ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

+2
Muthumohamed
சிவா
6 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Empty விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Tue Apr 02, 2013 6:55 pm


"காவி" - பிச்சைக்காரர்களின் உடை!

1891 பிப்ரவரியில் ஆல்வார் ரயில் நிலையத்தில் இறங்கினார் சுவாமிஜி. அங்கிருந்து கால்போன திசையில் மெதுவாக நடக்கலானார். இரு பக்கங்களிலும் பூத்துக் குலுங்கிய மலர்ச் சோலைகள், பரந்து விரிந்த வயல்வெளிகள், வரிசை வரிசையாக வீடுகள் என்று மாறிமாறி வந்த அழகிய காட்சிகளில் உள்ளத்தைப் பறிகொடுத்தவாறு நடந்து அரசு மருத்துவமனையை அடைந்தார். அங்குள்ள டாக்டரான குரு சரண்லஸ்கர் வெளியே நின்றிருந்தார். சுவாமிஜியின் தோற்றம் அவரை மிகவும் கவர்ந்தது. சுவாமிஜி நேராக அவரிடம் சென்று, 'துறவிகள் தங்குவதற்கு இங்கு ஏதாவது இடம் இருக்கிறதா?' என்று கேட்டார். குரு சரண் அங்குள்ள கடைத்தெரு ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். ஒரு கடையின் மாடியில் துறவிகள் தங்குவதற்கென்று ஓர் அறை இருந்தது. அதனை சுவாமிஜிக்குக் காட்டி, அங்கே அவரைத் தங்கச் செய்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.

சுவாமிஜியிடம் அறிமுகக் கடிதங்கள் எதுவும் இல்லை. எனவே உணவிற்கோ தங்கவோ வேறு ஏற்பாடுகள் இல்லை. அப்போது அந்தக் கடைக்கு அருகில் வாழ்ந்த முதிய பெண்மணி ஒருத்தி சுவாமிஜியிடம் ஈடுபாடு கொண்டாள். அவள் அவரை 'லாலா' (குழந்தாய்!)என்று அன்புடன் அழைப்பாள். தன் கையாலேயே சப்பாத்தி செய்து தினமும் கொண்டுவந்து சுவாமிஜிக்கு ஊட்டுவாள். சிலவேளைகளில் ராமஸ்னேஹி என்ற வைணவத் துறவியும் சுவாமிஜியுமாகப் பிச்சைக்குச் செல்வார்கள். கோதுமை மாவு பெற்று வருவார்கள். ராமஸ்னேஹி சப்பாத்தி செய்வார். இருவருமாகச் சாப்பிடுவார்கள். இவ்வாறு சுவாமிஜியின் நாட்கள் கழிந்தன.

சுவாமிஜியை ஆரம்பத்தில் அங்கே பெரிதாக மக்கள் அறியவில்லை. பின்னர் படிப்படியாகக் கூட்டம் வரத் தொடங்கியது. காலை மாலை வேளைகளில் சுவாமிஜி பாடுவார். அதைக் கேட்கவே கூட்டம் திரளும். ஒருநாள் அவர்களில் ஒருவர் 'சுவாமிஜி, நீங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்?' என்று கேட்டார். 'காயஸ்தர்' என்றார் சுவாமிஜி. மற்றொருவர், 'நீங்கள் ஏன் காவி அணிந்துள்ளீர்கள்?' என்று கேட்டார். 'ஏனெனில் அது பிச்சைக்காரர்களின் உடை' என்றார் சுவாமிஜி.


விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Tue Apr 02, 2013 6:57 pm


கல்வி முறையே சீர்கோட்டிற்கு காரணம்!

ஒரு நாள் சீடர் ஒருவர் சுவாமிஜியைத் தமது வீட்டில் விருந்திற்காக அழைத்தார். சுவாமிஜி சென்றபோது அவர் குளிப்பதற்காக உடம்பில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார். சுவாமிஜி சென்றதும் அவரை வரவேற்று, 'சுவாமிஜி, குளிப்பதற்கு முன் எண்ணெய் தேய்த்துக் கொள்வதால் ஏதாவது நன்மை உண்டா?' என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, 'ஆம். 50 கிராம் எண்ணெயை உடம்பில் தேய்த்தால் அது 250 கிராம் நெய்யை உண்பதற்குச் சமம்' என்று பதிலளித்தார்.

ஒருமுறை சுவாமிஜி தமது சீடர் ஒருவர் அழைத்ததன் பேரில் அவரது வீட்டிற்குச் சென்றார். உணவிற்குப் பிறகு ஓய்வாக அமர்ந்திருந்தபோது அந்தச் சீடர் சுவாமிஜியிடம், 'சுவாமி

உண்மை, தூய்மை, தன்னலமற்ற தொண்டு, நேர்மை, நாணயம் என்றெல்லாம் நீங்கள் போதிக்கிறீர்கள். வேலை செய்து பிழைக்கின்ற ஒருவன் இவற்றைப் பின்பற்ற முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதிலும் சுய தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் உண்மையாகவும் நேர்மையாகவும் நடப்பது என்பது அந்த நாட்களில் சாத்தியமே இல்லை. உண்மையாக, நேர்மையாக தொழில் செய்து இந்த உலகில் வாழ முடியுமா?'

சுவாமிஜி கூறினார்: 'இதைப்பற்றி நான் மிகவும் ஆழ்ந்து சிந்தித்துள்ளேன். எனக்குக் கிடைத்த பதில் என்னவென்றால் நேர்மையாகச் சம்பாதிக்க ஒருவனும் விரும்பவில்லை என்பதுதான். அதுதான் உண்மை. இதையெல்லாம் யார் சிந்திக்கிறார்கள்? இப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே யாரும் உணரவில்லை. இப்போதைய கல்வி முறையே இந்தச்சீர்கேட்டிற்குக் காரணம்.

'விவசாயத்தைத் தொழிலாகத் தேர்ந்தெடுப்பது நல்லது என்று நான் கருதுகிறேன். ஆனால் யாரிடமாவது இதைச் சொன்னலாம். 'நான் படித்தவன், நான் விவசாயம் செய்வதா? நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் விவசாயி ஆவதா? ஏற்கனவே நாடு முழுவதும் விவசாயிகள் நிறைந்துள்ளனர். அதனால்தான் நாடே இவ்வளவு தூரம் சீர்கெட்டுள்ளது' என்கிறான். ஆனால் இது ஒருபோதும் உண்மையல்ல. மகாபாரதத்தைப் படியுங்கள். ஜனகர் ஒரு கையால் ஏர் உழுதுகொண்டு மறு கையால் வேதங்களைப் படிப்பதுபற்றி அதில் வருகிறது. பண்டைய நமது முனிவர்கள் விவசாயிகளாகவே இருந்தார்கள் என்றார் சுவாமிஜி.


விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Tue Apr 02, 2013 6:58 pm

சடங்குகளில் ஆர்வம்!

ஆல்வாரில் சுவாமிஜியை வந்து சந்தித்தவர்களில் ஒரு பிராமணச் சிறுவனும் இருந்தான். சுவாமிஜியிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தான் அவன். உபநயனத்திற்கான வயது வந்தும் வசதியின்மை காரணமாக அவனுக்கு உபநயனச் சடங்குகள் நடைபெறவில்லை. இதை அறிந்த சுவாமிஜி அங்கு வருகின்ற அன்பர்களுள் சற்று வசதி படைத்த ஒருவரிடம் இது பற்றி பேசினார். 'இந்தச் சிறுவனுக்கு உரிய வயது வந்தும் உபநயனச் சடங்குகள் நடைபெறவில்லை. அதற்குரிய வசதி இல்லை. அவனுக்கு உதவ வேண்டியது இல்லறத்தார்களாகிய உங்கள் கடமை. அவன் ஒரு பிராமணச் சிறுவன். ஜாதிக்குரிய சடங்குகளைச் செய்யாமலிருப்பது சரியல்ல. அவனது உபநயனச் சடங்கைச் செய்வதுடன் அவனது கல்விக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் நீங்கள் செய்தால் நான் மிகவும் மகிழ்வேன்.' ஆல்வாரிலிருந்து சென்ற பின்னரும் இதனை மறக்காமல் கடிதம் எழுதி, அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யப்பட்டதை உறுதி செய்து கொண்டார்.

'இங்கே மகான்கள் யாராவது இருக்கிறார்களா?' என்று ஒருநாள் சுவாமிஜி பக்தர்களிடம் கேட்டார். முதியவரான வைணவ பிரம்மச்சாரி ஒருவர் வாழ்ந்து வருவதாக அவர்கள் கூறினர். ஓரிரு பக்தர்களுடன் ஒருநாள் அவரைக் காணச் சென்றார் சுவாமிஜி. அந்த வைணவர் வேதாந்தத் துறவிகளை வெறுப்பவர். எனவே சுவாமிஜி அங்கே சென்றதும் அவர் துறவிகளை நிந்தித்து கடுமையாக ஏசத் தொடங்கினார். சுவாமிஜி அவர் கூறிய அனைத்தையும் பணிவுடன் பொறுத்துக்கொண்டார். அது மட்டுமின்றி, 'சுவாமி உங்களிடமிருந்து கடவுள் பற்றியும் ஆன்மீக வாழ்க்கை பற்றியும் அறிய வந்திருக்கிறேன். ஏதாவது உபதேசம் செய்யுங்கள்' என்று கேட்டுக் கொள்ளவும் செய்தார். சுவாமிஜியின் பணிவையும் பக்தியையும் கண்ட அந்தப் பிரம்மச்சாரி, 'போகட்டும். எனக்கு உங்கள்மீது வெறுப்போ கோபமோ இல்லை. நீங்கள் சாப்பிட ஏதாவது கொண்டு வருகிறேன். இருங்கள்' என்றார்.

தமது வேண்டுகோளை சுவாமிஜி நிராகரித்ததும் முதியவர் மீண்டும் பழைய நிலைமைக்குப் போய்விட்டார். சொல்ல முடியாத ஆத்திரத்துடன், 'இங்கிருந்து போய்விடு' தொலைந்து போங்கள்' என்று கத்தினார். சுவாமிஜி பணிவுடன் அவரை வணங்கிவிட்டு வெளியே வந்தார். வெளியே வந்ததுதான் தாமதம், அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்ததையெல்லாம் திறந்து விட்டதுபோல் குபீரென்று சிரிக்கலானார். 'ஓ, என்னவோர் அற்புதமான மகானிடம் என்னைக் கூட்டி வந்தீர்கள்!' என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தார். பக்தர்களும் சுவாமிஜியின் சிரிப்பில் கலந்து கொண்டனர்.


விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Tue Apr 02, 2013 6:59 pm

இந்திய வரலாற்றை இந்தியர்களே எழுத வேண்டும்

ஆல்வாரில் சுவாமிஜி சிலருக்கு மந்திர தீட்சை அளித்தார். ஜபம் மற்றும் பிராணாயாமம் செய்ய கற்றுத் தந்தார். சிவ பூஜை செய்யக் கற்றுக் கொடுத்தார். பலசாலியாக, ஆண்மை மிக்கவர்களாக அவர்கள் திகழ வேண்டும் என்று போதித்தார். மேலும், அவரது அறிவுரையால் பலர் மேலைக் கல்விகளை விடாமலே சமஸ்கிருதக் கல்வியையும் ஏற்றுக் கொண்டனர். சமஸ்கிருதக் கல்வியை சுவாமிஜி மிகவும் வற்புறுத்தினார். அவரது அறிவுரையின் படி ஆல்வார் இளைஞர்கள் பலர் சமஸ்கிருதம் கற்கத் தொடங்கினர். சமஸ்கிருதத்தை ஏன் கற்க வேண்டும்? சுவாமிஜி கூறினார்.

'சமஸ்கிருதம் படியுங்கள். ஆனால் கூடவே மேலைநாட்டு விஞ்ஞானத்தையும் படியுங்கள். எதையும் துல்லியமாக அறிவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். எதற்குத் தெரியுமா? காலம் வரும்போது நமது வரலாற்றை ஒரு விஞ்ஞான அடிப்படையில் உங்களால் எழுத முடியும். இப்போதுள்ள இந்திய வராலாறு சரியானதாக இல்லை. காலக்கிரமப்படி எதுவும் தரப்படவில்லை. நமது வரலாற்றை எழுதியவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் எழுதியதைப் படிப்பதால் வருவது பலவீனம் மட்டுமே. ஏனெனில் அவர்கள் நமது வீழ்ச்சியைப்பற்றி மட்டுமே எழுதியுள்ளார்கள். நமது பழக்க வழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம், பராம்பரியம், மதம், தத்துவம் என்று நம்மைப்பற்றி எதுவுமே அறியாத அவர்கள் எப்படி நமது வரலாற்றைச் சரியாக எழுத முடியும்? ஆனால் ஒன்று. கடந்த கால வரலாற்றை எப்படி ஆராய்வது என்பதை அவர்கள் காட்டியுள்ளார்கள். அந்த வழியைப் பின்பற்றி சுதந்திரமாக நமது வரலாற்றை ஆராய வேண்டும்

வேதங்களையும் புராணங்களையும் பழைய சாஸ்திரங்களையும் படிக்க வேண்டும். அவற்றை ஆதாரமாகக் கொண்டு துல்லியமாக, உத்வேகம் தருகின்ற வரலாற்றை எழுத வேண்டும். இந்தியர்களே இந்திய வரலாற்றை எழுத வேண்டும். மறைந்து போன மறைக்கப்பட்ட நமது பண்டைய பொக்கிஷங்களை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள், குழந்தை ஓய்ந்திருக்க மாட்டானோ, இதுபோல், பெருமை மிக்க நமது கடந்த காலத்தை இந்தியர்கள் ஒவ்வொருவரின் மனத்திலும் பதிக்கும் வரை ஓயாதீர்கள். உண்மையான தேசியக் கல்வி இதுவே. இந்த தேசியக் கல்வி பரவும் அளவுக்கு உண்மையான தேசிய உணர்வு விழித்தெழும்.


விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Tue Apr 02, 2013 7:01 pm


உருவ வழிபாட்டுக்கு சுவாமிஜி கொடுத்த விளக்கம்!

ஆல்வார் நாட்டு திவானான மேஜர் ராம்சந்திரர் சுவாமிஜியைப் பற்றி கேள்விப்பட்டு, தமது வீட்டிற்கு அழைத்தார். அந்நாட்டு மன்னரான மங்கள் சிங் ஆங்கில மோகம் கொண்டவராக இருந்தார். சிந்தனை, செயல் அனைத்திலும் ஆங்கிலேய பாணியைப் பின்பற்றுவதில் நாட்டம் கொண்டிருந்தார். திவானுக்கு அது பிடிக்கவில்லை. மன்னர் சுவாமிஜியைச் சந்தித்தால் நல்லது என்று எண்ணினார் திவான். எனவே அவருக்கு, 'ஆங்கிலத்தில் அபார அறிவு கொண்ட ஒரு பெரிய சாது இங்கே உள்ளார் என்று எழுதினார். மன்னர் மறுநாளே திவானின் வீட்டிற்கு வந்து சுவாமிஜியைச் சந்தித்தார்.

மன்னளர் வந்து சுவாமிஜியை வணங்கி அமர்ந்து பேச்சைத் தொடங்கினார்.

மன்னர்: 'சுவாமிஜி, நீங்கள் மிகவும் படித்தவர் என்று கேள்விப்பட்டேன். உங்கள் படிப்பிற்கு நீங்கள் கை நிறைய சம்பாதிக்கலாமே! ஏன் இப்படி பிச்சையெடுத்துத் திரிகிறீர்கள்?'

சுவாமிஜி: 'மகாராஜா, நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகள்உங்களுக்கு எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை விட்டுவிட்டு நீங்கள் ஏன் வேட்டை அது இதுதென்று ஆங்கிலேயர்களுடன் நேரத்தைச் செலவிடுகிறீர்கள்?'

சிறிதும் தயக்கமின்றி வந்த சுவாமிஜியின் கேள்வி அங்கிருந்தோர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மன்னர் அதைச் சாதாரணமாக எடுத்து கொண்டார்.

மன்னர்: 'ஏன் என்பதற்கு குறிப்பாக எந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது. எனக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது.'

சுவாமிஜி: 'அது போல்தான் எனக்கு இது பிடித்திருக்கிறது. நான் பிச்சையெடுத்துச் சாப்பிடுகிறேன்.'

சிறிது நேரத்திற்குப் பிறகு மன்னர், 'சுவாமிஜி எனக்கு உருவ வழிபாட்டில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என் கதி என்னவாகும்?' என்று கேட்டார். இதைக் கேட்கும்போது அவர் சற்று சிரித்த முகத்துடன் கேலி செய்வது போன்ற தொனியில் கேட்டார். அவர் கேட்டவிதம் சுவாமிஜிக்கு எரிச்சலை மூட்டியது.

சுவாமிஜி: 'நீங்கள் கேலி செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.'

மன்னர்: 'இல்லை சுவாமிஜி. எல்லோரையும் போல், ஏனோ என்னால் இந்த மண்ணையும் மரத்தையும் கல்லையும் கட்டையையும் வழிபட முடியவில்லை. மறு உலகத்தில் துன்பப்படுவதுதான் என் தலை விதியா?'

சுவாமிஜி: ' நல்லது, ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப வாழ வேண்டும். அதுதான் நல்லது.'

இந்தப் பதிலை அங்கிருந்த யாரும் எதில்பார்க்கவில்லை. சுவாமிஜி உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்பவர். அவர் மன்னருக்குத் தகுந்த விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். ஆனால் சுவாமிஜி தமது பதிலைக் கூறிவிட்டு அந்த அறையைச் சுற்றிப் பார்த்தார். அங்கே தொங்கிக் கொண்டிருந்த ஒரு படம் அவரது கருத்தைக் கவர்ந்தது. உடனே அதனைக் கொண்டுவருமாறு கூறினார்.

சுவாமிஜி: 'இந்தப் படத்தில் இருப்பது யார்?'

திவான்: 'அது மன்னரின் படம்.'

சுவாமிஜி திவானிடம் அடுத்ததாகக் கூறியது அனைவரையும் அதிர்ச்சியால் உறைய வைத்தது........


விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Tue Apr 02, 2013 7:01 pm


சுவாமிஜி: 'திவான்ஜி, இந்தப் படத்தின்மீது துப்புங்கள்.' அனைவரும் அதிர்ச்சியில் அசைவற்று நின்றனர். சுவாமிஜி அதைக் கண்டுகொள்ளாமல் 'துப்புங்கள் திவான்!' என்று மீண்டும் திவானிடம் கூறினார். திவான் அசையவில்லை. உடனே சுவாமிஜி அங்கிருந்த மற்றவர்களைப் பார்த்து. 'திவான் இல்லாவிட்டால் இங்கே இருக்கின்ற வேறு யாராவது ஒருவர் முன்வாருங்கள். இந்தப் படத்தில் அப்படி என்னதான் உள்ளது? வெறும் காகிதம் தானே! இதன்மீது துப்புவதற்கு ஏன் தயங்குகிறீர்கள் ?' என்று கேட்டார்.

அங்கிருந்த மற்றவர்களும் சுவாமிஜி கூறியதைச் செய்ய முன்வரவில்லை. அனைவரும் சுவாமிஜியையும் மன்னரையும் மாறி மாறி பார்த்தபடி திகைத்து நின்றனர். அப்போது சுவாமிஜி மீண்டும் திவானிடம், 'என்ன, அப்படியே நிற்கிறீர்களே! இந்தப் படத்தின்மீது துப்புங்கள்' என்று அழுத்தமாகக் கூறினார். அதன் பிறகும் திவானால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை; பதைபதைத்தவாறே நடுங்கிய குரலில், 'சுவாமிஜி, என்ன சொல்கிறீர்கள்? சொல்வதைப் புரிந்து கொண்டுதானா சொல்கிறீர்கள்? இது மன்னரின் படம். இதன் மீது என்னால் எப்படி துப்ப முடியும்?' என்று கேட்டார்.

சுவாமிஜி: 'இருக்கட்டுமே! மன்னரின் படம்தானே, மன்னர் அல்லவே! இந்த படத்தில் மன்னர் உயிருணர்வுடன் இல்லையே! இது வெறும் ஒரு காகிதத் துண்டு. மன்னரின் எலும்போ சதையோ ரத்தமோ இதில் இல்லை. இது பேசுவதில்லை, நடப்பதில்லை, மன்னர் செய்வது போல் எதையும் செய்வதில்லை, இருந்தாலும் இதன்மீது துப்ப நீங்கள் யாரும் முன்வர மறுக்கிறீர்கள். ஏன்? ஏனெனில் இந்தப் படத்தில் மன்னரின் பிரதிபிம்பத்தை நீங்கள் காண்கிறீர்கள். இதன்மீது துப்பினால் மன்னரையே அவமதிப்பதாக உணர்கிறீர்கள்.'

இதனைக் கூறிவிட்டு சுவாமிஜி மன்னரைப் பார்த்து தமது பேச்சைத் தொடர்ந்தார். பாருங்கள் மகாராஜா இந்தப் படம் நீங்கள் அல்ல. ஆனால் ஒரு விதத்தில் இது நீங்களே. அதனால் தான் இதன்மீது துப்புமாறு சொன்னபோது உங்களிடம் பக்தி கொண்ட உங்கள் சேவகர்கள் மறுத்துவிட்டார்கள். இது உங்கள் பிரதிபிம்பம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது நீங்களே அவர்களின் நினைவிற்கு வருகிறீர்கள். அதனால்தான் உங்களுக்குக் கொடுக்கின்ற மரியாததையை அவர்கள் இந்தப் படத்திற்குக் கொடுக்கிறார்கள். கல்லிலும் மண்ணிலும் மரத்திலும் செய்யப்பட்ட தெய்வ வழிபடுகின்ற பக்தர்களின் விஷயமும் இதுதான். அவர்கள் வழிபடுகின்ற உருவம் அவர்களுக்கு அந்தப் பரம்பொருளை நினைவுபடுத்துகிறது. எத்தனையோ இடங்களில் நான் யாத்திரை செய்துள்ளேன். எந்த இந்துவும், "ஏ கல்லே, உன்னை வணங்குகிறேன். ஓ மண்ணே, எனக்கு அருள் செய்" என்று வழிபடுவதை நான் காணவில்லை. மகாராஜா! எங்கும் நிறைந்த, பேரானந்த வடிவான முழு முதற் கடவுளையே ஒவ்வொருவரும் வழிபடுகின்றனர். கடவுளும் அவர்களின் பக்குவத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் அருள் புரிகிறார்.'

உருவ வழியாடு பற்றிய இந்த அற்புதமான செயல்முறை விளக்கம் மன்னரின் அகக் கண்களைத் திறந்தது. கூப்பிய கைகளுடன் அவர் சுவாமிஜியிடம், 'நீங்கள் என் கண்களைத் திறந்துவிட்டீர்கள். சுவாமிஜி, இதற்கு முன்பு இத்தகைய விளக்கத்தை நான் கேட்டதில்லை. அறியாமையில் மூழ்கியவனாக இருந்துவிட்டேன். என் கதி என்னவாகும்? என்மீது கருணை காட்டுங்கள்' என்று பணிவுடன் கேட்டார். அதற்கு சுவாமிஜி, 'மகாராஜா! கடவுளைத் தவிர யாரும் யாரிடமும் கருணை காட்ட வல்லவர்கள் அல்ல. அவர் கருணையே வடிவானவர். அவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் உங்கள் மீது கருணை காட்டுவார்' என்றார்.


விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Tue Apr 02, 2013 7:02 pm


பக்தி ஒன்றே போதுமே!

குருசரண் மூலமாக சுவாமிஜியைப்பற்றி கேள்விப்பட்ட மெளல்வி (இஸ்லாமிய அறிஞர்) ஒருவர் சுவாமிஜியிடம் மிகவும் கவரப்பட்டார். அவர் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் உருதும் பாரசீகமும் கற்பிக்கின்ற ஆசிரியர். அடிக்கடி இருவரும் சுவாமிஜியைச் சென்று கண்டு அவருடன் பேசினர். குரானில் சுவாமிஜிக்கு இருந்த ஆழ்ந்த புலமை அப்போது வெளிப்பட்டது.

சுவாமிஜியைப் பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டனர். ஜாதி மத வேற்றுமையின்றி இந்துக்களில் பல பிரிவினரும் முஸ்லிம்களில் பல பிரிவினரும் வந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே ஆல்வார் அரசின் ஓய்வுபெற்ற எஞ்ஜினியரான பண்டிட் சம்புநாத் என்பவரின் வீட்டில் சுவாமிஜி தங்குவதற்கு ஏற்பாடு ஆகியது.

ஒருநாளாவது சுவாமிஜியை அழைத்துச் சென்று தமது வீட்டில் விருந்தளிக்க வேண்டும் என்ற ஆசை மௌல்வியின் மனத்தில் எழுந்தது. சம்புநாத் ஆசாரமிக்க பிராமணர். அவரது வீட்டில் சுவாமிஜி தங்கியிருப்பதால் அவரது அனுமதி தேவை என்று எண்ணிய மௌல்வி சம்புநாத்தை அணுகி, 'நீங்கள் இதற்கு அனுமதிக்க வேண்டும். ஆசாரமிக்க பிராமணர்களைக் கொண்டு சமையல் செய்கிறேன். நாற்காலி போன்றவற்றை பிராமணர்களைக் கொண்டே சுத்தம் செய்கிறேன். பிராமணர்களின் வீடுகளிலிருந்து பாத்திரங்களைக் கொண்டுவரச் செய்து பரிமாறுகிறேன். எந்த ஆசாரத்திற்கும் இடையூறு நேராதபடி பார்த்துக் கொள்கிறேன்' என்றெல்லாம் உணர்ச்சியுடன் கூறினார். மௌல்வியின் பக்தியைக் கண்டு நெகிழ்ந்துபோன சம்புநாத், 'நீங்கள் அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் செய்ய வேண்டாம். உங்கள் பக்தி ஒன்றே போதும். உங்கள் வீட்டில் உணவருந்த நானே தயாராக இருக்கிறேன். சுவாமிஜி ஒரு முக்த புருஷர். அவரைப்பற்றி என்ன சொல்ல இருக்கிறது! அவர் எங்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம்' என்று கூறினார்.


விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Tue Apr 02, 2013 7:03 pm


ராஜபுதனத்தில் சுவாமிஜி!

மீரட்டிலிருந்து டில்லி சென்றார் சுவாமிஜி. அங்கு சேட்சியாமள் தாஸ் என்பவரின் வீட்டில் தங்கினார். பல காலமாக மன்னர் பரம்பரைகளுக்குத் தலைநகராக விளங்கியது டில்லி. டில்லியின் ஒவ்வொரு பகுதியும் வரலாற்றுடன் இணைந்து, கலாச்சார சிறப்பு மிக்கது. சுவாமிஜி வரலாற்றில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். இந்திய மற்றும் உலக வரலாற்றை ஆழ்ந்து கற்றவர். எனவே டில்லியை அவரால் ரசித்து மகிழ முடிந்தது. அரண்மனைகள், மசூதிகள், கல்லறை மாளிகைகள் என்று பல இடங்களையும் பார்த்தார். வரலாற்றுக்கும் முற்பட்ட மகாபராத காலத்திலிருந்து டில்லியை அரசாண்ட பல பரம்பரைகளின் வரலாற்றுச் சின்னங்களைக் கண்டார். சுமார் பத்து நாட்கள் இவ்வாறு சுவாமிஜி டில்லியைச் சுற்றிப் பார்த்தார்.

மீரட்டில் சகோதரத் துறவியரைப் பிரியுமுன், யாரும் தம்மைப் பின்தொடரக் கூடாது என்று மிகவும் கண்டிப்பாக சுவாமிஜி கூறியிருந்தார். சுவாமிஜியின் விருப்பப்படியே அவரைத் தனியாக விட்டுவிட்டனர் சகோதரத்துறவியர். அதன்பிறகும் சில நாட்கள் சுவாமிஜி டில்லியிலேயே தங்கினார். தனித்தனியாகத் தங்கினாலும் உணவு வேளையில் அனைவரும் சேட்டின் வீட்டில் சந்தித்தனர். சில நாட்களுக்குப் பின்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். சுவாமிஜி ராஜபுதனத்தை நோக்கிச் சென்றார்.

ராஜபுதனம் என்றாலே நினைவிற்கு வருவது வீரமும் சாகமும் தியாகமும் செறிந்த வரலாறுகள். ராஜபுதனம் என்ற பெயரே இந்திய மனங்களை வீறு கொண்டு எழச் செய்யும். இந்திய வரலாற்றின் ஒரு சுருக்கத்தை அங்கே காண முடியும். அந்த வரலாற்றுப் பின்னணியுடன், ராஜபுதனத்தைச் சூழ்ந்து நின்ற மலைத் தொடர்களும், தொலைதூரத்தில் தெரிந்த மலைச் சிகரங்களும், பளிங்குக்கல் அரண்மனைகளும் சேர்ந்து ஓர் அற்புதக் காட்சியை சுவாமிஜியின் கண்களில் விரித்தன.


விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Tue Apr 02, 2013 7:04 pm


ரிஷிகேசத்தில் இருந்து ஹரித்வாருக்கு

தீவிர சாதனைகளில் ஈடுபடுவதற்காக சுவாமிஜி ரிஷிகேசத்திலிருந்து தனியாக ஹரித்வார் சென்றார். ஹரித்வாரின் அருகிலுள்ள கங்கல் என்ற இடத்தில் பிரம்மானந்தர் ஏற்கனவே சாதனை வாழ்வில் ஈடுபட்டிருந்தார். சுவாமிஜி வந்திருப்பது பற்றி கேள்விப்பட்டதும் அவர் ஹரித்வார் சென்று சுவாமிஜியைச் சந்தித்தார். பின்னர் மற்ற துறவியரும் சேர்ந்து கொண்டனர். எல்லோருமாக சஹரன்பூர் சென்றனர். அங்கே தங்கியிருந்த அகண்மானந்தர் ஏற்கனவே மீரட் சென்று விட்டிருந்தார். அங்கே போக புறப்பட்டனர். மீரட்டில் யஜ்ஞேசுவர் பாபு என்பவரின் வீ ட்டில் அனைவரும் தங்கினர். சுவாமிஜி ரிஷிகேசத்தில் நோயுற்றதிலிருந்து இன்றும் பழைய நிலைமைக்கு மீளவில்லை. அவருக்குத் தொடர்ந்த மருத்துவமும் நல்ல உணவும் தேவைப்பட்டன. எனவே பதினைந்து சாட்கள் அங்கே தங்கிவிட்டு, யஜ்ஞேசுவர் பாபுவின் நண்பரான சேட்ஜி என்பவரின் வீட்டில் தங்கினர்.

ஏற்கனவே அங்கே தீர்த்த யாத்திரையாக வந்திருந்த அத்வைதானந்தர் அங்கே அவர்களுடன் சேர்ந்து கொண்டார். ஸ்ரீராமகிருஷ்ணரின் பல துறவிச்சீடர்கள் சேட்ஜியின் வீட்டில் தங்கி ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டபோது அந்த இடம் மற்றொரு வராக நகர மடமாயிற்று. தியானம், ஜபம், பிரார்த்தனை, பஜனை, படிப்பு என்று அவர்களின் நாட்கள் கழிந்தன. அவர்கள் தங்கள் உணவைத் தாங்களே சமைத்துக் கொண்டனர். மாலை வேளையில் சிறிது தூரம் நடக்கவோ அல்லது பக்கத்திலுள்ள மைதானத்தில் போர் வீரர்களின் பயிற்சியையும் விளையாட்டையும் காணவோ செய்தனர்.


விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Tue Apr 02, 2013 7:04 pm


சுவாமிஜி சந்தித்த விநோதமான மகான்கள்

இமய மலைப் பகுதிகளில் சுவாமிஜி தரிசித்த மகான்கள் பலர். உடம்பு என்ற ஒன்று தங்களுக்கு இருப்பதையே நினைக்காமல், உடம்பின் சுக துக்கங்களைப் பற்றி கவலைப்படாமல் வாழ்ந்த எத்தனையோ பேரை சுவாமிஜி அங்கே கண்டார். ஒருவர் பார்க்க பைத்தியம் போலவே இருந்தார். ஆடை எதுவுமின்றி சுற்றித் திரிகின்ற அவர் சிறுவர்களுக்கு ஒரு வேடிக்கைப் பொருள். அவரைக் கண்டாலே அவர்மீது கல்லெறிவது அவர்களுக்கு ஒரு விளையாட்டு. ஆச்சரியம் என்னவென்றால் அவருக்கும் இது விளையாட்டாகவே இருந்தது. அவர்கள் கல்லெறிந்து அவரது முகம், கழுத்து என்று உடம்பு முழுவதிலுமிருந்து ரத்தம் வடியும். ஆனால் அது அவருக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. கல்வெறிந்துவிட்டு சிறுவர்கள் எப்படி கைகொட்டிச் சிரித்துக் களித்தார்களோ அதுபோலவே அவரும் களித்தார். சுவாமிஜி ஒருநாள் அவரை அழைத்துச் சென்று அவரது புண்னை எல்லாம் கழுவி மருந்திட்டார். ரத்தம் வடிந்தபோது அவர் எப்படிச் சிரித்தாரோ அப்படியே சுவாமிஜி அவருக்குச் சேவைகள் செய்த போதும் மகிழ்ச்சியில் திறைத்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது, 'எல்லாம் என் அப்பனின் விளையாட்டு' என்று கூறிவிட்டு மீண்டும் சிரிப்பார்.

சில மகான்கள் தங்கள் அருகில் யாரையும் வர விடுவதில்லை. அதற்கு அவர்கள் பினபற்றும் வழிகள் வினோதமாக இருக்கும். சிலர் ஆட்களைக் கண்டதுமே கல்லால் அடிப்பார்கள். ஒருவர் தாம் வாழ்ந்த குகையைச் சுற்றி மனித எலும்புகளைப் பரப்பி வைத்துவிடுவார்! பார்ப்பவர்களுக்கு அவர் பிணங்களைத் தின்பவர்போல் தோன்றும், எனவே பயந்து யாரும் அருகில் செல்ல மாட்டார்கள். அவரும் எந்தத் தொந்தரவுமின்றி சாதனைகளில் ஆழ்ந்திருப்பார். இத்தகைய துறவியர் பலரை சுவாமிஜி சந்தித்தார்.


விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum