புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_m10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_m10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_m10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10 
3 Posts - 5%
prajai
"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_m10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10 
2 Posts - 4%
Baarushree
"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_m10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_m10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10 
2 Posts - 4%
Rutu
"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_m10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10 
1 Post - 2%
சிவா
"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_m10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10 
1 Post - 2%
viyasan
"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_m10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_m10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10 
10 Posts - 67%
mohamed nizamudeen
"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_m10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10 
2 Posts - 13%
ரா.ரமேஷ்குமார்
"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_m10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10 
2 Posts - 13%
Rutu
"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_m10"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"என்னது... சிவாஜி செத்துட்டாரா?"


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 29, 2013 7:36 am

முதல்முறை அந்தச் செய்தியைப் படித்தபோது பிரதமரே கொஞ்சம் திடுக்கிட்டுப்போய் இருப்பார். மோடி கொடுத்த பேட்டியைத்தான் ராகுல் பெயரில் ஊடகங்கள் தவறாகப் போட்டுவிட்டனவோ என்று.
"அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்த அவசரச் சட்டம் முட்டாள்தனமானது; அதைக் கிழித்து எறிய வேண்டும்" - என்ன ஒரு காட்டம்?!

கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் முக்கியமான அம்சத்தை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவியை உடனடியாகப் பறிக்க வகைசெய்யும் உத்தரவு இது.

மேலும், சிறையில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும் இந்தத் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைக்கிறது. இது நடந்த அடுத்த சில நாட்களிலேயே துரிதமாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டது மன்மோகன் சிங் அரசு. தீர்ப்பை எதிர்த்து, மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்தத் தீர்ப்பைச் செயலிழக்கச் செய்யும் சட்ட மசோதாவை உருவாக்கி, மழைக்காலக் கூட்டத் தொடரின்போது, நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பியது. அந்தக் குழுவின் ஆய்வு நிலுவையில் இருக்கும்போதே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது.

இந்தச் சட்டத் திருத்தத்தை செப்டம்பர் 6-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல், "சில நேரங்களில் நாம் தவறு செய்கிறோம். சில நேரங்களில் நீதிமன்றங்கள் தவறு செய்கின்றன. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் செய்த தவறை நாம் சரிசெய்கிறோம்" என்றார். அமெரிக்கா செல்லும் முன் செப்டம்பர் 24-ம் தேதி அவசரமாக அமைச்சரவையைக் கூட்டிய பிரதமர் மன்மோகன் சிங் இந்த அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றார்.

இடதுசாரிகளும் பா.ஜ.க-வும் இந்த அவசரச் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்த நிலையில், "மசோதா மீதான நிலைக் குழுவின் ஆய்வு நிலுவையில் உள்ளபோதே, இப்படி ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவருவது சட்ட விரோதம்" என்ற முறையீட்டோடு, குடியரசுத் தலைவரை செப்டம்பர் 26-ம் தேதி சந்தித்தது பா.ஜ.க. இதைத் தொடர்ந்து, அவசரச் சட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் பிரணாப் முகர்ஜி விளக்கம் கேட்ட நிலையில்தான் செப்டம்பர் 27 அன்று இப்படிப் பொங்கி எழுந்திருக்கிறார் ராகுல்.

ஜூலை 10-க்கும் செப்டம்பர் 27-க்கும் இடைப்பட்ட 78 நாட்களில் ராகுல் எங்கே இருந்தார்? என்னவானார்? இந்தச் சட்டத் திருத்தத்தில் மன்மோகன் சிங் இவ்வளவு அவசரம் காட்டக் காரணமும் தன் சொந்தக் கட்சிக்காரரின் விவகாரம்தான்.

மருத்துவக் கல்விக்கான இடங்கள் ஒதுக்கீட்டில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஷீத் மசூத் முறைகேட்டில் ஈடுபட்டதை செப்டம்பர் 19-ம் தேதி உறுதிசெய்தது சி.பி.ஐ. நீதிமன்றம். அக்டோபர் 1-ம் தேதி அவருக்குத் தண்டனை அறிவிக்கப்படவிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டால், இந்திய அரசியல் வரலாற்றில் முறைகேட்டில் சிக்கியதற்காகப் பதவியை இழந்த முதல் அரசியல்வாதி என்று காங்கிரஸின் ரஷீத் மசூதின் பெயர் இடம்பெறும். அதைத் தவிர்க்கத்தான் இவ்வளவு துடிப்போடு செயல்பட்டது சிங் அரசு.

ராகுலுக்கு இது தெரியாதா? பெரிய வேடிக்கை, "அரசியல் சமரசத்துக்காகவே இதுபோன்ற அவசரச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நம் நாட்டில் உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டுமானால், இத்தகைய சின்னஞ்சிறு சமரசங்களை நாம் செய்துகொள்ளக் கூடாது" என்று தன்னுடைய எதிர்ப்புக்கு ஊழலைக் காரணமாக ராகுல் சொல்லியிருப்பது.

ஊழலைப் பற்றிப் பேச காங்கிரஸுக்கோ, இந்த அரசுக்கோ, ராகுலுக்கோ தார்மிகரீதியாக என்ன தகுதி இருக்கிறது? நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள், "அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க லஞ்சம் கொடுத்தார்கள்" என்ற குற்றச்சாட்டோடு, கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிய காட்சியில் தொடங்கி, "ராணுவக் கொள்முதலில் நடக்கும் ஊழலுக்கு ஒத்துழைக்க எனக்கே லஞ்சம் கொடுக்க முயன்றார்கள்" என்று நாட்டின் தரைப் படைத் தளபதியே பேட்டி கொடுத்தது வரை நடந்தது மன்மோகன் சிங் ஆட்சியில்தானே?

பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதானே 'இஸ்ரோ' ரூ.4.5 லட்சம் கோடி அலைக்கற்றை முறைகேடு குற்றச்சாட்டுக்கும் நிலக்கரித் துறை ரூ.10 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாயின? நாடே அதிர்ந்த ரூ.1.76 லட்சம் கோடி முறைகேட்டில் சிக்கிய ஆ.ராசா சில நாட்களுக்கு முன்கூடக் கேட்டிருக்கிறார்: "2007-08-ல் '2ஜி'அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருந்தால், ஏன் 2009-ல் திரும்பவும் எனக்கே பிரதமர் தொலைத்தொடர்புத் துறையை ஒதுக்கினார்?" என்று. பதில் அளிக்க ஆள் இல்லை.

ஒருகாலத்தில், "குடும்பத்துக்காகச் சம்பாதிப்பதுதான் என்னுடைய பெரிய சவால். நான் என்னுடைய கைவினைப் பொருட்களை வாங்குபவர்களைத் தேடி வீடுவீடாகச் செல்கிறேன். பல இடங்களில் என்னை வெளியே தள்ளியிருக்கிறார்கள். தளராமல் போராடுகிறேன்" என்று பேட்டியளித்த ராபர்ட் வதேரா, ஓராண்டுக்குள் ஆறு நிறுவனங்கள் தொடங்கும் அளவுக்கு வளர்ந்ததும் 12 நிறுவனங்களுக்கு இயக்குநரானதும் இந்த ஆட்சியில்தானே? ரூ.300 கோடி அளவுக்கு ராபர்ட் வதேரா மீது முறைகேடு குற்றச்சாட்டு வந்தபோது இதே பிரதமர் இந்தச் சங்கதிகள் எல்லாம் வெளியே வரக் காரணமாக இருக்கும் தகவல் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்ததற்காகப் பகிரங்கமாகப் புலம்பினாரே... நினைவிருக்கிறதா?

அட, ராகுல் இப்படிப் பொங்குவதற்கு முதல் நாள், அவருடைய நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான தொழிலதிபர் நவீன் ஜிண்டாலை ரகசிய இடத்தில் வைத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது... அரசுக்குப் பொய்யான தவலை அளித்து, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டைப் பெற்ற வழக்கில். ராகுல் எங்கே இருந்தார்? என்னவானார்? ராகுலின் திடீர் ஆவேசம், 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படத்தில் விஜய் சேதுபதி சொல்லும் புகழ்பெற்ற வசனத்தை ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறது. அந்தப் படத்தில் குறுகிய கால மறதி நோயால் பாதிக்கப்பட்டு நினைவு திரும்பும் காட்சியில் விஜய் சேதுபதி கேட்பார்: "என்னது... சிவாஜி செத்துட்டாரா?"
நன்றி-தெஹிந்து



சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 29, 2013 6:38 pm

பாவம் பிரதமர்!

இதைவிட நாற்சந்தியில் நிற்க வைத்து பிரதமர் மன்மோகன் சிங்கை ராகுல் காந்தி கன்னத்தில் பளார், பளாரென்று அறைந்திருந்தாலும் கூடப் பரவாயில்லை. இந்த அளவுக்கு அவமானம் ஏற்பட்டிருக்காது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க இருக்கும் நாளில், இப்படியொரு கருத்தை வெளியிட்டு சர்வதேச அளவில் பிரதமரை ராகுல் காந்தி கேவலப்படுத்தி இருக்கக் கூடாது!

இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக கிரிமினல் குற்ற வழக்கில் தண்டனை பெற்றிருக்கும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து பதவியில் தொடர வகை செய்யும் அவசரச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகச் சட்டத்திருத்தம் அனுப்பப்பட்டபோது, அவர் அதில் சில ஐயப்பாடுகள் இருப்பதாகவும், வெளிநாடு சென்றிருக்கும் பிரதமர் நாடு திரும்பியவுடன் அவரிடம் சில விளக்கங்கள் பெற்ற பிறகு கையொப்பம் இடுவதாகவும் தெரிவித்திருந்தார். அதாவது, தனக்கு இந்த அவசரச் சட்டத்திருத்தத்தில் உடன்பாடு இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி விட்டிருக்கிறார் குடியரசுத் தலைவர்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8(4) இன்படி, "தண்டனை பெற்றவர் எம்.பி., எம்.எல்.ஏவாக இருந்து, அவர் 90 நாள்களுக்குள் மேல் முறையீடு செய்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால், அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம்'. சராசரி இந்தியக் குடிமகனுக்கு இல்லாத உரிமை, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருக்கு எப்படி இருக்க முடியும் என்கிற கேள்வியை எழுப்பி, தண்டனை பெற்ற நாள் முதலே மக்கள் பிரதிநிதிகளும் பதவி இழந்து விடுகிறார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.

இந்தத் தீர்ப்பால் இப்போது பதவி வகிக்கும் யாரும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஒரு சட்டத் திருத்தம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதத்தில் இருக்கிறது. அந்த நிலையில்தான், அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றத் தயாரானது.

காங்கிரஸ் எம்.பி. ரஸþத் மசூதையும், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவையும் காப்பாற்றுவதுதான் இந்த அவசரச் சட்டத்தின் நோக்கம் என்பது எல்லோருக்குமே தெரியும். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும், அமைச்சரவையும் ஒப்புதல் அளித்த பிறகுதான் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முயற்சியில் அரசு இறங்கியது என்பதும் ஊரறிந்த உண்மை. இப்படி ஓர் அவசரச் சட்டம் தேவையில்லாதது என்பதிலும், ஊழல் பெருச்சாளிகளைக் காப்பாற்றுவதுதான் அதன் நோக்கம் என்பதிலும் கூட யாருக்கும் சந்தேகம் இருக்க வழியில்லை.

இத்தனை நாள்களாக இது பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்த போதெல்லாம் மௌனம் காத்த, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு இப்போது திடீர் ஞானோதயம் ஏற்பட்டு, ""இந்த அவசரச் சட்டமே முட்டாள்தானமானது. இது கிழித்தெறியப்பட வேண்டியது'' என்று அஜய் மக்கானின் பத்திரிகையாளர் கூட்டத்திற்கு வலியப் போய் அவர் பொரிந்து தள்ள வேண்டிய அவசியமென்ன?

கடந்த மூன்று மாதங்களாக இந்தச் சட்டத்திருத்தம் பற்றியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றியும் ஊடகங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழுவின் ஒப்புதலுடன்தான் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முடிவை அமைச்சரவை எடுத்தது. இவ்வளவும் நடந்தது தெரியாமல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. இல்லையென்றால் அப்போதே தனது எதிர்ப்பைத் தெரிவித்திருப்பாரே...

இப்படி ஓர் அவசரச் சட்டம் கொண்டு வருவதில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உடன்பாடு இருக்கவில்லை என்பதும், அரசியல் நிர்பந்தங்களின் காரணமாகவும், கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின் பேரிலும், அமைச்சரவை முடிவெடுத்ததாலும்தான் அவர் இதற்கு உடன்பட்டார் என்பதும் தெரிந்த விஷயம். இப்போது திடீரென்று இப்படி ஓர் அறிவிப்பின் மூலம் பிரதமர் ஊழல் அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்புத் தருபவர் போலவும் தான் "பரிசுத்தமானவர்' என்றும் ராகுல் காந்தி காட்டிக் கொள்ள விரும்புகிறார் என்றால் அதை யதார்த்த நிகழ்வாக கொள்ள முடியாது. சோனியா காந்தியின் ஒப்புதல் இல்லாமல் நடந்ததாகவும் கருத முடியாது.

அவசரச் சட்டத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது என்று தெரிந்ததும், தான் அதிலிருந்து விலகி நிற்க ராகுல் காந்தி செய்திருக்கும் தந்திரம் இது என்பது தெரிகிறது. அதற்காக, பரம விசுவாசியாக இருந்த பிரதமர் மன்மோகன் சிங், இப்படி அவமானப்படுத்தப்பட்டிருப்பதுதான் பரிதாபம். பலிகடாக்களுக்கு என்றைக்கு இருந்தாலும் ஒருநாள் இந்த நிலைமை ஏற்படத்தானே வேண்டும்.

இதைவிட நாற்சந்தியில் நிற்க வைத்து பிரதமர் மன்மோகன் சிங்கை ராகுல் காந்தி கன்னத்தில் பளார், பளாரென்று அறைந்திருந்தாலும் கூடப் பரவாயில்லை. இந்த அளவுக்கு அவமானம் ஏற்பட்டிருக்காது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க இருக்கும் நாளில், இப்படியொரு கருத்தை வெளியிட்டு சர்வதேச அளவில் பிரதமரை ராகுல் காந்தி கேவலப்படுத்தி இருக்கக் கூடாது!

இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக கிரிமினல் குற்ற வழக்கில் தண்டனை பெற்றிருக்கும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து பதவியில் தொடர வகை செய்யும் அவசரச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகச் சட்டத்திருத்தம் அனுப்பப்பட்டபோது, அவர் அதில் சில ஐயப்பாடுகள் இருப்பதாகவும், வெளிநாடு சென்றிருக்கும் பிரதமர் நாடு திரும்பியவுடன் அவரிடம் சில விளக்கங்கள் பெற்ற பிறகு கையொப்பம் இடுவதாகவும் தெரிவித்திருந்தார். அதாவது, தனக்கு இந்த அவசரச் சட்டத்திருத்தத்தில் உடன்பாடு இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி விட்டிருக்கிறார் குடியரசுத் தலைவர்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8(4) இன்படி, "தண்டனை பெற்றவர் எம்.பி., எம்.எல்.ஏவாக இருந்து, அவர் 90 நாள்களுக்குள் மேல் முறையீடு செய்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால், அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம்'. சராசரி இந்தியக் குடிமகனுக்கு இல்லாத உரிமை, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருக்கு எப்படி இருக்க முடியும் என்கிற கேள்வியை எழுப்பி, தண்டனை பெற்ற நாள் முதலே மக்கள் பிரதிநிதிகளும் பதவி இழந்து விடுகிறார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.

இந்தத் தீர்ப்பால் இப்போது பதவி வகிக்கும் யாரும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஒரு சட்டத் திருத்தம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதத்தில் இருக்கிறது. அந்த நிலையில்தான், அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றத் தயாரானது.

காங்கிரஸ் எம்.பி. ரஸþத் மசூதையும், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவையும் காப்பாற்றுவதுதான் இந்த அவசரச் சட்டத்தின் நோக்கம் என்பது எல்லோருக்குமே தெரியும். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும், அமைச்சரவையும் ஒப்புதல் அளித்த பிறகுதான் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முயற்சியில் அரசு இறங்கியது என்பதும் ஊரறிந்த உண்மை. இப்படி ஓர் அவசரச் சட்டம் தேவையில்லாதது என்பதிலும், ஊழல் பெருச்சாளிகளைக் காப்பாற்றுவதுதான் அதன் நோக்கம் என்பதிலும் கூட யாருக்கும் சந்தேகம் இருக்க வழியில்லை.

இத்தனை நாள்களாக இது பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்த போதெல்லாம் மௌனம் காத்த, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு இப்போது திடீர் ஞானோதயம் ஏற்பட்டு, ""இந்த அவசரச் சட்டமே முட்டாள்தானமானது. இது கிழித்தெறியப்பட வேண்டியது'' என்று அஜய் மக்கானின் பத்திரிகையாளர் கூட்டத்திற்கு வலியப் போய் அவர் பொரிந்து தள்ள வேண்டிய அவசியமென்ன?

கடந்த மூன்று மாதங்களாக இந்தச் சட்டத்திருத்தம் பற்றியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றியும் ஊடகங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழுவின் ஒப்புதலுடன்தான் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முடிவை அமைச்சரவை எடுத்தது. இவ்வளவும் நடந்தது தெரியாமல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. இல்லையென்றால் அப்போதே தனது எதிர்ப்பைத் தெரிவித்திருப்பாரே...

இப்படி ஓர் அவசரச் சட்டம் கொண்டு வருவதில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உடன்பாடு இருக்கவில்லை என்பதும், அரசியல் நிர்பந்தங்களின் காரணமாகவும், கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின் பேரிலும், அமைச்சரவை முடிவெடுத்ததாலும்தான் அவர் இதற்கு உடன்பட்டார் என்பதும் தெரிந்த விஷயம். இப்போது திடீரென்று இப்படி ஓர் அறிவிப்பின் மூலம் பிரதமர் ஊழல் அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்புத் தருபவர் போலவும் தான் "பரிசுத்தமானவர்' என்றும் ராகுல் காந்தி காட்டிக் கொள்ள விரும்புகிறார் என்றால் அதை யதார்த்த நிகழ்வாக கொள்ள முடியாது. சோனியா காந்தியின் ஒப்புதல் இல்லாமல் நடந்ததாகவும் கருத முடியாது.

அவசரச் சட்டத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது என்று தெரிந்ததும், தான் அதிலிருந்து விலகி நிற்க ராகுல் காந்தி செய்திருக்கும் தந்திரம் இது என்பது தெரிகிறது. அதற்காக, பரம விசுவாசியாக இருந்த பிரதமர் மன்மோகன் சிங், இப்படி அவமானப்படுத்தப்பட்டிருப்பதுதான் பரிதாபம். பலிகடாக்களுக்கு என்றைக்கு இருந்தாலும் ஒருநாள் இந்த நிலைமை ஏற்படத்தானே வேண்டும்.

நன்றி - தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக