ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!

+5
சாமி
ராஜு சரவணன்
Muthumohamed
யினியவன்
சிவா
9 posters

Go down

நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Empty நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!

Post by சிவா Sun Jun 09, 2013 8:55 am


https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/7158_504221239650978_1992923057_n.jpg

பெண்ணாகப்பட்டவர்கள், இன்றைக்கும் பெரும்பாலோர் சுடுகாட்டின் சூழலை தாங்கக்கூடிய பக்குவம் இல்லாதவர்களாகத்தான் உள்ளனர், அங்கு எரியூட்டப்படும் அல்லது புதைக்கப்படும் பிணத்தை பார்க்கும் சக்தி கொண்டவர்கள் கிடையாது. இது போன்ற காரணங்களினால், எவ்வளவுதான் தனக்கு பிரியப்பட்ட கணவர், தந்தை, தனயன் என்ற உறவாக இருந்தாலும், மரணம் என்ற பிரிவு வரும்போது, வீட்டு வாசலோடு நின்று, இறந்த உறவுகளை வழியனுப்பி வைக்கவேண்டிய நிலையில்தான் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், இரவு நேரங்களில் வரும் பிணத்தைக்கூட எரிக்கும், புதைக்கும் பக்குவத்துடன் ஒரு பெண் இருக்கிறார் என்றால் ஆச்சரியம்தானே.

ஆச்சரியமூட்டும் அந்த பெண்ணின் பெயர் வைரமணி, கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் வெட்டியான்(ள்)வேலை பார்த்து வருகிறார்.

இரவு பத்து மணியளவில் சுடுகாட்டில் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பிணத்தை, சரிவர எரிகிறதா என்று அருகே இருந்து பார்த்தபடியும், அவ்வப்போது நெருப்பை தூண்டிவிட்டபடியும் தன்னந்தனியாக நிற்கிறார் .

பிணத்தை எரித்து முடித்த பிறகே பேசத் துவங்கினார்:

என் அப்பா கருப்பசாமிதான் இங்கு வெட்டியான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு எழுதப்படிக்க தெரியாது. ரொம்ப சின்ன வயசிலேயே எனக்கு கல்யாணமாகிருச்சு. மூணு குழந்தைகள் இருக்காங்க. வீட்டுக்காரருக்கு போதுமான வருமானம் இல்லை. இந்த நிலையில் திடீர்ன்னு அப்பா இறந்துட்டாரு. அவர் பார்த்த வெட்டியான் வேலையை எடுத்துச் செய்ய யாரும் முன்வரலை. குடும்ப சுமையை குறைச்சுக்கலாம், பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கலாம் என்ற எண்ணத்துல இந்த வெட்டியான் வேலையை நான் எடுத்துக்கிட்டேன்.

அப்பா பக்கத்துலயே இருந்து இந்த வேலைய பல நாள் பார்த்ததுனால எனக்கு எந்த பயமோ, தயக்கமோ இல்லை; இந்த பேய், பிசாசு மேலேயும் நம்பிக்கை இல்லை. உண்மைய சொல்லப்போனா இந்த சுடுகாட்டை, சிவன் வாசம் செய்யும் கோவிலாத்தான் நான் பார்க்கிறேன். இந்த தொழிலுக்கு வந்து இப்ப பதினைந்து வருஷமாகப்போகுது.

பிணத்தை புதைக்கணும்னாலும் சரி, எரிக்கணும்னாலும் சரி, இரண்டாயிரம் ரூபாய் கூலி வாங்குகிறேன். இதுல விறகு மற்றும் உதவியாள் கூலி போக, எனக்கு ஐநூறு ரூபாய் மிஞ்சுனா அதிகம்.

ஒரு பிணத்தை எரிக்க அல்லது புதைக்க வேண்டு மானாலும், ஆறு மணி நேரம் பிடிக்கும். "சாயந்திரம் பிணத்தை கொண்டு வர்றோம், எரிக்கணும், எல்லா ஏற்பாடும் செஞ்சு வையுங்க...' என்று சொல்லி, முன்பணம் கொடுத்து செல்வார்கள், நள்ளிரவு பிணத்தை கொண்டு வந்து, கொள்ளி வச்சுட்டு போயிடுவாங்க. நான் தனியாளா நின்னு எரிச்சு முடிப்பேன்.

செத்தது கோடீசுவரராக இருப்பர்... ஆனா, எனக்கு கொடுக்க வேண்டிய கூலியை கொடுக்க ரொம்பவே பேரம் பேசுவாங்க. "கொடுக்கிறத கொடுங்கப்பான்னு கேட்டு வாங்கிப்பேன். குழந்தைகள் பிணத்தை பார்க்கும் போது மட்டும் மனசு வேதனையா இருக்கும்; மற்றபடி பிணங்களை பார்த்து, பார்த்து பழகிப் போச்சு.

பிணத்தை எரிக்கும் போது, அதன் உடலில் சிறு நூல் கயிறு கூட இருக்காது. ஆனாலும், அந்த பிணத்தின் கையில இருந்து கழட்டின கால் பவுன் மோதிரத்தை யாரு எடுத்துக்கிறதுன்னு சுடுகாட்டிலேயே சண்டைபோட்டு, மண்டைய ஒடைச்சுக்குவாங்க. போகும் போது எதையும் கொண்டு போக முடியாதுங்கிறத கண் எதிரே பார்த்துக்கிட்டே, இந்த ஜனங்க கால் பவுனுக்கு சண்டை போடுறத பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கும்.

உலகம் ரொம்ப அவசரமாயிடுச்சு. இப்ப யாருக்கும் ஆற அமர சுடுகாட்டில் நின்று பிணத்தை எரிக்கவோ, புதைக்கவோ பொறுமையில்லை, அதுனால, மின் மயானத்திற்கு போய் பத்து நிமிடத்துல வேலையை முடிக்கத்தான் விரும்புறாங்க. இதன் காரணமா இப்ப எனக்கு கொஞ்சம் தொழில், "டல்' தாங்க...மாதத்திற்கு நாலோ, ஐந்தோ பிணங்கள் வர்றதே அதிகம், என்று கூறிய வைரமணியை, இரண்டு விஷயத்திற்காக பாராட்டியே ஆக வேண்டும்.

ஒன்று, ஆதரவில்லாமல் அனாதையாக இறந்து போனவர்களின் பிணங்களை, கூலி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பணத்திற்கு முக்கியத்துவம் தராமல், இறந்து போன பிணத்திற்கு முக்கியத்துவம் தந்து, உறவினர்கள் செய்வது போல காரியம் எல்லாம் செய்து, உரிய மரியாதையுடன் பிணத்தை புதைக்கிறார்.

இரண்டாவதாக, "குழந்தைகளை நன்றாக படிக்கவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொழிலை செய்து வருகிறார், இருந்தாலும், இதற்கென நிர்ணயம் செய்த தொகையைத் தவிர கூடுதலாக வாங்குவதில்லை. மேலும், "உழைக்காமல் மற்றவர் பணத்தை உதவியாக பெறுவதில் விருப்பமில்லை, ஆகவே, என்னைப்பற்றி எழுதுங்க; ஆனா, யாரும் பண உதவி செய்யவேணாம்ன்னு எழுதுங்க...' என்று கூறி முடித்தார், இந்த வித்தியாசமான தன்னம்பிக்கை மனுஷி.

ரா. மகேந்திரன்


நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Empty Re: நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!

Post by யினியவன் Sun Jun 09, 2013 10:06 am

சூப்பர் பெண்மணி சூப்பருங்க

மனம் தளராமல், மிரளாமல் இந்த பணியை செய்து குடும்பத்தை காக்கும் இவர் பாராட்டுக்குரியவர்.

பண உதவி வேண்டாம் என்று சொன்னது அற்புதம்.

நிதி உதவி வேண்டுவது நம் அரசியல்வாதிகள் மட்டுமேன்னு சொல்லாம சொல்லிட்டாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Empty Re: நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!

Post by Muthumohamed Sun Jun 09, 2013 10:13 am

ரொம்ப தைரியசாலி பெண்மணி தான் இவங்க இவரை போல் தைரியம் ஒரு சிலருக்கு தான் வரும் :afro: :afro: :afro:



நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Mநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Uநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Tநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Hநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Uநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Mநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Oநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Hநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Aநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Mநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Eநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Empty Re: நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!

Post by ராஜு சரவணன் Sun Jun 09, 2013 10:18 am

யினியவன் wrote:சூப்பர் பெண்மணி சூப்பருங்க

மனம் தளராமல், மிரளாமல் இந்த பணியை செய்து குடும்பத்தை காக்கும் இவர் பாராட்டுக்குரியவர்.

பண உதவி வேண்டாம் என்று சொன்னது அற்புதம்.

நிதி உதவி வேண்டுவது நம் அரசியல்வாதிகள் மட்டுமேன்னு சொல்லாம சொல்லிட்டாங்க.

"ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" இது பழமொழி
"ஆவதும் பெண்ணாலே அழிப்பதும் பெண்ணாலே" இது புது மொழியோ தல புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Empty Re: நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!

Post by யினியவன் Sun Jun 09, 2013 10:29 am

அதான் முக்கால்வாசி ஆளுங்க எஸ்கேப் ஆகி மின் அடுப்புல
உக்காந்துக்கறாங்கன்னு அந்தம்மா சொல்றாங்களே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Empty Re: நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!

Post by சாமி Sun Jun 09, 2013 3:24 pm

சிவா wrote: உண்மைய சொல்லப்போனா இந்த சுடுகாட்டை, சிவன் வாசம் செய்யும் கோவிலாத்தான் நான் பார்க்கிறேன்.
........................... ................................. ...................................
பிணத்தின் கையில இருந்து கழட்டின கால் பவுன் மோதிரத்தை யாரு எடுத்துக்கிறதுன்னு சுடுகாட்டிலேயே சண்டைபோட்டு, மண்டைய ஒடைச்சுக்குவாங்க. போகும் போது எதையும் கொண்டு போக முடியாதுங்கிறத கண் எதிரே பார்த்துக்கிட்டே, இந்த ஜனங்க கால் பவுனுக்கு சண்டை போடுறத பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கும்.
...................... ........................ .......................
ஒன்று, ஆதரவில்லாமல் அனாதையாக இறந்து போனவர்களின் பிணங்களை, கூலி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பணத்திற்கு முக்கியத்துவம் தராமல், இறந்து போன பிணத்திற்கு முக்கியத்துவம் தந்து, உறவினர்கள் செய்வது போல காரியம் எல்லாம் செய்து, உரிய மரியாதையுடன் பிணத்தை புதைக்கிறார்.

இரண்டாவதாக, "குழந்தைகளை நன்றாக படிக்கவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொழிலை செய்து வருகிறார், இருந்தாலும், இதற்கென நிர்ணயம் செய்த தொகையைத் தவிர கூடுதலாக வாங்குவதில்லை.

மேலும், "உழைக்காமல் மற்றவர் பணத்தை உதவியாக பெறுவதில் விருப்பமில்லை, ஆகவே, என்னைப்பற்றி எழுதுங்க; ஆனா, யாரும் பண உதவி செய்யவேணாம்ன்னு எழுதுங்க...' என்று கூறி முடித்தார்,

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Empty Re: நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!

Post by ராஜா Sun Jun 09, 2013 3:29 pm

மகிழ்ச்சி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Empty Re: நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!

Post by positivekarthick Sun Jun 09, 2013 5:44 pm

சிம்பிள் வார்த்தை !!!!!!!!!!கிரேட் !!!!!!!!!!!!!!!!


நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Pநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Oநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Sநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Iநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Tநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Iநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Vநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Eநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Emptyநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Kநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Aநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Rநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Tநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Hநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Iநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Cநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Empty Re: நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!

Post by அருண் Sun Jun 09, 2013 6:07 pm

துணிச்சலான பெண்மணி! சூப்பருங்க நன்றி
கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தாலே வாழ்வில் முன்னேறி விடலாம்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Empty Re: நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!

Post by தளிர் அலை Sun Jun 09, 2013 7:45 pm

இந்த சுடுகாட்டை, சிவன் வாசம் செய்யும் கோவிலாத்தான் நான் பார்க்கிறேன்
செய்யும் தொழிலே தெய்வம்.. அதை செய்யும் இடமே கோவில் னு சொல்லாம சொல்லிட்டாங்க...

பிணத்தை எரிக்கும் போது, அதன் உடலில் சிறு நூல் கயிறு கூட இருக்காது. ஆனாலும், அந்த பிணத்தின் கையில இருந்து கழட்டின கால் பவுன் மோதிரத்தை யாரு எடுத்துக்கிறதுன்னு சுடுகாட்டிலேயே சண்டைபோட்டு, மண்டைய ஒடைச்சுக்குவாங்க. போகும் போது எதையும் கொண்டு போக முடியாதுங்கிறத கண் எதிரே பார்த்துக்கிட்டே, இந்த ஜனங்க கால் பவுனுக்கு சண்டை போடுறத பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கும்.
எதார்த்தம்... எதார்த்தம்.. இன்றைய மனுஷங்க மனச அழகா சொல்லிட்டங்க..

ஆதரவில்லாமல் அனாதையாக இறந்து போனவர்களின் பிணங்களை, கூலி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பணத்திற்கு முக்கியத்துவம் தராமல், இறந்து போன பிணத்திற்கு முக்கியத்துவம் தந்து, உறவினர்கள் செய்வது போல காரியம் எல்லாம் செய்து, உரிய மரியாதையுடன் பிணத்தை புதைக்கிறார்.
உங்க மனசுக்கு நன்றி

"உழைக்காமல் மற்றவர் பணத்தை உதவியாக பெறுவதில் விருப்பமில்லை, ஆகவே, என்னைப்பற்றி எழுதுங்க; ஆனா, யாரும் பண உதவி செய்யவேணாம்ன்னு எழுதுங்க
மீண்டும் மீண்டும் நன்றி நன்றி நன்றி


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Empty Re: நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum