ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசம்னா சும்மாவா!

Go down

ஈகரை இலவசம்னா சும்மாவா!

Post by Powenraj Mon Apr 01, 2013 7:59 am

உலகமயமாக்கலில் இந்தியா முழுமையாகச் சேர்ந்துவிட்டது என்று கூற முடியாவிட்டாலும் இதுவரை சேர்ந்ததில் நடைபெறும் வியாபாரமே ஐரோப்பிய நாடுகளுக்குச் சவால்விடும் வகையில் இருக்கிறது. அதனால்தான் சில்லறை விற்பனைவணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு இந்தியா அனுமதி தர வேண்டும் என்று அப்படி ஆலாய் பறந்தார்கள்.
-
வியாபாரிகள் எப்போதுமே தங்களுடைய விற்றுமுதல் விவரங்களையும் வியாபார தந்திரங்களையும் மற்றவர்களிடம் சொல்வதில்லை.அதற்குக் காரணங்கள் பல. முதலாவது, வியாபார உத்தி தெரிந்துவிட்டால், நுகர்வோர் தங்களுக்கு மிகக்குறைந்த விலையில் பொருள்களைத் தரச்சொல்லி நச்சரிப்பார்கள். தரம், எடை தொடர்பாக கேள்விகேட்டு நிம்மதியை இழக்கவைப்பார்கள். வியாபாரமே மோசடிதான் என்று மூர்க்கத்தனமாக முரண்படுவார்கள். எனவே ரகசியம் காத்தார்கள்.
-
ஆனால் இன்றைக்கு எதையும் எல்லோரிடமிருந்தும் மூடி மறைக்க முடியாது. எடை, தரம், விலை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யவும் தரப்படுத்தவும் சட்டங்களும் அதை அமல் செய்யஅமைப்புகளும் ஏற்பட்டுவிட்டன.
இந்த நிலையில், "கோடைக்கால விழாச் சலுகை', "ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்',"வட்டியே கிடையாது - பொருளை எடுத்துச் செல்லுங்கள்' என்றெல்லாம் விலை அதிகமுள்ளபண்டங்களுக்கே விளம்பரம் செய்கிறார்களே, இவை நம்பத்தக்கவைதானா என்ற சந்தேகம் நமக்குள் எழுவது இயற்கையே.
-
இதை வணிகச் செய்திகளைத் தரும் பருவ இதழ் ஒன்று இந்தியா முழுக்க ஆய்வு செய்து நம்முடைய சந்தேகத்துக்கு விடை தந்திருக்கிறது. இந்தியச் சந்தையில் இப்போது கணிசமான நுகர்வோர்கள் இளைஞர்களே. அவர்கள் உண்பது, உடுப்பது மட்டுமல்லாமல் இதர நுகர்வுப் பொருள்களையும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஈர்க்கவும் தங்களுடைய வியாபாரத்தைப் பெருக்கவும் புதியவர்களிடம் அறிமுகப்படுத்தவுமே வர்த்தக நிறுவனங்கள் இந்த உத்திகளைக் கையாள்கின்றன.
-
இப்படி விற்கப்படும் பொருள்களின் சந்தை மதிப்பு மட்டும் - மூர்ச்சையடையாதீர்கள் - ஆண்டுக்கு இரண்டு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய். இந்த இலவசங்கள் இன்று நேற்றல்ல 1903-ஆம் ஆண்டே"கிங் சி ஜிலெட்' என்ற தொழிலதிபரால் சவர ரேசர் விற்பனையில் தொடங்கப்பட்டது. அவர் துணிச்சலாக ரேசர்களை தனக்குத் தெரிந்தவர்கள், ஆலைத் தொழிலாளர்கள், அவர்களுடைய உறவினர்கள் நண்பர்களிடையே இலவசமாகவே வழங்கினார். ரேசரோடு ஒரு சிலபிளேடுகளை மட்டுமே முதலில் வழங்கினார்.
-
ரேசரை வாங்கிப் பயன்படுத்தியவர்கள் சும்மா இருப்பார்களா, தொடர்ந்து அவருடைய பிளேடுகளை வாங்கினார்கள். ரேசர் அறிமுகத்தில் ஆன செலவு - பிளேடு வியாபாரத்தில் லாபமாக வந்து கொட்டியது.
இதே உத்தியில்தான் எச்.பி. நிறுவனம் தன்னுடைய பிரிண்டர்களை விலை குறைவாக விற்கிறது. அதன் பிறகு"காட்ரிட்ஜ்' விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்திலிருந்து அதைச் சரிக்கட்டிவிடுகிறது. இப்படி பல நிறுவனங்கள்.
-
கூகுள், யாகூ போன்ற நிறுவனங்களும் ஈ மெயில், மேப், சர்ச் இலவசம் என்று அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.
இதுபோக சில பண்டங்களை வாங்கினால் நுகர்வோர் கொடுத்த தொகையில் ஒரு பகுதியை அவருக்கே திருப்பித்தரும் "கேஷ்-பேக்' என்ற உத்தியையும் கையாள்கின்றனர். இதையும் கண்மூடித்தனமாக அவர்கள் செய்வதில்லை. அந்த நிறுவனத்தின் விற்பனை உத்திக்காக ஒதுக்கும் தொகையில் 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரைதான் இதற்குச் செலவிடுகின்றனர். அதனால்தான், "முந்துங்கள் - இந்த ஆஃபர் சில நாள்களுக்குமட்டுமே' என்று அறிவிக்கிறார்கள். மிகப்பெரிய மோட்டார் வாகன நிறுவனங்களே இப்போது "0' சதவீத வட்டியில் கடன் பெற்று எங்களுடைய வாகனங்களைஓட்டிச்செல்லுங்கள் என்று அறிவிக்கின்றன.
"இதெல்லாம் நுகர்வோரின் தலையில் கை வைக்காமல் சாத்தியமா?' என்றால்,"சாத்தியமே' என்று ஆய்வு தெரிவிக்கிறது. உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர், வங்கிகள் இணைந்து தங்களுக்கு வர வேண்டிய லாபம் அல்லது வருமானத்தைக் குறைத்துக் கொள்ளச் சம்மதித்து, அவரவர்தகுதிக்கு ஏற்ப இந்தச் செலவைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
-
நுகர்வோருக்கும் லாபம், இவர்களுக்கும் விற்பனையை உயர்த்த முடிவதால் வியாபாரம் பெருகுகிறது என்பதால் நீண்டகால நோக்கில்லாபம்.
இப்படி இலவசங்களை அறிவிப்பதால் தங்களுடைய தயாரிப்புகளை நேரடியாக நுகர்வோரிடம் விற்க முடிகிறது, புதிய பிராண்டுகளை எளிதில் அறிமுகம்செய்ய முடிகிறது, நுகர்வோர் எண்ணிக்கையை அதிகரிக்கிறது, பொருள்களை அதிக காலம் தேங்கவிடாமல் விரைவாக விற்றுத்தீர்க்க முடிகிறது என்று அதன் பலன்களைப் பட்டியலிடுகின்றனர். இதனால்உற்பத்தியும்,சந்தைப்படுத்தலும், விற்பனையும் தொய்வின்றிச் சீராக நடைபெறுகிறது.
தொடர்ந்து தங்களிடமே வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக,"விசுவாச போனஸ்' என்று சில நிறுவனங்கள் கழிவுகளை அறிவிக்கின்றன. அந்தச் சந்தை மதிப்பு மட்டும் 5,000 கோடி ரூபாய் என்று தனியாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இப்படி பெரிய நிறுவனங்களின்வியாபார உத்திகளால் அதிகபட்சம் 25 லட்சம் வாடிக்கையாளர்கள் கூட அவற்றுக்கு சேர்ந்துவிடுகின்றனர்.
-
"ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' என்றால் இனி அஞ்சவேண்டாம், சற்று பேரம் பேசி சலுகைகளைக் கூடுதலாகக்கேட்டு வாங்குங்கள், அதற்கும் அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
-
நன்றி -தினமணி


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum