Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க
4 posters
Page 1 of 1
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க
ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற அளவு தான தர்மங்கள் செய்து புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பணம் அதிகம் செலவு செய்ய வேண்டுமே என்ற நினைப்பில் பலரும் வருந்துவதுண்டு. பணத்திற்கும் புண்ணியத்திற்கும் தொடர்பே இல்லை என்பது தான் உண்மை. இலவசமாக தானங்கள் செய்வதற்கு பணம் தேவையில்லையா என்று கேட்பவர்களும் உண்டு. அடுத்தவர்களுக்கு உதவி செய்ய பணம் தேவையில்லையா என்பவரும் உண்டு. ஆனால் இவை மட்டுமே புண்ணியம் என்பதில்லை.
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பிரதி பலன் பார்க்காமல் மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்திற்கும் நன்மை பயக்கும் செயல்களைச் செய்வது தான் புண்ணியம். அப்படிப் பட்ட செயல்களைச் செய்ய முற்படும் போது ஒரு சில நேரங்களில் பணம் என்ற ஒன்று தேவைப்படுகிறது. பணத்தைச் சம்பாதிக்க படும் பாட்டை நினைத்துப் பார்க்கும் போது பலனை எதிர்பார்க்காமல் சேவை செய்ய மனம் மறுக்கிறது. அந்த சமயங்களில் ஆழ் மனதிற்கும் வெளி மனதிற்கும் இடையேயான போரட்டம் தவிர்க்க முடியாததாகிறது.
பைசா செலவு இல்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க என்ன வழி? புண்ணியம் என்பது என்ன? நம்மிடம் உள்ளதை நம்மால் முடிந்ததை செய்வது. மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான். அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு.
ஆம். புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை.
உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும். இது தான் புண்ணியம். மற்றவர்களின் துக்கங்களை தனது என்று எண்ணி வருந்துங்கள். தனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அனைத்து உயிர்களுக்கும் தனக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள். உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள். இறைவனை துணைக்கு அழையுங்கள். மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள். தன்னல மற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள். அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள். உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும். அனைவரும் நம்மதியாக வாழ்வார்கள் அந்த மகா புண்ணியம் உங்களை மட்டுமே வந்து சேரும்.
இந்த புண்ணியச் செயலுக்கு நீங்கள் செலவு செய்தது என்ன? ஒன்றுமில்லையே. பைசா கூட செலவு செய்யவில்லை. எங்கும் அலையவில்லை. யாரிடமும் கோபம் கொள்ளவில்லை. பொய் கூறவில்லை. யாரிடமும் எதற்காகவும் கையேந்தவில்லை. யாரும் உங்களை குறைகூறப் போவதில்லை. எதையும் இழக்கவில்லை. எதையும் இழக்காமல் நீங்கள் புண்ணியத்தை மட்டுமே சம்பாதிக்கிறீர்கள்.
இதை எப்படி செயல் வடிவத்திற்கு கொண்டு வருவது.
மிக எளிது. தினமும் ஏதேனும் ஒரு நேரத்தில் யாராவது ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதற்காக நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை. எந்த நேரத்திலும் யாருக்காகவும் எண்ணிக் கொள்ளலாம். ஆரம்பத்தில் சொந்த பந்தங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். நாளடைவில் கண்ணில் படும் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்வீர்கள். நாட்கள் செல்ல செல்ல, நீங்கள் கேள்விப்பட்டவர்களுக்காகவும் அவர்கள் நல்ல முறையில் வாழ நீங்கள் எண்ணத் துவங்குவீர்கள்.
நீங்கள் வேண்டிக்கொள்ளும் நபர் பற்றி கவலைப் படாதீர்கள். அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அவர் நல்ல முறையில் வாழ நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள்.
ஆம்புலன்ஸ் வண்டிச் சத்தம் கேட்கும் போதல்லாம் அதில் பயணம் செய்பவர் நல்ல முறையில் குணம் அடைய இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். யாரோ ஒருவர் விபத்தில் அடிபட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டால் அவர் உடல் நலம் பெற எண்ணிக் கொள்ளுங்கள்.
மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களிடமும் இந்தச் செயலை செய்யுங்கள். தெருவோரம் ஒரு மரம் வெட்டப்பட்டிருந்தால் அதற்காகவும் எண்ணிக் கொள்ளுங்கள். அந்த மரத்தை வெட்டியவர் மேலும் சில மரங்களை நடட்டும் என்று. வெட்டப்பட்ட மரம் மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவட்டும் என்று.
உலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கட்டும் என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து தனிப்பட்ட முறையில் அவர்களுக்காக அவர்கள் நன்மைக்காக வேண்டிக் கொள்ளுங்கள். மிகப் பெரிய புண்ணியம் உங்களை வந்து சேரும்.
இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்றால் நிச்சயம் செய்ய முடியும். இந்த எண்ணங்களுக்காக நீங்கள் செலவு செய்ய வேண்டியது எதுவும் இல்லை. ஆனால் கிடைப்பதோ மிகப் பெரிய புண்ணியம்.
எனவே புண்ணியம் செய்ய எதுவும் தேவையில்லை நல்ல எண்ணங்களுடன் கூடிய மனம் இருந்தால் போதும்.
ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற அளவு தான தர்மங்கள் செய்து புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பணம் அதிகம் செலவு செய்ய வேண்டுமே என்ற நினைப்பில் பலரும் வருந்துவதுண்டு. பணத்திற்கும் புண்ணியத்திற்கும் தொடர்பே இல்லை என்பது தான் உண்மை. இலவசமாக தானங்கள் செய்வதற்கு பணம் தேவையில்லையா என்று கேட்பவர்களும் உண்டு. அடுத்தவர்களுக்கு உதவி செய்ய பணம் தேவையில்லையா என்பவரும் உண்டு. ஆனால் இவை மட்டுமே புண்ணியம் என்பதில்லை.
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பிரதி பலன் பார்க்காமல் மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்திற்கும் நன்மை பயக்கும் செயல்களைச் செய்வது தான் புண்ணியம். அப்படிப் பட்ட செயல்களைச் செய்ய முற்படும் போது ஒரு சில நேரங்களில் பணம் என்ற ஒன்று தேவைப்படுகிறது. பணத்தைச் சம்பாதிக்க படும் பாட்டை நினைத்துப் பார்க்கும் போது பலனை எதிர்பார்க்காமல் சேவை செய்ய மனம் மறுக்கிறது. அந்த சமயங்களில் ஆழ் மனதிற்கும் வெளி மனதிற்கும் இடையேயான போரட்டம் தவிர்க்க முடியாததாகிறது.
பைசா செலவு இல்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க என்ன வழி? புண்ணியம் என்பது என்ன? நம்மிடம் உள்ளதை நம்மால் முடிந்ததை செய்வது. மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான். அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு.
ஆம். புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை.
உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும். இது தான் புண்ணியம். மற்றவர்களின் துக்கங்களை தனது என்று எண்ணி வருந்துங்கள். தனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அனைத்து உயிர்களுக்கும் தனக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள். உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள். இறைவனை துணைக்கு அழையுங்கள். மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள். தன்னல மற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள். அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள். உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும். அனைவரும் நம்மதியாக வாழ்வார்கள் அந்த மகா புண்ணியம் உங்களை மட்டுமே வந்து சேரும்.
இந்த புண்ணியச் செயலுக்கு நீங்கள் செலவு செய்தது என்ன? ஒன்றுமில்லையே. பைசா கூட செலவு செய்யவில்லை. எங்கும் அலையவில்லை. யாரிடமும் கோபம் கொள்ளவில்லை. பொய் கூறவில்லை. யாரிடமும் எதற்காகவும் கையேந்தவில்லை. யாரும் உங்களை குறைகூறப் போவதில்லை. எதையும் இழக்கவில்லை. எதையும் இழக்காமல் நீங்கள் புண்ணியத்தை மட்டுமே சம்பாதிக்கிறீர்கள்.
இதை எப்படி செயல் வடிவத்திற்கு கொண்டு வருவது.
மிக எளிது. தினமும் ஏதேனும் ஒரு நேரத்தில் யாராவது ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதற்காக நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை. எந்த நேரத்திலும் யாருக்காகவும் எண்ணிக் கொள்ளலாம். ஆரம்பத்தில் சொந்த பந்தங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். நாளடைவில் கண்ணில் படும் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்வீர்கள். நாட்கள் செல்ல செல்ல, நீங்கள் கேள்விப்பட்டவர்களுக்காகவும் அவர்கள் நல்ல முறையில் வாழ நீங்கள் எண்ணத் துவங்குவீர்கள்.
நீங்கள் வேண்டிக்கொள்ளும் நபர் பற்றி கவலைப் படாதீர்கள். அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அவர் நல்ல முறையில் வாழ நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள்.
ஆம்புலன்ஸ் வண்டிச் சத்தம் கேட்கும் போதல்லாம் அதில் பயணம் செய்பவர் நல்ல முறையில் குணம் அடைய இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். யாரோ ஒருவர் விபத்தில் அடிபட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டால் அவர் உடல் நலம் பெற எண்ணிக் கொள்ளுங்கள்.
மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களிடமும் இந்தச் செயலை செய்யுங்கள். தெருவோரம் ஒரு மரம் வெட்டப்பட்டிருந்தால் அதற்காகவும் எண்ணிக் கொள்ளுங்கள். அந்த மரத்தை வெட்டியவர் மேலும் சில மரங்களை நடட்டும் என்று. வெட்டப்பட்ட மரம் மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவட்டும் என்று.
உலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கட்டும் என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து தனிப்பட்ட முறையில் அவர்களுக்காக அவர்கள் நன்மைக்காக வேண்டிக் கொள்ளுங்கள். மிகப் பெரிய புண்ணியம் உங்களை வந்து சேரும்.
இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்றால் நிச்சயம் செய்ய முடியும். இந்த எண்ணங்களுக்காக நீங்கள் செலவு செய்ய வேண்டியது எதுவும் இல்லை. ஆனால் கிடைப்பதோ மிகப் பெரிய புண்ணியம்.
எனவே புண்ணியம் செய்ய எதுவும் தேவையில்லை நல்ல எண்ணங்களுடன் கூடிய மனம் இருந்தால் போதும்.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
Re: பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க
நல்ல பகிர்வு இதை 'இந்து' forum இல் மாற்றிவிடுகிறேன். இங்கு ஜோதிடத்தில் இருப்பதைவிட அது சிறந்தது சரியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க
எனவே புண்ணியம் செய்ய எதுவும் தேவையில்லை நல்ல எண்ணங்களுடன் கூடிய மனம் இருந்தால் போதும்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதம் சார்ந்தது இல்லை மனம் சார்ந்தது
krishnaamma wrote:நல்ல பகிர்வு இதை 'இந்து' forum இல் மாற்றிவிடுகிறேன். இங்கு ஜோதிடத்தில் இருப்பதைவிட அது சிறந்தது சரியா?
இது மதம் சாரந்த தகவல் போல தோன்றினால் மன்னிக்கவும். மனித மனம் சாரந்த வாழ்க்கை முறையைத் தான் கூற முயன்றேன். இது அனைத்து மனித இனத்திற்கும் பொருந்தும். அதனால் தான் மதம் சாராத ஜோதிட பகுதியில் பதிவிட்டேன். இருப்பினும் உங்களின் முடிவை மதிக்கிறேன். ஏற்கிறேன்.
நன்றி.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
Similar topics
» எஸ்டிடி-25 பைசா, லோக்கல் கால் 10 பைசா: ராஜா
» செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம்
» செலவில்லாமல் அழகி ஆகலாம்
» செலவில்லாமல் அழகி ஆகலாம்
» தமிழக அரசு வழங்கும் ஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்
» செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம்
» செலவில்லாமல் அழகி ஆகலாம்
» செலவில்லாமல் அழகி ஆகலாம்
» தமிழக அரசு வழங்கும் ஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|