைக் கையால் எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.

அதன்பின், இரண்டு நாட்கள் கழித்து விண்ணியைத் தேடி, அவள் வீட்டுக்குச் சென்றார் நெல்சன். விண்ணி வெளியே வர மறுத்து விட்டதோடு, இனி தன்னைப் பார்க்க வர வேண்டாம் எனக் கூறிவிட்டதாக அவளின் அக்கா நோமாம் போண்டோ கூறி, கதவை அடைத்தாள். நெல்சன் கனத்த இதயத்துடன் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

நெல்சனுக்குப் பதினாறு வயது. சோஸா இன வழக்கப்படி, ஓர் ஆண் மகனுக்கு 16 வயது ஆகிவிட்டால் அவன் முழுமையான மனிதனாகி விடுகிறான். அந்த வைபவத்தை அங்கீகரிக்கும் வகையில், குல வழக்கப்படி ஒரு சடங்கு நடக்கும். இந்தச் சடங்கைக் கடந்து வரும் ஆண்களுக்கு மட்டுமே சோஸா இனப் பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பர். இஸ்லாமியர்கள் செய்துகொள்ளும் சுன்னத் போலவே இந்தச் சடங்கும் என்றாலும், நான்கு நாட்களுக்கு முன்னதாகவே இன்னும் பலசம்பிரதாயங்கள் துவங்கிவிடும். இந்தச் சம்பிரதாயங்களின்படி, நெல்சனுடன் சோஸா இளைஞர்கள் 26 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனைவரும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மாபேசே நதிக் கரை அருகே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட குடிசைகளுக்குக் கொண்டுவரப்பட்டனர். அனைவரது ஆடைகளும் அகற்றப்பட்டு, அவர்களின் உடல் முழுக்க மந்திர வரிகள் வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்டன. அதன் பிறகு நான்கு நாட்களும் அவர்களின் ராஜாங்கம்தான். அவர்கள் முன் விரிந்து கிடந்த சுதந்திரத்தின் காரணமாக, திருட்டுத்தனமாக வேட்டையாடுவது, அருகில் வசிக்கும் பழங்குடிப் பெண்களிடம் சேர்ந்து ஆட்டம், பாட்டு என இரவுகள் முழுக்க அந்த நதிக் கரையில் உற்சாகமும் கும்மாளமுமாகப் பொழுதைக் கழித்தனர்.

சடங்கின் இறுதி நாளன்று, காலை விடியுமுன்னே கருக்கலில் அனைவரும் ஓடிச் சென்று ஆற்றில் குதித்தனர். பின் தங்களது குடிசை முன் வரிசையாக வந்து நின்றனர். குலப் பெரியவர்கள் மூதாதையர்களை அழைத்தபடி, கைகளில் கத்தியு டன் அவர்கள் முன் வந்து நின்று, மந்திரங்கள் ஓதி, சடங்குகள் செய்தனர். வாத்தியங் கள் பலமாக பின்னணி இசைக்க, வரிசை யில் முதலாவதாக நின்றவன், 'தியின்டோடா' என உரக்க அலறினான். 'தியின்டோடா' என்றால், 'நான் இன்று முதல் பெரிய மனிதனாகிவிட்டேன்' என்று அர்த்தம். நெல்சனின் முறையும் வந்தது. 'தியின்டோடா' என நெல்சனின் குரல் அதிர்ந்தது. சடங்குகள் முடிந்த கையோடு பிரத்யேகமாகக் கட்டப்பட்ட அந்த இரண்டு குடிசைகளையும், அந்த இளைஞர்களின் முன்பாகவே குலப் பெரியவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். அதோடு அவர்களது விளையாட்டுத்தன மான சிறு வயதுப் பருவம் முடிந்து, வீரமும் தைரியமும் பொறுப்பும் நிறைந்த இளைய பருவம் துவங்குவதாகக் கூற, தான் இப்போது முழுமையான ஆண் மகனாக மாறிவிட்டிருப்பதை உணர்ந்தபடி, தன் முன் எரிந்துகொண்டு இருக்கும் குடிசைகளின் நெருப்பையே கூர்ந்து கவனித்தார் நெல்சன்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:53 am


சடங்குகளை நடத்திய பெரியவர் மெலிக்யுலி, அனைவரையும் தன் சைகையால் அமரச்செய்து, உரையாற்றத் துவங்கினார். ''நாம் இன்று அடிமைகளாக இருக்கிறோம். நமது வளமான தேசங்கள் வெள்ளையர்களின் கைகளில் இருக்கின் றன. நம்மைப் பெற்ற தாயை நாம் நமது கோழைத்தனத்தால் பலி கொடுத்துவிட்டு, இன்று அவர்களிடம் அடிமையாக வேலை செய்து உயிர் வாழ்கிறோம். இந்த அவமானத்திலிருந்து நாம் என்று விடுபடப் போகிறோம்?'' என்று அவர் பேசப் பேச, நெல்சனின் மனமும் உடலும் முறுக்கேறத் துவங்கின.

மறுநாள் வீடு திரும்பிய பிறகு, ஜோன்ஜின்டேபா கூறிய ஆப்பிரிக்க வரலாறுகள், நெல்சனைத் தன் எதிர்காலக் கடமைகள் குறித்து ஆழமாகச் சிந்திக்கவைத்தன.

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன்... ஏப்ரல் 6, 1652.

இதுதான் அந்தக் கறுப்பு நிலத்தில் முதன்முதலாக ஒரு வெள்ளை யன் கால் பதித்து அழுக்கை உண்டாக்கிய நாள். நெதர் லாந்திலிருந்து ஒருடச்சுக் கப்பலில் வந்து இறங்கிய ஜேன் வேன் ரிபீக் மற்றும் அவனு டன் காய்கறி இறைச்சி வியா பாரங்களுக்காக வந்த 90 பேரும் பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் வியாபாரத்தை விஸ்தரித்தனர். இதனால், வில் அம்புகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் சண்டைகள் நடந்தன. பழங்குடிகள் பெரும்பாலோர் விரட்டி யடிக்கப்பட... எஞ்சியவர்கள் அடிமைகளாகப் பணியமர்த்தப் பட்டனர். 1795ல் பிரிட்டிஷ் படை நுழைந்து, டச்சு வீரர்களை விரட்டி விட்டு, தென் ஆப்பிரிக்கா முழு வதையும் தன்வசமாக்கிக்கொண்டது. இதனை ஆப்பிரிக்காவின் சுலு இன வீரர்கள் பெரும்படை திரட்டி, மீண்டும் எதிர்த்தனர். வழக்கம் போல இந்த முறையும் தோல்வி. அதன் பின், தென் ஆப்பிரிக்கா முழுவதும் பிரிட்டிஷாரின் வசமானது.

அதுவரை, வேளாண்மை நிலமாக இருந்த ஆப்பிரிக்கா இரண்டு முக்கியக் கண்டுபிடிப்புகளின் விளை வாக, தொழில்வளம் மிக்க பூமியாக மாறியது. அத்தனை நாளும் ஆப்பிரிக்கச் சிறுவர்கள் உருட்டி விளையாடி வந்த கற்கள், ஒரு பிரிட்டிஷ்காரனின் பார்வையில் பட, அவன் அந்தக் கற்களை வாங்கிப் பார்த்ததும் மிகுந்த ஆச்சர்யத்துக்கு ஆளானான். அவை வெறும் கற்கள் அல்ல; வைரங்கள்! அப்புறம் கேட்க வேண்டுமா... அந்தப் பகுதிகளில் இருந்த கறுப் பினத்தவர்கள் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டார்கள். அது வெள்ளையர்களின் பண்ணையாக மாறியது. வைரச் சுரங்கங்கள் தோண்டப்பட்டன. தங்களுக்குச் சொந்தமான அந்த நில வளங்களைத் தாங்களே தோண்டி எடுத்துத் தலையில் சுமந்து, வியர்க்க விறுவிறுக்க நடந்து, வெள்ளையர்களிடம் தங்களது உழைப்பையும் பொருட்களையும் கொடுத்து அடிமைகளாகக் கூனிக் குறுகி நடந்தனர் பழங் குடிகள்.

1886ல் ஜொஹா னஸ்பர்க்கில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப் பட, வெள்ளையர்களின் வளம் கொழிக்கும் நாடாக மாறியது ஆப்பிரிக்கா. இதனால் ஏற்கெனவே அங்கு குடியேறிய டச்சு வம்சாவளி வெள்¬ளையர் களுக்கும் பிரிட்டிஷ் வெள்ளையர் களுக்கும் 1889ல் போர் மூண்டது. போரின் முடிவில் இரு தரப்பினரும் சமாதான உடன்படிக்கைகள் செய்துகொண்டனர். அதன்படி, இரண்டு வெள்ளை இனத்தவர்களும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள, மண்ணின் மைந்தர்களான கறுப்பினத்தவர்கள் ஆட்சி, அதிகாரம், வாக்குரிமை என அனைத்திலிருந்தும் ஓரங்கட்டப்பட்டனர்.

தங்களின் முழுமையான இந்த வரலாற்றைத் தன் வளர்ப்புத் தந்தையான ஜோன்ஜின்டேபாவிடமிருந்து நெல்சன் தெரிந்துகொண்ட அன்று இரவு, அவருக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத் தார்.

'தன் மக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளுக்கு யார் தீர்ப்பு கொடுக்கப்போகிறார்கள்? இந்தச் சமூகம் என்றைக்கு முழு விடுதலை பெறும்?' என்ற கேள்விகள் அவரைக் குடைந்துகொண்டே இருந்தன.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:54 am


இரவு அழகானது
எம் மக்களின் முகங்களும்
நட்சத்திரங்களும் அழகானவை
எம் மக்களின் கண்களும்
சூரியனும் அழகானவன்
எம் மக்களின் ஆத்மாக்களும்!

- லாங்ஸ்டன் ஹ்யூஸ்

வாலிபத்தில் நெல்சனின் புன்னகை, அவர் படித்துக்கொண்டு இருந்த க்ளார்க் பரி பள்ளியில் பிரசித்தம். மழைக்காலத்தில் இலைகளின் மீது படிந்திருக்கும் நீர் முத்துக்களைப் போல, அவரது கண்கள் தெள்ளியதாகவும் குளிர்ச்சியானதாகவும், அங்கிருந்த சக மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் வசீகரித்தன. அங்குதான் அவரது மனதுக்குள் புதிய புதிய உலகங்கள் விரியத் துவங்கின.

வெள்ளை இனத்தவரைப் பார்த்ததுமே, நாம் அடங்கிப்போக வேண்டும் என்கிற தாழ்வு மனப்பான்மை இயல்பாகவே எல்லா கறுப்பினத்தவருக்குள்ளும் இருப்பது போல, மண்டேலாவுக்கும் இருந்தது. அது, அந்தப் பள்ளியின் கறுப்பின ஆசிரியரான மா(ஹ்)லாசேலாவைப் பார்க்கும் வரைதான்!

வெள்ளைத் தலைமை ஆசிரியருக்குத் தலைவணங்காத அவரது கம்பீரமான நிமிர்ந்த நடையும் தன்னம்பிக்கை மிளிரும் முகமும், மண்டேலாவின் மனதில் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அதன்பின், ஒவ்வொரு வெள்ளையரைப் பார்க்கும்போதும் மண்டேலாவின் மனதில் ஆசிரியர் மா(ஹ்)லாசேலாவின் முகம் தோன்ற, அடுத்த விநாடியே இவரது உடலிலும் ஒரு திமிர் பிறக்கும். தலை தானாக நிமிரும்.

மனிதருக்கு மனிதர் சமம். நிறங்களால் எவரும் மேன்மையானவரும் இல்லை; அடிமையானவரும் இல்லை. மண்டேலாவின் அடி மனதில் அழுத்தமாகப் பதிந்த இந்த உணர்வே, அது தொடர்பான அடுத்தடுத்த சிந்தனைகளுக்கும் எதிர்கால அரசியலுக்கும் வித்தாக அமைந்தது.

க்ளார்க் பரியில் பி.ஏ., படிப்பு முடிந்ததும், மேல்படிப்புக்காக ஹீல்டு டவுன் கல்லூரி அவரை வரவேற்கக் காத்திருந்தது. ஆண்களும் பெண்களுமாக கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த அந்தக் கல்லூரிதான் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய கல்லூரி. வழக்கம் போல தனது தனித்த தோற்றத்தாலும் தலைமைப் பண்பு மிக்க நடவடிக்கைகளாலும், ஹீல்டு டவுன் கல்லூரியிலும் கதாநாயகனாகப் பிரகாசித்தார் மண்டேலா.

மூன்றாம் ஆண்டின் இறுதி நாளையட்டி, ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது கல்லூரி. விழாவின் சிறப்பு விருந்தினராக கறுப்பினக் கவிஞர் மெக்காயி வருவதாகக் கேள்விப்பட்டதிலிருந்து, மாணவர்கள் மத்தியில் உணர்ச்சி அலைகள் கொந்தளிக்க ஆரம்பித்தன. விழா நாளன்று, மைதானத்தில் மாணவர்கள் ஆவலோடு பெரும் திரளாகக் கூடியிருந்தனர். சட்டென வாசலில் பரபரப்பு. கல்லூரியின் வெள்ளை இன அதிகாரிகளும், ஆசிரியர்களும் எழுந்து நிற்க, புலித் தோல் அணிந்தபடி மெக்காயி, சிவப்புக் கம்பள விரிப்பில் ஒரு சிங்கத்தைப் போல நடந்து வந்தார். வெள்ளையர்கள் நடத்தும் ஒரு கல்லூரியில், வெள்ளையர்களே மரியாதையாக எழுந்து நிற்க, ஒரு கறுப்பு இனத்தவர் நடந்து வருவதைக்கண்ட மண்டேலாவின் உள்ளம் பெரும் களிப்பில் மிதந்தது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:54 am


அரங்கம் அமைதியில் உறைய, அனைவரின் காதுகளும் மெக்காயியின் உரைக்காக ஆவலுடன் காத்திருந்தன.

தன் கையில் பிடித்திருந்த குத்தீட்டியை உயர்த்தியவாறு பேசத் துவங்கினார் மெக்காயி. யாரும் எதிர்பாராதவிதமாக சட்டென அந்தக் குத்தீட்டி, அவரது தலைக்கு மேல் சென்றுகொண்டு இருந்த மின்கம்பியை உரச, தீப்பொறிகள் பறந்தன. அனைவரும் திடுக்கிட்டனர். ஒரு நிமிடம் அதிர்ச்சியுடன் அந்தக் கம்பியையே பார்த்துக்கொண்டு இருந்த மெக்காயி, பின்பு மாணவர்களிடம் திரும்பி, ''தோழர்களே! இதை வெறுமே குத்தீட்டிக்கும் மின் கம்பிக்கும் இடையில் நடந்த மோதலாக நான் கருதவில்லை. ஆன்ம சக்தி நிரம்பிய நம் ஆப்பிரிக்க மரபுக்கும் உயிரோட்டமே இல்லாத மேற்கத்திய நாகரிகத்துக்கும் நடக்கும் இன்றைய கலாசார மோதலாகவே காண்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போராக இதைக் கருதுகிறேன்'' என்று பேசத் துவங்க, மாணவர்களிடையே கைதட்டல்கள் அதிர்ந்தன. அங்கே அமர்ந்திருந்த வெள்ளை இனத்தவர்களின் முகங்களில் அதிர்ச்சி!

மெக்காயி மேலும் ஆவேசத்துடன் தன் கைகளை வானுக்கு உயர்த்தி, கவிதை வாசிக்கத் துவங்கினார். ''உலகப் பேரினங்களே, வாருங்கள்! என் முன் விரிந்துகிடக்கும் அண்ட சராசரங்களை உங்களுக்காகப் பங்கிடுகிறேன். ஐரோப்பாவின் பிரெஞ்சு, ஜெர்மானிய, ஆங்கில தேசங்களே... முதலில் உங்களுக்காக, உங்களின் கர்வத்துக்கும் தற்பெருமைக்கும் இணையாக அந்த பால் வழிமண்டலங்களைப் பரிசாகத் தருகிறேன். எடுத்துச் செல்லுங்கள்! அடுத்ததாக... ஆசிய, அமெரிக்க தேசங்களே! நீங்கள் மீதம் இருக்கும் நட்சத்திரங்களையெல்லாம் எடுத்துச் செல்லுங்கள். கடைசியாக, என் ஆப்பிரிக்க சோஸா கறுப்பின மக்களே! உங்களுக்காக நான் மீதம் வைத்திருப்பதெல்லாம் ஒரே ஒரு நட்சத்திரம்தான்! அது கிழக்கிலே தினமும் முதலில் உதிக்கும் வெள்ளி நட்சத்திரம். எந்தக் காலத்திலும் அது உங்களுக்குள் போராட்ட உணர்வை வற்றாமல் மீண்டும் மீண்டும் ஊற்றெடுக்கவைக்கும்'' என்ற அர்த்தம் பொதிந்த பாடலை, மெக்காயி கைகளை விரித்தபடி அங்குமிங்கும் நடமாடிக்கொண்டே பாடி முடித்ததும், மாணவர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் ஆரவாரித்தனர்.

மண்டேலாவின் உள்ளத்தில் அந்தப் பாடல் வரிகள், பெரும் வெடிப்புகளை ஏற்படுத்தின. உண்மையில் அவருக்குத் தானும் சோஸா இனத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமையும் சந்தோஷமும் இருந்தாலும், கேள்விகள் பல எழுந்தன. 'ஆப்பிரிக்காவில் சோஸா இனம் தவிர, பல்வேறு கறுப்பினக் குழுக்கள் இருக்கிறதே... அவர்களும் நம்மைப் போல ஆங்கிலேய ஆதிக்கத்தால் துன்பப்படுகிறார்களே, அவர்களைப் பற்றி யார் கவலைகொள்வது? இனி, நான் வெறுமே சோஸா இனத்துக்கானவன் மட்டுமல்ல; ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவும் என் தாய் மண். ஆப்பிரிக்காவின் அனைத்து கறுப்பினத்தவனும் என் சகோதரன்' என்று உறுதி பூண்டார்.

க்ளார்க் பரி, ஹீல்டு டவுன் எனப் படிப்படியாக வளர்ந்த அவரது கல்வியும் அரசியல் அறிவும், மேல்படிப்புக்காக வந்த ஹாரே கோட்டைக் கல்லூரியில் தான் பூரணம் அடைந்தது. இங்கு வந்த பிறகுதான் வாழ்க்கையில் முதன்முறையாக சோப்பு, பற்பசை ஆகியவற்றைப் பயன்படுத்தினார் மண்டேலா. அவர் கோட் சூட் அணியத் துவங்கியதும் இங்கு வந்த பிறகுதான். கல்லூரி மாணவர் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மண்டேலா, மாணவர்களுக்கு விடுதியில் வழங்கப் படும் மோசமான உணவை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கினார். 'கல்லூரியை விட்டு அனுப்பிவிடுவோம்' என எச்சரித்தது கல்லூரி நிர்வாகம். ''உங்களது மிரட்டல்களால் எனது உணர்வை மழுங்கடிக்க முடியாது. போராட்டத்திலிருந்து ஒருபோதும் நான் பின்வாங்க மாட்டேன்'' என மண்டேலா உறுதியாகக் கூறவே, சொன்னபடியே செய்துவிட்டது நிர்வாகம். எனவே, மண்டேலா பாதியிலேயே படிப்பை முறித்துக்கொண்டு, மேக்வேணிக்குத் திரும்ப நேரிட்டது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:54 am


மன்னர் ஜோன்ஜின்டேபாவுக்கு மண்டேலா மீது கடும் அதிருப்தி! ''போய் மன்னிப்புக் கேட்டு, மீண்டும் கல்லூரியில் சேர்கிற வழியைப் பார்!'' என்று அறிவுறுத்தினார். ஆனால், மண்டேலாவின் தன்மான உணர்ச்சி அதற்குப் பிடிவாதமாக மறுத்துவிட்டது. அந்தச் சமயம், மன்னரின் மூத்த மகனான ஜஸ்டிசும் விடுமுறைக்காக அரண்மனைக்குத் திரும்பியிருந்தான். இருவரும் மீண்டும் ஒன்றாகச் சேர்ந்த சந்தோஷத்தில், தங்களின் வாழ்க்கைக்குப் புதிய வண்ணங்களைப் பூசிக்கொள்ள விரும்பி, வெளியில் சுற்ற ஆரம்பித்தனர். வயதும் இளமையும் அவர்களை வீட்டில் இருக்கவிடாமல் விரட்டிக்கொண்டே இருந்தது.

இந்தத் தருணத்தில்தான், சோஸா இன கோயில் குருவின் மகள் மேல் மையல் கொண்டான் ஜஸ்டிஸ். நண்பனின் காதலுக்குத் தூது செல்வது மண்டேலாவின் தலையாய பணி. ஜஸ்டிஸின் காதல் தீ குபுகுபுவெனப் பற்றி எரிந்துகொண்டு இருந்த நேரத்தில், மன்னருக்கும் அவரது மனைவிக்கும் இவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழ, உடனே நம்மூரில் சொல்வது போல 'காலாகாலத்தில் பையனுக்கு ஒரு கால்கட்டு போட்டால்தான் சரிப்படுவான்' என முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக இறங்க ஆரம்பித்தனர்.

ஒரு நாள், ஜஸ்டிஸ், மண்டேலா இருவரையும் அழைத்தார் ஜோன்ஜின்டேபா. ''எனக்கு வயதாகிவிட்டது. நான் கண் மூடுவதற்குள் பேரனோ, பேத்தியோ பார்த்துவிட்டுப் போக வேண்டும்'' என்றெல்லாம் பீடிகை போட்டு, இறுதியாக இருவருக்கும் பெண் பார்த்து முடித்துவிட்டதாகவும், கல்யாணத் தேதி நிச்சயிக்க வேண்டியதுதான் பாக்கி என்றும் சொல்ல, இருவருக்கும் அதிர்ச்சி!

அடுத்து அவர், இவர்களுக்காகப் பார்த்திருக்கும் பெண்களைப் பற்றிச் சொல்ல, அது அதைவிடப் பேரதிர்ச்சி தருவதாக இருந்தது. ஜஸ்டிசுக்குப் பார்த்திருந்த பெண்கூடப் பிரச்னை இல்லை; பணக்கார, தெம்பு வம்சத்துப் பெண். ஆனால், மண்டேலாவுக்கு அவர் பேசி முடித்த பெண் யார் தெரியுமா? தன் நண்பன் ஜஸ்டிசுக்காக, மண்டேலா எந்தப் பெண்ணிடம் தூது சென்றாரோ, அதே பெண்!


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக