புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:15 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:15 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
Rutu | ||||
சிவா | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
manikavi | ||||
viyasan | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரை விமர்சனம்: “ராஜா ராணி” – நவீன ‘மௌனராகம்’
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
அட்லீ என்ற புதுமையான பெயர் கொண்ட அறிமுக இயக்குநர், கடந்த சில மாதங்களாக ஏகப்பட்ட பரபரப்பு மிகுந்து செய்திகளுடன் உருவாக்கி வந்த படம் ராஜா ராணி.
இந்தப் படத்தின் காட்சிகளை வைத்துத்தான் ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் உண்மையிலேயே திருமணம் என கொஞ்ச காலத்திற்கு முன்னால் புரளிகள் கிளப்பி விடப்பட்டு தமிழக சினிமா உலகத்தை பரபரப்புக்குள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னத்தின் சிறந்த படைப்புக்களுள் ஒன்றான பழைய ‘மௌனராகம்’ படத்தின் ஒரு பகுதியை அப்படியே உருவி எடுத்து, அதற்கு நவீன பூச்சுக்கள் கொடுத்து, படத்தின் கதாபாத்திரங்கள் கணினி மற்றும் ‘கால்செண்டர்’ எனப்படும் வாடிக்கையாளர் தொலைபேசி தொடர்புத் துறைகளில் வேலை செய்பவர்கள் என காட்சிகளை அமைத்து உருவாக்கி இருக்கின்றார்கள்.
சில இடங்களில் மணிரத்னத்தின் மற்றொரு படமான ‘அலைபாயுதே’ படத்தின் கதையும் நமது நினைவுக்கு வருகின்றது.
முக்கால் வாசிப் படம் வரை ஓரளவுக்கு ரசிக்கும் படி எடுத்திருக்கும் இயக்குநர் படத்தின் இறுதிக் கால் பகுதியில் சொதப்போ சொதப்பு என்று சொதப்பி விட்டார். ஆர்யாவும், நயன்தாராவும் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என்று நமக்கு நன்கு தெரிந்துவிடுகின்றது என்பதால், படத்தின் இறுதிக் காட்சிகளில் எந்தவித சுவாரசியமோ, பரபரப்போ இல்லாமல் போகின்றது.
படத்தின் கதை
ஜோன் என்ற ஆர்யாவுக்கும் ரெஜினா என்ற நயன்தாராவுக்கும் இடையில் நடக்கும் திருமணத்தோடு படம் தொடங்குகின்றது. இருவரும் ஒருவரை ஒருவர் பிடிக்காமல், வேண்டா வெறுப்பாகத்தான் திருமணம் செய்து கொள்கின்றார்கள் என்பது அவர்களின் கண் ஜாடைகளிலும், உடல் மொழிகளிலும் நமக்கும் புரிந்து விடுகின்றது.
ஆனால், நயன்தாரா தனது அப்பா சத்யராஜூவின் வற்புறுத்தலுக்காக கல்யாணம் செய்து கொள்கின்றார் என்பதை வலுவான கதையமைப்புடன் காட்டிய இயக்குநர், ஆர்யா ஏன் வேண்டா வெறுப்பாக திருமணம் செய்கின்றார் என்பதைக் காட்டவில்லை. அதனால் பல இடங்களில் ஏன் ஆர்யா அப்படி நயன்தாராவை வெறுப்பேற்றும்படி, எரிச்சலூட்டும்படி நடந்து கொள்கின்றார் என்பது நமக்கும் விளங்கவில்லை.
ஏன் நயன்தாரா வேண்டா வெறுப்பாக கல்யாணம் செய்கின்றார் என்பதைக் காட்ட அவருடைய பழைய காதல் கதை காட்டப்படுகின்றது. அந்தப் பகுதிகள் அப்படியே நமக்கு பழைய ‘மௌனராகம்’ நினைவுகளை மீட்டுகின்றன.
பழைய காதலனாக வரும் ஜெய் கதாபாத்திரத்தை ஒரு பயந்தாங்கொள்ளி, கோணங்கித்தனம் கொண்டவராக மாற்றியமைத்திருக்கின்றார்கள்.
ஆனால், அவர்தான் படத்திலேயே மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றார். ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளரின் திட்டுதல்களையும், கலாய்ப்புக்களையும் கண்டு அவர் அஞ்சுவதும், புலம்புவதும் வெகு இயல்பாக இருக்கின்றது.
படத்தின் சிறந்த பாகம் என்றால் ஜெய் வரும் பகுதிகள்தான் என்று சொல்லலாம். வித்தியாசமாகவும், வெகு இயல்பாகவும் எடுத்திருக்கின்றார்கள்.
நயன்தாராவின் பழைய காதல் கதை முடிந்தவுடன், ஆர்யாவுக்கும் ஒரு பழைய காதல் இருந்தது என்று சந்தானம் நயன்தாராவிடம் கதை சொல்ல ஆரம்பிக்கின்றார்.
ஆனால், அந்தக் காதல் கதையில் எந்தவித சுவாரசியமும், திருப்பங்களும் இல்லை. வழக்கமான, பார்த்தவுடன் பெண்ணைப் பிடிப்பது பின்னர் சுற்றிச் சுற்றி வருவது என அதே பழைய பாணிதான்.
ஒரே ஆறுதல்! ஆர்யாவின் முன்னாள் காதலியாக வரும் நஸ்ரியா!
படத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தவர், இதில் இளைமை துள்ளும் துடிப்பான பெண்ணாக நடித்திருக்கின்றார். ஆரம்பக் காட்சியிலேயே, அவர் இரவுநேர உடையுடன் காலையில் எழுந்து துள்ளாட்டம் போடுவதும், வீட்டிற்கு வந்து அமர்ந்திருக்கும் ஆர்யாவையும், சந்தானதையும் பார்த்ததும் வெட்கப்படுவதும் அழகு.
இனி நமது இளைய கதாநாயகர்களின் படங்களுக்குத் தேர்வாக நஸ்ரியாத்தான் இருப்பார் என உறுதியாகக் கூறலாம்.
இரண்டு காதல் கதைகளும் முடிந்ததும், படத்தின் சுவாரசியமும் போய்விடுவதால், அதன்பின்னர் ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் நடக்கும் இறுதிக் கட்டக் கதையில் நமக்கும் கொட்டாவி வருகின்றது.
வழக்கம்போல், நயன்தாரா நாடுவிட்டுப் போகின்றார் என்றும், விமான நிலையத்தில் பிரிவு என்றும் எடுத்திருக்கின்றார்கள். அங்கே மீண்டும் ஜெய்யைக் காட்டும் போது கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தால், ஜெய்யின் ஆரம்பக் கட்ட கதாபாத்திரத் தன்மையையே கெடுக்கும் வண்ணம் காட்சிகள் அமைத்திருக்கின்றார்கள்.
தோல்விக் காதலுக்கும் பின்னரும் இன்னொரு காதல் தொடரலாம் என சுபமாக முடித்து ஆர்யாவையும், நயன்தாராவையும் கடைசியில் ஒன்று சேர்த்து வைத்து படத்தை முடித்திருக்கின்றார்கள்.
நிறைகள்
துல்லியமான ஒளியமைப்பும், வித்தியாசமான காட்சிக் கோணங்களும் இயக்குநரிடம் விஷயம் இருக்கின்றது என்பதை உணர்த்துகின்றன.
ஜெய்தான் படத்தின் பலம். அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் இயல்பான நகைச்சுவையால் திரையரங்கையே கலகலக்க வைக்கின்றார்.
வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளும் பிரச்சனைகளை நன்கு விலாவாரியாக ஆராய்ந்து சுவாரசியமான காட்சிகளாக அமைத்திருக்கின்றார்கள்.
அதிலும் நயன்தாராவின் தோழிகள் அழைத்து ஜெய்யைக் கலாய்ப்பது குபீர் சிரிப்பை வரவழைக்கின்றது. ஜெய்யின் கூடவே நண்பராக வரும் சத்யனும் நம்மைச் சிரிக்க வைக்கின்றார்.
இவர்கள் இருவரின் நகைச்சுவையில் சந்தானத்தின் நகைச்சுவை கொஞ்சம் அமுங்கி விட்டது என்றுதான் கூறவேண்டும்.
படத்தின் இன்னொரு பலம் படத்தின் இரண்டு கதாநாயகிகள். நயன்தாரா சேலைகளில் பாந்தமாக வந்து தனது அழகாலும் நளினத்தாலும் கவர்கின்றார். ஆனால் குட்டைப் பாவாடையுடன் வரும்போதுதான் கண்களை உறுத்துகின்றது. பூசி மெழுகினாற்போல் சற்று பெருத்து தெரிகின்றார்.
நஸ்ரியாவும் இயல்பான அழகால், உடல் மொழியால் கவர்கின்றார். அவர் பல் துலக்கிக் கொண்டே, சற்றே நைட்டியைத் (இரவு ஆடை) தூக்கிவிட்டுக் கொண்டு, காலழகு தெரிய போடுகின்ற ஆட்டமும் கவர்கின்றது. ஆனால், அவருக்கும் ஆர்யாவுக்கும் இடையிலான காதலைப் பற்றிக் கூறுகின்ற கதைப்jபகுதியைக் கையாண்ட விதத்தில் இயக்குநர் வித்தியாசமாக சிந்தித்திருக்கலாம். பழைய சினிமா பாணியையே கையாண்டிருக்கின்றார். படத்தைப் பார்த்தால் உங்களுக்கும் புரியும்!
படத்தின் இன்னொரு பலம் சத்யராஜ். நல்ல அப்பாவாக, மகள் கேட்டதையெல்லாம் செய்து கொடுக்கும் அப்பாவாக வந்தாலும், மகள் பீர் வாங்கிக் கொடுத்து குடிப்பது என்பதெல்லாம் கொஞ்சம் நெருடுகின்றது.
குறைகள்
ஜெய் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும், இது போன்ற ‘கால்செண்டர்களில்’ பணியாற்றுபவர்களுக்கு தகுந்த பயிற்சி கொடுத்துவிட்டுத்தான் அவர்களை வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு பதில் சொல்லும் வேலைக்கு அனுப்புவார்கள் என்பதை யாரும் இயக்குநருக்கு சொல்லவில்லை போலும்.
இந்த அளவுக்கு கோமாளித்தனமாக ஒருவர் வாடிக்கையாளர் புகார்களைக் கையாள்வாரா என்பது சந்தேகமே! ஆயினும் அந்த பயந்தாங்கொள்ளித் தனமும், கோணங்கித் தனமும்தான் படத்தின் நகைச்சுவைக்கு உதவியிருக்கின்றது என்பதோடு, ஜெய்யின் கதாபாத்திரத்திற்கும் வலு சேர்க்கின்றது.
ஆனால், வழக்கம்போல் ஜெய் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார், அங்கு தற்கொலை செய்து கொண்டுவிட்டார் என்றெல்லாம் சொல்லிவிட்டு படத்தின் இறுதிக் காட்சியில் மீண்டும் காட்டுகின்ற விதத்தில் இயக்குநர் சொதப்பி விட்டார் என்றுதான் கூற வேண்டும்.
படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படுவதற்கு நேர்மாறாக ஜெய், இறுதிக் காட்சிகளில் நடந்து கொள்வதும் அவரது கதாபாத்திரத் தன்மையைச் சிதைக்கின்றது.
படம் முழுக்க குடிப்பது போன்ற காட்சிகளே வருவது என்ன கலாச்சாரமோ தெரியவில்லை. அப்பா சத்யராஜ் பீர் குடிக்கின்றார் என்றால் மகள் நயன்தாராவும் மதுபானக் கடைக்கு தோழிகளோடு சென்று குடிக்கின்றார்.
கணவராக வரும் ஆர்யாவும் ஒவ்வொரு நாளும் குடித்து விட்டு வீட்டுக்கு வருகின்றார். தன் பங்குக்கு சந்தானமும் குடித்து விட்டு ரகளை செய்கின்றார். பின்னர் ஆர்யாவும் சந்தானமும் நண்பர்களுடன் ‘டாஸ்மாக்’ சென்று அங்கேயும் குடிக்கின்றார்கள்.
நண்பர்கள் குடித்து விட்டு ஆடும் பாட்டும் வழக்கம்போல் உண்டு.
இப்படியாக ‘குடிப்பது உடல் நலத்திற்கு கேடு’ என்ற வாசகத்தை படம் முழுக்க திரையின் ஓரத்தில் ஓடவிட்டுக் கொண்டே படத்தையும் ஓட்டியிருக்கின்றார்கள்.
மொத்தத்தில்,
நயன்தாராவுக்காகவும், நஸ்ரியாவுக்காகவும், ஜெய்க்காகவும் ஒருமுறை ‘ராஜா ராணி’ படத்தைப் பார்த்து வைக்கலாம்!
-இரா.முத்தரசன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சமுதாயத்தில் என்ன நடக்கிறதோ அதை தானே படமாக எடுப்பார்கள் - என்ற வாதம் இந்த படத்திலும் செயல்பட்டிருக்கிறது.
சரி சரி டொர்ரெண்ட் லிங்க் தாங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இதுக்குதான் அப்படி விளம்பரம் பண்ணுனார்களா???
பாடல்கள் அனைத்தும் ஹிட்.. பாடல்கள் கேட்க இனிமையாய் இருந்தது.
நவீன ‘மௌனராகத்தை பார்த்துவிட்டு சொல்கிறோம்...
பாடல்கள் அனைத்தும் ஹிட்.. பாடல்கள் கேட்க இனிமையாய் இருந்தது.
நவீன ‘மௌனராகத்தை பார்த்துவிட்டு சொல்கிறோம்...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பாலாஜி wrote:சரி சரி டொர்ரெண்ட் லிங்க் தாங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
"ஓநாயும் ஆட்டுக்குட்டியும் " டொர்ரெண்ட் லிங்க் கொடுங்கப்பா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|