ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் !

2 posters

Go down

இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Empty இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் !

Post by krishnaamma Tue Jun 11, 2013 9:14 am

இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! E_1358078025

இந்துமதம் ஆறுபிரிவுகளாக இருந்த காலம் ஒன்று உண்டு. கணபதியை வழிபடுவோர் காணாபத்யம், சிவனை வழிபடுவோர் சைவம், விஷ்ணுவை வழிபடுவோர் வைணவம், சக்தியை வழிபடுவோர் சாக்தம், குமரனை வழிபடுவோர் கவுமாரம் எனப்பட்டனர். இந்தக் கடவுள்களின் வழிபாடு இன்று வரை நிலைத்து நிற்கிறது. ஆனால், சூரியனை வழிபடும் சவுமாரம் என்ற மதம் மட்டும் காலப்போக்கில் மறைந்து விட்டது. அதுவும் வடமாநிலங்களில் தான். தற்போது, பெயரளவுக்கு சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லுதல் ஆகிய அளவோடு சூரிய வழிபாடு நிற்கிறது.
ஆனால், தமிழகத்திலும் கேரளாவிலும் மட்டும், சூரிய வழிபாட்டுக்கென தனிநாள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சூரியனின் வடதிசைப் பயணம் ஆரம்பமாகும் உத்தராயண காலத்தின் முதல்நாள் பொங்கல் பண்டிகையாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கேரளாவில், இந்நாள் "மகர சங்கராந்தி'. அன்று ஒளி வடிவமாக சாஸ்தாவை மக்கள் வணங்குகின்றனர். சபரிமலையில் விசேஷ பூஜை நடக்கிறது.

மற்ற தெய்வங்களை நாம் சிலை வடிவிலேயே பார்க்கிறோம். ஆனால், சூரியன் கண்கண்ட தெய்வமாக தினமும் நம் கண்முன் தெரிகிறார். புராணங்களின்படி அவர் பெரிய பணக்காரர். ஆனால், இரக்க குணமுள்ளவர். யார் என்ன கேட்டாலும் கொடுக்கக்கூடியவர். "ஸ்யமந்தகம்' என்னும் மணியை அவர் மாலையாக அணிந்து இருந்தார். அந்த மணிமாலை இன்னொரு
சூரியனுக்கு ஒப்பானது. சூரியனின் அளவுக்கு ஒளி வீசக்கூடியது. அந்த மாலை யாரிடம் இருக்கிறதோ, அவருக்கு எட்டுப் பாரம் அளவுக்கு தங்கம் கிடைக்கும். அது மட்டுமல்ல! அதை அணிந்திருப்பவர் என்ன நினைக்கிறாரோ, அந்தப் பொருள் உடனடியாக கையில் கிடைத்து விடும். இப்படிப்பட்ட மாலையை இழக்க யாருக்காவது மனது கேட்குமா!

ஆனால், இதை துவாரகையில் வசித்த தனது பக்தரான சத்ராஜித்துக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டார். அந்தளவுக்கு இரக்க மனமுள்ளவர்.' சூரியஒளியே உலகில் பயிர்பச்சை விளையக் காரணமாக இருக்கிறது. சூரியன் இல்லாவிட்டால் உலகம் இல்லை. ஒரு காலத்தில் மகான்கள், சூரிய ஒளியைப் பார்க்காவிட்டால், அன்றைய தினம் சாப்பிடவே மாட்டார்கள். தொடர்ந்து அடைமழை பெய்யும் காலங்களில் சூரிய உதயம் இருக்காது. அதுபோன்று இரண்டு, மூன்று மாதங்கள் வரை கூட அவர்கள் சாப்பிடாமல் இருந்து விடுவர்.
காந்திஜியின் தாயார் புத்லிபாயிடம் இந்தப் பழக்கம் உண்டு. அவர், சூரியன் உதயமாகாத நாட்களில் சாப்பிடமாட்டார். சிறுவனான
காந்திஜிக்கு அதைக்கண்டு வருத்தமாக இருக்கும். வாசலில் வந்து நின்றபடி, சூரிய வெளிச்சம் வெளியே தெரிகிறதா என்று
கவனித்துக் கொண்டே இருப்பார். திடீரென மேகங்கள் விலகி, லேசாக சூரிய கிரணங்கள் வெளியே தெரிந்ததும், வீட்டுக்குள் ஓடிப்போய் அம்மாவிடம் சொல்வார். அம்மாவும் வெளியே வந்து எட்டிப் பார்ப்பதற்குள், சூரியனை மீண்டும் மேகம் மறைத்து விடும். அந்த அம்மையார் சாப்பிடமாட்டார். இப்படி, இரண்டு மூன்று நாட்கள் வரை அவர் சாப்பிடாமல் இருந்துள்ளார்.
சூரியன் எளிமையானவர். அவருக்கு பிடித்த பூ "எருக்கு'. விநாயகருக்கும் இதே மலர் பிடிக்கும். உலக மக்களுக்கு தன்னாலான எல்லா பொருட்களையும் வழங்கிவிட்டு, தனக்கென யாரும் பயன்படுத்தாத எருக்கம்பூவை மாலையாக அணிந்து கொண்டவர்.
இதனால் அவரை "அர்க்கன்' என்று சொல்வர். "அர்க்கம்' என்றால் "எருக்கு'. அர்க்கன் என்றால், 'எருக்கு மாலை அணிந்தவர்' என்று பொருள்.

இதனால், தமிழகத்தின் ஒரே சூரியக்கோயிலான சூரியனார்கோயிலில் எருக்கஞ்செடி தல விருட்சமாக உள்ளது. சிவனும், அம்பாளும் சூரியனைத் தங்கள் கண்களாகக் கொண்டுள்ளனர் என்பர். ஒரு கண் சூரியன் மற்றொரு கண் சந்திரன். நெற்றிக்கண் அக்னி என்று வர்ணிக்கின்றனர். விஷ்ணுவையும் "சூரிய நாராயணர்' என்று சொல்வதுண்டு. அதிகாலையில் சூரியனைப் பார்க்காத
கண்கள் வீணே என்கின்றனர் மகான்கள். எனவே, தினமும் அதிகாலையில் எழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்த பிறகு, நம் அன்றாடப்பணிகளைத் துவங்க வேண்டும்.

இது போலவே ஒவ்வொரு உட்பிரிவும் தன் தெய்வமே பெரிது என்று சொல்கிறது; என்றாலும் "பிரத்யக்ஷ தெய்வம் " என்று சொலல்ப்படுவது சூரியனே !

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Empty Re: இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் !

Post by krishnaamma Tue Jun 11, 2013 9:18 am

அணைக்கின்ற தாயே போற்றி...!
அருள்பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கும் தந்தாய் போற்றி...!
தாயினும் பரிந்து சால
சகலரை அணைப்பாய் போற்றி...!
தவிக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி...!
தூயவர் இதயம் போல
துலங்கிடும் ஒளியே போற்றி...!
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தை தருவாய் போற்றி...!
ஞாயிறு... நலமே வாழ
நாயகன் வடிவே போற்றி...!
நானிலம் உளநாள் மட்டும்
போற்றுவோம் போற்றி போற்றி...!
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Empty Re: இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் !

Post by Muthumohamed Tue Jun 11, 2013 9:50 am

தெரிந்துகொண்டேன் அம்மா நன்றி நன்றி



இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Mஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Uஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Tஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Hஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Uஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Mஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Oஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Hஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Aஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Mஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Eஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Empty Re: இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum