ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டவன் உத்தரவு!

Go down

ஆண்டவன் உத்தரவு! Empty ஆண்டவன் உத்தரவு!

Post by சிவா Mon May 20, 2013 2:32 am



பக்தர்களின் கனவில் ஒரு பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்தப் பொருளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுவதை நீங்ள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அதுவும் கனவில் வரும் அந்தப்பொருள் முருகப்பெருமானின் உத்தரவு என்பதை நம்பமுடிகிறதா?

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே புகழ்பெற்ற சிவன்மலை முருகன்கோயில் உள்ளது. மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறையின் சார்பில் நிர்வாகிக்கப்படும் கோயில்களுள் இது முதன்மை கோயிலாகும். இதில் சுப்பிரமணியர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவர் சிவசலாபதி என்றும் அழைக்கப்படுகிறார்.

வேறு எந்த கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, இந்த கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் ஏதாவது ஒரு பொருளை வைத்துசிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம். பின்னர் அந்த பொருளை கண்ணாடி பேழைக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள்.

இந்த கண்ணாடி பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தேர்வு முறை சற்று வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து இன்ன பொருளை வைத்து பூஜை செய்யுங்கள் என்று உத்தரவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் தான் இது ஆண்டவன் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது.

ஆண்டவனிடம் இருந்து உத்தரவு கிடைத்ததாக சொல்லப்படும் பக்தர் கோயில் நிர்வாகத்திடம் தான் கண்ட கனவை பற்றி சொல்வார். அவர் சொன்னதை அப்படியே நம்பி விட முடியாதே அதற்கும் ஒரு சோதனை வைத்திருக்கிறார்கள். அது என்ன சோதனை என்றால் சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வர்ணத்தில் பூக்களை எடுத்து கொண்டு பூ போட்டு பார்ப்பார்கள். இந்த சோதனையில் வெற்றி பெற்றால் தான் அந்த பொருள் பூஜைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

பின்னர் அந்த பொருளை வைத்து சிறப்பு பூஜை செய்து, கோயிலில் பக்தர்களின் பார்வையில் படும்படி கண்ணாடி பேழைக்கு கீழே அந்த பொருள் வைத்து பூஜை செய்யப்பட்ட தேதில, கனவில் வந்ததாக சொல்லப்படும் பக்தரின் பெயர், ஊர் ஆகிய விவரங்கள் எழுதி ஒட்டப்பட்டிருக்கும்.

இப்படி கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்று எதுவும் கிடையாது. இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சிவன்மலை முருகன் சுட்டிக்காட்டும் வரையில் பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். சில பொருட்கள் ஐந்தே நாட்களில் மாறியதும் உண்டு. சில பொருட்கள் 3 வருடங்களுக்கும் மேலாக மாறாமல் இருந்ததும் உண்டு.

இவ்வாறு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப்பகுதியில் உள்ள பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதற்கு முன்பு, தங்கத்தை வைத்து பூஜை செய்த போது, தங்கத்தின் விலை உயர்ந்ததாகவும், துப்பாக்கியை வைத்து பூஜை செய்த போது கார்கில் போர் நடந்தது என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். ஒரு முறை ஆற்று நீர் வைத்து பூஜை செய்த போது காவிரி நீர் பிரச்னை எழுந்ததாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் மஞ்சள் வைத்து பூஜை செய்த போது ஈரோட்டில் நடந்த மஞ்சள் விவசாயிகள் மாநாட்டில் மஞ்சளுக்கான விலையை முதன்முறையாக மஞ்சள் விவசாயிகளே அறிவிக்க இருந்ததை சொன்னார்கள். இப்படி கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யப்படும் பொருள் பெரிய அளவில் ஏற்றம் பெறும் அல்லது இறங்கு முகத்தை சந்திக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதி பள்ளிப்பாடப்புத்தகங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி பென்சில் பாக்கெட் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு தமிழகத்தில் பள்ளிக்கல்வி சிறப்பாக இருக்கும் அல்லது சிக்கல்களை சந்திக்கும் என்று பக்தர்கள் சொல்கின்றனர்.

திருப்பூரில் இருந்து காங்கேயம் செல்லும் சாலையில் காங்கேயத்திற்கு முன்பு 4 கி.மீ. தொலைவில் உள்ளது. சிவன்மலை ஈரோட்டில் இருந்து 50 கி.மீ. கோவையில் இருந்து 73 கி.மீ. பழநியில் இருந்து 70 கி.மீ.

குமுதம்


ஆண்டவன் உத்தரவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum