ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள்

Go down

காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Empty காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள்

Post by சிவா Thu Jun 06, 2013 8:23 am


1869 எதற்கு முக்கியத்துவம் பெற்றது?
ராணி எலிசபத் தெரியுமா?
1985ல் நிகழ்ந்த சோகம்?
1937ல் என்ன நடந்தது?
இப்படி அடுத்தடுத்து கேள்விகள் கேட்டால், பதில் சொல்ல முடியுமா?

முடியும்... நாணயங்கள் சேகரித்தால்' என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

கோவை, பி.என்., புதூரில் வசிக்கும் இவர் கூறியதாவது: கடந்த 1969ல் நாணயங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதைப்பற்றி, ஆராய்ந்து, சேகரிப்பில் ஈடுபட்டேன். இந்திய அரசு, 1964 ல் தான், முதன் முதலாக, மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவாக, 50 மற்றும் ஒரு ரூபாய் சிறப்பு நாணயங்களை (commemorative coins) வெளியிட்டது. ஒரு 50 பைசா நாணயம் இந்தியிலும், மற்றொன்று ஆங்கிலத்திலும் இருக்கும். 1969ல், காந்திக்காக, 10,20, 50, ஒரு ரூபாய் மதிப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. 1985ல் இந்திரா மறைந்தபோது, அவருக்காக 50 பைசா நாணயமும், 5, 20, 100 ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்பட்டன. 1989ல் நேருவின் நூற்றாண்டு நினைவாக 1, 5 ரூபாய் நாணயங்களும், 20, 100 ரூபாய் நாணயங்களும் வெளியிடப்பட்டன. இவ்வாறு, இந்தியாவின் வரலாற்றை நினைவு கூரும் வகையில், சுபாஷ் சந்திரபோஸ், மொரார்ஜி தேசாய், தண்டி யாத்திரை, சுதந்திரம் பெற்று 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள், அண்ணாதுரை என, பல்வேறு கால கட்டங்களில், அவர்கள் உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்பட்டன.

நடப்பாண்டில் வைஷ்ணவி தேவிக்காக, சிறப்பு நாணயம் வெளியாகி உள்ளது. இதுவரை, 130 வகையான நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் என் சேகரிப்பில் உள்ளது. ஒவ்வொரு நாணயங்களைச் சேகரிக்கும்போது, அந்த காலத்தை அறிய முடியும். நாணயங்கள் சேகரிப்போர், வாழ்க்கையிலும் ஒழுக்க நெறியை கடைபிடிப்பர். கையில் பணம் கிடைத்தால், வீணாகச் செலவு செய்யாமல், சேகரித்து வைத்துக் கொள்ள விரும்புவர். தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவில் மட்டும் நமக்கும் தெரியும். அதுவே, நாணயங்கள் சேகரிப்போரிடம் கேட்டால், அது ஆயிரம் ஆண்டுகள் கடந்த கோவில் என்று சொல்வார்கள். கோவில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் முடிந்ததன் நினைவாக, ஆயிரம் ரூபாய் நாணயத்தை, கோவில் படத்துடன், அரசு வெளியிட்டது நினைவுக்கு வரும். அனா, பைசாவாக மாறி, ரூபாயாக உருவெடுத்தது எப்போது என்றெல்லாம், இப்போதைய இளைஞர்களுக்கு தெரியாது. இன்றைய இளைஞர்களிடம் "அனா' பற்றி கேட்டால், அப்படியொரு நாணயம் இருந்ததா? என்று கேட்பார்கள்.

நாளைய இளைஞர்கள், 50 பைசா, ஒரு ரூபாய் நாணயம் இருந்ததா என்று சந்தேகத்தோடு கேட்பார்கள். காலப்போக்கில், ஐந்து, பத்து ரூபாய் நோட்டுகளும் மறைந்துவிடும். இதுபோன்ற நாணயங்கள்தான், வரலாறுகளை அவர்களுக்குத் தெரிவிக்கும். 1991ல் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டது நிறுத்தப்பட்டது. 2011ல் ஐந்து ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது. 2013ல் பத்து ரூபாய் நோட்டு நிறுத்தப்பட்டு, பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்தில் வரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வரலாற்றை உணர்த்த, விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிகள் நிலையிலேயே, நாணயக் கண்காட்சி நடத்தி, மாணவர்களை அதில் ஈடுபடச் செய்யலாம். நாணயங்கள் சேகரிப்போரை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு, கோபாலகிருஷ்ணன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.பிரெய்லி: கண் பார்வை இழந்த லூயில் பிரெய்லியின் நினைவாகவும் நாணயம் வெளிவந்துள்ளது. அந்த நாணயத்தில், பிரெய்லி எழுத்துகள் உள்ளன. தொட்டுப்பார்த்து அதை உணர முடியும்.1957 ல் இந்தியாவில், புழக்கத்தில் இருந்த ஒரு அணா, அரை அணா போன்றவை, "நயா பைசா'வாக (புதிய காசு) மாறியது, இந்தாண்டு தான்.

நாணயங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் :

மின்ட்: மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற "மின்ட்' மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் நகரங்களில் இயங்குகின்றன. சிறப்பு நினைவு நாணயங்களை இந்த அமைப்புதான் வெளியிடுகிறது. அனைத்து மதிப்புகளிலும் நாணயங்கள் வெளியாகி உள்ளன. மும்பை, கொல்கத்தா நகரங்களில் 60 ஆண்டுகளாகவும், ஐதராபாத்தில், 2012 ஆண்டு முதல், மின்ட் இயங்கி வருகின்றன.வெள்ளி நாணயம்: அரசன் வில்லியம் நான்கு, உருவம் பொறித்த, 1,25, 50 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி நாணயங்களை, கிழக்கிந்திய கம்பெனி, 1835ம் ஆண்டு வெளியிட்டது. இந்த நாணயத்தின் எடை 11.9 கிராம். முற்றிலும் வெள்ளியிலானது. 1840ல் விக்டோரியா ராணியின் உருவத்துடன் இரண்டு விதமான நாணயங்கள் வெளியிடப்பட்டன. அதில், ராணி கிரீடம் வைத்திருக்க மாட்டார். சிறிய தலையுடனும், பெரிய தலையுடனும் ராணியின் உருவங்கள் அச்சிடப்பட்டிருந்தன. 1862ல் விக்டோரியா ராணி கிரீடம் அணிந்த உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியிடப்பட்டன. இந்த நாணயங்கள் அனைத்தும் முற்றிலும் வெள்ளியலானது. அதன்பிறகு, எட்வர்ட் அரசருக்கும், ஐந்தாம் ஜார்ஜ் அரசருக்கும் வெள்ளி நாணயங்கள் வெளியிடப்பட்டன. அதற்குப்பிறகு, உலகப்போர் நடந்ததால், வெள்ளி நாணயங்கள் வெளியிடப்படவில்லை.1940-45ம் ஆண்டுகளில், 1,25,50 ரூபாய் மதிப்பிலான, நாணயத்தின் பாதி எடை வெள்ளி கொண்டவை வெளியிடப்பட்டன. 1947ல் இந்திய அரசால், நிக்கல் நாணயங்கள் வெளியாகின. பித்தளை, நிக்கல் உலோகக் கலைவயில், 1, 2,5, 10 ரூபாய் மதிப்புகளில் நாணயங்கள் வெளியாகின. 2004ல் ஐந்து ரூபாய் மதிப்பிலான நாணயங்கள், ஸ்டீல் உலோகத்தில் வெளியிடப்பட்டன.

தினமலர்


காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum