ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்.......

2 posters

Go down

ஈகரை பெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்.......

Post by Powenraj Tue May 21, 2013 9:55 am

பெண் என்பவள் ஒரு குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறாள். குறிப்பாக தன்னுடைய குழந்தைகளின் அறிவுக்கும், பண்பாட்டிற்கும் அடித்தளம்இடுபவளே ஒரு பெண்தான். கல்வி ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்புள்ளவனாகவும் மாற்றுகிறது. வளர்ந்து வரும் இந்நவீன உலகில் கல்விமுக்கியத்துவம் வகிக்கிறது.கல்வி நிறுவனங்களோ நாள்தோறும் பல்கி பெருகி வருகின்றன. மருத்துவம், பொறியியல், கணிணி, கணிதம், வணிகம், இலக்கியம், வரலாறு என்று பல துறைவாரியாக கல்விபோதிக்கப்படுகிறது. மனித குலத்தின் அகக் கண்ணைத் திறந்துவிடும். கல்வி அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு மிக அவசியமான ஒன்றாகும்.
-
கல்வியைப் பற்றி முக்கியத்துவத்தைப் பாமரனும் அறியும் வண்ணம் பலஅறிவொளி இயக்கங்கள் நாளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம்; பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் மீது கடும் நடவடிக்கை என்று அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறது. இருப்பினும் அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் இன்றுவரை சாத்தியப்படவில்லை.
-
அறியாமல் வளைகுடா நாட்டு மோகத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள். படிப்பவர்கள் கூட அதைப் பாதியில் நிறுத்தி விடுகிறார்கள். நம் சமுதாயத்தில் ஆண்களே படிக்க முன் வராத நிலையில், பெண்கள் கல்வியைப் பற்றியே சிந்தனையின்றி இல்வாழ்க்கைமட்டுமே அவர்கள் கடமை என்றுஎண்ணித் திரிகின்றனர். இஸ்லாம் ஒரு போதும் பெண்கல்விக்குத் தடை விதித்ததில்லை.
-
‘முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் கல்வியைத் தேடுவது கட்டாய கடமையாகும் என்பது நபிமொழி.
இன்றைய காலக் கட்டத்தில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதமே அதிகம். இருப்பினும் பெண்களில் படிப்பறிவு பெற்றவர்களின் சதவிகிதம் ஆண்களை விட குறைவே. இதிலும் முஸ்லீம் பெண்களின் படிப்பறிவு சதவிகிதம் மிக மிகக் குறைவு. இதையெல்லாம் தாண்டிநம் சமுதாயத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் பெண்கள் படித்து முன்னேறியுள்ளனர். இந்த நிலை தொடர பெண்கள் அனைவரும்கல்வி பயிலுவதற்கு வசதி வாய்ப்புக்களை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும்.
-
இன்று உருவாகியுள்ள பல தனியார் கல்வி நிறுவனங்களால் கல்வி வியாபாரமாகி விட்டது என்பது நிதர்சனமான உண்மை. அதனால் வசதி படைத்தவர்களுக்கு எளிதான கல்வி, எளியவர்களுக்கு எட்டாக் கனியாக இருக்கிறது.பெண்களுக்குக் கல்வி என்ற விழிப்புணர்வு நம் மக்களிடம் குறைந்தே காணப்படுகிறது. கல்வி கற்ற பெண்ணுக்கு ஏற்ற மணமகன் கிடைப்பது சிரமமாக இருப்பதால், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. மேலும் குடும்பத்தில் படித்த பெற்றோர் இல்லாததால் அவர்களுக்கு கல்வியில் வழிகாட்டுதல் கிடைக்காமல் போய் விடுகிறது.
-
மேலும் காலங்காலமாக இருந்து வரும் ஆணாதிக்கப் போக்கினால் பெண்கள் அடக்கி வைக்கப்படுகின்றனர். அதனால்அவர்களிடம் ஆக்கப் பூர்வமான திறமைகள் இருந்தும், அவற்றை வெளிப்படுத்தத் தயங்குகின்றனர். பெண்கள் எந்த தொழிலைச் செய்ய முற்பட்டாலும்; பெட்டைக் கோழி கூவி விடியுமா?’பெண்புத்தி பின்புத்தி’ என்று கேலி பேசி அவர்களை இளக்காரமாக பார்க்கிறது இச்சமூகம். நாளுக்கு நாள் பெண்களின் வாழ்வியல் நடைமுறைகள் மாறிவரும் இக்காலக்கட்டத்தில், நம் கலாச்சாரத்தைச் சிதைக்காமல், பழையன கழிதலும், புதியன புகுதலும்வாக்கிற்கு ஏற்ப, பெண்களின்அடிமைத்தளையை நீக்கி, சமூக மாறுதல்களை ஏற்படுத்த பெண்கல்வி அவசியம்.
-
உலகம் விஞ்ஞான வளர்ச்சியில் உன்னதமான உயரத்தை எட்டிப் பிடித்திருக்கிறது. அறிவியல் அகிலத்தையே ஆட்டிப் படைக்கிறது. ஆனால் பெண்கள் என்று வரும்போது, அவர்கள் சம உரிமையை மறுக்கும் ஆண் ஆதிக்கப் போக்கு நம் சமுதாயத்தில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இப்போக்கு, முன்பேவிட சற்றுக் குறைந்திருந்தாலும் இன்றும் பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டே வருகிறது. பெண்கள் சிறு வயதில் பெற்றோருக்கும், மணமுடித்தப் பின் கணவருக்கும், முதுமையில் பிள்ளைகளுக்கும் பயந்தும், பணிந்தும் வாழ வேண்டும். இன்றும், பெண்சிசுக்கொலை, வரதட்சணைக் கொடுமை, பாலியல்வன்கொடுமை என்று எத்தனைத் தாக்குதல்கள் பெண்ணினம் மீது ! இத்தகைய அரக்கர்களின் பிடியிலிருந்து பெண்கள் விடுபட கல்வி ஒன்றே தீர்வு என்பதை அவர்கள் உணர வேண்டும்.
-
’அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்ற நம் சமுதாயத்தின் பழமைவாதக் கருத்துக்கு எதிராக, பெண் கல்வியை ஆதரித்தும், போற்றியும் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் அன்றே முழக்கமிட்டார்.
‘கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் !
அந்நிலத்தில் புல் விளைந்திடலாம் ! நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை!’
என்று பாடிய அவரது கனவு ஓரளவுக்குத்தான் நிறைவேறியுள்ளது என்றால் அது மிகையில்லை. மேலோட்டமாகபார்க்கையில் பெண்கள் சம உரிமை பெற்றது போல் தோன்றும். ஆனால் அந்த மாயத் தோற்றத்தின் அடியில் பல கசப்பான உண்மைகள் ஒளிந்திருக்கின்றன.


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: பெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்.......

Post by Powenraj Tue May 21, 2013 10:04 am

ஆணுக்கு அளிக்கும் கல்வி அவன் ஒருவனுக்கு; பெண்ணுக்கு அளிக்கும் கல்வி ஒரு குடும்பத்துக்கு;என்பதை உணர்ந்து, பெண்கல்விமேம்பட இச்சமுதாயம் வழிவகை செய்ய வேண்டும். ஆண்களைப் போலவே பெண்களும் திறமையில் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்று முழுமனதுடன் நம்பினால் மட்டுமே பெண்கள் நிறைய வெற்றிகளைப் பெற முடியும். பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்காத சமுதாயம், நாகரிகமான சமுதாயமாக இருக்க முடியாது.
இன்று நம் பெண்கள் கல்வியின் சிறப்பை உணர்ந்து, முழு மனதுடன் முயன்று, கல்வி கற்று, ஆண்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்று மிகுந்த திறமை பெற்றவர்களாய் விளங்குகின்றனர். வேலை வாய்ப்பும் அவர்களுக்கு வளமாகவே உள்ளது. ஆனால் ஆண்களின் மனதில் மட்டும் பெண்கள் மேல் உள்ள பார்வை இன்னும் மாறவில்லை. சமுதாயத்தில் பெண்களுக்கு இன்னும் முழுப் பாதுகாப்பும், அங்கீகாரமும் கிடைப்பதில்லை. அவர்கள் உழைப்பதற்கு, சவால்களைச் சந்திப்பதற்கான தைரியத்தை, திறமையை பெற்றிருந்தாலும் எந்த விஷயத்திலும் சுயமாக முடிவு எடுக்க முடிவதில்லை.ஆண்கள் தான் அறிவார்ந்த முடிவுகள் எடுக்க முடியும் என்ற ஆணவப்போக்கு மாறும் வரை பெண்கள் முழுமையான முன்னேற்றம் காண முடியாது.
குடும்ப அளவில் பொருளாதார பாரத்தைச் சுமக்கும் பெண்களில் பலரும் இரட்டை குதிரை சவாரி செய்யும் நிலையிலேதான் இருக்கின்றனர். வீட்டுப் பணி, அலுவலகப்பணி இரண்டையும் திறம்பட செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் பலருக்கு. ஆண் பெண் இருவருக்கும் குடும்பப் பொறுப்பில் சம பங்கு இருக்கிறது என்பதை எந்த மட்டத்தில் இருக்கும் ஆண்களும் புரிந்து கொள்வதில்லை. ஏதோ குடும்பம்என்றால் அது முழுக்க முழுக்க பெண்கள் பொறுப்பு என்ற தவறான எண்ணம் ஆண்களுக்கு இருக்கிறது. இதுஒருபுறம் இருக்க, கல்வியும், பொருளாதார சுதந்திரமும் கிடைக்கப் பெற்ற ஒரு சில பெண்கள் மமதை கொண்டு நம் கலாச்சாரத்துக்குப் பொருந்தாத வகையில் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். ஆரோக்கியமற்றஇப்போக்கை மாற்றிக் கொண்டு,பெண்கள் பரிசுத்தமான சிந்தனைகளை வளர்த்து, சீராகநடந்து கொள்ள வேண்டும். பொறுமை பெண்ணுக்கு இயல்பான குணம்; விட்டுக் கொடுத்தல் பெண்ணுக்கு சுலபமான கலை; அரவணைத்து, அனுசரித்து செல்லும் தாய்மையின் குணம் பெண்மையின் தனிச் சிறப்பு. இக்குணங்களைக் கடைப்பிடிக்கும் படித்த பெண்கள் சமூகத்தின் தூண்களாக விளங்குவர்.
எனவே, பெண்களுக்கு கல்வி அவசியம் என்ற விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நம் சமுதாயம் பிறரை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் முன்னேறியிருக்கிறது. பலதுறைகளில், வெற்றிப் பாதையில் பீடு நடைபோடும் இந்த சமுதாயம், பெண்கள் முன்னேற்றம் என்ற பாதையில் ஒரு சில மைல் கற்களைத் தான் கடந்திருக்கிறது. சமுதாயத்தில் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சீர்கேடுகளைக் களைந்து சீரான பாதையில் சிரமமின்றி நடை போடத் தடையாய் இருக்கும் கற்களையும், முட்களையும் அகற்றுவோம். இருளில் மூழ்கியிருக்கும் சமுதாயத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வர ‘பெண்கல்வி’ என்ற விளக்கைஏற்றுவோம்.
-
ஹாரம் தளம்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: பெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்.......

Post by Muthumohamed Tue May 21, 2013 10:31 am

பெண்கல்வியின் முக்கியத்தை உணர்த்தும் பதிவு சூப்பருங்க



பெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்....... Mபெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்....... Uபெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்....... Tபெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்....... Hபெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்....... Uபெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்....... Mபெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்....... Oபெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்....... Hபெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்....... Aபெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்....... Mபெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்....... Eபெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்....... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum