Latest topics
» நாவல்கள் வேண்டும்by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்!
4 posters
Page 1 of 1
கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்!
கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்
முதியோரைக் காப்பகங்களில் கொண்டு சேர்க்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் காப்பகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
வயதான பெற்றோரை, கோயில் குளங்களுக்கு அழைத்துச் சென்ற கூட்டுக்குடும்ப வாழ்க்கை, இப்போது சிதறிப் போய்விட்டது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில், பெற்றோரின் ஆலோசனையால் பிள்ளைகள் நல்வழிப்பட்டனர். பண்பாடு, கலாசாரம் காப்பாற்றப்பட்டது.
இன்று பணமே முக்கிய காரணியாகி விட்டது. அன்பு, பாசப் பிணைப்பு அறுந்து போய்விட்டது. பணத்தைத் தேடி அலையும் இளம் தலைமுறையினர், பெற்று வளர்த்த பெற்றோரை மறந்து விடுகின்றனர். பின் அவர்களைச் சுமையாகவே கருதுகின்றனர்.
ஆடம்பர வாழ்க்கையால் குடும்பத்தில் மருமகள், மாமியார் பிரச்னை ஏற்படுகிறது. இது மகன்-தந்தை உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக காப்பகங்களில் பெற்றோர் சேர்க்கப்படுகின்றனர்.
காப்பகங்களில் பெற்றோரைக் குழந்தைகள் கொண்டு சேர்ப்பதைவிட, மன அமைதி இழந்த பெரும்பாலான பெற்றோர், தாங்களாகவே தேடிச்சென்று சேருகின்றனர்.
அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 300 பேர் வரை காப்பகங்களில் உள்ளனர். இவ்வாறு காப்பகங்களில் சேர்க்கப்பட்ட பெற்றோர்களில் 20 சதவிகிதம் பேர் நீரிழிவு நோய் மற்றும் வாத நோயால் அவதிப்படுகின்றனர்.
காப்பகங்களில் பெற்றோரைச் சேர்த்த பிள்ளைகளில் 60 சதவிகிதம் பேர், எப்போதாவது ஒரு முறை காப்பகத்திற்கு வந்து பெற்றோரைப் பார்க்கின்றனர். 10 சதவிகிதம் பேர் மட்டும் வாரம் ஒருமுறை வந்து பெற்றோரைப் பார்த்துவிட்டு தேவைக்கு பணம் கொடுத்துச் செல்வதாகவும், மீதியுள்ள 30 சதவிகிதம் பேர் பெற்றோரை அநாதையாகவே விட்டுவிடுவதாகவும் காப்பகத்தினர் கூறுகின்றனர்.
பெற்றோரைக் காப்பகங்களில் விடும் நகர கலாசாரம், இப்போது கிராமப்புறங்களிலும் பரவி உள்ளது. என்னதான் இருந்தாலும், பெற்ற பிள்ளைகள், பேரக் குழந்தைகளுடன் வீட்டில் கொஞ்சிய நாளை எண்ணி ஏங்கிய நிலையில்தான் காப்பகங்களில் பெற்றோர்கள் வருந்துகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, இருந்த சொத்தை எழுதி வாங்கிவிட்டு, காப்பகத்துக்கு அனுப்பி விட்ட பிள்ளைகளை நினைக்கும் பெற்றோரும், சொத்தை எழுதி வாங்க நினைத்த பிள்ளைகளுக்குப் பயந்து காப்பகத்துக்கு வந்த பெற்றோரும் கணிசமாக இருக்கின்றனர்.
காப்பகங்களில் இவர்களுக்கு உணவு ஒரு பிரச்னை இல்லை. ஆனால் இவர்களுக்கு அங்கு போதிய மருத்துவ வசதி இல்லை என்பது குறைபாடாக சொல்லப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட முதியோர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உடன் இருந்து கவனிக்க போதிய ஊழியர் இல்லாத சூழ்நிலை காப்பகங்களில் உள்ளன.
நோய்வாய்ப்பட்ட முதியவர்களைக் காப்பகங்களில் கவனிக்க ஊழியர்கள் ஆர்வமாக முன்வருவதில்லை. அவ்வாறு வரும் ஊழியர்களுக்குப் போதிய ஊதியமும் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்தக் குறைபாடுகளை ஓரளவுக்குத் தீர்க்க, அந்தந்தப் பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார மருத்துவமனை மருத்துவர் குழு, காப்பகங்களுக்கு வாரம் ஒரு முறை முகாமிட்டு முதியோர்களின் உடல் நலத்தைச் சோதித்து சிகிச்சை அளிக்கலாம்.
கல்மனத்துடன் இல்லாமல், பிள்ளைகள் நோய்பட்ட பெற்றோரைக் காப்பகங்களுக்குச் சென்று பார்த்து அவர்களைக் குறைந்தபட்சம் மருத்துவமனைக்காவது அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யலாம்.
"இன்றைய இளைய சமுதாயத்தினர், நாளைய முதியோர்'' என்பதை மட்டும் மறந்து விடக்கூடாது.
( சு. பழனி - நன்றி - தினமணி )
முதியோரைக் காப்பகங்களில் கொண்டு சேர்க்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் காப்பகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
வயதான பெற்றோரை, கோயில் குளங்களுக்கு அழைத்துச் சென்ற கூட்டுக்குடும்ப வாழ்க்கை, இப்போது சிதறிப் போய்விட்டது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில், பெற்றோரின் ஆலோசனையால் பிள்ளைகள் நல்வழிப்பட்டனர். பண்பாடு, கலாசாரம் காப்பாற்றப்பட்டது.
இன்று பணமே முக்கிய காரணியாகி விட்டது. அன்பு, பாசப் பிணைப்பு அறுந்து போய்விட்டது. பணத்தைத் தேடி அலையும் இளம் தலைமுறையினர், பெற்று வளர்த்த பெற்றோரை மறந்து விடுகின்றனர். பின் அவர்களைச் சுமையாகவே கருதுகின்றனர்.
ஆடம்பர வாழ்க்கையால் குடும்பத்தில் மருமகள், மாமியார் பிரச்னை ஏற்படுகிறது. இது மகன்-தந்தை உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக காப்பகங்களில் பெற்றோர் சேர்க்கப்படுகின்றனர்.
காப்பகங்களில் பெற்றோரைக் குழந்தைகள் கொண்டு சேர்ப்பதைவிட, மன அமைதி இழந்த பெரும்பாலான பெற்றோர், தாங்களாகவே தேடிச்சென்று சேருகின்றனர்.
அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 300 பேர் வரை காப்பகங்களில் உள்ளனர். இவ்வாறு காப்பகங்களில் சேர்க்கப்பட்ட பெற்றோர்களில் 20 சதவிகிதம் பேர் நீரிழிவு நோய் மற்றும் வாத நோயால் அவதிப்படுகின்றனர்.
காப்பகங்களில் பெற்றோரைச் சேர்த்த பிள்ளைகளில் 60 சதவிகிதம் பேர், எப்போதாவது ஒரு முறை காப்பகத்திற்கு வந்து பெற்றோரைப் பார்க்கின்றனர். 10 சதவிகிதம் பேர் மட்டும் வாரம் ஒருமுறை வந்து பெற்றோரைப் பார்த்துவிட்டு தேவைக்கு பணம் கொடுத்துச் செல்வதாகவும், மீதியுள்ள 30 சதவிகிதம் பேர் பெற்றோரை அநாதையாகவே விட்டுவிடுவதாகவும் காப்பகத்தினர் கூறுகின்றனர்.
பெற்றோரைக் காப்பகங்களில் விடும் நகர கலாசாரம், இப்போது கிராமப்புறங்களிலும் பரவி உள்ளது. என்னதான் இருந்தாலும், பெற்ற பிள்ளைகள், பேரக் குழந்தைகளுடன் வீட்டில் கொஞ்சிய நாளை எண்ணி ஏங்கிய நிலையில்தான் காப்பகங்களில் பெற்றோர்கள் வருந்துகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, இருந்த சொத்தை எழுதி வாங்கிவிட்டு, காப்பகத்துக்கு அனுப்பி விட்ட பிள்ளைகளை நினைக்கும் பெற்றோரும், சொத்தை எழுதி வாங்க நினைத்த பிள்ளைகளுக்குப் பயந்து காப்பகத்துக்கு வந்த பெற்றோரும் கணிசமாக இருக்கின்றனர்.
காப்பகங்களில் இவர்களுக்கு உணவு ஒரு பிரச்னை இல்லை. ஆனால் இவர்களுக்கு அங்கு போதிய மருத்துவ வசதி இல்லை என்பது குறைபாடாக சொல்லப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட முதியோர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உடன் இருந்து கவனிக்க போதிய ஊழியர் இல்லாத சூழ்நிலை காப்பகங்களில் உள்ளன.
நோய்வாய்ப்பட்ட முதியவர்களைக் காப்பகங்களில் கவனிக்க ஊழியர்கள் ஆர்வமாக முன்வருவதில்லை. அவ்வாறு வரும் ஊழியர்களுக்குப் போதிய ஊதியமும் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்தக் குறைபாடுகளை ஓரளவுக்குத் தீர்க்க, அந்தந்தப் பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார மருத்துவமனை மருத்துவர் குழு, காப்பகங்களுக்கு வாரம் ஒரு முறை முகாமிட்டு முதியோர்களின் உடல் நலத்தைச் சோதித்து சிகிச்சை அளிக்கலாம்.
கல்மனத்துடன் இல்லாமல், பிள்ளைகள் நோய்பட்ட பெற்றோரைக் காப்பகங்களுக்குச் சென்று பார்த்து அவர்களைக் குறைந்தபட்சம் மருத்துவமனைக்காவது அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யலாம்.
"இன்றைய இளைய சமுதாயத்தினர், நாளைய முதியோர்'' என்பதை மட்டும் மறந்து விடக்கூடாது.
( சு. பழனி - நன்றி - தினமணி )
Re: கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்!
தெய்வங்கள் இரண்டையும் தெருவுக்கு அனுப்பி விட்டு கோவில் கோவிலாக அலைகிற முட்டாள்கள் இருக்கும் வரை உலகம் உருப்படாது . அவர்களை
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்!
நம்ம காந்தி படம் எடுத்தாரே 'அட்டன்பரோ' அவரும்
'காப்பகத்துக்கு' போயிட்டாராம். இன்னைக்கு 'டைம்ஸ் ஆப் இந்தியா' ல படிச்சேன்.
'காப்பகத்துக்கு' போயிட்டாராம். இன்னைக்கு 'டைம்ஸ் ஆப் இந்தியா' ல படிச்சேன்.
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்!
பதிவுக்கு நன்றி சாமி அவர்களே. போனமுறை கவிதைப்போட்டிக்காக நான் எழுதிய ஒரு கவிதை இந்தக் கட்டுரையை பிரதிபலிப்பதாகவே உள்ளது. அதை மீண்டும் இங்கு தந்துள்ளேன், உங்களின் பார்வைக்காக
வேரை மறந்த விழுதுகள்
[இன்னிசைக் கலிவெண்பா]
வந்தாரை நம்நாட்டில் வாழவைப்போம், நம்முயிரைத்
தந்தோரை வீட்டைவிட்டே தள்ளிவிடும் வன்கொடுமை
நொந்தாரே பெற்றோர்கள் நோயொடுமூ தோரில்லில்
சிந்தாமல் ஒர்துளிநீர் சிற்றறிவால் பிள்ளைகள்பார்
இங்கிவரைப் பெற்றெடுத்து இன்னலுடன் தான்வளர்த்து
மங்கியதோர் கண்களுடன் மண்ணுக்கு நீரிறைத்து
பொங்கிவரும் பொங்கலிட்டுப் போற்றியவர் இப்பொழுதோ
தங்குகிறார் யாருமின்றித் தான்முதியோர் இல்லமதில்
பொல்லாத இந்நிலையில் புண்ணான தாய்சொல்வாள்:
"கல்யாணம் செய்துவைத்தோம் கட்டழகைப் கைபிடித்தான்
இல்லாது சொல்லியெமை இங்கிருக்க வைத்துவிட்டாள்
கல்லாதார் நாங்கள்தான் கற்கின்றோம் காலம்போய்
நல்லவனே முன்பொருகால் நன்றியினைத் தான்மறந்தான்"
"தாய்போதும் என்கின்றான் தந்தையரோ வேண்டாமாம்
நாய்எனவே ஓடிவந்தே நானிருப்பேன் தாதியைப்போல்
நோய்பெருத்த தந்தையர்க்கோ நோக்கிடமூ தோரில்லம்
பேய்க்குணமே உள்ளவனாய்ப் பெற்றேன்பார் என்மகனை"
"வேரதனை விட்டகன்ற வேர்விழுதே நீகேளாய்
ஊரதனில் உள்ளோர்கள் உன்னைநகை யாடிடுவார்
பாரிதைநீ இவ்விடத்துன் பையனுனைச் சேர்க்கவந்தே
பேரேட்டில் பேர்பதிப்பான் போ"
-----சுந்தரராஜ் தயாளன்
வேரை மறந்த விழுதுகள்
[இன்னிசைக் கலிவெண்பா]
வந்தாரை நம்நாட்டில் வாழவைப்போம், நம்முயிரைத்
தந்தோரை வீட்டைவிட்டே தள்ளிவிடும் வன்கொடுமை
நொந்தாரே பெற்றோர்கள் நோயொடுமூ தோரில்லில்
சிந்தாமல் ஒர்துளிநீர் சிற்றறிவால் பிள்ளைகள்பார்
இங்கிவரைப் பெற்றெடுத்து இன்னலுடன் தான்வளர்த்து
மங்கியதோர் கண்களுடன் மண்ணுக்கு நீரிறைத்து
பொங்கிவரும் பொங்கலிட்டுப் போற்றியவர் இப்பொழுதோ
தங்குகிறார் யாருமின்றித் தான்முதியோர் இல்லமதில்
பொல்லாத இந்நிலையில் புண்ணான தாய்சொல்வாள்:
"கல்யாணம் செய்துவைத்தோம் கட்டழகைப் கைபிடித்தான்
இல்லாது சொல்லியெமை இங்கிருக்க வைத்துவிட்டாள்
கல்லாதார் நாங்கள்தான் கற்கின்றோம் காலம்போய்
நல்லவனே முன்பொருகால் நன்றியினைத் தான்மறந்தான்"
"தாய்போதும் என்கின்றான் தந்தையரோ வேண்டாமாம்
நாய்எனவே ஓடிவந்தே நானிருப்பேன் தாதியைப்போல்
நோய்பெருத்த தந்தையர்க்கோ நோக்கிடமூ தோரில்லம்
பேய்க்குணமே உள்ளவனாய்ப் பெற்றேன்பார் என்மகனை"
"வேரதனை விட்டகன்ற வேர்விழுதே நீகேளாய்
ஊரதனில் உள்ளோர்கள் உன்னைநகை யாடிடுவார்
பாரிதைநீ இவ்விடத்துன் பையனுனைச் சேர்க்கவந்தே
பேரேட்டில் பேர்பதிப்பான் போ"
-----சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Similar topics
» கண்ணீரில் நனையும் ஆடுகள்...
» நனையாமல்..நனையும் மழை.
» நனையும் துளிகள்.. !
» நனையும் பூமி – கவிதை
» இங்கே இரண்டு ஜீவன் நனையும்.
» நனையாமல்..நனையும் மழை.
» நனையும் துளிகள்.. !
» நனையும் பூமி – கவிதை
» இங்கே இரண்டு ஜீவன் நனையும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|