ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_c10அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_m10அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_c10 
heezulia
அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_c10அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_m10அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_c10 
mohamed nizamudeen
அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_c10அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_m10அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_c10 
VENKUSADAS
அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_c10அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_m10அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_c10அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_m10அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_c10 
heezulia
அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_c10அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_m10அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_c10 
mohamed nizamudeen
அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_c10அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_m10அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_c10 
VENKUSADAS
அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_c10அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_m10அம்மா உணவகம் எப்படி இருக்கு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா உணவகம் எப்படி இருக்கு

3 posters

Go down

அம்மா உணவகம் எப்படி இருக்கு Empty அம்மா உணவகம் எப்படி இருக்கு

Post by சிவா Tue Jun 11, 2013 6:07 pm


ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் மலிவு விலை உணவகங்களை திறந்தது, தமிழக அரசு. இத்திட்டத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு ஏற்பட்டதால், மற்ற ஒன்பது மாநகராட்சி பகுதிகளிலும் விரிவு படுத்தப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு, ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம்3 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. ஒவ்வொரு உணவகங்களிலும், தலா 300 பேருக்கு, காலை 7.00 முதல் 10.00 மணி வரை இட்லியும், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை சாதமும் வழங்கப்படுகிறது.ஓட்டல்களில் அதிக விலைக்கு உணவு பொருட்கள் விற்பனையாகி வரும் நிலையில், சம்பாதிக்கும் தொகையில் பாதியை உணவுக்காக இழந்து வந்த மக்களுக்கு, அம்மா உணவகம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில், இத்திட்டத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், உணவகங்களில் பணிகள் முழுமையாக இன்னும் முடியாதது;

தினமும் 300 பேருக்கு மட்டுமே உணவு என்பதால், பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது.பழைய பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் ஒரு லட்சம் பேர் வந்து செல்கின்றனர். ஆனால், ஒரு மணி நேரத்தில் உணவு வகைகள் தீர்ந்து விட்டன என அறிவிப்பதால், பாதி பேர் திட்டிக் கொண்டே செல்வதும், இங்குள்ள ஊழியர்களும் முறையாக பதில் அளிக்காமல் இருப்பதால், வாக்கு வாதம் ஏற்படுவதும் தொடர்கிறது. இங்கு டேபிள்கள், தட்டுக்கள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதோடு, சுற்றுப்பகுதியில் துர்நாற்றம் வீசு வதால், சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, போதிய அளவு உணவு தயா ரித்து வழங்கவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து மக்கள் கருத்து:

ஆறுமுகம், அவிநாசி கவுண்டம்பாளையம்: எட்டு ரூபாய்க்கு, வயிறு நிறையும் அளவுக்கு உணவு கிடைக்கிறது; டேஸ்ட்டும் நல்லா இருக்கு. கை கழுவ, குடிக்க தண்ணீர் வைக் கப்படவில்லை. அதுவும் வைத்தால் நன்றாக இருக்கும். டோக்கன் கொடுக்கும் இடத்தில் வரிசையாக வருவதற்கு தடுப்பு இல்லாததால், குழப்பம் ஏற்படுகிறது. அனைவருக்கும் உணவு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டால் பிரச்னை இருக்காது.

குமார், அனுப்பர்பாளையம்: குடிநீர் வசதி இன்னும் செய்யப்படவில்லை. எட்டு ரூபாய்க்கு, இரண்டு சாதங்கள் சாப்பிட்டால்தான் வயிறு நிறைகிறது. டம்ளர்கள் குறைவாக வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக வைக்கவும், அமர்ந்து சாப்பிடும் வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அனில்குமார், அனுப்பர்பாளையம்: டிபன், சாதம் நன்றாக இருந்தாலும், அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதால், மக்கள் பாதிக்கின்றனர். தொழிலாளர்கள் அதிகம் உள்ள நகரமாக உள்ளதால், விற்பனை நேரத்தையும் கூடுதலாக்க வேண்டும்.

ராஜேஸ், வேலம்பாளையம்: ஒவ்வொரு டேபிளுக்கும், ஒரு தண்ணீர் குவளை வைக்க வேண்டும். சாப்பிட்டுவிட்டு, ஒவ்வொரு முறையும் தண்ணீர் குடிக்க, தட்டை தூக்கிக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. கேட்கும் அளவுக்கு சாப்பாடு கிடைப்பதில்லை.

செந்தில்குமார், அங்கேரிபாளையம்: சாப்பாடு குழைந்த மாதிரி உள்ளது. சாம்பார் சாதம், சாப்பாடு செய்து, சாம்பார் ஊற்றி கலக்க வேண்டும். ஆனால், கூட்டாஞ்சோறு மாதிரி ஒரே கலவையில் வேக வைக்கப்படுகிறது. டம்ளர் கூடுதலாக வைக்க வேண்டும். தட்டுக்களை நன்றாக கழுவுதை உறுதி செய்ய வேண்டும்.

வெங்கடாசலம்,15 வேலம்பாளையம்: டேஸ்ட் நன்றாக உள்ளது. காலை டிபன், மதியம் சாப்பாடுடன் சென்னையில் வழங்குவதுபோல், இரவிலும் வழங்கவும், கூடுதல் உணவு வகைகள் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவை குறையாமல் இருப்பதையும், தரத்தையும் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும்.

கதிர்வேல், திலகர் நகர்: சாப்பாடு நன்றாக இருந்தாலும், ஒரே மாதிரியாக தினமும் வழங்கப்படுவதால், தினமும் வருவதற்கு ஆர்வம் குறையும். தினமும், மாற்றி, மாற்றி உணவு வகைகள் வழங்க வேண்டும். இதேபோல், ஒரே மாதிரி வழங்கி வந்தால், சில நாட்களில் சும்மா கொடுத்தாலும், வாங்க ஆள் இருக்காது.

கருப்பையா, சோளிபாளையம்: வரிசையாக டோக்கன் வாங்கும் வகையில் தடுப்பு அமைக் காததால், முண்டியடித்துக் கொண்டு வாங்குவது அதிகரித்துள்ளது. தீர்த்து விடும் என்பதால், ஒரே சமயத்தில் மக்கள் நெரிசல் அதிகரிக்கிறது. வரும் அனைவருக்கும் உணவு கிடைக்க ஏற்பாடு செய்தால், பிரச்னை இருக்காது.

சேதுராமன், அனுப்பர்பாளையம்: காலையில் எட்டு இட்லியும், மதியம் இரண்டு சாதமும் வாங்க வேண்டியுள்ளது. முன்னால் வருபவர்களுக்கு மட்டுமே கிடைப்பதால், எண்ணிக்கை குறைகிறது. இட்லிக்கு சாம்பார் மட்டுமே வழங்கப்படுகிறது. சட்னியும் வழங்கலாம். சப்பாத்தி, பூரி என ஒரு சில நாட்கள் மட்டுமாவது மாற்றலாம்.

தனலட்சுமி, ஆத்துப்பாளையம்: வீட்டில் சமைப்பது போல் நன்றாகத்தான் உள்ளது. குடும்பத்துடன் வந்து சாப் பிட்டுப் பார்த்தோம். ரேஷன் அரிசி போல தெரியவில்லை. அருகில் இருந்தவர்கள், வாரத்துக்கு ஒருமுறையாவது சிக்கன் உணவு வகைகளும் குறைந்த விலையில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என பேசிக்கொண்டிருந்தனர். கூடுதல் உணவு வகைகளை சேர்த்தால், வீட்டில் சமையல் செய்யக்கூட தேவையில்லை.

ராமநாதன், பழைய பஸ் ஸ்டாண்ட்: தட்டுக்கள் முழுமையாக கழுவாமலும், டேபிள்கள் சுத்தம் இல்லாமலும், சுகாதாரமற்ற முறையில் உள்ளன. கோவையில், ஒருமுறை பயன்படுத்தும் பேப்பரை தட்டுக்களில் வைத்து வழங்கப்படுகின்றன. அதேபோல், வழங்க வேண்டும். கூட்டம் அதிகமானால், சாப்பாடு அளவு குறைத்து வழங்கப்படுகிறது; அவ்வாறு, செய்யக்கூடாது.

மாரிமுத்து, எம்.எஸ்., நகர்: மலிவு விலை உணவு சாப்பிடலாம் என பஸ் ஸ்டாண்டுக்கு மூன்று நாள் வந்தும், கிடைக்கவில்லை. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தாலும், கடைசியில் இல்லை என்கின்றனர். முறையாகவும் பதில் அளிப்பதில்லை; மக்களை விரட்டியடிக்கின்றனர். பணிகளும் பாதியில் உள்ளதால், மக்கள் வரிசையில் நிற்க முடிவதில்லை.

பரக்கத்துல்லா, ஊத்துக்குளி: இட்லி, சாதம் நன்றாக உள்ளது. ஆனால், வாங்க வேண்டும் என்றால், 11.00 மணி முதல் வரிசையில் நிற்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் முடிந்து விட்டது என திருப்பி அனுப்புகின்றனர். தண்ணீர் வசதியும் சரியில்லை. தட்டுப்பாடில்லாமல் உணவு வழங்க வேண்டும்.

அகம்மது நசீர், காதர்பேட்டை: அறிவித்துள்ள நேரத்துக்குள் வந்தாலும், பஸ் ஸ்டாண்டில் உள்ள உணவகத்தில் உணவு தீர்ந்து விட்டது என காரணம் கூறி, விரட்டியடிக்கின்றனர். உள்ளூர், வெளியூர் என ஆயிரக்கணக்கான பஸ்களில் வருபவர்களுக்கு, குறைந்த விலையில் உணவு கிடைத்தால், மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், பெயரளவுக்கு மட்டுமே திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், கூடுதலாக உணவு வழங்க வேண்டும்.

செவி சாய்ப்பார்களா?

உணவகங்களுக்கு மகளிர் சுய உதவி குழு பெண்கள், 250 ரூபாய் சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டுள் ளனர். அதிகாலை 4.00 முதல் மாலை 4.00 மணி வரை என 12.00 மணி நேரம் கடும் பணிச்சுமையில் சிக்கி தவிக்கின்றனர். உணவு தயாரித்தல், விற்பனை என இரு பணிகளிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.மொத்தம் 300 பேருக்கு மட்டுமே உணவு வழங்கப்படுவதால், கிடைக்காதவர்கள் திட்டித்தீர்க்கின்றனர்; வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இது, பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. விட்டால் ஓடி விடலாம் என்ற மன நிலையி லேயே பணிபுரிகின்றனர். தலைக்கேறிய போதையில் வந்து, வம்பு இழுக்கும் ஆண்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது. "ஷிப்ட்' அடிப்படையில், கூடுத லாக பெண்கள் நியமிக்க வேண்டும். உணவு தயாரிக்க வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் போதிய பாதுகாப்பு இல்லாமலும், பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லாமல் இருப்பதும், திடீர், திடீரென அச்சத்தை ஏற்படுத் தும் வகையில், சத்தங்கள் வருவதும் பெண்களை அச்சுறுத்தி வருகிறது. பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். விற்கும் அளவுக்கு உணவு தயாரிக்கவும், பொருட்கள் வழங்கவும், பொறுப்பு அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என்பது மகளிர் சுய உதவி குழு பெண்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமலர்


அம்மா உணவகம் எப்படி இருக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அம்மா உணவகம் எப்படி இருக்கு Empty Re: அம்மா உணவகம் எப்படி இருக்கு

Post by பூவன் Wed Jun 12, 2013 9:34 am

பூவன் :
முக்கியமாக சில உணவகங்கள் சாக்கடை குட்டைகளின் ஓரம் அமைக்கபட்டுள்ளது .... இது வருத்தப்படும் நிகழ்வு , சாக்கடை நீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது ....
சந்திராபுரம் என்ற இடத்தில் (திருப்பூர் ) ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அம்மா உணவகம் எப்படி இருக்கு Empty Re: அம்மா உணவகம் எப்படி இருக்கு

Post by Manik Wed Jun 12, 2013 1:01 pm

நல்ல திட்டங்கள் வரும் போது அது அனைத்து மக்களிடத்திலே போய் சேர்வது சற்று கடினம்தான் ஆனால் ஒருநாள் நிச்சயம் அனைவரும் பயன் பெறுவர்.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அம்மா உணவகம் எப்படி இருக்கு Empty Re: அம்மா உணவகம் எப்படி இருக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "அம்மா" உணவகம் மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் !
» அரசு மருத்துவமனைகளில் 'அம்மா' உணவகம்
» குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்!
» அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum