ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:19 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு!

Go down

தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Empty தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு!

Post by சாமி Sun Jun 09, 2013 5:40 am

ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கிறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே


மனிதர்களாகிய நாம் நமக்குள் எத்தனை பாகுபாடு பார்க்கின்றோம். இனம், மதம், மொழி, நாடு என்று எத்தனையோ காரணிகள். அத்தனை காரணிகளையும் முழுமூச்சோடு பயன்படுத்தி வேற்றுமையை வளர்க்கின்றோம். ஆனால் தெய்வமும் அப்படி இருக்க முடியுமா? இருந்தால் அது தெய்வமாகுமா? திருக்குறள் என்ன சொல்கின்றது? "வேண்டுவார் வேண்டாதார் இலான்" என்று இறைவனைச் சொல்கின்றது. இறைவனுக்கு வேண்டப்பட்டவர்கள் வேண்டாதவர்கள் என்று யாரும் கிடையாது. வடமொழியில் "துஷ்ட நிக்ரஹ! சிஷ்ட பரிபாலன!" என்று இறைவனின் பண்பைக் கூறுவார்கள். அதாவது தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பது இறைவனின் கடமை என்கிறது வடமொழி. ஆனால் தமிழ் இந்த வாதத்தை எந்தக் காலத்திலும் ஒப்புக் கொள்ளவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் அப்படி சொல்லியிருக்கின்றார் என்றால் பிற்காலத்தில் அருணகிரியும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறார். எப்படி தெரியுமா?
மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழ வைப்போன்

வண்டுகள் மொய்க்கின்ற மலர்களால் கட்டப்பட்ட பூச்சரத்தை குழலில் சூட்டிக் கொள்ளும் வள்ளி நாச்சியாரைக் களவு செய்து கலவு கொண்டவன் முருகன். தன்னை யாரேனும் தமிழால் வைதாலும் கூட அவரைக் காப்பாற்றி வாழ வைப்பான் அந்த முருகன். பாருங்களேன்! கந்தனின் கருணையை! ஆகையால் சூரனுடன் போரிட்டு தேவர்களைக் காத்து சூரனுக்கும் வாழ்வளித்தான். சூரனை சேவலும் மயிலுமாக்கி தன்னுடன் வைத்துக் கொண்டானே! அந்த சேவலையும் மயிலையும் இன்றும் நாம் வழிபடுகின்றோமே! ஆக தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு என்கிறது தமிழ். கச்சியப்பரும் கூட இதே கருத்தைக் கந்தபுராணத்தில் குறிப்பிடுகிறார்.

ஆதாளம் என்றால் தன்னைப் பற்றியே பெருமை பேசுதல். பாருங்கள் இத்தனை சிறிய சொல்லில் எத்தனை பெரிய பொருள். ஆதாளி என்றால் தன்னைப் பற்றியே வீண்பெருமை பேசுகின்றவர். ஆதாளிவாயன் என்று ஊர்ப்பக்கம் இன்னமும் சொல்வதுண்டு. ஒன்றறியேனை - நல்லவைகள் ஒன்றும் அறியாதவனை. அறத்தீதாளி - அறத்திற்கு எதிரான தீய கருத்துகளை ஆள்கின்றவர். ஆண்டது செப்புமதோ - அருள் தந்து ஆட்கொண்டதை எப்படிச் சொல்வது? இந்த வரியை இப்பொழுது படியுங்கள். ஆதாளியை ஒன்று அறியேனை அறத்தீதாளியை ஆண்டது செப்புமதோ! "முருகா! வீண்பெருமை பேசித் திரிந்து கொண்டிருந்த என்னை, நல்லவைகள் என்று ஆன்றோர் கூறுவதையெல்லாம் அறியாத என்னை, தருமத்திற்கு எதிரான தீய கருத்துகளைக் கொண்ட என்னை, நீ வலிய வந்து ஆட்கொண்டாயே! அந்தக் கருணையை என்னவென்று சொல்வது?" அருணகிரி கதறுகின்றார்..

அப்படி ஆட்கொண்டது எப்படித் தெரியுமா? அதையும் அவரே சொல்கின்றார். கூதாள மலர் என்று ஒன்று உண்டு. மிகவும் அழகான மலராக இருந்தாலும் மலருக்குரிய நறுமணமில்லாமல் திகழும். பொதுவாக மணமில்லாத மலர்களை யாரும் விரும்பிச் சூடிக் கொள்வதில்லை. ஆனால் முருகப் பெருமானுக்கு கூதாள மலரும் சூட்டப் படுகிறது. கிராதகன் என்றால் கொலைத் தொழில் புரிகின்றவர். அவர்களுக்கு வேடவர் என்றும் பெயருண்டு. ஆனால் இன்றைக்குத் தீயவர்களைக் கிராதகர் என்று கூறும் வழக்கம் தமிழில் உள்ளது. கிராத குலிக்கு இறைவா - வள்ளியை மணம் புரிந்து கொண்டதன் மூலம், கொலைத்தொழில் புரிவதால் இழிவானவர் என்று மற்றவர்களால் கருதப் படும் வேடர்கள் குலத்திற்கும் தலைவனாக விளக்குகின்ற வேலவா!

மணமில்லாத கூதாள மலருக்கும் மதிப்பளித்து சூடிக்கொண்டு, வள்ளியை மணந்து கொலைத் தொழில் வேடுவருக்கும் தலைவனாகி, வேதாளங்களுக்கும் பூதங்களுக்கும் கூட இறைவனாக விளங்கும் வேலவரே! வீண்பேச்சும், நன்மையறியாதவனும் தரும நெறி ஒழுகாதவனுமாகிய என்னைக் கூட கருணை தந்து காத்தாயே! இந்தப் பெருமையை எப்படிச் சொல்வது!

நன்றி - கோ.இராகவன் - தமிழ் இலக்கியம் வெப்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum