Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கம் பற்றிய தகவல் தொகுப்பு
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தங்கம் பற்றிய தகவல் தொகுப்பு
தங்கம் இ.டி.எஃப் என்றால் என்ன? அதன் நன்மைகள், குறைகள், ஒரு அலசல்!
பெங்களூர்: பொதுவாக நமக்கு தங்கம் என்றால் நினைவிற்கு வருவது தங்க நகைகள், தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகள். ஆனால் தங்கம் இ.டி.எஃப். என்று ஒன்று இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?
தங்கம் இ.டி.எஃப். என்பதை ஒரு பரஸ்பர நிதியாக கருதலாம். நாம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும் தங்கத்தில் முதலீடு செய்யப்படும். இந்த தங்கத்தில் நாம் வாங்கிய ஒவ்வொரு யூனிட்டும் ஒரு கிராம் தங்கதிற்கு ஈடானது. மேலும் தங்கத்தின் தரம் 99.5 சதவீதம் சுத்தமானதாகும். இந்த தங்கத்தின் மதிப்பு வர்த்தக நிலையை பொறுத்து மாற்றம் அடையலாம்.
இந்த தங்கம் இ.டி.எஃப். வாடிகையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம். முதலீட்டாளர்கள் தங்கத்தை நகைகளாக அல்லது நாணயங்களாக முதலீடு செய்வதை விட இதில் முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
இதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கிறது?
தங்கம் இ.டி.எஃப். மூலம் தங்கத்தை சிறுக, சிறுகச் சேமிக்கலாம். அது நம் பணி ஒய்வு மற்றும் திருமணம் உள்ளிட்ட வருங்கால தேவைக்காக பயன்படும்.
வாங்கவோ அல்லது விற்கவோ மிகவும் எளிதானது.
மிகவும் கவரகூடிய விஷயம் என்னவென்றால் தங்கம் இ.டி.எஃப்.- இல் வாட் மற்றும் சேவை வரி அல்லது சொத்து வரியோ கிடையாது.
நாணயங்கள் அல்லது கட்டிகள் வடிவ தங்கம் நீண்ட கால மூலதன ஆதாயங்களை அடைய 3 ஆண்டுகள் தேவை. ஆனால் தங்கம் இ.டி.எஃப்.-இல் நீண்ட கால மூலதன ஆதாயங்களை அடைய 1 ஆண்டே போதுமானது.
தங்கம் திருட்டு பயம் கிடையாது.
வங்கி பெட்டகம் போன்றவற்றிற்கு செலவிட தேவை இல்லை.
குறைகள்
நகைகள் அல்லது நாணயங்கள் வடிவில் உள்ள தங்கத்தை விட இந்த இ.டி.எஃப்.-ன் ஒரு யூனிட் விலை சற்று அதிகமாக இருக்கும். மேலாண்மை கட்டணங்கள் மற்றும் தரக கட்டணங்கள் இந்த இ.டி.எப் மீது வசூலிக்கப்படுவது தான் அதிக விலைக்கு காரணம்.
அரசாங்கம் நடப்பு கணக்கு பற்றாக்குறையில் உள்ள அழுத்தத்தை தொடர்ந்து தங்கத்தின் இறக்குமதியை ஊக்குவிப்பதில்லை. ஆகையால் வரும் காலங்களில் தங்கம் இ.டி.எஃப். மிகவும் பிரபலமாக வாய்ப்பு உள்ளது என்றும் கூறலாம் .
-தட்ஸ்தமிழ்
பெங்களூர்: பொதுவாக நமக்கு தங்கம் என்றால் நினைவிற்கு வருவது தங்க நகைகள், தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகள். ஆனால் தங்கம் இ.டி.எஃப். என்று ஒன்று இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?
தங்கம் இ.டி.எஃப். என்பதை ஒரு பரஸ்பர நிதியாக கருதலாம். நாம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும் தங்கத்தில் முதலீடு செய்யப்படும். இந்த தங்கத்தில் நாம் வாங்கிய ஒவ்வொரு யூனிட்டும் ஒரு கிராம் தங்கதிற்கு ஈடானது. மேலும் தங்கத்தின் தரம் 99.5 சதவீதம் சுத்தமானதாகும். இந்த தங்கத்தின் மதிப்பு வர்த்தக நிலையை பொறுத்து மாற்றம் அடையலாம்.
இந்த தங்கம் இ.டி.எஃப். வாடிகையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம். முதலீட்டாளர்கள் தங்கத்தை நகைகளாக அல்லது நாணயங்களாக முதலீடு செய்வதை விட இதில் முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
இதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கிறது?
தங்கம் இ.டி.எஃப். மூலம் தங்கத்தை சிறுக, சிறுகச் சேமிக்கலாம். அது நம் பணி ஒய்வு மற்றும் திருமணம் உள்ளிட்ட வருங்கால தேவைக்காக பயன்படும்.
வாங்கவோ அல்லது விற்கவோ மிகவும் எளிதானது.
மிகவும் கவரகூடிய விஷயம் என்னவென்றால் தங்கம் இ.டி.எஃப்.- இல் வாட் மற்றும் சேவை வரி அல்லது சொத்து வரியோ கிடையாது.
நாணயங்கள் அல்லது கட்டிகள் வடிவ தங்கம் நீண்ட கால மூலதன ஆதாயங்களை அடைய 3 ஆண்டுகள் தேவை. ஆனால் தங்கம் இ.டி.எஃப்.-இல் நீண்ட கால மூலதன ஆதாயங்களை அடைய 1 ஆண்டே போதுமானது.
தங்கம் திருட்டு பயம் கிடையாது.
வங்கி பெட்டகம் போன்றவற்றிற்கு செலவிட தேவை இல்லை.
குறைகள்
நகைகள் அல்லது நாணயங்கள் வடிவில் உள்ள தங்கத்தை விட இந்த இ.டி.எஃப்.-ன் ஒரு யூனிட் விலை சற்று அதிகமாக இருக்கும். மேலாண்மை கட்டணங்கள் மற்றும் தரக கட்டணங்கள் இந்த இ.டி.எப் மீது வசூலிக்கப்படுவது தான் அதிக விலைக்கு காரணம்.
அரசாங்கம் நடப்பு கணக்கு பற்றாக்குறையில் உள்ள அழுத்தத்தை தொடர்ந்து தங்கத்தின் இறக்குமதியை ஊக்குவிப்பதில்லை. ஆகையால் வரும் காலங்களில் தங்கம் இ.டி.எஃப். மிகவும் பிரபலமாக வாய்ப்பு உள்ளது என்றும் கூறலாம் .
-தட்ஸ்தமிழ்
Last edited by பாலாஜி on Wed Mar 27, 2013 10:40 am; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தங்கம் பற்றிய தகவல் தொகுப்பு
தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்
உலக மக்கள் அனைவராலும் மிகவும் விரும்பக்கூடிய மற்றும் விலைமதிப்பற்ற உலோகம் தங்கமாகும்.தங்கம் அனைவரும் அணியக்கூடிய ஒரு அற்புதமான நகை, அது மட்டுமல்லாமல் பணவீக்கம் மற்றும் சந்தையில் ஏற்படும் வீழ்ச்சி போன்றவற்றை ஈடுகட்டவும் உதவும்.இதன் மற்றோரு முக்கிய பண்பு என்னவென்றால், இதை உலகம் முழுவதும் எளிதாக விற்க முடியும்.
இந்தியர்கள் தங்கத்தை தூய்மை மற்றும் செல்வ வளமையின் சின்னமாகவே நினைக்கிறார்கள். நீங்கள் தங்க நகைகள் வாங்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள் வருமாறு.
1.தங்கம் வாங்கும் போது அதன் தூய்மை, தரம் மற்றும் விலை போன்றவற்றை ஆராய்ந்து வாங்க வேண்டும்.
2.தூய்மை-தங்கத்தின் தூய்மையை கேரட் எனப்படும் அலகால் தெரிந்து கொள்ளலாம்.தூய தங்கம் மிகவும் மிருதுவானது என்பதால் தங்க நகைகளாக பயன்படுத்த முடியாது.எனவே வெள்ளி, செம்பு,நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்ற கலவையை தங்கத்துடன் சேர்ப்பதால் நகைகள் வலிமையுடனும் நீண்ட நாள் பயன்படுத்துவதாகவும் உள்ளது. பொதுவாக 18கே, 22கே அல்லது 24கே என தங்கத்தின் தூய்மையை அளவிடலாம்.
3.விலை-தங்க நகைகளின் விலை தங்கத்தின் தூய்மை, அதனுடன் சேர்க்கப்பட்டுள்ள கலவை, அதன் வேலைப்பாடுகள், செய்கூலி போன்றவற்றை பொறுத்து உறுதி செய்யப்படும்.
4.நிறம்-மஞ்சள் நிற தங்கம்,வெள்ளை நிற தங்கம் மற்றும் ரோஸ் தங்கம் என தங்கத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. நீங்கள் தங்கத்தை பல நிறங்களின் கலவையாக பெற விரும்பினால், வேறுபட்ட இரண்டு நிறங்களின் கலவையை பயன்படுத்தலாம்.
சுத்தமான தங்கத்துடன் மற்ற உலோகத்தை கலப்பதால், வேறுபட்ட நிறங்கள் கொண்ட தங்கத்தை பெறலாம். பலாடியம் மற்றும் வெள்ளி போன்ற வெள்ளை உலோகங்களை கலப்பதால் வெள்ளை நிற தங்கம் உருவாகிறது. இது பெரும்பாலும் அமெரிக்காவில் திருமண நகைகளாக பயன்படுகிறது. தங்கத்துடன் செம்பு கலப்பதால் மென்மையான பிங்க் நிறம் கொண்ட ரோஸ் தங்கம் கிடைக்கிறது. பச்சை, ஊதா மற்றும் கருப்பு போன்ற நிறங்களிலும் தங்கம் தயாரிக்கப்படுகிறது.
ஆனால் உலகம் முழுவதும் மஞ்சள் நிற தங்கம் அனைவராலும் கவரப்படுகிறது. மேலும் இதுவே உயர்ந்த மற்றும் விலைமதிப்பற்ற ஒன்றாகும்.
5.அடையாளங்கள்-இந்தியா உட்பட்ட பல நாடுகளில் ஒவ்வொரு தங்க நகைகளும் கேரட் அல்லது அதன் தூய்மையை ஒரு தெளிவான முத்திரையால் குறிப்பிடுகிறார்கள்.இந்த அடையாளங்கள் ஹால்மார்க் திட்டத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
பிரபலமான தங்க நகை கடைகள் அவர்களது முத்திரை மற்றும் அடையாள முத்திரைகளை அவர்களே தங்க நகைகளில் முத்திரையிடுகின்றனர்.இந்திய அரசாங்கம் பிஐஎஸ் எனப்படும் ஒரு தனி அமைப்பை உருவாக்கியுள்ளது. பிஐஎஸ் ஹால்மார்க் திட்டம் எனப்படும் சர்வதேச ஹால்மார்க் திட்டத்தையும் உருவாக்கியுள்ளது.
பிஐஎஸ் எனப்படும் ஹால்மார்க் திட்டத்தின் கீழ் தங்க நகைகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. பிஐஎஸ் சான்றிதழ் பெற்ற நகை கடைகள் தங்களது நகைகளை பிஐஎஸ் ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற மையத்திலிருந்து பெறலாம்.
6.நகை கடைகளின் நற்பெயர்- தங்கத்தை ஒரு நம்பிக்கையான கடையில் தான் வாங்க வேண்டும். அந்த நகை கடையுடன் ஒரு நீண்ட கால உறவு இருக்க வேண்டும். நம்பகத்தன்மை மற்றும் போலி இல்லாத, நிரூபிக்கப்பட்ட தங்கம் கொண்ட கடைகளாக இருக்க வேண்டும்.
உலக மக்கள் அனைவராலும் மிகவும் விரும்பக்கூடிய மற்றும் விலைமதிப்பற்ற உலோகம் தங்கமாகும்.தங்கம் அனைவரும் அணியக்கூடிய ஒரு அற்புதமான நகை, அது மட்டுமல்லாமல் பணவீக்கம் மற்றும் சந்தையில் ஏற்படும் வீழ்ச்சி போன்றவற்றை ஈடுகட்டவும் உதவும்.இதன் மற்றோரு முக்கிய பண்பு என்னவென்றால், இதை உலகம் முழுவதும் எளிதாக விற்க முடியும்.
இந்தியர்கள் தங்கத்தை தூய்மை மற்றும் செல்வ வளமையின் சின்னமாகவே நினைக்கிறார்கள். நீங்கள் தங்க நகைகள் வாங்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள் வருமாறு.
1.தங்கம் வாங்கும் போது அதன் தூய்மை, தரம் மற்றும் விலை போன்றவற்றை ஆராய்ந்து வாங்க வேண்டும்.
2.தூய்மை-தங்கத்தின் தூய்மையை கேரட் எனப்படும் அலகால் தெரிந்து கொள்ளலாம்.தூய தங்கம் மிகவும் மிருதுவானது என்பதால் தங்க நகைகளாக பயன்படுத்த முடியாது.எனவே வெள்ளி, செம்பு,நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்ற கலவையை தங்கத்துடன் சேர்ப்பதால் நகைகள் வலிமையுடனும் நீண்ட நாள் பயன்படுத்துவதாகவும் உள்ளது. பொதுவாக 18கே, 22கே அல்லது 24கே என தங்கத்தின் தூய்மையை அளவிடலாம்.
3.விலை-தங்க நகைகளின் விலை தங்கத்தின் தூய்மை, அதனுடன் சேர்க்கப்பட்டுள்ள கலவை, அதன் வேலைப்பாடுகள், செய்கூலி போன்றவற்றை பொறுத்து உறுதி செய்யப்படும்.
4.நிறம்-மஞ்சள் நிற தங்கம்,வெள்ளை நிற தங்கம் மற்றும் ரோஸ் தங்கம் என தங்கத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. நீங்கள் தங்கத்தை பல நிறங்களின் கலவையாக பெற விரும்பினால், வேறுபட்ட இரண்டு நிறங்களின் கலவையை பயன்படுத்தலாம்.
சுத்தமான தங்கத்துடன் மற்ற உலோகத்தை கலப்பதால், வேறுபட்ட நிறங்கள் கொண்ட தங்கத்தை பெறலாம். பலாடியம் மற்றும் வெள்ளி போன்ற வெள்ளை உலோகங்களை கலப்பதால் வெள்ளை நிற தங்கம் உருவாகிறது. இது பெரும்பாலும் அமெரிக்காவில் திருமண நகைகளாக பயன்படுகிறது. தங்கத்துடன் செம்பு கலப்பதால் மென்மையான பிங்க் நிறம் கொண்ட ரோஸ் தங்கம் கிடைக்கிறது. பச்சை, ஊதா மற்றும் கருப்பு போன்ற நிறங்களிலும் தங்கம் தயாரிக்கப்படுகிறது.
ஆனால் உலகம் முழுவதும் மஞ்சள் நிற தங்கம் அனைவராலும் கவரப்படுகிறது. மேலும் இதுவே உயர்ந்த மற்றும் விலைமதிப்பற்ற ஒன்றாகும்.
5.அடையாளங்கள்-இந்தியா உட்பட்ட பல நாடுகளில் ஒவ்வொரு தங்க நகைகளும் கேரட் அல்லது அதன் தூய்மையை ஒரு தெளிவான முத்திரையால் குறிப்பிடுகிறார்கள்.இந்த அடையாளங்கள் ஹால்மார்க் திட்டத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
பிரபலமான தங்க நகை கடைகள் அவர்களது முத்திரை மற்றும் அடையாள முத்திரைகளை அவர்களே தங்க நகைகளில் முத்திரையிடுகின்றனர்.இந்திய அரசாங்கம் பிஐஎஸ் எனப்படும் ஒரு தனி அமைப்பை உருவாக்கியுள்ளது. பிஐஎஸ் ஹால்மார்க் திட்டம் எனப்படும் சர்வதேச ஹால்மார்க் திட்டத்தையும் உருவாக்கியுள்ளது.
பிஐஎஸ் எனப்படும் ஹால்மார்க் திட்டத்தின் கீழ் தங்க நகைகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. பிஐஎஸ் சான்றிதழ் பெற்ற நகை கடைகள் தங்களது நகைகளை பிஐஎஸ் ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற மையத்திலிருந்து பெறலாம்.
6.நகை கடைகளின் நற்பெயர்- தங்கத்தை ஒரு நம்பிக்கையான கடையில் தான் வாங்க வேண்டும். அந்த நகை கடையுடன் ஒரு நீண்ட கால உறவு இருக்க வேண்டும். நம்பகத்தன்மை மற்றும் போலி இல்லாத, நிரூபிக்கப்பட்ட தங்கம் கொண்ட கடைகளாக இருக்க வேண்டும்.
-தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தங்கம் பற்றிய தகவல் தொகுப்பு
‘ரிலையன்ஸ் மை கோல்ட்’ திட்டம்: இப்போது தங்கத்தில் ஒரு நாளைக்கு ரூ. 50 சேமிக்கலாம்!
ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் அங்கமான ரிலையன்ஸ் மணி பிரிஷியஸ் மெட்டல் பிரைவேட் லிமிடெட் (RMPM) நிறுவனம் - வேர்ல்டு கோல்டு கவுன்சிலுடன் இணைந்து சமீபத்தில் ‘ரிலையன்ஸ் மை கோல்ட் திட்டம்' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ‘ரிலையன்ஸ் மை கோல்ட்' திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதுமையான வாய்ப்பை அளிக்கிறது. அதாவது, தினசரி சராசரி தங்க விலையின் அடிப்படையில் அமைந்த கணக்கீட்டுமுறை மூலம் வாடிக்கையாளர்கள் தங்கத்தை கொள்முதல் செய்துகொள்ள வாய்ப்பளிக்கும் அற்புதமான திட்டம் இது.
இதுவரை இல்லாத இந்த புதுமையான திட்டம் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் தரகு மற்றும் பகிர்மானப்பிரிவின் CEO திரு. விக்ரந்த் குக்னானி மற்றும் வேர்ல்டு கோல்டு கவுன்சில்-முதலீட்டுப்பிரிவின் இயக்குநரான திரு ஸ்டீபன் ரிச்சர்ட்சன் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது?
குறைந்தபட்ச மாதாந்திர சந்தாத்தொகையாக ரூபாய் 1000 கட்டினால் தினசரி 50 ரூபாய்க்கு தங்கம் கொள்முதல் செய்ய முடியும்.
இந்த திட்டம் 100 சதவீதம் நிஜ தங்கத்தின் இருப்பின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. அந்த தங்கமானது காப்பு நிறுவனத்தில் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் சேமிக்கப்பட்டு ஒரு தனி டிரஸ்ட்டி மூலம் நிர்வகிக்கப்படும். இதன் மூலம் தங்கத்தின் பாதுகாப்பான சேமிப்பு உறுதி செய்யப்படுகிறது.
தினசரி சராசரி கணக்கீட்டு முறைப்படி வாடிக்கையாளர்கள் தங்கத்தை கொள்முதல் செய்யலாம். எனவே முதல் நாளிலிருந்தே உங்கள் முதலீடு துவங்க ஆரம்பித்துவிடுகிறது. வாடிக்கையாளர்களால் 20 துண்டுகளாக வாங்கப்படும் தங்கம் அடுத்த 20 நாட்களுக்கு கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இறுதியாக நீங்கள் கொள்முதல் செய்யும் அளவுக்கு தங்கம் கிராம்களில் உங்கள் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தினசரி தங்களது கணக்கு குறித்த தகவல்கள் கொள்முதல் செய்துள்ள தங்கத்தின் அளவு, தங்கத்தின் கொள்முதல் விலை போன்றவற்றை எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
வாடிக்கையாளரின் பணம் நிறுவனத்தின் கணக்கிற்கு வந்தவுடனே தங்கம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்படுகிறது. பிரத்யேக வாடிக்கையாளர் அடையாள எண்ணைப் பயன்படுத்தி தங்களது கணக்கின் இருப்பை வாடிக்கையாளர்கள் எப்போதும் சோதித்துக்கொள்ள வசதி உள்ளது.
இந்த (R-MGP) திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் சார்பில் 24 கேரட் மற்றும் 995 தரத்துடன் தங்கம் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த திட்டம் முதிர்ச்சியடையும் காலத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் உள்ள தங்கத்தை தங்க நாணயங்களாகவோ அல்லது நகைகளாகவோ இதற்காக இந்தியா முழுதும் நிறுவப்படும் விசேட அங்காடிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
பிரிமெச்சூர் வித்டிராயல்:
தற்போது வாடிக்கையாளர் கணக்கு துவங்கப்பட்டு ஒரு வருடம் முடிந்திருப்பின் பிரிமெச்சூர் வித்டிராயலுக்கான கட்டணம் ஏதும் இல்லை. கணக்கு லாக்-இன் ஆவதற்கு முன் வித்டிராயல் செய்து கொள்ள அனுமதியில்லை. இருப்பினும் லாக்-இன் காலம் முடிந்திருந்து 1 வருடத்திற்கு முன் பிரிமெச்சூர் வித்டிராயல் செய்தால் அதற்கான கட்டணமாக வாடிக்கையாளரின் கூட்டு சந்தாத்தொகையில் 2.5% வசூலிக்கப்படுகிறது.
சந்தா கால அளவு:
1 வருடம் துவங்கி 15 வருடங்கள் (ஒரு வருட இடைவெளி இதில் உண்டு) வரை வெவ்வேறு கால அளவுகளில் இந்த திட்டம் கிடைக்கிறது. ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்கள் தங்களது சந்தா பருவத்தை அதற்கான புதுப்பிப்பு விண்ணப்பம் மூலமாக விதிமுறைகளின்படி மாற்றிக்கொள்ளலாம்.
குறைந்தபட்ச தொகை:
உறுப்பினர் பதிவிற்கு தேவையான குறைந்தபட்ச தொகையாக தற்போது 1000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குப்பின் சந்தாதாரர்கள் 100 ரூபாயின் மடங்குகளாக செலுத்தலாம்.
திட்டத்தின் பலன்கள்:
இது உங்களது அன்றாட சேமிப்பை தங்கமாக மாற்றுகிறது.
‘மை கோல்ட்' திட்டத்தின் மூலம் உங்கள் சேமிப்பை 995 தரத்துடன் கூடிய 24 காரட் தங்கத்தில் நீங்கள் தினசரி முதலீடு செய்யலாம்.
இது தங்கத்தை சுலபமாக கொள்முதல் செய்ய வழி செய்கிறது.
தங்கம் வாங்க வேண்டிய அளவு பணம் இல்லையே என்று வருந்த வேண்டிய அவசியம் இல்லை. மாதம் ஆயிரம் ரூபாய் என்ற அளவு சேமிக்கத்துவங்கலாம்.
இது தினசரி சராசரி தங்கவிலையை உங்களுக்கு அளிக்கிறது.
‘மை கோல்ட்' திட்டம் நீங்கள் வாங்கும் தங்கத்தின் கொள்முதலை மாதத்தின் 20 வேலைநாட்களுக்கு நீடித்து பிரிப்பதால் உங்களை விலை உயர்விலிருந்து காக்கிறது.
இது நீங்கள் கொள்முதல் செய்துள்ள தங்கத்தை மாற்றிக்கொள்ள உதவுகிறது.
நீங்கள் சேமித்த தங்கத்தை இந்தியாவிலுள்ள பிரத்யேக கடைகளில் நகைகளாகவோ அல்லது தங்க நாணயங்களாகவோ மாற்றிக்கொள்ளலாம்.
உங்களுக்கேற்ற சந்தா பருவத்தை தேர்ந்தெடுக்க உரிமையளிக்கிறது.
12/24/36/48/60 போன்ற கால அளவுகளில் தங்களுக்கு பொருத்தமானவற்றை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் அங்கமான ரிலையன்ஸ் மணி பிரிஷியஸ் மெட்டல் பிரைவேட் லிமிடெட் (RMPM) நிறுவனம் - வேர்ல்டு கோல்டு கவுன்சிலுடன் இணைந்து சமீபத்தில் ‘ரிலையன்ஸ் மை கோல்ட் திட்டம்' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ‘ரிலையன்ஸ் மை கோல்ட்' திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதுமையான வாய்ப்பை அளிக்கிறது. அதாவது, தினசரி சராசரி தங்க விலையின் அடிப்படையில் அமைந்த கணக்கீட்டுமுறை மூலம் வாடிக்கையாளர்கள் தங்கத்தை கொள்முதல் செய்துகொள்ள வாய்ப்பளிக்கும் அற்புதமான திட்டம் இது.
இதுவரை இல்லாத இந்த புதுமையான திட்டம் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் தரகு மற்றும் பகிர்மானப்பிரிவின் CEO திரு. விக்ரந்த் குக்னானி மற்றும் வேர்ல்டு கோல்டு கவுன்சில்-முதலீட்டுப்பிரிவின் இயக்குநரான திரு ஸ்டீபன் ரிச்சர்ட்சன் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது?
குறைந்தபட்ச மாதாந்திர சந்தாத்தொகையாக ரூபாய் 1000 கட்டினால் தினசரி 50 ரூபாய்க்கு தங்கம் கொள்முதல் செய்ய முடியும்.
இந்த திட்டம் 100 சதவீதம் நிஜ தங்கத்தின் இருப்பின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. அந்த தங்கமானது காப்பு நிறுவனத்தில் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் சேமிக்கப்பட்டு ஒரு தனி டிரஸ்ட்டி மூலம் நிர்வகிக்கப்படும். இதன் மூலம் தங்கத்தின் பாதுகாப்பான சேமிப்பு உறுதி செய்யப்படுகிறது.
தினசரி சராசரி கணக்கீட்டு முறைப்படி வாடிக்கையாளர்கள் தங்கத்தை கொள்முதல் செய்யலாம். எனவே முதல் நாளிலிருந்தே உங்கள் முதலீடு துவங்க ஆரம்பித்துவிடுகிறது. வாடிக்கையாளர்களால் 20 துண்டுகளாக வாங்கப்படும் தங்கம் அடுத்த 20 நாட்களுக்கு கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இறுதியாக நீங்கள் கொள்முதல் செய்யும் அளவுக்கு தங்கம் கிராம்களில் உங்கள் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தினசரி தங்களது கணக்கு குறித்த தகவல்கள் கொள்முதல் செய்துள்ள தங்கத்தின் அளவு, தங்கத்தின் கொள்முதல் விலை போன்றவற்றை எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
வாடிக்கையாளரின் பணம் நிறுவனத்தின் கணக்கிற்கு வந்தவுடனே தங்கம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்படுகிறது. பிரத்யேக வாடிக்கையாளர் அடையாள எண்ணைப் பயன்படுத்தி தங்களது கணக்கின் இருப்பை வாடிக்கையாளர்கள் எப்போதும் சோதித்துக்கொள்ள வசதி உள்ளது.
இந்த (R-MGP) திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் சார்பில் 24 கேரட் மற்றும் 995 தரத்துடன் தங்கம் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த திட்டம் முதிர்ச்சியடையும் காலத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் உள்ள தங்கத்தை தங்க நாணயங்களாகவோ அல்லது நகைகளாகவோ இதற்காக இந்தியா முழுதும் நிறுவப்படும் விசேட அங்காடிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
பிரிமெச்சூர் வித்டிராயல்:
தற்போது வாடிக்கையாளர் கணக்கு துவங்கப்பட்டு ஒரு வருடம் முடிந்திருப்பின் பிரிமெச்சூர் வித்டிராயலுக்கான கட்டணம் ஏதும் இல்லை. கணக்கு லாக்-இன் ஆவதற்கு முன் வித்டிராயல் செய்து கொள்ள அனுமதியில்லை. இருப்பினும் லாக்-இன் காலம் முடிந்திருந்து 1 வருடத்திற்கு முன் பிரிமெச்சூர் வித்டிராயல் செய்தால் அதற்கான கட்டணமாக வாடிக்கையாளரின் கூட்டு சந்தாத்தொகையில் 2.5% வசூலிக்கப்படுகிறது.
சந்தா கால அளவு:
1 வருடம் துவங்கி 15 வருடங்கள் (ஒரு வருட இடைவெளி இதில் உண்டு) வரை வெவ்வேறு கால அளவுகளில் இந்த திட்டம் கிடைக்கிறது. ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்கள் தங்களது சந்தா பருவத்தை அதற்கான புதுப்பிப்பு விண்ணப்பம் மூலமாக விதிமுறைகளின்படி மாற்றிக்கொள்ளலாம்.
குறைந்தபட்ச தொகை:
உறுப்பினர் பதிவிற்கு தேவையான குறைந்தபட்ச தொகையாக தற்போது 1000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குப்பின் சந்தாதாரர்கள் 100 ரூபாயின் மடங்குகளாக செலுத்தலாம்.
திட்டத்தின் பலன்கள்:
இது உங்களது அன்றாட சேமிப்பை தங்கமாக மாற்றுகிறது.
‘மை கோல்ட்' திட்டத்தின் மூலம் உங்கள் சேமிப்பை 995 தரத்துடன் கூடிய 24 காரட் தங்கத்தில் நீங்கள் தினசரி முதலீடு செய்யலாம்.
இது தங்கத்தை சுலபமாக கொள்முதல் செய்ய வழி செய்கிறது.
தங்கம் வாங்க வேண்டிய அளவு பணம் இல்லையே என்று வருந்த வேண்டிய அவசியம் இல்லை. மாதம் ஆயிரம் ரூபாய் என்ற அளவு சேமிக்கத்துவங்கலாம்.
இது தினசரி சராசரி தங்கவிலையை உங்களுக்கு அளிக்கிறது.
‘மை கோல்ட்' திட்டம் நீங்கள் வாங்கும் தங்கத்தின் கொள்முதலை மாதத்தின் 20 வேலைநாட்களுக்கு நீடித்து பிரிப்பதால் உங்களை விலை உயர்விலிருந்து காக்கிறது.
இது நீங்கள் கொள்முதல் செய்துள்ள தங்கத்தை மாற்றிக்கொள்ள உதவுகிறது.
நீங்கள் சேமித்த தங்கத்தை இந்தியாவிலுள்ள பிரத்யேக கடைகளில் நகைகளாகவோ அல்லது தங்க நாணயங்களாகவோ மாற்றிக்கொள்ளலாம்.
உங்களுக்கேற்ற சந்தா பருவத்தை தேர்ந்தெடுக்க உரிமையளிக்கிறது.
12/24/36/48/60 போன்ற கால அளவுகளில் தங்களுக்கு பொருத்தமானவற்றை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
-தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தங்கம் பற்றிய தகவல் தொகுப்பு
நல்ல பகிர்வு நண்பரே
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: தங்கம் பற்றிய தகவல் தொகுப்பு
தங்கத்தின் மவுசு மட்டும் ஏன் குறைவதே இல்லை?
சென்னை: எல்லா உலோகங்களையும் விட தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் தங்கத்தின் மீதான மோகம் குறைந்துவிடவில்லை. அதனால் தான் பாதுகாப்பான சொர்க்கம் என்று தங்கம் அழைக்கப்படுகிறது.
ஏன் இன்னும் தங்கம் தனது மதிப்பை இழக்காமல் இருக்கிறது என்று பார்ப்போம்.
பொருளாதாரம்
பொருளாதாரமே தங்கத்தினால் தான் அளவிடப்படுகிறது. ஒரு நாட்டில் தங்கத்தின் இருப்பு அதிகமாக இருந்தால், அந்த நாட்டின் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று கருதப்படுகிறது. தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது. அதாவது பொருளாதார நிலைமை சரியில்லை என்றால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துவிடும். ஏனெனில் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கும் போது மக்கள் தங்கத்தைத் தவிர்த்து பங்குச் சந்தை, மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள். பொருளாதாரம் சரியில்லை என்றால், தங்கத்திற்கு இருக்கும் நல்மதிப்பை வைத்து எல்லோரும் தங்கத்தின் மீதே முதலீடு செய்வர். அதனால் அதன் விலையும் உயர்ந்துவிடும்.
பயம்
கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையின் காரணமாக அந்த நாடுகள் தங்கத்திற்கான மதிப்பை நிர்ணயம் செய்வதில் தடுமாறி வருகின்றன. அதனால் மற்ற பொருள்களில் முதலீடு செய்தால் நட்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து பலர் தங்கத்தின் மீதே முதலீடு செய்து வருகின்றனர். அதனால் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.
டாலருக்கும் தங்கத்திற்கும் உள்ள உறவு
அமெரிக்காவில் தங்கம் வாங்கப்பட்டு விற்கப்படுவதால், தங்கத்திற்கும், அமெரிக்க டாலருக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது. எனவே அமெரிக்க டாலரில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது தங்கத்தின் விலையை பாதிக்கிறது. சமீபத்தில் அமெரிக்க டாலரில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தங்கத்தின் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது டாலர் வீழ்ச்சி அடையும் போது தங்கத்தின் விலை உயர்ந்து விடுகிறது.
தங்கத்தின் தேவை
தங்கத்தின் தேவை மற்றும் அதன் சப்ளை ஆகியவற்றில் ஏற்படும் வித்தியமாசமும், தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. தங்கத்தின் உற்பத்தி குறைவாக இருப்பதால், பெரும்பாலும் தங்கத்தின் தேவை, அதன் சப்ளையை விட அதிகமாக இருக்கும். மேலும் சீனாவில் தங்கத்தின் தேவை பல மடங்கு அதிகரித்திருப்பதால், தங்கத்தின் தேவையும், விலையும் அதிகரித்திருக்கிறது.
தங்கம் ஒரு முதலீடு
தங்கத்தின் மதிப்பு குறையாமல் இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதையே பெரிதும் விரும்புகின்றனர். மேலும் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்தியாவில் திருமணம் மற்றும் திருவிழா நேரங்களில் தங்கம் கண்டிப்பான தேவையாக இருக்கிறது. அதோடு தங்கத்தின் இருப்பு இந்திய குடும்பங்களின் அந்தஸ்தையும் நிர்ணயிக்கிறது.
அதனால் தான் தங்கத்தின் தேவையும், அதன் பயன்பாடும், அதன் மீதான முதலீடும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அதன் விலையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. தங்கத்தின் மவுசும் குறையாமல் உள்ளது.
-தட்ஸ்தமிழ்
சென்னை: எல்லா உலோகங்களையும் விட தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் தங்கத்தின் மீதான மோகம் குறைந்துவிடவில்லை. அதனால் தான் பாதுகாப்பான சொர்க்கம் என்று தங்கம் அழைக்கப்படுகிறது.
ஏன் இன்னும் தங்கம் தனது மதிப்பை இழக்காமல் இருக்கிறது என்று பார்ப்போம்.
பொருளாதாரம்
பொருளாதாரமே தங்கத்தினால் தான் அளவிடப்படுகிறது. ஒரு நாட்டில் தங்கத்தின் இருப்பு அதிகமாக இருந்தால், அந்த நாட்டின் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று கருதப்படுகிறது. தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது. அதாவது பொருளாதார நிலைமை சரியில்லை என்றால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துவிடும். ஏனெனில் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கும் போது மக்கள் தங்கத்தைத் தவிர்த்து பங்குச் சந்தை, மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள். பொருளாதாரம் சரியில்லை என்றால், தங்கத்திற்கு இருக்கும் நல்மதிப்பை வைத்து எல்லோரும் தங்கத்தின் மீதே முதலீடு செய்வர். அதனால் அதன் விலையும் உயர்ந்துவிடும்.
பயம்
கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையின் காரணமாக அந்த நாடுகள் தங்கத்திற்கான மதிப்பை நிர்ணயம் செய்வதில் தடுமாறி வருகின்றன. அதனால் மற்ற பொருள்களில் முதலீடு செய்தால் நட்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து பலர் தங்கத்தின் மீதே முதலீடு செய்து வருகின்றனர். அதனால் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.
டாலருக்கும் தங்கத்திற்கும் உள்ள உறவு
அமெரிக்காவில் தங்கம் வாங்கப்பட்டு விற்கப்படுவதால், தங்கத்திற்கும், அமெரிக்க டாலருக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது. எனவே அமெரிக்க டாலரில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது தங்கத்தின் விலையை பாதிக்கிறது. சமீபத்தில் அமெரிக்க டாலரில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தங்கத்தின் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது டாலர் வீழ்ச்சி அடையும் போது தங்கத்தின் விலை உயர்ந்து விடுகிறது.
தங்கத்தின் தேவை
தங்கத்தின் தேவை மற்றும் அதன் சப்ளை ஆகியவற்றில் ஏற்படும் வித்தியமாசமும், தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. தங்கத்தின் உற்பத்தி குறைவாக இருப்பதால், பெரும்பாலும் தங்கத்தின் தேவை, அதன் சப்ளையை விட அதிகமாக இருக்கும். மேலும் சீனாவில் தங்கத்தின் தேவை பல மடங்கு அதிகரித்திருப்பதால், தங்கத்தின் தேவையும், விலையும் அதிகரித்திருக்கிறது.
தங்கம் ஒரு முதலீடு
தங்கத்தின் மதிப்பு குறையாமல் இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதையே பெரிதும் விரும்புகின்றனர். மேலும் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்தியாவில் திருமணம் மற்றும் திருவிழா நேரங்களில் தங்கம் கண்டிப்பான தேவையாக இருக்கிறது. அதோடு தங்கத்தின் இருப்பு இந்திய குடும்பங்களின் அந்தஸ்தையும் நிர்ணயிக்கிறது.
அதனால் தான் தங்கத்தின் தேவையும், அதன் பயன்பாடும், அதன் மீதான முதலீடும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அதன் விலையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. தங்கத்தின் மவுசும் குறையாமல் உள்ளது.
-தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தங்கம் பற்றிய தகவல் தொகுப்பு
யினியவன் wrote:தங்க மகன் பாலாஜியின் தங்கமான பகிர்வு![]()
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தங்கம் பற்றிய தகவல் தொகுப்பு
ஒரே உள்குத்தா இருக்கே
வஞ்ச புகழ்ச்சி மாதிரி தெரிகிறது
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
வஞ்ச புகழ்ச்சி மாதிரி தெரிகிறது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தங்கம் பற்றிய தகவல் தொகுப்பு
தங்கத்தின் விலை 20% சரிவு.. இப்போது வாங்காலமா?
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தற்போது 20% குறைந்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் மிக உச்சியில் இருந்த தங்கத்தின் விலை கடந்த வாரம் 4.11% குறைந்திருக்கிறது.
உலகச் சந்தையினைத் தொடர்ந்து இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
(Silver futures slip 9%; trades below Rs 45,000)
தற்போது இந்திய சந்தையில் தங்கத்தின் விலை ரூ.28,000க்கு குறைந்திருக்கிறது. மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தங்கம் வாங்கலாமா?
உலக சந்தையில் தங்கத்தின் விலைக் குறையும் போது, இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறையும் என்பதை, இந்தியாவில் தங்கம் வாங்குபவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உலக அளவில் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது என்றால் அதற்கு காரணம் அமெரிக்காவில் இருக்கும் முதலீட்டாளர்கள் ஆவர். தற்போது அமெரிக்காவில், பங்கு வர்த்தகத்தில் அதிகம் பேர் முதலீடு செய்வதால், தங்கத்தில் அவர்கள் செய்யும் முதலீடு மிக வெகுவாக குறைந்து வருகிறது.
அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெகிழ்வு தன்மையின் காரணமாக, பலரும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். அதனால் தங்கத்தின் மீது பலருக்கும் இருந்த மோகம் தற்போது படிப்படியாகக் குறைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் அமெரிக்காவில் தங்கத்தில் முதலீடு செய்து வந்தவர்களில், பலர் தங்கத்தை விட்டுவிட்டு, பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கின்றனர். அதனால் தங்கத்தின் எதிர்காலம் சற்று மங்கலாக இருக்கும் என்றே தெரிகிறது.
மேலும் மில்லியன் கணக்கான முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்வது அவ்வளவு பாதுகாப்பு எல்லை என்று நினைக்கின்றனர். அதனால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் சிறிது காலம் காத்திருக்கலாம். ஆனாலும் ஐரோப்பிய நாடுகள் இன்னும் பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வர இன்னும் போராடி வருகின்றன. குறிப்பாக சைப்ரஸ் நாடு தனது பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வர, அந்த நாட்டிற்கு அளவுக்கதிகமான அளவு பணம் தேவைப்படுகிறது.
அதோடு கிரீஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளும், பொருளாதார சரிவிலிருந்து மீள போராடி வருகின்றன. மேலும் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சீர்திருத்தம், வரும் காலங்களில் அமெரிக்காவை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்று நம்பப்படுகிறது. அதனால் தங்கத்தின் விலை குறையவும் வாய்ப்பு இருக்கிறது என்று நம்பப்படுகிறது.
மேலும் வட கொரிய பகுதியில் ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதனால் இன்னும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே இன்னும் சிறிது காலம் கழித்து அதாவது தங்கத்தின் விலை இன்னும் சற்று குறைந்த பிறகு, தங்கத்தை வாங்குவது சிறப்பாக இருக்கும் என்று நம்பலாம்.
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தற்போது 20% குறைந்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் மிக உச்சியில் இருந்த தங்கத்தின் விலை கடந்த வாரம் 4.11% குறைந்திருக்கிறது.
உலகச் சந்தையினைத் தொடர்ந்து இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
(Silver futures slip 9%; trades below Rs 45,000)
தற்போது இந்திய சந்தையில் தங்கத்தின் விலை ரூ.28,000க்கு குறைந்திருக்கிறது. மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தங்கம் வாங்கலாமா?
உலக சந்தையில் தங்கத்தின் விலைக் குறையும் போது, இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறையும் என்பதை, இந்தியாவில் தங்கம் வாங்குபவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உலக அளவில் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது என்றால் அதற்கு காரணம் அமெரிக்காவில் இருக்கும் முதலீட்டாளர்கள் ஆவர். தற்போது அமெரிக்காவில், பங்கு வர்த்தகத்தில் அதிகம் பேர் முதலீடு செய்வதால், தங்கத்தில் அவர்கள் செய்யும் முதலீடு மிக வெகுவாக குறைந்து வருகிறது.
அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெகிழ்வு தன்மையின் காரணமாக, பலரும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். அதனால் தங்கத்தின் மீது பலருக்கும் இருந்த மோகம் தற்போது படிப்படியாகக் குறைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் அமெரிக்காவில் தங்கத்தில் முதலீடு செய்து வந்தவர்களில், பலர் தங்கத்தை விட்டுவிட்டு, பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கின்றனர். அதனால் தங்கத்தின் எதிர்காலம் சற்று மங்கலாக இருக்கும் என்றே தெரிகிறது.
மேலும் மில்லியன் கணக்கான முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்வது அவ்வளவு பாதுகாப்பு எல்லை என்று நினைக்கின்றனர். அதனால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் சிறிது காலம் காத்திருக்கலாம். ஆனாலும் ஐரோப்பிய நாடுகள் இன்னும் பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வர இன்னும் போராடி வருகின்றன. குறிப்பாக சைப்ரஸ் நாடு தனது பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வர, அந்த நாட்டிற்கு அளவுக்கதிகமான அளவு பணம் தேவைப்படுகிறது.
அதோடு கிரீஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளும், பொருளாதார சரிவிலிருந்து மீள போராடி வருகின்றன. மேலும் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சீர்திருத்தம், வரும் காலங்களில் அமெரிக்காவை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்று நம்பப்படுகிறது. அதனால் தங்கத்தின் விலை குறையவும் வாய்ப்பு இருக்கிறது என்று நம்பப்படுகிறது.
மேலும் வட கொரிய பகுதியில் ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதனால் இன்னும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே இன்னும் சிறிது காலம் கழித்து அதாவது தங்கத்தின் விலை இன்னும் சற்று குறைந்த பிறகு, தங்கத்தை வாங்குவது சிறப்பாக இருக்கும் என்று நம்பலாம்.
-தட்ஸ்தமிழ் [u]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு
» எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்
» IPL - ஐபிஎல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
» யானைகள் பற்றிய தொகுப்பு
» பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு
» எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்
» IPL - ஐபிஎல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
» யானைகள் பற்றிய தொகுப்பு
» பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|