Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது ரத்தம் விற்பனைக்கல்ல ! (சிறுகதை)
2 posters
Page 1 of 1
எனது ரத்தம் விற்பனைக்கல்ல ! (சிறுகதை)
மாலை 4 மணி...
ஆவி பறந்து கொண்டிருக்கும் தேநீர்க் கோப்பையை கையில் வைத்துக் கொண்டிருந்தான் புகழேந்தி. மூன்று நாட்களில் ஒரு ப்ராஜெக்ட் டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயம். இந்த சூழலில், புகழைச் சந்திக்க வந்த மேலாளர் அவனுடன் பேசத்தொடங்கினார். "Hey Pugazh, as you know we are in the critical stage of this project delivery. There are many critical bugs customer has reported. I have assigned four of them on your name. So, pls try to close it in a couple of days" என்று மேலாளர் பரபரப்பாக பேசிமுடித்தார். புகழ் சற்று யோசித்தான், அவன் முகம் சற்று வாடியது.
இந்த வேலையை இரண்டு நாட்களில் முடிப்பது எளிதல்ல என்பதை உணர்ந்த மேலாளர் மென்மையாக " Hey see, I know how difficult it is to close within 2 days of deadline. But we have no other go. So, pls work on it. " என்று சொல்லிக் கொண்டிருந்தார். புகழின் தொலைபேசி இளையராஜா படலை இசைக்க ஆரம்பித்தது. மேலாளர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ஒரு புதிய எண்ணை தொலைபேசியில் பார்த்தான் புகழ் . பச்சைப் பட்டன் அழுத்தப்பட்டது.. Hello... " Hi.. I am Sujatha, Can I speak to Pugazhendhi " என்று ஒரு பெண்ணின் குரல் பேசத்தொடங்கியது. வழக்கம் போல, தமிழுக்கு மட்டுமே சொந்தமான 'ழ' சரிவர உச்சரிக்கப்படவில்லை.
"Yeah Speaking..." என்று ஆங்கிலத்தில் உரையாடலைத் தொடர்ந்தான் புகழ். "நான் பெங்களுர்ல இருந்து பேசுறேன். உங்க நம்பர் bharatbloodbank.com வெப்சைட்ல கெடச்சது, உங்க ரத்தம் O -ve னு நெனைக்கிறேன். என் அம்மாவுக்கு இதய அறுவைசிகிச்சை ஹைதராபாத்ல நடக்க இருக்கு, நீங்க ரத்தம் தானம் செய்ய முடியுமா ?" என்று அந்த பெண் தொடர்ந்தாள். "எப்போ ?" என்று புகழ் கேட்டான். நாளை என்றாள் சுஜாதா. இப்படியே ஆங்கிலத்தில் சற்றுநேரம் உரையாடல் தொடர்ந்த பின், தொலைபேசி இணைப்பை துண்டித்தான் புகழ்.
சற்று சிந்தித்தான். குறைந்தது 15 மணிநேரம் வேலை பார்த்தாலும் கொடுத்த வேலையை இரண்டு நாட்களில் முடிப்பது மிகவும் கடினம். ஆனால் 25 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மருத்துவமனைக்கு வந்து ரத்தம் தருவதாய் ஒப்புக்கொண்டோம். இந்த சாலை நெரிசலில் போய் வர, ரத்தம் கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதை மனதில் ஓடவிட்டுக் கொண்டிருந்தான் புகழ். அலுவலகத்தில் இக்கட்டான சூழல்.. அங்கே ஒரு தாய்க்கு இதய அறுவை சிகிச்சை. சற்று குழம்பினான்.
அந்த பெண்ணிற்கு அழைத்து, என்னால் இப்போது வர இயலாத சூழல் என்று சொல்ல அவனுக்கு மனமில்லை. O -ve எவ்வளவு அறிய வகை ரத்தம் என்பதையும், அது கிடைப்பது எத்தனை கடினம் என்பதையும் அவன் நன்கு அறிவான். ஏசி அறையில் சூடாக இந்த எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கையில் தேநீர் கோப்பையில் ஆவி அடங்கி, அது முற்றிலும் குளிர்ந்து போனதையும், கணினி திரை அணைந்து போனதையும் அவதானித்தான் புகழ்.
அன்று இரவு 10 மணி...
தினமும் அப்பாவிற்கு மறக்காமல் செய்யும் போனைகூட இன்று செய்யவில்லை. உணவும் உட்கொள்ளவில்லை. இப்படியாக புகழ் அலுவலகத்தில் மும்பரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். சற்று கடினமான BUG தான். பல LOG எடுத்து ஆராய்ந்து கொண்டிருந்தான். போனில் sms ஒலி. இருந்தாலும் அது வந்ததை சில வினாடிகளில் மறந்துவிட்டான். அடுத்த சில நிமிடத்தில் மீண்டும் ஒரு sms செய்தி. இந்த முறை பார்த்தான்.
"Hi This is Sujatha" என்ற இணைப்போடு காலை பதினோரு மணிக்கு ரத்தம் வேண்டும் என்ற செய்தி ஆஸ்பத்திரியின் முகவரியோடு அனுப்பப்பட்டிருந்தது. "OK, fine" என்று பதில் அனுப்பிவிட்டு வேலையைத் தொடர்ந்தான் புகழ். எப்போது ஆஸ்பத்திரிக்கு போவாய் ? போவாயா மாட்டா ? சரியாக சொல் ? ஏன் பதில் இல்லை ? என sms செய்தி வந்தவண்ணம் இருந்தது. சூழ்நிலை சாதகமாக இல்லாவிட்டாலும், கண்டிப்பாக வருவேன் என்று அவன் சொல்லிய பிறகும் அவளின் இத்தனை கேள்விகள் புகழுக்கு சற்று எரிச்சலூட்டியது.
ஒரு உயிரைக்காக்கும் முக்கியமான இந்த நேரத்தில், சந்தேகம் என்றால் 50 பைசாவில் ஒரு கால் செய்து ஒரு நிமிடத்தில் கேட்கவேண்டிய விடயத்தை இப்படி sms சை அனுப்பி ஒவ்வொன்றாய் கேட்பது அவனுக்கு வியப்பாக இருந்தது. மேலும் சுஜாதா அனுப்பிய செய்தி அனைத்தும், புகழுக்கு அவள் உதவி செய்யும் தோரணையில் இருந்ததே தவிர, அவள் உதவி நாடி நிற்கிறாள் என்ற நோக்கில் இல்லை. இருக்கும் சூழலில் இது அவனுக்கு சற்று கோபத்தையும் ஏற்படுத்தியது.
சரியாக வேலை ஓடாமல் நள்ளிரவில் வீடு திரும்பிய புகழ், அடுத்தநாள் அதிகாலையிலேயே அலுவலகம் வந்தடைந்தான். மணி பத்து. இப்போது கிளம்பினால்தான் இந்த சாலை நெரிசலில் ஆஸ்பத்திரியை ஒருமணி நேரத்திலாவது அடையமுடியும் என்று எண்ணி புகழ் கிளம்பினான். மீண்டும் ஒரு sms செய்தி. "இன்று ரத்தம் தேவையில்லை, நீங்கள் நாளை வாருங்கள்" என்று. சரி அறுவைசிகிச்சை தள்ளிபோடப்பட்டிருக்கும் என்று எண்ணி அவளுக்கு "OK" என்று ஒரு செய்தியை அனுப்பிவிட்டு வேலையை கவனிக்கலானான் புகழ்.
அலுவலகத்தில் இப்போது தேவையில்லாமல் ஸ்டேடஸ் மீட்டிங் வைப்பது அவனது நேரத்தை வீணடிப்பதாக இருந்தது. மாலை ஆறுமணி. சுஜாதா மீண்டும் sms அனுப்பத்தொடங்கினாள். நேற்று இரவு நேரம் என்பதால் sms அனுப்பி சந்தேகத்தை கேட்டிருக்கலாம். ஆனால் வருவேன் என்று சொன்ன பிறகும் மீண்டும் மீண்டும் sms அனுப்பி போவாயா மாட்டா ? சரியாக சொல் ? ஏன் பதில் இல்லை ? என்ற கேள்விகள் கோபத்தின் உச்சத்தை தொடச் செய்தாலும், அவனுக்குள் ஒரு வருத்தம்.
தனது தாயின் அறுவை சிகிச்சைக்கு ஒரு மகள் இப்படி சாதாரணமாக இருப்பாளா ? தனது வேலைகளுக்கிடையே sms படிக்காத மனிதர்கள் நிறைய பேர் இருப்பார்கள். sms க்கு பதில் அளிக்க பிடிக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள். இதெல்லாம் வேலை செய்யும் இவர்களுக்கு தெரியாதா ? ஒரு உதவி இப்படிதான் கேட்பார்களா ? என் இப்படி பொறுப்பற்று இருக்கிறார்கள் என்ற வருத்தம் தான் அது.
இந்த இன்னல்களுக்கிடையே இரண்டு BUG யை FIX பண்ணி விட்டு நள்ளிரவில் வீட்டை அடைந்தான் புகழ். அடுத்தநாள் அதிகாலை வழக்கம்போல் விரைவாக அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான் புகழ். எப்படியும் வேலை முடிக்க வேண்டும். இப்போது சுஜாதாவிடம் இருந்து மற்றும் ஒரு sms, "அந்த மருத்துவமனை போனபின் இந்த நம்பருக்கு போன் செய்" என்று.
அவள் அனுப்பிய sms அனைத்தையும் நண்பனிடம் கட்டினான் புகழ். புகழின் நண்பன் அவற்றைப் படித்துவிட்டு, "எனக்கு ஒரு சந்தேகம் நீங்க அவங்களுக்கு உதவி பண்ண போறிங்களா ? இல்ல அவங்க உங்களுக்கு உதவி பண்ண போறாங்களா ? இவங்ககெல்லாம் பட்டாத்தான் திருந்துவாங்க நீங்க போகாதிங்க" என்று புகழிடம் சொன்னார். sms அனுப்பட்ட விதம் அவ்வாறு இருந்தது.
எதையும் பொருட்படுத்தாமல் அலுவலகத்திலிருந்து கிளம்பி ஒருமணி நேரத்தில் மருத்துவமனையை அடைந்தான் புகழ். அவள் அனுப்பிய எண்ணிற்கு போன் செய்தான். அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் வந்து புகழை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் சென்றார். நன்றாக பேசினார். "சுஜாதா பெங்களூர்ல தான் வேல பாக்குறா. ஏதோ ஆபீஸ் வேல இப்ப அவளால வர முடியலனு" என்று பெரியவர் சொன்னார். இவர்தான் சுஜாதாவின் தந்தை.
கார் அனுப்புரோம்னு சுஜாதா கேட்டதுக்கு வேணாம்னு சொன்னிங்களாமே ? எதுக்கு இந்த வெயில்ல இப்படி வரணும் என்று கரிசனையோடு ஆங்கிலத்தில் கேட்டார். அங்கிருக்கும் கடையில் இரண்டு ஜூஸ் சொல்லப்பட்டது. ஜூஸை அருந்தியபின் அதற்கான பணத்தை புகழ் கொடுத்தவுடன் அந்த முதியவர் நீங்கள் எதற்கு தருகிறீர்கள் என்று வருத்தப்பட்டார்.
ரத்ததானம் செய்ய புகழில் ரத்தம் சரியான நிலையில் உள்ளதா என்ற தெரிந்துகொள்ள ரத்த மாதிரி எடுத்து PH சதவீதம் கணக்கிடப்பட்டது. பெரியவரின் கண்ணில் கவலை கலந்த பயம் தெரிந்தது. இதற்கு முன் தானம் செய்ய வந்த சிலரது ரத்தம் ஒத்துப் போகவில்லை போலும். ஆனால் தவிக்கும் அதிகமாக PH அளவு இருப்பதைக்கண்டு பெரியவர் மகிழந்தார்.
ரத்தம் எடுக்க நீண்ட நேரம் காத்திற்கும் சூழல் ஏற்பட்டதால், பெரியவர் புகழிடம் உரையாடிக் கொண்டிருந்தார். ஆனால் அவனது எண்ணம் மீதம் FIX பண்ண வேண்டிய இரண்டு BUG இல் மட்டுமே இருந்தது.
ஒருவழியாக ஒரு மணி நேரம் கழித்து ரத்தம் கொடுத்துவிட்டு, தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான் புகழ். பெரியவர் அவசரமாக வந்து மறித்தார். ஒரு நிமிஷம் தம்பி, "இவ்ளோ தூரம் வந்து காத்திருந்து உதவி பண்ணதுக்கு ரொம்ப நன்றி " என்று முகம்மலர சொல்லி விட்டு அவரது தம்பியை அழைத்தார். அவர் தம்பி வந்தவுடன், பெரியவர் முகபாவனையால் அவரிடம் ஏதோ சொன்னார். பெரியவரின் தம்பி தனது பர்சில் இருந்து ஒரு 1000 ருபாய் கரன்சியை எடுத்து புகழின் கையில் திணித்தார்.
புகழுக்கு முகத்தோடு சேர்ந்து மனதும் இறுக்கமானது. அவர்களின் மனநிலையை புரிந்துகொண்டாலும், "ஒரு குடும்பத்தின் மனதில் பிறக்கும் மகிழ்ச்சிக்கு நானும் ஒரு காரணமாக இருக்க மட்டுமே இங்கு வந்தேனே தவிர, பணத்திற்காக வரவில்லை ஐயா, என்று அவரிடம் பணத்தை திருப்பிக் கொடுத்தான் புகழ்.
இப்படி ஆயிரம் ஆயிரமாக வாங்கி இருந்தால் இதுவரை குறைந்தது பத்தாயிரம் ரூபாயாவது இதன் வழியே நான் சேர்த்திருப்பேன். ஆனால் இது போன்ற உயிர் காக்கும் உதவிகளைச் செய்யும்போது, ஒரு பைசாவும் பிறருக்கு செலவு வைக்கக்கூடாது என்ற தனது கொள்கையை உள்ளூர நினைத்துக் கொண்டு, உதடுகள் பிரியாமல் ஒருவருக்கும் கேட்காமல் "எனது ரத்தம் விற்பனைக்கல்ல, நான் வியாபரியுமல்ல" என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்... இனம் புரியாத இன்பத்துடன் !
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_14.html
முற்றும்...
அன்புடன்,
அகல்
ஆவி பறந்து கொண்டிருக்கும் தேநீர்க் கோப்பையை கையில் வைத்துக் கொண்டிருந்தான் புகழேந்தி. மூன்று நாட்களில் ஒரு ப்ராஜெக்ட் டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயம். இந்த சூழலில், புகழைச் சந்திக்க வந்த மேலாளர் அவனுடன் பேசத்தொடங்கினார். "Hey Pugazh, as you know we are in the critical stage of this project delivery. There are many critical bugs customer has reported. I have assigned four of them on your name. So, pls try to close it in a couple of days" என்று மேலாளர் பரபரப்பாக பேசிமுடித்தார். புகழ் சற்று யோசித்தான், அவன் முகம் சற்று வாடியது.
இந்த வேலையை இரண்டு நாட்களில் முடிப்பது எளிதல்ல என்பதை உணர்ந்த மேலாளர் மென்மையாக " Hey see, I know how difficult it is to close within 2 days of deadline. But we have no other go. So, pls work on it. " என்று சொல்லிக் கொண்டிருந்தார். புகழின் தொலைபேசி இளையராஜா படலை இசைக்க ஆரம்பித்தது. மேலாளர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ஒரு புதிய எண்ணை தொலைபேசியில் பார்த்தான் புகழ் . பச்சைப் பட்டன் அழுத்தப்பட்டது.. Hello... " Hi.. I am Sujatha, Can I speak to Pugazhendhi " என்று ஒரு பெண்ணின் குரல் பேசத்தொடங்கியது. வழக்கம் போல, தமிழுக்கு மட்டுமே சொந்தமான 'ழ' சரிவர உச்சரிக்கப்படவில்லை.
"Yeah Speaking..." என்று ஆங்கிலத்தில் உரையாடலைத் தொடர்ந்தான் புகழ். "நான் பெங்களுர்ல இருந்து பேசுறேன். உங்க நம்பர் bharatbloodbank.com வெப்சைட்ல கெடச்சது, உங்க ரத்தம் O -ve னு நெனைக்கிறேன். என் அம்மாவுக்கு இதய அறுவைசிகிச்சை ஹைதராபாத்ல நடக்க இருக்கு, நீங்க ரத்தம் தானம் செய்ய முடியுமா ?" என்று அந்த பெண் தொடர்ந்தாள். "எப்போ ?" என்று புகழ் கேட்டான். நாளை என்றாள் சுஜாதா. இப்படியே ஆங்கிலத்தில் சற்றுநேரம் உரையாடல் தொடர்ந்த பின், தொலைபேசி இணைப்பை துண்டித்தான் புகழ்.
சற்று சிந்தித்தான். குறைந்தது 15 மணிநேரம் வேலை பார்த்தாலும் கொடுத்த வேலையை இரண்டு நாட்களில் முடிப்பது மிகவும் கடினம். ஆனால் 25 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மருத்துவமனைக்கு வந்து ரத்தம் தருவதாய் ஒப்புக்கொண்டோம். இந்த சாலை நெரிசலில் போய் வர, ரத்தம் கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதை மனதில் ஓடவிட்டுக் கொண்டிருந்தான் புகழ். அலுவலகத்தில் இக்கட்டான சூழல்.. அங்கே ஒரு தாய்க்கு இதய அறுவை சிகிச்சை. சற்று குழம்பினான்.
அந்த பெண்ணிற்கு அழைத்து, என்னால் இப்போது வர இயலாத சூழல் என்று சொல்ல அவனுக்கு மனமில்லை. O -ve எவ்வளவு அறிய வகை ரத்தம் என்பதையும், அது கிடைப்பது எத்தனை கடினம் என்பதையும் அவன் நன்கு அறிவான். ஏசி அறையில் சூடாக இந்த எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கையில் தேநீர் கோப்பையில் ஆவி அடங்கி, அது முற்றிலும் குளிர்ந்து போனதையும், கணினி திரை அணைந்து போனதையும் அவதானித்தான் புகழ்.
அன்று இரவு 10 மணி...
தினமும் அப்பாவிற்கு மறக்காமல் செய்யும் போனைகூட இன்று செய்யவில்லை. உணவும் உட்கொள்ளவில்லை. இப்படியாக புகழ் அலுவலகத்தில் மும்பரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். சற்று கடினமான BUG தான். பல LOG எடுத்து ஆராய்ந்து கொண்டிருந்தான். போனில் sms ஒலி. இருந்தாலும் அது வந்ததை சில வினாடிகளில் மறந்துவிட்டான். அடுத்த சில நிமிடத்தில் மீண்டும் ஒரு sms செய்தி. இந்த முறை பார்த்தான்.
"Hi This is Sujatha" என்ற இணைப்போடு காலை பதினோரு மணிக்கு ரத்தம் வேண்டும் என்ற செய்தி ஆஸ்பத்திரியின் முகவரியோடு அனுப்பப்பட்டிருந்தது. "OK, fine" என்று பதில் அனுப்பிவிட்டு வேலையைத் தொடர்ந்தான் புகழ். எப்போது ஆஸ்பத்திரிக்கு போவாய் ? போவாயா மாட்டா ? சரியாக சொல் ? ஏன் பதில் இல்லை ? என sms செய்தி வந்தவண்ணம் இருந்தது. சூழ்நிலை சாதகமாக இல்லாவிட்டாலும், கண்டிப்பாக வருவேன் என்று அவன் சொல்லிய பிறகும் அவளின் இத்தனை கேள்விகள் புகழுக்கு சற்று எரிச்சலூட்டியது.
ஒரு உயிரைக்காக்கும் முக்கியமான இந்த நேரத்தில், சந்தேகம் என்றால் 50 பைசாவில் ஒரு கால் செய்து ஒரு நிமிடத்தில் கேட்கவேண்டிய விடயத்தை இப்படி sms சை அனுப்பி ஒவ்வொன்றாய் கேட்பது அவனுக்கு வியப்பாக இருந்தது. மேலும் சுஜாதா அனுப்பிய செய்தி அனைத்தும், புகழுக்கு அவள் உதவி செய்யும் தோரணையில் இருந்ததே தவிர, அவள் உதவி நாடி நிற்கிறாள் என்ற நோக்கில் இல்லை. இருக்கும் சூழலில் இது அவனுக்கு சற்று கோபத்தையும் ஏற்படுத்தியது.
சரியாக வேலை ஓடாமல் நள்ளிரவில் வீடு திரும்பிய புகழ், அடுத்தநாள் அதிகாலையிலேயே அலுவலகம் வந்தடைந்தான். மணி பத்து. இப்போது கிளம்பினால்தான் இந்த சாலை நெரிசலில் ஆஸ்பத்திரியை ஒருமணி நேரத்திலாவது அடையமுடியும் என்று எண்ணி புகழ் கிளம்பினான். மீண்டும் ஒரு sms செய்தி. "இன்று ரத்தம் தேவையில்லை, நீங்கள் நாளை வாருங்கள்" என்று. சரி அறுவைசிகிச்சை தள்ளிபோடப்பட்டிருக்கும் என்று எண்ணி அவளுக்கு "OK" என்று ஒரு செய்தியை அனுப்பிவிட்டு வேலையை கவனிக்கலானான் புகழ்.
அலுவலகத்தில் இப்போது தேவையில்லாமல் ஸ்டேடஸ் மீட்டிங் வைப்பது அவனது நேரத்தை வீணடிப்பதாக இருந்தது. மாலை ஆறுமணி. சுஜாதா மீண்டும் sms அனுப்பத்தொடங்கினாள். நேற்று இரவு நேரம் என்பதால் sms அனுப்பி சந்தேகத்தை கேட்டிருக்கலாம். ஆனால் வருவேன் என்று சொன்ன பிறகும் மீண்டும் மீண்டும் sms அனுப்பி போவாயா மாட்டா ? சரியாக சொல் ? ஏன் பதில் இல்லை ? என்ற கேள்விகள் கோபத்தின் உச்சத்தை தொடச் செய்தாலும், அவனுக்குள் ஒரு வருத்தம்.
தனது தாயின் அறுவை சிகிச்சைக்கு ஒரு மகள் இப்படி சாதாரணமாக இருப்பாளா ? தனது வேலைகளுக்கிடையே sms படிக்காத மனிதர்கள் நிறைய பேர் இருப்பார்கள். sms க்கு பதில் அளிக்க பிடிக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள். இதெல்லாம் வேலை செய்யும் இவர்களுக்கு தெரியாதா ? ஒரு உதவி இப்படிதான் கேட்பார்களா ? என் இப்படி பொறுப்பற்று இருக்கிறார்கள் என்ற வருத்தம் தான் அது.
இந்த இன்னல்களுக்கிடையே இரண்டு BUG யை FIX பண்ணி விட்டு நள்ளிரவில் வீட்டை அடைந்தான் புகழ். அடுத்தநாள் அதிகாலை வழக்கம்போல் விரைவாக அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான் புகழ். எப்படியும் வேலை முடிக்க வேண்டும். இப்போது சுஜாதாவிடம் இருந்து மற்றும் ஒரு sms, "அந்த மருத்துவமனை போனபின் இந்த நம்பருக்கு போன் செய்" என்று.
அவள் அனுப்பிய sms அனைத்தையும் நண்பனிடம் கட்டினான் புகழ். புகழின் நண்பன் அவற்றைப் படித்துவிட்டு, "எனக்கு ஒரு சந்தேகம் நீங்க அவங்களுக்கு உதவி பண்ண போறிங்களா ? இல்ல அவங்க உங்களுக்கு உதவி பண்ண போறாங்களா ? இவங்ககெல்லாம் பட்டாத்தான் திருந்துவாங்க நீங்க போகாதிங்க" என்று புகழிடம் சொன்னார். sms அனுப்பட்ட விதம் அவ்வாறு இருந்தது.
எதையும் பொருட்படுத்தாமல் அலுவலகத்திலிருந்து கிளம்பி ஒருமணி நேரத்தில் மருத்துவமனையை அடைந்தான் புகழ். அவள் அனுப்பிய எண்ணிற்கு போன் செய்தான். அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் வந்து புகழை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் சென்றார். நன்றாக பேசினார். "சுஜாதா பெங்களூர்ல தான் வேல பாக்குறா. ஏதோ ஆபீஸ் வேல இப்ப அவளால வர முடியலனு" என்று பெரியவர் சொன்னார். இவர்தான் சுஜாதாவின் தந்தை.
கார் அனுப்புரோம்னு சுஜாதா கேட்டதுக்கு வேணாம்னு சொன்னிங்களாமே ? எதுக்கு இந்த வெயில்ல இப்படி வரணும் என்று கரிசனையோடு ஆங்கிலத்தில் கேட்டார். அங்கிருக்கும் கடையில் இரண்டு ஜூஸ் சொல்லப்பட்டது. ஜூஸை அருந்தியபின் அதற்கான பணத்தை புகழ் கொடுத்தவுடன் அந்த முதியவர் நீங்கள் எதற்கு தருகிறீர்கள் என்று வருத்தப்பட்டார்.
ரத்ததானம் செய்ய புகழில் ரத்தம் சரியான நிலையில் உள்ளதா என்ற தெரிந்துகொள்ள ரத்த மாதிரி எடுத்து PH சதவீதம் கணக்கிடப்பட்டது. பெரியவரின் கண்ணில் கவலை கலந்த பயம் தெரிந்தது. இதற்கு முன் தானம் செய்ய வந்த சிலரது ரத்தம் ஒத்துப் போகவில்லை போலும். ஆனால் தவிக்கும் அதிகமாக PH அளவு இருப்பதைக்கண்டு பெரியவர் மகிழந்தார்.
ரத்தம் எடுக்க நீண்ட நேரம் காத்திற்கும் சூழல் ஏற்பட்டதால், பெரியவர் புகழிடம் உரையாடிக் கொண்டிருந்தார். ஆனால் அவனது எண்ணம் மீதம் FIX பண்ண வேண்டிய இரண்டு BUG இல் மட்டுமே இருந்தது.
ஒருவழியாக ஒரு மணி நேரம் கழித்து ரத்தம் கொடுத்துவிட்டு, தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான் புகழ். பெரியவர் அவசரமாக வந்து மறித்தார். ஒரு நிமிஷம் தம்பி, "இவ்ளோ தூரம் வந்து காத்திருந்து உதவி பண்ணதுக்கு ரொம்ப நன்றி " என்று முகம்மலர சொல்லி விட்டு அவரது தம்பியை அழைத்தார். அவர் தம்பி வந்தவுடன், பெரியவர் முகபாவனையால் அவரிடம் ஏதோ சொன்னார். பெரியவரின் தம்பி தனது பர்சில் இருந்து ஒரு 1000 ருபாய் கரன்சியை எடுத்து புகழின் கையில் திணித்தார்.
புகழுக்கு முகத்தோடு சேர்ந்து மனதும் இறுக்கமானது. அவர்களின் மனநிலையை புரிந்துகொண்டாலும், "ஒரு குடும்பத்தின் மனதில் பிறக்கும் மகிழ்ச்சிக்கு நானும் ஒரு காரணமாக இருக்க மட்டுமே இங்கு வந்தேனே தவிர, பணத்திற்காக வரவில்லை ஐயா, என்று அவரிடம் பணத்தை திருப்பிக் கொடுத்தான் புகழ்.
இப்படி ஆயிரம் ஆயிரமாக வாங்கி இருந்தால் இதுவரை குறைந்தது பத்தாயிரம் ரூபாயாவது இதன் வழியே நான் சேர்த்திருப்பேன். ஆனால் இது போன்ற உயிர் காக்கும் உதவிகளைச் செய்யும்போது, ஒரு பைசாவும் பிறருக்கு செலவு வைக்கக்கூடாது என்ற தனது கொள்கையை உள்ளூர நினைத்துக் கொண்டு, உதடுகள் பிரியாமல் ஒருவருக்கும் கேட்காமல் "எனது ரத்தம் விற்பனைக்கல்ல, நான் வியாபரியுமல்ல" என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்... இனம் புரியாத இன்பத்துடன் !
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_14.html
முற்றும்...
அன்புடன்,
அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: எனது ரத்தம் விற்பனைக்கல்ல ! (சிறுகதை)
நன்றிகள் றினா ...
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Similar topics
» டெண்டுல்கர் ஓபஸ் சுயசரிதை சிறப்புப் பதிப்பில் எனது ரத்தம் இல்லை-சச்சின் மறுப்பு
» குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை
» ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை)
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» கல்வி விற்பனைக்கல்ல
» குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை
» ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை)
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» கல்வி விற்பனைக்கல்ல
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|