Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
யானையை எதிர்த்த கோழி
3 posters
Page 1 of 1
யானையை எதிர்த்த கோழி
புகார் நகரை விட்டு தன் காதல் மலையாளான கண்ணகியோடு நீண்ட நடை பயணமாக கோவலன் புறப்பட்டதை மான யாத்திரை என்று குறிப்பிடுவார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.
தன்னுடைய பொருளே ஆனாலும் வறுமையிலிருந்து விடுபட ஒரு பொருளை விற்பது என்பது கௌரவமான செயல் அல்ல. அதுவும் சீரும் சிறப்போடும் தான் வாழ்ந்த புகார் நகரத்திலேயே அந்த கண்ணகியின் சிலம்லை விற்பது சாத்தியமே இல்லை என்பதால் மதுரைக்க போனான். இது தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் செயலாகும்.
ஒரு நாளில் ஒரு காதத் தொலைவு தான் அந்த மண்மைகள் அறியா மென்பாதங்களால் நடக்க முடிந்த தொலைவு மதுரை மூதூருக்கும் புகாருக்கும் இடையில் முப்பது காதம். முதல் காதம் நடப்பதற்கு முன்பே கண்ணகி கேட்டது மதுரை எவ்வளவு தொலைவு என்று தான்.
உண்மையையும் மறைக்காமல் பொய்யையும் சொல்லாமல் அறைங்காதம் என்பாதன் கோவலன். ஐந,“தாறு காதம் என்று கண்ணகி எடுத்து கொண்டிருப்பள். ஆறைந்து முப்பது என்றா கணக்கிட்டிருப்பாள்? நல்லவேளையாக முதல் காதத் தொலைவுக் குள்ளேயே கவுந்தி ஐயையை சந்தித்து விடுகிறார்கள். பல்ல துணை என்று ஐயையை அழைத்துக்கொண்டு நடக்கிறான் கோவலன்.குகனொடும் ஐவரானோம் என்பது போஙல், இருவர் ஐயையொடு மூவராயினர். இராமபிரானுக்கும் சீதாதேவிக்கும் இளவல் இலக்குமணன் வழித்துணையாக நடந்தது போல் கவுநப்தி ஐயை இவர்களுக்கு அருமையான வழித்துணையாக வாய்த்தார்.
கதிரவன் மறையும் வரை ஓய்வெடுத்து இரவில் நடைபயணம். திருஅரங்கத்து மூங்கில் சோலை சாரணர்களை தரிசித்து விட்டு காவிரியை கடந்து தென்கரைக்கு வரவேண்டும்.
தென்கரை நகரம் தான் உறையூர். இன்றைக்கு ஒரு நகராட்சி தொகுதி அளவுக்கு குறுகிவிட்ட உறையூர். மிகவும் பரந்து விரிந்து சோழ நாட்டின் தலைநகரம்.
ஊர் எனப்படுவது உறையூர் என்று புலவர் பெருமக்கள் இனை சிறப்பித்திருக்கிறார்கள்.
திருத்தொண்டர் புராணத்தில் இப்படி அதன் பெருமை பேசப்படுகிறது.
.... தமிழ்ச் சோழர்
வளநாட்டு மாமூதூர்
உலகில் வளர் அணிக்கெல்லாம்
உள்ளுரை ஊராம் உறையூர்
இத்தலத்துக்கு கோழியூர் என்றும் பெயருண்டு. கலிங்கத்துப்பரணியில் செயங்கொண்டார் கோழிப்பெருமை பாடுவார். போர் இல்லாத அமைதியான காலங்களில் இந்த சோழன் தலைநகரில் மல்லர்களில் மற்போர் நிகழும். புலவர்கள் சொற்போர் புரிவார்கள். யானைகள் கடும்போர் புரியும். கோழிச்சண்டையும் நடக்குமாம். இந்த காட்சிகளில் மகிழந்திருந்த சோழ மன்னர் கண்ணெதிரே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. மத வாரணம் ஆகிய யானையை சிறை வாரணம் ஆன கோழி எதிர்த்து வென்றது. இதனால் உறையூர் கோழியூர் எனப்பட்டது.
இந்த கோழியகத்தில் சோழன் பெருங்கிள்ளி, எத்திறத்தானும் வரம் தரும் இவள் ஒரு பத்தினி கடவுளாகும். எனப் பத்தினிக்கோட்டம் ஒன்றையும் அமைத்து நாள்தோறும் விழா எடுத்தான் என்று சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
சங்க காலத்தில் சோழ நாட்டின் தலைநகரமாக உறையூர் விளங்கியது. வரலாற்று காலத்தில் கூற்றம் என்னும் ஆட்சி வட்டாரத்தின் தலைமையிடமாக விளங்கியது. இந்த ஆட்சி வட்டத்துக்குள் நாவலூர் கொடியாலத்தூர் பராய்த்துரை, திருவடக்குடி, குளித்தலை என்று இன்று வழங்கப்படுகிற குளிர்தண்தலை உட்பட அடங்கியிருந்திருக்கின்றன. உறையூரின் எல்லை என்பதாக தமிழறிஞர் சீ.கோவிந்தராசனார் குறிப்பிடுவது வடக்கே காவிரி, தெற்கே உய்யக்கொண்டான். கிழக்கே சிராப்பள்ளிக்குன்றம், மேற்கே குளிர் தண்தலை.
சிலப்பதிக்காரம் நிகழ்ந்திருக்கக்கூடிய இரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் விநாயகர் வழிபாடு நடைமுறைக்கு வந்திருக்க வில்லை. சங்க இலக்கியம் செழித்த காலம் இது. சேயோனாகிய முருகன், மாயோனாகிய திருமால், இந்திரன், மழைக்கடவுளான வருணன், கொற்றவை என்னும் காளி, முக்கண்ணாகிய சிவன் இவர்களே வழிபடப்பட்டார்கள். கி.பி. எட்டாம் நூற்றாண்டு தொடைக்க பகுதியிலேயே கோயில்களில் பிள்ளையார் திருமேனிகள் இடம்பெற்றுள்ளன என்றும், சம்பந்தர், அப்பர் காலத்துக்கு பிறகு நூறு ஆண்டுகள் கடந்த பிறகே வட தமிழக கோவில்களில் இடம் பெறத் தொடங்கின என்றும் மு.நளினி, இரா.கலைக்கோவன் நூலில் காணப்படுகிறது. தென் தமிழ்நாட்டு பிள்ளையார்பட்டி குடை வரையில் உள்ள நிநாயகரே காலத்தால் முற்பட்டவர் என்றும், இது ஆறு , ஏழாம் நூற்றாண்டு படைப்பாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். ஆக உறையூருக்கு கிழக்கில் இருந்த நெடும் பெரும் குன்றம் ஓர் அடையாள எல்லையாகத்தான் இருந்திருக்கிறது. கண்ணகி, கோவலன் நடந்த நாட்களில் அது வெறும் குன்றம் தான்.
ஆக, இன்றைய திருச்சிராப்பள்ளி நகரத்தின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டையும், தாயுமானவர் ஆலயம், உச்சிப்பிள்ளையார் கோயில், பல்லவர் காலத்து மகிஷாசுரமர்த்தனி சிற்பக்கூடம் எல்லாம் நூற்றாண்டுக்கு பிறக ஏற்பட்டவை. சமணர் படுக்கைகள் மட்டும் சிலப்பதிகார காலத்தில் ஏற்பட்டிருக்கலாம். சிரா என்னும் பெயர் கொண்ட ச5மணத்துறவி நிறுவிய தவச்சாலை இக்குன்றில் அமைந்திருந்த காரணத்தால் இது சிராப்பள்ளி என்றே பெயர் பெற்றது.
திருஞான சம்பந்தப்பெருமான் திருஉடையானை சிராப்பள்ளி குன்னுடையானை... என்று பாடி பரவினார்.
புராணக் கதைகளின் அடிப்படையில் இதற்கு திரிசிபுரம் என்று பெயர் வழங்கியிருக்கிறது. டாக்டர் உ.வே.சா.குருநாதர் திரிசிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்றே அறியப்பட்டார். (அமரர் கல்கி தம்முடைய முதலாம் சிறைவாச அனுபவங்களை பற்றி ஆனந்த விகடனில் எழுதினார். அப்போது தாம் சிறை இருந்த திருச்சிராப்பள்ளி சிறைச்சாலையை பற்றி குறிப்பிடுகையில் முத்தலைப்புரம் என்று எழுதுவார். (பார்க்க கண்ணீரால் காத்த பயிர் நூல் - வானதி பதிப்பகம்) அதே போல் கடலூர் சிறைச்சாலையையும் சமுத்திரபுரி என்று பெயர் மாற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய மகாத்மா மேற்கொண்ட 1930 ஆம் ஆண்டின் தண்டி யாத்திரையை மறு காட்சிப்படுத்தி சபர்மதி முதல் தண்டி கடற்கரை வரை நடந்தார்கள். அதில் இந்த கட்டுரையாளனும் கலந்து கொண்டு 385 கி.மீ. தொலைவு நடக்கும் வாய்ப்பு பெற்றேன். பாபுஜி போன பாதையையே நாங்களும் பின்பற்றினோம். வழியில் ஒரு சிறிய ஆறு குறுக்கிட்டது. அதை கடக்க சுமார் முப்பது படகுகளை வரிசையாக பக்கம் பக்கமாக நிறுத்தி அதன் மீது பலகைகளை போட்டு பாலம் அமைத்து தந்தார்கள். இப்போது அதை நினைத்து பார்க்கும்போது, சிலப்பதிகார காலத்தின் நீரணி மாடம் என்பதை கற்பனை செய்து காண முடிகிறது.
இந்த பள்ளி ஓடத்தின் வழியே பயணியர் மூவரும் தீது தீர் நியமத் தென்கரை எய்தினார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அங்கே ஒரு சோலையில் தங்கியிருக்கிறார்கள். மூவரும் கரையேறிய இடத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. தீது தீர் நியமம் என்று அந்த வழிபாட்டிடம் சொல்லப்படுகிறது. இன்றைய வழக்கில் பரிகாரத்தலம் என்றும் கொள்ளலாம். வினை வழி நடந்த கண்ணகி - கோவலனுக்கு தீமைகளை தீர்த்து வைக்காத அந்த வழிபாட்டிடம் எது என அறிய முடியவில்லை. அவர்கள் அங்கு வழிபட்டதாகவும் குறிப்பில்லை.
சுப்ர.பாலன்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Similar topics
» யானையை விட பெரிசு!
» யானையை போல் வாழாதே
» ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி
» மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி
» உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்
» யானையை போல் வாழாதே
» ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி
» மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி
» உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|