ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறையிலடைக்கப்பட்ட சீதைகளைப் பார்க்கச் சென்ற அநுமானர்கள்

Go down

சிறையிலடைக்கப்பட்ட சீதைகளைப் பார்க்கச் சென்ற அநுமானர்கள் Empty சிறையிலடைக்கப்பட்ட சீதைகளைப் பார்க்கச் சென்ற அநுமானர்கள்

Post by nandhtiha Thu Oct 22, 2009 9:39 am

http://www.meenagam.org/?p=13918
சிறையிலடைக்கப்பட்ட சீதைகளைப் பார்க்கச் சென்ற அநுமானர்கள்



எழுதியவர்பகலவன் on October 22, 2009
பிரிவு: கட்டுரைகள், செய்திகள்



சிறையிலடைக்கப்பட்ட சீதைகளைப் பார்க்கச் சென்ற அநுமானர்கள் Rajapakse_dmkmpஇந்தியத்
தூதுவர்களின் இலங்கை விஜயம், எதிர்பார்த்த அளவிற்கு பரபரப்பினை
உருவாக்கவில்லை. அதிரடி அரசியலிற்கு பேர்போன தமிழக அரசியல் ஜாம்பவான்கள்,
நாடெங்கும் ஐந்துநாள் கடுகதிப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள்.

முகாம் மக்கள்
விடுவிக்கப்படவேண்டுமென்கிற விவகாரத்தை, சென்னையில் இருந்தபடியே இவர்கள்
சொல்லியிருக்கலாம். கைப்புண்ணுக்கு பூதக் கண்ணாடி தேவையில்லை. இவர்கள்
வெளியிடப்போகும் அறிக்கையால், மூன்று இலட்சம் தமிழ் மக்களும் உடனடியாக
விடுவிக்கப்படுவார்களென்று கனவுகாண முடியாது. சொந்த இனம், துன்பத்தில்
வாடுவது கண்டு, சிந்தை இரங்கிப் பயணம் செய்தார்களென்று எவராவது கருதினால்,
அவர்கள் இந்திய அரசியலின் அரிச்சுவடியைப் புரியாதவராவர். இந்திய ஆளும்
வர்க்கத்தின் நலனும், தமிழக ஆட்சியாளர்களின் நலனும் ஒன்றோடு ஒன்று
பின்னிப் பிணைந்து செயற்பட்டது இப் பயணத்தில். 400 இற்கு மேற்பட்ட தமிழக
தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கு விசாரணை நடாத்த இவர்கள் செல்லவில்லை.

இறுதிவரை மக்களோடு இருந்த குற்றத்திற்காக
சிறையிலடைக்கப்பட்ட, அம்மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் கனகரெத்தினம் அவர்களைப் பார்த்து, நலம் விசாரிப்பதற்கும் இத்
தூதுவர்கள் செல்லவில்லை. கிழக்கின் விடியலில் துயர் கொள்ளும், இடம்
பெயர்ந்த மக்களைத் தரிசிக்கவும் இக்குழு செல்லவில்லை. தென்மராட்சிப்
பக்கம் காலடி வைக்கவும் அனுமதியில்லை. ஆகவே, வேறு எதற்காக இந்த ஆளும்கட்சி
அரசியல்வாதிகள் சிறீலங்காவிற்கு விஜயம் செய்தார்கள்? அதிகரிக்கும் சர்வதேச
அழுத்தங்களிலிருந்து சிறீலங்கா அரசைக் காப்பாற்ற, இந்திய மத்திய அரசின்
இராஜதந்திர காய்நகர்த்தலில், பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்பட்டவர்களே
இந்த 10 எம்.பிக்களும். தமிழ் மக்களின் நலன்களை உறுதிப்படுத்த இந்தியா
இருக்கிறது என்பதற்காக, இவர்கள் அனுப்பப்பட்டார்களென்று தவறான கற்பிதங்களை
வளர்த்துக்கொள்ளக்கூடாது.

மே 15இல், போர்
நிறுத்தப்பட்டுவிட்டதென்று பொய்யுரைத்த, சோனியா கலைஞர் கூட்டணியின்
பிரதிநிதிகளே இங்கு வந்துள்ளார்கள். இதில் தி.மு.க எம்பிக்களும்,
திருமாவளவனும் வாய்திறக்கவில்லை. அவ்வாறு திறந்து, ‘முகாம்களெல்லாம்
பூஞ்சோலையாகக் காட்சியளிக்கிறது’ என்று கருத்துக் கூறினால், தமிழினத்
துரோகிப் பட்டம் சூட்டிட, தமிழக மக்கள் காத்திருக்கின்றனர் என்பது
அவர்களுக்குத் தெரியும். காங்கிரஸ்காரர்களுக்கு இத்தகைய ‘இரண்டும்
கெட்டான்’ நிலை கிடையாது. டெல்லி காங்கிரசின் தாளத்திற்கு ஆடும்
பொம்மைகளுக்கு, ஏற்கனவே பல அறிவுரை வகுப்புக்கள் சோனியாவினால்
எடுக்கப்பட்டிருக்கும். அந்த அளவிற்கு, இந்திய அரசியலின் ஜனநாயகம்
வளர்ச்சியுற்று, இமயத்தைத் தொட்டிருக்கிறது.

இந்திய மத்திய அரசின் வெளியுறவுக்
கொள்கையே தமது கொள்கையென்று வியாக்கியானமளித்த கலைஞர் கருணாநிதியின்
எம்.பிக்கள், மத்திய கூட்டாட்சிக்கு பங்கம் ஏற்படாதவாறு
பார்த்துக்கொள்வார்கள். இதில் தமிழீழம், நாடுகடந்த அரசு பற்றி
வலியுறுத்தும் திருமாவளவனின் நிலை தர்மசங்கடமாக அமையப்போகிறது. சர்வதேச
மனிதாபிமான நியமங்களிற்கேற்ப முகாம்கள் பராமரிக்கப்படுவதாக, இலங்கையில்
இருந்தவாறே, காங்கிரசார் மகிந்த புராணம் பாடத் தொடங்கிவிட்டார்கள்.
ஆனாலும் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருமாவளவன் போன்றவர்கள் மௌனவிரதம் பூண்டு,
கருத்துக் கூறுவதை தவிர்த்துள்ளார்கள். இது கலைஞர் போட்ட கடிவாளமா? அல்லது
மத்திய அரசிற்குச் சிக்கல் ஏற்படுத்தாமல் இருப்பதற்கு, தாமாகவே
புரிந்துகொண்டு, வாய்ப் பூட்டினை போட்டுள்ளார்களா? இருப்பினும், தமிழ்த்
தேசிய கூட்டமைப்பினரை கொழும்பில் சந்தித்த, இத் தூதுவர்கள் வெளியிட்ட
செய்தி ஒன்று, இந்தியாவின் உள் நோக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

மீள்குடியேற்றம் செயல்படுத்தப்படுவதை
இராணுவத் தரப்பு எதிர்ப்பதாகவும், அதனையும் மீறி, இந்திய அழுத்தத்தால் அது
நடைமுறைப்படுத்தப்படுமாயின், இராணுவப் புரட்சி ஏற்படும் நிலை
ஏற்படுமென்றும், அத்தகைய நிலை இந்திய நலனுக்கு எதிரான தளத்தினை உருவாக்கி
விடுமென்று கொங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்ததாக உள்
தகவல்கள் கூறுகின்றன. இவைதவிர, இராணுவ ஆட்சியன்று சிறீலங்காவில்
உருவாகுமாயின், அவ் ஆட்சியாளர்கள், மியன்மார் போன்று சீன சார்பு
நிலைப்பாட்டினை வெளிப்படையாக எடுப்பார்களென்று அவர் எச்சரித்துள்ளார்.
ஆகவே கச்சைதீவை தாரை வார்த்ததும், தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போது
தலையைக் குனிந்ததும், ஈழப் போராட்டத்தை அழிக்க சிங்களத்திற்கு உதவியதும்,
ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் விடுதலைப் புலிகளுடன் மோதியதும்,
முள்ளிவாய்க்காலில் மக்கள் அபயக்குரல் எழுப்பும்போது போர்முடிந்து
விட்டதெனப் பொய் சொன்னது, ஏனென்று இப்போது புரிகிறது.

ஈழத் தமிழர்களின் நலனில் இந்தியாவிற்கு
ஆத்மார்த்தமான அக்கறை உண்டென எவராவது வாதிட்டால், சுதர்சன நாச்சியப்பனின்
சர்வதேசப் பார்வையைப் புரிந்துகொள்ள முயலவேண்டும். இந்தியாவையும்
நிராகரித்து எதைச் சாதிக்க முடியுமென கருத்துரைப்போர், இந்தியாவுடன்
இணைந்து எதைப் பெறமுடியுமென்பதையாவது கூறவேண்டும். ஆனாலும் பாரத தேசத்தின்
தேவையை, நாச்சியப்பன் தெளிவாக முன்வைத்துள்ளார்கள். சிறீலங்காவில்
இராணுவப் புரட்சி சாத்தியமா என்பதற்குமப்பால், சீனப் பூச்சாண்டியைக்
காட்டி, தமிழினத்தின் அரசியல் பிறப்புரிமையை மலினப்படுத்தி அழிக்கும்
நடவடிக்கையில் இந்தியா ஈடுபடுவதை நிராகரிக்க முடியாது. இவை தவிர சிங்கக்
குகைக்குள் புகுந்த விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன்,
லண்டன் விஜயத்தின்போது தெரிவித்த சர்வதேச முரண்பாடுகள் குறித்த
விளக்கங்களுக்கு, புதிய பரிமாணங்களையும் அங்கு கண்டிருப்பார்.‘

தப்பிப் பிழைத்தாய் மகனே’ என்று
சிறுத்தையைப் பார்த்து சிங்கம் கர்ஜித்திருக்கிறது.தமிழக அரசியல்வாதிகளைக்
கோமாளிக்கூட்டமெனணி முன்பு சரத்பொன்சேக்கா குறிப்பிட்டபின்னரும்,
பிராந்திய இராஜதந்திர நகர்வுகளில் முதன்முறையாகக் காலடி பதித்திருக்கும்
தமிழகத்தாருக்கு, சிங்களத்தின் பேரினவாத மனோநிலை இன்னமும் புரியாதிருப்பது
வேதனைக்குரியது. சோனியாவின் தூதுவர்கள், சிங்கள ஆட்சியாளர்களுக்கு
பொன்னாடை போர்த்தி, அரசியல் நாகரீகத்தை காப்பாற்றிவிட்டதாக எண்ணினால்,
இதன் எதிர்விளைவுகள், அவர்களுக்கு சாதகமாக அமையாதென்பதையும் உணரும் தருணம்
உருவாகும்.உல்லாசப் பயண இறுதியில் வெளிவரப்போகும் கூட்டறிக்கை,
ஈழத்தமிழினத்தின் உணர்வுகளை பிரதிபலிக்காது என்பதில் சந்தேகம் கொள்ளத்
தேவையில்லை.

அறிக்கையின் சாராம்சம் எவ்வாறு
அமையவேண்டுமென்பது குறித்து, பயணத்திற்கு முன்பாகவே
தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆருண், நாச்சியப்பன் போன்றவர்கள், அதன்
முன்னுரையை எழுதிவிட்டார்கள். முடிவுரை சென்னையில் வெளியிடப்படும்பொழுது,
தனியான அறிக்கையன்றை சமர்ப்பித்து, தனது கருத்துச் சுதந்திரத்தைக்
காப்பாற்றப் போவதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மகிந்தரைச்
சந்தித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்பிக்களை, வதைமுகாமிற்கு செல்லவிடாது
தடுத்த அரசின் ஜனநாயகத் தன்மைகளை, இந்த ஆளும் கட்சித் தூதுவர்கள்
புரியவில்லை. பயணக்குழுவில், தமிழக எதிர்க்கட்சியினரை இணைக்க விரும்பாத
கலைஞரின், ஜனநாயகப் பண்பினையும் இவர்கள் உணர மறுத்துள்ளார்கள். தமிழக ஈழ
அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது போன்று, வவுனியா வதைமுகாம்
மக்களுக்கும் இந்தியப் பிரஜாவுரிமை வழங்கப்படுமென்கிற அதிரடி அதிர்வேட்டு
அறிக்கைகளையும் இக் கூட்டம் வெளியிடலாம்.

பிரச்சனைகளை திசை திருப்புவதற்கும்,
அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கும், இவ்வகையான குறுக்கு வழிப்பாதைகளை
தமிழக ஆட்சியாளர் தேர்ந்தெடுப்பது ஆச்சரியமான விடயமல்ல. எல்லாமே
ஜனநாயகத்தின் பேரால் நடாத்தப்படும் ‘மனிதவதை’ நியாயப்படுத்தல்களே.
சிறையிலிருக்கும் சீதைகளைப் பார்வையிட, டெல்லி ராமர்கள் அனுப்பிய தமிழக
அநுமார்கள் சிங்களத்தின் சிறைப் பராமரிப்பிற்கு நற்சான்றிதழ் வழங்கி,
புதிய இராமாயணக் கதையைப் புனைந்துள்ளார்கள். இப்பயணச் செய்தி கூறும்
விடயம் என்னவென்றால், இந்திய ஆதிக்கத்தில்தான் இன்னமும் ஈழத் தமிழினத்தின்
அரசியல் விவகாரம் இருக்கிறது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட, புதுடெல்லி
மேற்கொண்ட நகர்வாகும். இந்த அநுமார் பயணம், சிறு சலசலப்பை
ஏற்படுத்தினாலும், நிலக்கண்ணிவெடி அகற்றி, விடுதலைப்புலிகளை முழுமையாகப்
பிரித்தெடுக்கும்வரை மீள்குடியேற்றம் நடைபெறாதென்கிற சிங்களத்தின் பிடிவாத
அரசியலில் மாற்றத்தினை ஏற்படுத்தாது.

சனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்வரையாவது,
வதைமுகாம்களுக்குள் தமிழர்களை சிறைவைத்து, பேரினவாத அரசியலை நடாத்த
சிங்களம் முனையும். அரசின் போக்கினை மாற்றியமைக்க, தமிழகத் தலைவர்களாலும்
முடியாது, இந்தியாவும் அதனை விரும்பாது. வேலிக்கு, கலைஞரும் சாட்சியாக
இருக்கவேண்டுமென்பதையே புதுடெல்லியும் எதிர்பார்க்கிறது. சர்வதேச கடல்
எல்லைக்கோட்டிற்கு அப்பாலுள்ள மன்னார் கடற்பரப்பினை, தமது எரிவாயு,
எண்ணெய் அகழ்விற்காக, சிறீலங்காவிடமிருந்து இலவசமாகப் பெறுவதற்கு, சில
விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய இந்தியா விரும்புகிறது. இதன் முதற்கட்டமாக,
தமிழகத் தூதுவர்களை அனுப்பி, வதைமுகாம் வாழ்வில் ‘வசந்தம்’ வீசுகின்ற
தெனச் சொல்ல வைக்கும், காய்நகர்த்தல்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

‘போக்ரான்’ விவகாரத்தில், சர்வதேசத்தின்
தண்டனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள, சிறீலங்காவிற்கு இந்தியா வழங்கிய
லஞ்சமே இந்தக் கச்சதீவு. தற்போது இது போன்றதொரு நிலைமை சிறீலங்காவிற்கு
ஏற்பட்டுள்ளது. வதைமுகாம் விவகாரத்தால், சிங்களத்தின் மீது சர்வதேசம்
பிரயோகிக்கும் அழுத்தங்களை முறியடிப்பதற்கு, இந்தியா நீட்டும் உதவிக்கரம்,
பிரதிபலனை எதிர்பார்த்து செய்யப்படுகிறது. மறைவிடங்களில் பேசப்படும்
இப்பொருண்மிய விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வரும்வரை, தமிழக பயணங்களும்,
மனித உரிமை பற்றியதான அரசியலும், பாதிக்கப்படும் மக்களை, உண்மையைத்
தரிசிக்க விடாது தடுத்துக்கொண்டேயிருக்கும்.

இதயச்சந்திரன்

நன்றி்:ஈழமுரசு
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

சிறையிலடைக்கப்பட்ட சீதைகளைப் பார்க்கச் சென்ற அநுமானர்கள் Empty Re: சிறையிலடைக்கப்பட்ட சீதைகளைப் பார்க்கச் சென்ற அநுமானர்கள்

Post by nandhtiha Thu Oct 22, 2009 10:15 am

வணக்கம்
சிறையில் அடைக்கப் பட்ட சீதைகள் - ஈழத் தமிழர்கள் - சரி
சென்ற அனுமான்கள்- எம் பிக்களின் கூட்டம் ???
எங்கோ இடிக்கின்றதே. இலங்கைக்குச் சென்ற அனுமான் இராவணனை அச்சுறுத்தி விசுவரூபம் காட்டி இலங்கையைக் கொளுத்தி மீண்டான். ஆமாம் அவன் வாலில் நெருப்பு வைக்கப் பட்டது, ஆனால் இந்த அனுமான்களோ தமது வீர பிரதாபங்கள் ஒன்றைக் கூடக் காட்டாமல் வால் ஒட்ட நறுக்கப் பட்டு அல்லவா திரும்பி வந்தார்கள். இது தமிழக அரசியல் ராஜ தந்திரத்துக்கு இழிவு. தமிழர்களுக்குத் தலைகுனிவு
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» மகனுக்கு பெண் பார்க்கச் சென்ற தாய் ஆட்டோ கவிழ்ந்து பலி
» ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது
» நோயாளியை பார்க்கச் செல்பவர்களுக்கான 10 கட்டளைகள்
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இலங்கையில் நடக்கும் மேலும் ஒரு கொடூரம் -கணவனைப் பார்க்கச் செல்லும் மனைவியரை உறவுக்கு வற்புறுத்தும் படையினர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum