புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
48 Posts - 45%
heezulia
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
3 Posts - 3%
jairam
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
1 Post - 1%
சிவா
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
14 Posts - 4%
prajai
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
6 Posts - 2%
Jenila
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
3 Posts - 1%
Rutu
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Oct 14, 2013 8:39 am

தமிழ்ச் செல்வங்கள்: அம்மா- 1 - நன்றி : தினமணி

குழந்தைகளுக்குப் "பிறந்த நாள்' கொண்டாடுகிறோம். "பெயர்சூட்டு நாள்' என ஒரு விழாக் கொண்டாடுகிறோம். இவ்விரண்டு விழாக்களையும், குழந்தை பிறந்த சில நாள்களிலேயே, தன் தாய்க்குச் சூட்டிக் கொண்டாடிவிடுகிறது குழந்தை!

பேசாக் குழந்தையா? பிறந்த சில நாள்களிலேயா? வியப்பின் மேல் வியப்பாக இருக்கிறது! ஆனால், உண்மைதான் என்பதைக் குழந்தைகள், தொடர் விழாவாகக் கொண்டாடிக்கொண்டே உள்ளன! நாம்தான் கண்டு கொள்ளவில்லை.

குழந்தை தாயிடம் பால் பருகுகின்றது; பசித்த குழந்தை, பசி தாங்காக் குழந்தை, "அம்' "அம்' என்று பால் பருகுகின்றது. பால் பருகுங்கால் எழும் நுண்ணொலி "அம், அம்' என்று ஒலிப்பதை நாம் இன்றும் கேட்கலாம்!

"அம்மம்' பால் ஆயது; பால் தருபவர் "அம்மா' ஆனார்! "அம்' இயல்பாக வாய் மூடியவுடன் உண்டாகும் ஒலி. "மா' மூடிய வாயை அகலத் திறந்ததும் உண்டாகிய ஒலி. இரண்டையும் இணைக்க "அம்மா' என்னும் இயற்கைச் சொல் உண்டாகி விடுகின்றது.

ஆழ்வார்களுள் ஒருவர் பெரியாழ்வார்! அவர் கண்ணனை "அம்மம்' உண்ண அழைக்கிறார்.

""அரவணையாய்! ஆயர் ஏறே!
அம்மம் உண்ணத் துயிலெழாயே''
(நாலா.128)

அன்னை கண்ணனுக்கு ""இன்னமுது அன்றி, அம்மந் தாரேன்'' என்பதாகப் பத்துப்பாடல் பாடுகிறார் (233).

"அம் அம்' என்னும் ஒலிக்குறிப்பு பாலுக்கும், பாலூட்டும் தாய்க்கும் ஆகிய அளவில் நின்றதா? "அம்மு' எனவும் அதற்குப் பெயராயிற்று. அம், அம்மா என விளியாயது, "அம்மை' எனப் பெயராகியது. அம்மா என்பது அம்மோ, அம்மே, எம்மோ, எம்மே, எம்மோய் என்றும், அம்மம்மா, அம்மம்ம, அம்மம்மே, அம்மம்மோ, அம்மானாய், அம்மாடியோ என்றும் வேறு பலவாறும் விரிந்தது.

அம்மையைப் பெற்றவளை அம்மாத்தா, அம்மாயி, அம்மாச்சி என வழங்க உதவியது. அம்மை உடன்பிறந்தார் அம்மான், அம்மானார் எனப்பட்டார். அது பொருளால் விரிவுற்றதோ பெரிது. அடுத்துக் காணலாம்.

-தொடர்வோம்...



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Oct 14, 2013 8:41 am

தமிழ்ச் செல்வங்கள்: அம்மா - 2

ஓருவன் வயிறு முட்ட உண்கிறான்; உள்ளவற்றையெல்லாம் - வைத்தவற்றை எல்லாம் - பிறருக்கும் வேண்டுமே என்ற எண்ணமே இல்லாமல் உண்கிறான். அவன் உண்டு போனபின் "அமுக்கு அமுக்கு' என்று அமுக்கிவிட்டான்! பானை, சட்டி எல்லாம் காலி! அவனுக்கென்ன, வயிறு அண்டா குண்டாவா? தாழிப்பானையா?' எனப் பொறுமுகின்றனர். மூக்கில் விரல் வைத்து நோக்குகின்றனர்! அம்மில் இருந்து வயிறு முட்ட உண்ணல் அமுக்குதலுக்கு ஆகிவிட்டது. "அமுக்கு அமுக்கு' என அமுக்கி விட்டான் என்று கூறுகின்றனர்.

அமுக்குதல் விரிந்தது; ஓடு, தகரக் கூரைகளுக்கும், தாள், தட்டை வைக்கோல் போர்களுக்கும் அமுக்கு வைத்தல், அமுக்குப் போடுதல் உண்டு! கரவானவனை "அமுக்கடிக்காரன்' என்பதும் மக்கள் வழக்கு.

சட்டையில் பொத்தல் இட்டு அதனைப் பொத்தி மூடப் "பொத்தான்' வைத்தல் தையல்கடை வேலை. பொத்தான் வகையுள் அமுக்குப் பொத்தான் என்பது ஒன்று. சட்டையைப் பொத்தல் இடாமல் சட்டைமேல் வைத்துத் தைத்து, அதன்மேல் அமுக்கி மூடுமாறு மூடு பகுதியை ஒரு பக்கத்தில் வைப்பது அமுக்குப் பொத்தான் எனப்படும். அமுக்கு என்பது ஏவல்! கால் கை முதலியவற்றில் எண்ணெய் தேய்த்தல், தலையில் எண்ணெய் தேய்த்தல், முதுகு தேய்த்தல் ஆகியவற்றில் அமுக்கித் தேய்த்தலும், அமுக்கித் தேய்க்க ஏவுதலும் மக்கள் வழக்கு!

சொன்ன சொல்லைக் கேளாமல் தட்டிக் கழிப்பாரையும், எதிரிட்டுப் பேசுவாரையும், ""உன்னை ஓர் அமுக்கு அமுக்கினால்தான் சரிப்பட்டு வருவாய்'' என்பார் உளர்.

இசையரங்கில் பாடத் தொடங்குவோர் "அம்' என்று தொடங்கி மெல்லென ஒலித்து மேல் மேல் செல்லல் வழக்கம். ""அம் எனும் முன் ஆயிரம் பாட்டுப் பாடுவேன்'' என்பது புலவர் தருக்கு மொழி. அவ்வளவு விரைந்து பாடவல்லாராம் அவர்.

குழந்தை தந்த "அம்' என்னும் ஒலி பொதுமக்களுக்கும், புலமையாளர்க்கும் மேலும் சுவையூட்டி வளர்ந்தமை வியப்பாகும்! அம்மா, அம்மை என்பன, எம் அம்மை, எம்மை (தன்மை);

நும் அம்மை, நும்மை (முன்னிலை);

அவன் அம்மை, தம் அம்மை, தம்மை (படர்க்கை) ஆயது! அம் ஆகிய மெல்லினம் (ம்) "அன்' ஆகியது.

அன்னை, அன்னா, அன்னாய், அன்னே என விரிந்தது. ""அன்னே உன்னை அல்லால் ஆரை நினைக்கேனே'', ""அடித்த போதும் அன்னா என்னும் குழவி போல'' எனப் புலமையாளர்களிடம் கிளர்ந்தது. அன்னை, அன்னா - இறைமைப் பொருள் தந்த வகை இது.

அம் ஆகிய மெல்லினம் "ஞ்' ஆகத் திரிந்தது! அஞ்ஞை, அஞ்ஞா, அஞ்ஞே என விரிந்தது. இவையும் அன்னை, என்னை, நின்னை, நுன்னை, தன்னை எனவும் அஞ்ஞை, எஞ்ஞை, நஞ்ஞை, நுஞ்ஞை எனவும் பெருகியது. "அஞ்ஞை நீ ஏங்கி அழல்' என்பது சிலம்பு. அஞ்ஞை மக்கள் வழக்கில் இன்றும் கேட்கலாம். "அம்' மேலும் விரிந்ததைக் காண்போம்.

தொடர்வோம்...



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 14, 2013 1:51 pm

அமுக்கு என்றால்? மிதிப்பதா? 

அருமையான கட்டுரை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 20, 2013 7:42 pm

தமிழ்ச் செல்வங்கள் - அம்மா 3

அம்' என்பதில் இருந்து அம்மம், அம்மா உண்டாயதையும் அறிந்தோம். அம்மம் ஆகிய பாலின் சுவையும் பயனும் எவரையும் கவர்ந்தது. உயர்ந்ததாகவும், உயிர் வளம் பெருக்குவதாகவும் புலப்பட்டது. அதனால், அமுது, அமிர்து, அமிழ்து, அவிழ்து என்பவை தோன்றின. அவை, அமுதம், அமிர்தம், அமிழ்தம், அவிழ்தம் எனவும் விரிந்தன. புலமையாளர்களையும் இச்சொற்கள் ஈர்த்தன.

அமிழ்து தந்தவளை, தருபவளை அமிழ்தாகவே கண்டார் திருவள்ளுவர்.



""உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள்'' (1106)



என்றார். அமிழ்து தந்த குழந்தையை, "அமிழ்து' என்றார். குழலையும் யாழையும் வெல்லும் குழந்தையின் மழலை என்ற அவர், அக்குழந்தை தொட்ட உணவு, அமிழ்தினும் மிகச் சிறந்தது என்றார்.



""அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்'' (64)



என்பது அது. இளங்கோவடிகள் மழலைச் சொல்லை, ""குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த மழலை'' என்றார்.

பாரதிதாசனார், ""தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத் தமிழெங்கள் உயிருக்கு நேர்'' என்று தமிழையே அமிழ்தாக்கினார்.

"தமிழ் தமிழ்' என்று பலமுறை அடுக்கிச் சொன்னால் "அமிழ்து அமிழ்து' என்று வருவதை நாம் அறியலாம்! உணர்ந்து சுவைத்துப் போற்றலாம்! தமிழ் அமிழ்து ஆயதால், அதன் சுவையை எண்ணிய நிகண்டு ஆசிரியர், ""தமிழென்ப இனிமை முத்தி'' என்றார்.

தமிழ், தொல்காப்பியரால் "செந்தமிழ்' எனப்பட்டது. செம்மையாவது கலப்படமற்றது - தூயது - என்பதாம். அதனால் தூய மழை நீரைத் திருவள்ளுவர் "வானமிழ்து' என்றார்.



""வானின் றுலகம் வழங்கி வருதலால்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று'' (11)



என்பது அது. தாய் தரும் பால் "அமிர்தப் பால்' எனப்படுகிறது. காதற் குழந்தையொடு காதற்ற

லைவி சொல், ""அமிழ்து பொதி கிளவி'' எனப்படுகிறது. கிளவி - சொல்.

பெருமாள் கோயில் திருவுணவுகளைப் பார்த்தால் பாலமுது, சாற்றமுது, சோற்றமுது, நீரமுது என நீளும். கடல் தரும் அமுது உப்பு. "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. ஆதலால், உப்பு என்பதற்குச் சுவை, இன்பம் ஆகிய பொருள்கள் உண்டாயின.

""உப்பமைந்தற்றால் புலவி'',

""நின் மெய் வாழ் உப்பு'' என்று புலமையர்

கூறினர்.

நோய் துன்பம் தருவது; துன்பம் நீக்கி இன்பம் ஆக்கும் மருந்து அவிழ்து, "அவிழ்தம்' எனப்பட்டது. நோய்க்குப் "பிணி' என்பது ஒரு பெயர். பிணி என்பது கட்டு. கட்டை அவிழ்த்து உலவ விடுவது அவிழ்து எனவும் அவிழ்தம் எனவும் ஆயது. ஆதலால் "சாவா மருந்து' என்பதற்கு அமிழ்து, அமுது என்றனர். அதனைக் கண்ட புனைவாளர்

அமிழ்தம் (அமிர்தம்) உண்டவர் அமரர் எனப் புனைந்தனர்.

தொடர்வோம்...



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Oct 28, 2013 9:02 am

அம் என்பது விரியும் வகையைக் கண்டோம். தமிழுக்குத் தனிச் சிறப்பான எழுத்துகளுள் தனிச் சிறப்பான எழுத்து "ழ'கரம்! அதனால் அதனைச் சிறப்பு "ழ'கரம் என்றனர். சிறப்பு "ழ'கரம் அமைந்த சொற்களைச் சரியாக ஒலிக்காமல் பொது "ள'கரம் போல் பலர் ஒலிப்பதால் அதன் அருமை விளங்குவதில்லை. "ழ'கரம் என்றே ஓர் இதழ் தொடங்கித் தொடர்ந்து வந்துகொண்டும் உள்ளது.

÷"ழ'கரம் சேர்ந்த சொல், சொல்வார்க்கும் கேட்பார்க்கும் இன்பம் தரும். தமிழ், மழலை, அழகு, எழில், பொழில், ஒழுக்கம், விழுப்பம் - இப்படிச் சொல்லிப் பாருங்கள்! இப்படிச் சொல்லிச் சொல்லிப் பார்த்துச் சுவைகண்ட தொல்காப்பியர், ""இழுமென் மொழியால் விழுமியது பயிலல்'' என இலக்கணம் சொல்லும் போதே, அதற்கு இலக்கியமும் படைத்தால்போல் கூறினார்.

÷"சிறந்த ஒன்றைச் சொல்ல வேண்டுமா?,

ழகரமொடு கூடிய இனிய சொல்லால் கூறுக' என்றார். மழலையைப் பற்றி முன்னரே கண்டோம். கொஞ்சு தமிழ்க் குமரகுருபரர் சொக்கனைச் சொக்கிப் போக வைக்கும் சொக்கியை, எப்படிச் சொக்கும் ஓவியம் தீட்டுகிறான் என்பதைக் கூறுகிறார்.

÷""அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே'' என்கிறார். தீட்டுபவனை ஒருவன் - ஒப்பற்றவன் - என்கிறார். அவன் யாருக்கோ தீட்டவில்லை - எதிலேயோ தீட்டவில்லை என்பாராய்த், ""தன் திருவுள்ளத்தில்'' தீட்டுகிறான் என்கிறார்.

÷இலக்கணப் புலமையர் தொடை வகையுள் "வழி எதுகை' என ஒன்று கண்டனர். முதலெழுத்து அளவாய் ஒத்திருக்க, இரண்டாம் எழுத்து வந்த எழுத்தாகவே வருதல் எதுகை என்னும் இலக்கணமாம். வழியெதுகை வரும் அடியின் சீர்களில் எல்லாம் அல்லது பலவும் அவ்வெதுகை அமைவிலேயே வருதலாம்.

÷"கற்றதனால் ஆய பயன்என் கொல்' என்னும் குறளுக்குத் தம் உரையில் (நன்னூல்) மயிலை நாதர் (முதல் உரையாளர்) ""கற்றதனால் ஆயபயன், குற்றமற்ற முற்ற உணர்ந்த ஒற்றை நற்றவன் பொற்றாள் இணை தொழுதல்'' என்பார்.

÷ஞானசம்பந்தப் பிள்ளையார், வழியெதுகையாக "ழ'கரம் வரப்பாடிய பாடல் இது:

""ஒழுகலரி தழிகலியில் உழியுலகு

  பழிபெருகு வழியை நினையா

முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி

 குழுவினொடு கெழுவு சிவனைத்

தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை

  கழுவுமுறை கழுமல நகர்ப்

பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன்

  வழிமொழிகள் மொழிதகை யவே''


"அம்மா', "அம்மை', "அம்மையப்பன்' பெயர்களால் எண்ணற்ற ஊர்கள் உள்ளதை அறிவோம்! பிறந்த குழந்தையும் சரி, பெரு மூதாட்டியும் சரி "அம்மா' என்பது நம்மவர் பண்பாட்டு வழக்கு. அழும் குழந்தையும் சரி, வாயிலில் நின்று இரப்பவனும் சரி, விளிக்கும் சொல் "அம்மா'!

÷தட்ப வெப்பச் சமனிலையமைந்த நம் நாட்டுக் குழந்தை "அம் அம்' என "அம்மம்' உண்டால், குளிர்நாட்டுக் குழந்தை "மம்மம்' என்று உண்ணும் போலும்! "மம்மி' என்கிறதல்லவா ஆங்கிலம்! இங்கும் அப்படி நிலை செயற்கையாக ஆக்கப்படுதல் நாமறியாததா?

தொடர்வோம்...



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Nov 19, 2013 10:59 am

தமிழ்ச் செல்வங்கள் - தமிழ் 1

'வா' என்பதோர் எழுத்து; நெடில்; உயிர்மெய். "வா' என்பதோர் சொல்; ஓரெழுத்து ஒரு மொழி(சொல்). "வா' என்பதோர் சொற்றொடர் (நீ) வா. தோன்றா எழுவாய்! இவ்வாறு ஓர் எழுத்தே சொல்லாகவும், சொற்றொடராகவும், விளங்கும் பெருமையது தமிழ். இவ்வோரெழுத்து மட்டுமில்லை. நெட்டெழுத்துகள் எல்லாமும் பொருள் குறிக்கும் சொல்லாக வரும் என்பார் தொல்காப்பியர். ""நெட்டெழுத் தேழே ஓரெழுத்து ஒருமொழி'' என்பது அது. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒü இவை உயிர் நெடில். இவற்றின் உயிர்மெய் நெடில், கா, கீ, கூ, கே, கை, கோ, கெü முதலாக விரியும் அல்லவா!

சில நெட்டெழுத்துகளுக்குப் பொருள் வழக்கு இல்லாமை கண்ட நன்னூலார், 40 நெட்டெழுத்துகளைக் கூறி "இவை பொருள் பெறும்' என்றார். நெட்டெழுத்துகளில் இரண்டு எழுத்துகள் குறுகி நின்று குறிலாகியும் பொருள் தரும் என்றார். அவை நோ - நொ; தூ - து. நோ - துன்பம், தூ - உண். இவை நொ, து என வந்து பொருள் தரும் என்றார்.

வர வரத் தமிழ் மரபு வழியும், மரபு நிலை மாறியும் மொழி முதலாகாது என விலக்கப்பட்ட சொற்களும் மொழி முதலாகவும், ஓரெழுத்து ஒரு மொழியாகவும் கொள்ளப்பட்டன.

"வா' என்பது எழுத்து, சொல், சொற்றொடர் என மூன்று நிலைகளைப் பெறுதலைக் கண்டோம். இனி, "வா' என்பது இயல் (தமிழ்); நீட்டி அழைத்தால் - இசைத்தால் - இசைத்தமிழ்! "ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!' - இசை. ஒப்பனை செய்து கொண்டோ, செய்யாமலோ, இத்தொடரை நட்டுவம் பிடித்தால் "நாடகம்' எனப்படும் கூத்து ஆகிவிடும். இவ் வெல்லாமும் இயற்கை இயங்கியல் மொழிக்கு உரியவை. தமிழ் இயற்கை இயங்கியல் மொழி.

கிளி பேசுகிறது; பிள்ளையாகக்கொண்டு போற்றிக் "கிளிப்பிள்ளை' என்று பெயரும் இட்டனர். பெற்றெடுத்த பிள்ளைக்கு அம்மா, அப்பா, மாமா என்பது போல் சொல்லிச் சொல்லித் தம் மழலைச் செல்வம் போல் பேசச் செய்தனர்.

வெயில் நுழைதல் இல்லாத சோலையுள் "குயில்' இருந்து கூவும் இசையைக் கேட்டுக் கேட்டு மகிழ்ந்தனர். மலைச்சாரலில், மழை முகில் கண்டு ஆடும் மயிலின் அழகில் தோய்ந்தனர். இயலும் இசையும் கூத்தும் இயங்கியலாய் அமைதலைக் கண்டு தமிழ் ஒலி அடங்கலை அமைத்தனர்!

""குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட

மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய

மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண்''

என்பது போல முத்தமிழ் ஒருங்கியலல் இயற்கையைப் போற்றித் தம் மொழியைப் படைத்தனர்.


தொடர்வோம்...



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Nov 19, 2013 11:01 am

தமிழ்ச் செல்வங்கள்: தமிழ் 2

ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஒü, அஃ - என்பவை மக்கள் வாயில் இருந்து மட்டுமா வருகின்றன? உயிருள்ளவை எல்லாம் ஒலிக்கும் ஒலிகள்தாமே இவை! இவ்வொலிகள் நீளவும், குறுகவும் கேட்டலும் இயற்கை அல்லவோ!

உயிரிகளின் ஒலியை எப்படி அழைப்பது? "உயிர்' என்று அழைப்பதுதானே முறை. உயிர் இயங்கும்! மெய்யாகிய உடலை இயக்கும்! உயிர் இயங்காவிடின் மெய் தானே இயங்காது.

"க், ங், ச், ஞ்' முதலாம் மெய்யெழுத்துகளை அப்படியே சொல்ல முடியுமா? சொல்லிப் பாருங்கள்! முடியவே முடியாது.

ஓர் உயிரை "இ' என்னும் உயிரைச் சேர்த்துத்தானே "இக்', "இங்', "இச்' "இஞ்' என்று சொல்ல முடிகிறது! இவ் வமைப்பு தமிழ் எழுத்தைச் சொல்லவும் எழுதவும் தொடங்கும்போதே, மெய்யியல் ஆகிய (தத்துவம்) உயரிய இறையியலைக் கற்பிப்பது அல்லவா!

முன்னே "இ' சேர்த்து "க்' என்பதை ஒலிக்கலாம்! இல்லையானால் "க' என, "ங' என, "ச' என, "ஞ' என ஒலிக்கலாம். எதனால்?

மெய்யெழுத்தை ஒட்டி உயிரெழுத்து ஆகிய "அ' வருகிறது அல்லவா! எந்த வண்டியையும் முன்னேயும் இயக்கல் உண்டு; தேவை ஏற்படின் பின்னேயும் இயக்கல் உண்டு அல்லவா! அப்படி இயற்கை இயங்கியல் வழிபட்ட அமைப்பு அது. குழந்தைகள் உருட்டும் வண்டி பண்டு தொட்டே உண்டு.



""பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்

முக்காற் சிறுதேர்''



என்பது பட்டினப்பாலை. நடைவண்டி இப்பொழுது எத்தனை வகையில் அமைக்கப்படுகின்றன என்பது நாம் அறியாதது இல்லையே! நடைவண்டி, மிதிவண்டி, குதியுந்து, உந்து, பேருந்து, தொடரி, வானூர்தி என எவ்வியங்கிக்கும் கால் (சக்கரம், உருளை) இல்லாமல் இயங்குகிறதா? கால் ஆகிய உருளை வடிவு வட்டம் தானே!

ஞாயிறு (கதிரோன்), திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, விண்மீன் முதலாம் எல்லாமும் சுழல்பவைதாமே! தம்மைத் தாமே சுற்றிக் கொண்டு பிறவற்றையும் சுற்றுபவை தாமே! இவை வட்டமாய் இருப்பதால்தானே இயங்குகின்றன!

அப்படி இயக்கமும் - சுழலும் - இடமாகவா, வலமாகவா? வலமாகத்தானே சுழல்கின்றன. காற்று எழுதல், தீ பரவல், நீர்ச் சுழல் அல்லது சுழி வட்டம்தானே! வலச் சுழற்சிதானே! பறவை எழும்புதல், ஆடு மாடு படுத்தல், மாந்தர் பனிவாடையில் ஒடுங்குதல் எல்லாம் வட்ட வளைதல் தானே!

இவ் வலச் சுழற்சி இயக்கம் கண்டு, வட்டெழுத்து, கோல் எழுத்து, கண்ணெழுத்து, ஓவிய எழுத்து எனக் கண்டு, ஆ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒü, ஃ என்பவற்றை "வலனேர்பு' முறையில் உயிரெழுத்தை அமைத்த அருமை அறிவியலொடு கூடிய மெய்யியல் விளக்கம் அல்லவா!

""வெட்டெழுத்துக் கொண்டு வட்டெழுத்தை முடிபு செய்யக்கூடாது'' என்பார் பாவாணர்.

தொடர்வோம்...



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 24, 2013 11:35 am

தமிழ்ச் செல்வங்கள் - தமிழ் 3

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' - உயிர்மையின் உணர்வு சார்ந்த முறை. ஆனால், மக்களிலும் மற்றை உயிரிகளிலும் வலியவையும், மெலியவையும் இலையா? இவற்றின் இடைப்பட்டவையும் இலவா?

""வலியோர் சிலர், மெலியோர் தமை'' என்பது கேளாதது இல்லையே! முடியும் அடியும் இருப்பினும் ஒவ்வொருவர்க்கும் இடையும் உண்டே!

மெய்யாம் உடம்பிலேயும் வன்மை, மென்மை, இடைமை இல்லாமல் இல்லையே! நிலத்திலேயும் வன்பால், இடைப்பால், மென்பால் என்னும் பகுப்பு உண்டே! வன்பால் மலை மலைச்சார்பு (குறிஞ்சி); இடைப்பால் காடும் காடு சார்பும் (முல்லை); மென்பால் வயலும் வயல் சார்பும், கடல் சார்பும் (மருதம், நெய்தல்) இவ்வியற்கை இயல் கண்டே, தமிழ் மெய்யெழுத்துகளை, வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பகுத்தனர்.

ஒரு வல்லினம், ஒரு மெல்லினம், ஒரு வல்லினம், ஒரு மெல்லினம் என, கங, சஞ, டண, தந, பம என வைத்தனர். வைப்புமுறை மட்டுமன்றிச் சொற்களிலும் அமைத்தனர். தங்கம், மஞ்சள், வண்டல், தந்தம், கும்பல். மென்மையில் இருந்து வன்மையுறுதல் இயற்கை இயல்பாம்; அம்முறை கொண்டவையே இம்முறை.

வல்லினம் நெஞ்சில் இருந்தும், மெல்லினம் மூக்கில் இருந்தும் பிறப்பது போல், இடையினம் தன் பெயருக்கு ஏற்ப மார்புக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட கழுத்தில் தோன்றும். அதற்கு ஏற்ப ய, ர, ல, வ, ழ, ள என்னும் இடையினத்தை வைத்து, நிறைவில் "ற' என்னும் வல்லினத்தையும், "ன' என்னும் மெல்லினத்தையும் வைத்து அடங்கலை நிறைவித்தனர். இதனைத் தொல்காப்பியர்,

""எழுத்தெனப் படுப,
அகர முதல னகர இறுவாய்
முப்பஃ தென்ப''


என்றார். திருவள்ளுவர் தம் நூலை அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடித்தார்!

உயிர்களின் வாழ்வில், கால எல்லை வரம்பு பட்டதன்று. ஒருகுடிப் பிறந்தார் தாமும் ஒப்ப வாழ்வார் அல்லர். நெடிய வாழ்வினரும், குறிய வாழ்வினரும் ஆதல் எவரும் எங்கும் காண்பதே! ஆதலால், சங்கச் சான்றோர், ""தாமரை இதழ்களினும், மழைத் துளிகளினும், ஆற்று மணலினும் நீடு வாழ்க'' என்று வாழ்த்தினர். எனினும், ""நினக்கென வரைந்த எல்லை வாழிய'' என்று வாழ்த்தினாரும் உளர். இவ்வியற்கை நிலை அறிந்தே உயிரளபெடை, ஒற்றளபெடை என நீண்டு ஒலித்தலையும், குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தக்குறுக்கம் எனக் குறுகி ஒலித்தலையும் மெய்யியல்படி அமைத்தனர்.

ஆய்தம் என்பதன் பொருள் நுணுக்கம். ஆய்தக் குறுக்கமோ நுணுக்கத்தினும் நுணுக்கம். முன்னதற்கு அரை மாத்திரை; பின்னதற்குக் கால் மாத்திரை! அதற்குத் "தனிநிலை' என்பது பெயர்.

மாத்திரையாவது கண்ணிமைப்பும், கைந்நொடிப்பும் ஆகும். கால் மாத்திரையை எப்படிக் காண்பது?

""உன்னல் காலே; ஊன்றல் அரையே;
முறுக்கல் முக்கால்; விடுத்தல் ஒன்றே''

என்பது அளவீடு!

தொடர்வோம்...



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Dec 09, 2013 8:31 pm

தமிழ்ச் செல்வங்கள்: தமிழ் - 4

தமிழ் எழுத்தமைதி கண்டோம்; தமிழெழுத்தே இசையும் வண்ணமும் ஆதல் முந்தையர் படைப்பின் தேர்ச்சியாம்.

வண்டு குடியிருக்க மூங்கிலில் துளையிட்டது. அத்துளையின் வழியே காற்று மெல்லெனவும், வல்லெனவும், சுழன்றும், நைந்தும் சென்றது. ஒலி, காற்றுக்குத்தக வெளிப்பட்டது. அதனைக் கூர்ஞ் செவியன் கண்டான்; கேட்டான்; சுவைத்தான். நுண்ணிய தன் நோக்காலும் செயல் திறனாலும் குழலைப் படைத்தான். ஆயனுக்கு மட்டுமன்றி ஆவுக்கும் இன்பமாயிற்று; முல்லை நிலம்வாழ் பறவைகளுக்கும் இனிப்பாயிற்று. மக்களுக்கு உவகை தந்ததால் குழல் முதல் இசைக் கருவியாயிற்று.

குறிஞ்சியான் வேட்டைக் கருவி வில். வில்லுக்கு நாண் நரம்பு; சரியான இறுக்கமா? தொய்வா? என்பது காணச் சுண்டினான். அதற்கு அவன் விரல் பயன்பட்டது. சுண்டு விரல் என்றே முதல் குறு விரலுக்குப் பெயரிட்டுச் சிறப்பித்தான்.



""சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்

செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்பக்

குறுவெயர்ப்புரு வம்கூட லிப்பக்

கோவிந்தன் குழல்கொ டூதின போது

பறவையின் கணங்கள் கூடு துறந்து

வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்

கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக்

கவிழ்ந்திறங் கிச்செவி யாட்டகில் லாவே''



என்பது பெரியாழ்வார் திருமொழி(நாலா.282).

""ஏழிசைச் சூழல்'' என ஓர் இசைத் தமிழ்ச் சங்கமே இருந்தது மதுரையில். ""ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்'' என இசையை, இறைமையாய் அடியார்கள் கண்டு திளைத்தனர்.

ஏழிசை என்பது எது?



""குரலே துத்தம் கைக்கிளை உழையே

இளியே விளரி தாரம் என்றிவை

எழுவகை இசைக்கும் எய்தும் பெயரே''



என்பது முதல் நிகண்டாகிய திவாகரம்! ஏழிசை எழுத்துகள் எவை? ""ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒü எனும்

இவ்வே ழெழுத்தும் ஏழிசைக் குரிய'' என்பதும் அந்

நிகண்டே.

ஏழிசை ஓசை எப்படிக் கண்டனர்?



""சங்கு குயில் மயில் யானை புரவி

அன்னம் காடை அவற்றின் ஓசை''

""வண்டு கிள்ளை வாசி மதயானை

தவளை தேனு ஆடு ஏழிசை ஓசை''



என்பவையும் அந்நிகண்டே. புரவியும் வாசியும் குதிரை; தேனு } பசு. குழல், முதல் இசைக்கருவி; யாழ், பின்னர் வந்த கருவி. குழல் மக்கள் கருவி; யாழ், மன்னிசைக் கருவி. முன்னது தொடக்க நிலை; பின்னது வளர்நிலை; அதன் பின்னது வீணை!

பறையோ தொடக்கத் தொடக்கம். யா - கட்டு; வில்யாழ், முதல் யாழ்; பின் இசைக்கெனக் கட்டப்பட்ட ஏழ் நரம்பு யாழ்! ஏழ் - யாழ் ஆயது.

""நரம்பு, விண் விண் எனத் தெறிக்கிறது'' என்பது மக்கள் வழக்கு. விண்-விண் - வீணை; குறில் நெடிலாதல் எ-டு: கண்-காண். விண், ஒலிமட்டுமே கொண்ட ஐம்பூதங்களுள் ஒன்று. விசும்பு என்பதும் அது. மேலெழுதலை "என்ன விசும்புகிறாய்' என்பது மக்கள் வழக்கு.

(தொடர்வோம்....)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 05, 2014 1:10 pm

தமிழ் - 5

உலகில் உள்ளவற்றை எல்லாம் மூன்றே சொற்களில் அடக்க வேண்டும்! முடியுமா? "முடியும்' என்றார் ஒருவர்; அவர் பெயர் மெய்கண்டார்! தமிழுக்கு வரம்பு கண்ட தகவாளர்; முந்தையர் அறிவுச் சுரப்பை முழுதறிந்த பேராளர்! அதனைப் பின்னே முழுவதாகக் கண்டு விரித்து விரித்து உரைத்த சீராளர் பாவாணர்.

மூன்றே சொற்களில் சொல்லலாம் என்றால், அவை எவை? அவை: ""அவன், அவள், அது'' என்பவை. (சிவஞானபோதம்-1) இச் சுட்டில் அடங்காதவை எவை? அவர், அவை இவற்றின் கூட்டம்தானே!

பாவாணர் நூல், "சுட்டு விளக்கம்' முதலாயவை.

தமிழ் எழுத்துகள் வண்ணம் (இசை) ஆவது எப்படி?

""வல்லிசை வண்ணம் வல்லெழுத்து பயிலும்'' ......................... தொல். 1472

""மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே'' .................... தொல். 1473

""இயைபு வண்ணம் இடை எழுத்து மிகுமே'' .......................... தொல். 1474

""அளபெடை வண்ணம் அளபெடை பயிலும்'' ..................... தொல். 1475

""நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்'' ................. தொல். 1476

""குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும்'' ...................... தொல். 1477

""சித்திர வண்ணம், நெடியவும் குறியவும் நேர்ந்துடன் வருமே'' தொல். 1478

""நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்'' ....................................... தொல். 1479

""உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும்'' ............................. தொல். 1488

""முருகு வண்ணம், அடியிறந் தோடி அதனோ ரற்றே''................. தொல். 1489

இவையே, பாவகைகளின் ஊற்றுக்கண்கள்! வாரம், வரி, வண்ணம், சந்தம், சிந்து, கும்மி ஆயவற்றுக்கு மடைதிறந்த வெள்ளம்! சீர்த்தளை எனும் கீர்த்தனைப் பாடல்களுக்கு அருவிக் கொழிப்பு! இனித் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலோ கூத்துலகக் குடியிருப்பு. சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரை, அரும் பொருள் ஆசிரியர் உரை கூத்தின் கொள்கலம்!

அழிந்து போனவை அளவிடற் கரியவை என்றாலும், இருப்பவற்றைப் போற்றினாலும் முத்தமிழ் முழக்கம் முழுதுறக் கேட்கலாம்!

""யானை படுத்தாலும் ஆட்டுக்குச் சிறிதாகாது'' என்பது தமிழ்ப் பழமொழி.
---------*********-----------



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக