ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம்

2 posters

Go down

துன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் Empty துன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம்

Post by Admin Wed Feb 11, 2009 11:24 pm

மனச்சோர்வுக்கு காரணம் பண இழப்பு - காதல் தோல்வி - ஏமாற்றம்- தொழிலின்மை- பெற்றோர் அன்பு இல்லாமை-தவறான சகவாசம் என்று பலவற்றைக் கூறலாம்.

மனச்சோர்வு தன்னம்பிக்கையை வளர்க்க உதவாது. பாராட்டுதல், மனச் சோர்வை போக்கும் பெரும் நன்கொடையாகும்.

வேலையின்றி வருந்தும் மனிதன்-தேர்வு எழுதும் குழந்தை முதலியவர்களை ஆறுதல் படுத்தும் முயற்சியில் கவலைப்படாதீர்கள், வெற்றி நிச்சயம் என்ற வார்த்தைகளை கூறுகிறோம்.

கவலை நம் உடலை பாதிக்கிறது. கவலை நமக்கு உதவியாக இருப்பதில்லை. தலைவலி- அலர்ஜி போன்றவற்றை தோற்றுவிக்கிறது.

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று

நின்னைச் சரணடைந்தேன்
என்று பாரதி பாடினார்.

சின்ன தோல்வி ஏற்பட்டவுடன் வாழ்க்கையே முடிந்து விட்டதாக நினைத்து சுக்கு நூறாக சிதைந்து போகாது உறுதிப்பாடான நெஞ்சை விழித்தெழச் செய்தால் வாழ்வு வசந்தமாகும்.

கிடைத்ததை விரும்பு

கஜினி முகம்மதுவின் எண்ணம் இந்தியாவை தன் வசப்படுத்துவது. எத்தனை தோல்விகளை கண்டார்? நாம் மட்டும் ஒரு முறை தோற்றவுடன் அடுத்த முறையும் தோல்விதான் என்று ஏன் நினைக்க வேண்டும்?

பாண்டவர்கள் வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டார்கள். ஆனால் அதற்காக அவர்கள் சலித்து போகவில்லை.

வாழ்க்கையில் எத்தனையோ அற்பப் பிரச்சினைகள் பூதாகரமாக உருவெடுத்து மனிதர்களை அலைக்கழிக்கின்றன. வரதட்சணை தற்கொலைகள் போன்ற மோசமான கலாச்சாரம் பெருகி வருகின்றன. வாழ்க்கையின் மதிப்பை உணராதவர்கள் தாம் இவர்கள்.

விரும்பியது கிடைக்க வில்லையென்றால் கிடைத்ததை விரும்ப வேண்டும்.

தசரத சக்கரவர்த்தி நாடாண்ட அரசன். அவனுக்கு பிரச்சினை இல்லையா? மகனுக்குப்பட்டம் சூட்ட நினைத்தான்-நடந்ததா? சீதை ராஜவாழ்க்கை வாழவேண்டியவள் -நடந்ததா? வண்ணச்சீறடி மண்மகள் அறிந்தவள் என்று பாராட்டப்பெற்ற கண்ணகி கதை நாமறிவோம்.

ராமன் காட்டிற்கு போனான். காட்டிற்கு போக அவன் வருந்தவில்லை. துன்பங்களை சந்திப்பேன் என்ற மனோதைரியம் தான் அவன் புகழுக்கு காரணம். எனவே தடைவரும்போது மனமுடைந்து போதல் நல்லதன்று.

உற்சாகப்படுத்தும் முறை

அமெரிக்க பள்ளிகளில் ஒரு குழந்தை பரீட்சையில் எப்படி மார்க் வாங்கியுள்ளது என்பதை அந்த வகுப்பில் உள்ள மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்த்து அது நன்றாக படிக்கிறதா? என்று முடிவு எடுப்பதில்லை. மாறாக முந்தைய பரீட்சையை விட இந்த பரீட்சையில் நன்றாக மார்க் வாங்கியுள்ளதா? என்று தான் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். இதுதான் மாணவர் களை சோர்வடையச் செய்யாது உற்சாகபடுத்தும் முறை.

சமுதாயத்தில் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு ஆதரவும், ஆறுதல் மொழியும், வழிகாட்டுதலும் இருந்தால் முச்சந்திகளிலும், தியேட்டர்களிலும் வீணாகும் அவர்களின் சக்தி - திறமைகள் நன்முறையில் நெறிப்படும் என்பதில் ஐயமில்லை. இயற்கையை ரசிக்கக் கற்றால் இறுகிய மனமும் இளகி விடும். மனதிலே குதூகலம் உண்டாகும். மனம் கனமாக இருக்கும்போது மனதை எளிதாக்கும் கவிதைகளைப் படிக்கலாம். சிலருடைய சந்திப்பு நம்பிக்கையை ஊட்டலாம். மகிழ்ச்சியை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும்போது அம் மகிழ்ச்சி இரட்டிப்பு மடங்காகிறது. அதைப் போலத்துயரம் அடைந்திருக்கும்போது ஒருவரிடம் பேசினால் அந்த துயரத்தின் சுமை குறைகிறது. நண்பர்கள் நமக்கு நல்ல ஆலோசகர் என்றே கூறலாம்.

எத்தனை வருஷம் ஆனாலும் பிறந்த வீட்டுக்குப் போய் மனம்விட்டு அம்மாவுடன் ஒரு பெண் பேச நினைப்பது எதற்காக? வயதான அம்மா பண உதவி செய்வாள் என்றா? இல்லை. அன்பாகப் பேசி-ஆறுதலாய் இருந்து மனநிறைவு தருவாள் என்றுதான் போகிறாள்.

சம்பாதிக்க முடியும்

பணம் எல்லாம் போய் ஏழையாகிவிட்டால் எப்படி சகித்துக்கொண்டீர்கள் என்று ஒருவரிடம் கேட்டபோது, அவர் அளித்த பதில், வறுமையில் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும் உழைத்து சம்பாதிக்க முடியும் என்றார்.

எந்த ஒரு செயலின் வெற்றிக்கும் அடிப்படை காரணம் மனம். யானை மிகப்பெரிய மிருகம். சிங்கத்தைவிட உயரமானது. உடம்பு வலிமை வாய்ந்தது. ஆனால் சிங்கம் யானைக் கூட்டத்தையே விரட்டி ஓட்டம் பிடிக்க வைத்து விடுகிறது. காரணம் மனவலிமைதான். பெண்கள் ஆண்களை விட உடல் வலிமையால் குறைந்திருந்தாலும் மன வலிமையில் பெண்களே சிறந்து விளங்குகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கரை வறுமை கோரப்பிடியும்-சாதியமும் இளம் பிராயத்திலே வாட்டினாலும் சோர்ந்து விடாது சவாலாக எடுத்துக்கொண்டு அமெரிக்காவில் உள்ள கொல்பியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கினார். அம்பேத்கர் அவர்களின் வாழ்வைப் பாடமாகக் கொண்டு சோர்வு நீங்கி முன் னேற்றத்தில் நாட்டம் செலுத்தவேண்டும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் Empty Re: துன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம்

Post by tamilparks Sat Feb 21, 2009 9:32 am

உண்மைத்தான் மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள்,
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! கவிஞர் இரா .இரவி உரை .
» பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! கவிஞர் இரா .இரவி
» துன்பங்களை போக்கும் சிவபுராணம்
» துன்பங்களை கடவுள் தீர்ப்பார்
» சினிமா புகழுக்கு..காயலான் கடை சோத்துக்கு!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum