புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
30 Posts - 50%
heezulia
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
72 Posts - 57%
heezulia
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 04, 2013 11:21 am

 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! NT_130804104806000000

"என் மகளை மிரட்டி, என் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என் மகளின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், என, இயக்குனர் சேரன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான சேரன், சென்னை, சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் வசிக்கிறார். இவரது, 2 வது மகள் தாமினி, 20. இவருக்கும், சென்னை, சூளைமேடு, வள்ளலார் முதல் தெருவில் வசிக்கும் சந்துரு, 25, என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் காதல் ஏற்பட்டது. துவக்கத்தில், இவர்களின் காதலுக்கு சேரன் பச்சைக்கொடி காட்டினார். ஆனால், படிப்பு முடியும் வரை காத்திருக்கும் படியும், அதற்குள் சந்துருவும் நல்ல நிலைமைக்கு வரும்படி சேரன் கேட்டுக் கொண்டார்.

சமீபத்தில், சந்துருவின் நடத்தை சரியில்லை எனக்கூறி, மகள் தாமினியிடம் காதலனை மறந்து விடும்படி, சேரன் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த சேரனின் மகள் தாமினி, தன் தந்தை, காதலனிடமிருந்து தன்னை பிரிக்க முயல்வதாகவும், காதலனை அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் தந்தை மீது புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து சேரன் மற்றும் சந்துரு தரப்பினரிடம், ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, நேற்று மதியம், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், ராதா ரவி, இயக்குனர்கள் அமீர், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலருடன் வந்த சேரன், போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

மகளுக்கு நல்ல கணவனை கொடுப்பது தந்தையின் கடமை

பின், புகார் குறித்து நிருபர்களிடம் சேரன் கூறியதாவது: நான், ஏழை, பணக்காரன், ஜாதி, மதம் பார்ப்பது கிடையாது; காதலுக்கு நான் எதிரியும் இல்லை. ஒரு தந்தையாக, என் மகளுக்கு வரப்போகும் கணவனை, என் மருமகனை, நல்லவனா, கெட்டவனா எனப் பார்த்து, தேர்ந்தெடுப்பது என்னை போன்ற ஒவ்வொரு தந்தையின் கடமை; அதற்கான உரிமை எனக்கு உண்டு. துவக்கத்தில் என் மகள் காதலை பற்றி சொன்ன போது, சம்மதித்தேன். படிப்பு முடியும் வரை, காதலன் சந்துரு நல்ல நிலைமைக்கு வரும் வரை காத்திருக்க சொன்னேன்.

சந்துரு நல்லவன் கிடையாது

ஆனால், கடந்த 2 ஆண்டுகளில், சந்துரு குறித்து விசாரித்த போது, அவர் நல்லவர் இல்லை என்பதும், பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும், ஓராண்டுக்கு முன், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற என் மகள் தாமினியிடம், சந்துரு குறித்த உண்மை விவரங்களை ஒரு பெண் எடுத்து கூறியுள்ளார். அவர் நல்லவர் இல்லை; ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என, எச்சரித்தும் உள்ளார்.

10 நாள் மருத்துவமனையில் என் மகளுக்கு சிகிச்சை

இதையடுத்து, என் மகள் காதலை முறித்துக் கொள்ள தயாரான போது, சந்துருவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. என் மகளின் நடவடிக்கையை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்; அவரது, இ -மெயில் மற்றும்," பேஸ்புக் பாஸ்வேர்டை வாங்கி, மிரட்டியதோடு, அவரை மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாக்கினார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட என் மகள், 10 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்; அவரை தேற்றி ஆறுதல் கூறினோம்.

பேஸ்புக்கில் மிரட்டல்

சந்துரு, மொபைல் போன் மூலம் என் மகளை தொடர்பு கொண்டு, "இ -மெயில், "பேஸ்புக் பாஸ்வேர்டை பயன்படுத்தி, உங்கள் குடும்பத்தையே தலை குனிய வைப்பேன் என, மிரட்டியுள்ளார். அவ்வாறு நடக்காமல் இருக்க, குறிப்பிட்ட பெரும் தொகை தர வேண்டும் அல்லது நான் (சேரன்) இயக்கும் படத்தில், சந்துருவை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.

என் மகளே சந்துரு மீது போலீசில் புகார் கொடுத்தார்

இதுகுறித்து என் மகள், எனக்கு தெரியாமலேயே, என்னைப் பற்றிய விவரங்களை தெரிவிக்காமல், கடந்த, 10ம் தேதி சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சந்துரு மீது புகார் அளித்துள்ளார். அதுபற்றி பின்னர் தான் என் மகள் என்னிடம் தெரிவித்தார். இந்த சூழலில், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இருந்து போலீசார், என்னை விசாரணைக்கு வரும்படி அழைத்தனர். அப்போது தான், என் மகள் என் மீது புகார் அளித்தது தெரிய வந்து அதிர்ச்சியடைந்தேன்.

என் மகளின் உயிருக்கு ஆபத்து

இது, முழுக்க முழுக்க, சந்துரு தரப்பினரின் சதி. எனது மகள் சூழ்நிலை கைதியாக்கப்பட்டுள்ளார். என் மகளை மிரட்டி, என் மீது புகார் அளிக்க வைத்துள்ளனர். சந்துரு நல்லவன் இல்லை; என் மகள், சந்துரு மீது அளித்த புகார் உள்ளிட்ட பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. என் மீது பொய் புகார் கொடுக்க வைத்த சந்துரு உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, என் மகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் வராத வகையில் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

பேட்டியின் போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சேரன் இருந்தார். மகள் குறித்து பேசும் போது, கண்ணீர் விட்டு கதற தொடங்கினார். உடனிருந்த அமீர் உள்ளிட்டோர் அவரை தேற்றினர்.

தினமலர்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Aug 04, 2013 11:46 am

100 சதவீதம் உண்மை. நல்லதோர் வீணை செய்து அதை யாராவது நலம் கெட புளுதியில் எரிவாரோ.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 04, 2013 11:52 am

மகளுக்கு நல்ல கணவனை கொடுப்பது தந்தையின் கடமை
நல்ல கருத்து சேரன் அவர்களே , ஆனால் சினிமாவில் மகளுக்கு நல்ல கணவனை தேர்ந்தெடுக்கும் தந்தைகள் வில்லன்களாக சித்தரிக்கபடுகிறார்களே அது ஏன்?



avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Aug 04, 2013 11:56 am

அவர் சினிமாவிலும் அதையே தான் கூறியுள்ளார் முறையில்லா காதல் சரிவராது என்று



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 04, 2013 12:05 pm

போட்டோ தெரியலை அருண் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 04, 2013 12:13 pm

தர்மா wrote:அவர் சினிமாவிலும் அதையே தான் கூறியுள்ளார் முறையில்லா காதல் சரிவராது என்று
ஒரு சில சினிமாக்கள் உண்மையான சமூக அக்கறையுடன் எடுக்கபட்டிருக்கின்றன அண்ணே , ஆனால் பெரும்பாலான சினிமாக்கள் மக்கள் மனதை சிதைக்க தான் ஆயுதமாக பயன்படுகிறது. நான் சேரன் படங்களை மட்டுமே சொல்லவில்லை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Aug 04, 2013 12:20 pm

சரியாக சொன்னீர்கள் தம்பி.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 04, 2013 12:38 pm

krishnaamma wrote:போட்டோ தெரியலை அருண் புன்னகை

ஏன் நு தெரியல மா!ஒன்னும் புரியல 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 04, 2013 12:45 pm

அருண் wrote:
krishnaamma wrote:போட்டோ தெரியலை அருண் புன்னகை
ஏன் நு தெரியல மா!ஒன்னும் புரியல 
இப்ப தெரியுதா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 04, 2013 12:50 pm

அண்ணா தெரியுது சூப்பருங்க 
அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லிக்கொடுங்க
தினமலர் மட்டும் இப்படி ஆகுது..!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக